Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

B639/15 எனும் மிக்-27 விசாரணைகள்

Featured Replies

B639/15 எனும் மிக்-27 விசாரணைகள்

 

நடந