Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு பதிவு

Featured Replies

தமிழர் போராட்டம் என்பது அனைத்துத் தமிழர்களிற்காகவும் தமிழர் தலைமையினால் முன்னெடுக்கப்படுகின்றது. பங்களிப்புச் செய்தோர், செய்யாதோர் முதலிய பிரிவினை வாதங்களிற்கு அப்பாற் பட்டு தமிழ் இன பிணைப்பால் அனைத்துத் தமிழர்களும் பிணைக்கப்பட்டு அனைத்துத் தமிழ் உள்ளங்களினதும் சுபீட்சத்திற்காகவே போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. எந்த ஒரு பங்களிப்புத் தானும் எப்போதுமே செய்திராத ஒரு தமிழ் உறவு கூட தமிழ் எதிரியினால் உயிர் குடிக்கப்படும் போது, தமிழ் இன பிணைப்பால் அனைவரும் துன்பப்படுகின்றோம் (கவனிக்கவும்: துரோகிகள் என்பவர்கள் வேறு. ஆவர்கள் பங்களிப்புச் செய்யாதவர் பட்டியலில் சேர்க்கப்பட முடியாதவர்கள். ஏனெனில் துரொகிகள் தேச விடுதலைக்கு எதிராக உழைக்கிறார்கள். அவர்கள் சும்மா இருக்கவில்லை).. எமது உறவு ஒன்றை இழந்த ஒரே உணர்வு தான் அங்கு மேலோங்குகிறது. மேலோங்க வேண்டும்.

போராட்டத்தில் தம்மை இணைத்துக் கொண்ட ஒவ்வொரு போராளியும், தனது உறவுகளின் துன்பங்களைக் கண்டு, அத்துன்பங்களிற்கு ஒரு முடிவு கட்டப்பட வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் தான் போராட்டத்தில் இணைந்தார்கள். மனித இயல்பின் அடிப்படையில் எப்போதும் எல்லோரும் பெர்து நலன்களிற்குத் தோள் கொடுக்க முன்வருவது இயல்பு அல்ல. போராளி மலரவன் எழுதிய ||போர் உலா|| என்ற புத்தகத்தினi வாசிப்பதன் மூலம் ஒரு போராளியின் மனதில் வௌ;வேறு மனிதர்கள் வௌ;வேறு சந்தர்ப்பங்களில் எவ்வாறான உணர்வுகளையும் புண்படுத்தல்களையும் ஏற்படுத்துகின்றார்கள் என்பதனை ஒருவர் புரிந்து கொள்ள முடியும். எனினும், இறுதியில் அனைத்து வேறுபாடுகளிற்கும் புண்படுதல்களிற்கும் அப்பால் எமது இனத்தின் பொது இலக்கு நோக்கியே எமது போராட்டம் நகர்கின்றது. சிறு விடயங்களைக் கண்டு போராளிகளோ தாயகத்தை நேசிப்போரோ துவழ்ந்து விடுவதில்லை. உலகின் எந்தப் போராட்ட வரலாற்றிலும் அவ்வினத்தின் அனைத்து உறுப்பினர்களுமு; போராட்டத்திற்குச் சரிசமனாகத் தோள் கொடுத்த நிகழ்வு இதுவரை பதியப்படவில்லை.

இன்றையை விடுங்கள். நாளை எமது சுதந்திரம் மலர்ந்து எமது தேசத்தினை நாம் கட்டி எழுப்புகின்ற போது அன்றைக்கும் எமது மனநிலையானது பங்களிக்காதவரை பழிதீர்க்கும் வகையில் அமையாது எமது தேசத்தின் மாட்சிமைக்காக மட்டுமே உழைக்கும் வகையில் இருக்க வேண்டும். இன்று போராளியாக உள்ள உறவுகள் எவ்வாறு நாட்டின் விடுதலை ஒன்றை மட்டுமே எதிர்பார்த்து, எந்த சுய பிரதிபலன்களையும் எதிர்பாராது களத்தில் நிற்கிறார்களோ அவ்வாறே தான் களத்திற்கு வெளியே நின்று பங்களிப்பு செய்பவர்களும் தமது பங்களிப்புக்களை எந்த பிரதியுபகாரமும் எதிர்பாராது செய்யப் பழகிக் கொள்ள வேண்டும். நான் எனது சொத்தில் குறிப்பிட்ட ஒரு தொகையினை போராட்டத்திற்கு வழங்கியுள்ளேன், நாளிற்கு இத்தனை மணி நேரம் போராட்டத்திற்காக உழைக்கின்றேன் இந்த அளவிற்கு எனது அயலவர் செய்ய வில்லை எனவே எனக்கு நாளை எமது தேசத்தில் எனது அயலவரைவிட அதிக மரியாதை தரப்படவேண்டும் என நினைத்து ஒருவர் பங்களிப்பு நல்குவாரேயானால் அந்தப் பங்களிப்பு ஊழலை நோக்கிய ஒரு சமூகத்திற்கான ஒரு வித்தாகவே இருக்க முடியும்.

போராட்டம் நீண்டுபட்டுச் செல்வதனால் அதன் அடிப்படைகள் சில நேரங்களில் சில உறவுகளிற்கு மறந்து போவது தவிர்க்க முடியாதது. ஏன் போராடுகின்றோம், ஆரிற்காகப் போராடுகின்றோம், எமது இலக்கு என்ன, எமது கனவுகள் என்ன முதலாய கேழ்விகளிற்கான உண்மையான தேடல் பல புரிதல்களை அனைவரிற்கும் உருவாக்கும்.

இன்று எமது இனத்தின் தேவை பூதாகரமானது. இந்தத் தேவையினை ஈடுசெய்வதற்கு நாம் அனைவரும் நூறு வீதம் உழைத்தால் கூட அதற்கும் மேலால் இன்னமும் அர்ப்பணிப்புக்கள் தேவைப்படும். அந்த நிலையில், பங்களிப்பு நல்காதோரும் இருக்கலாம் என்ற எண்ணம் ஒரு வகை ஆதங்கத்தை பலரிற்கும் ஏற்படுத்துவது இயல்பு தான். எனினும் இந்த ஆதங்கத்தை அணுகுவதற்கான வழிமுறை பொது மேடையில் நின்று எம்மக்களை விமர்சிப்பதல்ல. மாறாக, ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தாயகம் சார் கட்டமைப்புக்களோடு இணைந்து தமிழரிற்குள்ளான பிரச்சார வேலைகளில் நாம் ஈடுபட வேண்டும் (பலரிற்கு பிரச்சாரம் என்றவுடன் பிறத்தியாரிற்கான பிரச்சாரம் தான் நினைவிற்கு வரும். எமது இனத்திற்குள்ளும் பிரச்சாரத்திற்கான தேவை எப்போதும் இருக்கும். ஏனெனில் எமது போராட்டம் சந்ததிகள் கடந்து நடக்கின்றது. புலப்பெயர்வுகளோடு நடக்கின்றது. இந்நிலையில் எல்லோரிற்கும் எல்லா விடயங்களும் இலகுவில் புரிந்து விடாது. ஓருவர் பங்களிக்கவில்லை என ஆத்திரப்படுவதை விடுத்து அவரது நிலைப்பாட்டிற்கான காரணங்களை ஆராய்ந்து அதைத்த திருத்த நாம் முயல்தல் அவசியம். அவ்வாறு நாம் நடந்து கொண்டாலும் கூட பங்களிப்புச் செய்யாதோர் இருந்தே தீருவர்).

உண்மை தான் ஏற்கனவே நேர பொருள் தட்டுப்பாடு நிலவுகையில் எம்மவர்களிற்கு வேறு பிரச்சாச்சாரம் செய்வதா என்ற எண்ணம் தான் இயல்பில் நமக்கு எழும். இன்னமும் போராட்டத்தைப் புரியாதவர்கள் இனி நாம் சொல்லி;த் தானா புரியப் போகின்றார்கள் என எண்ணத் தோன்றும். இதை எழுதுகின்ற என்னை நாலு வார்த்தை நல்லா வையோணும் போலத் தோன்றும். ஆனால் போராட்டம் என்பது இலகுவானது அல்ல. எத்தனையோ பேரிற்கு புகைத்தல் உடல் நலனிற்கு கேடு என்பது போன்ற சாதாரண விடயங்கள் கூட, அது அவர்களின் கையிருக்கும் சிகரெட் பெட்டியில் கொட்டை எழுத்தில் அச்சாகி இருந்தும், பிறர் சொல்லித் தான் புரிய வேண்டிய சூழ்நிலை நிலவுகையில் போராட்டத்தை பற்றி அனைவரும் உடனே புரிந்து கொள்வார்கள் என நாம் நினைப்பது பேராசை.

இன்னுமொன்று எம்மவர்கள் பலரிற்கு ஒரு அநியாய பிடிவாதக் குணம் பிறப்பில் வருவது. இந்நிலையில் ஒரு வரை நாம் அவர் பங்களிப்புச் செய்யாத சிறுமை வர்க்கத்தவர் என்று சொல்லி விட்டோம் என்று வையுங்கள், அந்த மனிதர் இறுதி வரை தன் பெயரை சீர்செய்யும் விதத்தில் குதர்க்கமாகத் நடந்து கொள்வதற்குத் தான் சாத்தியம் அதிகமே தவிர, சுய பரிசீலனை செய்து தனது போக்கை மாற்றி அவர் பங்களிப்புச் செய்வார் என்பதற்கான சாத்தியங்கள் வெகு குறைவு.

இயன்ற வரையில் நமக்குள் பிரிவினைகளிற்கு வித்திடாது, பிறரை இன்ரிமிடேட் பண்ணாது, சுய பெருமை பேசாது, நாம் நமது தேசத்தின் நடைமுறைத் தூதுவர்களாக அர்பணிப்புடனும் அறிவுபூர்வமாகவும் நடந்து கொள்வது எல்லோரிற்கும் பலன் பயக்கும்.

ஏனோ, இவ்வாறு ஒரு பதிவிடத் தோன்றியது. இது எனது கருத்து மட்டுமே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிக நல்ல பதிவு தோழரே!

புலம் பெயர்ந்து வாழும் நாம் எமது அளவுக்கு மீறிய தனிப்பட்ட தேவைகளைக் குறைத்துக் கொண்டு தமிழீழ விடுதலைக்கு பங்காற்ற வேண்டும். தமிழீழ வீடுதலையின் பரப்புரைத் தளம் பலவினமாக உள்ளது என்பதை பல ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இன அழிப்பு மிக வேகமாக நமது ஈழத்தில் நடந்து கொண்டிருக்கிறது. அனைவரும் ஒரு மித்து எழுவோமானால் நல்ல மாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. அங்கு நமது தோழர்களும் தோழியர்களும் உயிரைக் கொடுத்து போராடும் போது இங்குள்ள நாம் மௌனமாக இருப்பது நமக்குத்தான் அவமானம்.

தமிழன் தேசியம், இனப் பற்று என்பதைத் தாண்டி மனித நேய அடிப்படையில் பார்த்தாலும் தனித்தமிழீழம்தான் நமக்கு ஒரே தீர்வு. கடந்த இரண்டு முன்று தலைமுறைகளை நாங்கள் யுத்தத்தால் தொலைத்தோம். இனி வரும் நமது தலைமுறைகள் அமைதியான விடுதலையான வாழ்வை வாழவேண்டும். தமிழீழம்தான் பாதுகாப்புக் கவசாமாக அமையும்.

எழுவாம் தோழர்களே! ஒருமிக்க எழுவோம்!

  • கருத்துக்கள உறவுகள்

[_________________________________

சகோதரனே (இன்னுமொருவன்) உங்களுடைய இந்த பதிவைப் பார்த்ததும் மகிழ்சியடைந்தேன். நண்றிகள், பாராட்டுக்கள் சொல்ல வேணும் என்ற ஆதங்கம் எனக்கிருக்கிறது ஆனால் அடக்கிக்கொள்கிறேன் ஏன் தெரியுமா?

Edited by Valvai Mainthan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[_________________________________

சகோதரனே (இன்னுமொருவன்) உங்களுடைய இந்த பதிவைப் பார்த்ததும் மகிழ்சியடைந்தேன். நண்றிகள், பாராட்டுக்கள் சொல்ல வேணும் என்ற ஆதங்கம் எனக்கிருக்கிறது ஆனால் அடக்கிக்கொள்கிறேன் ஏன் தெரியுமா?

ஏன்? :lol::lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.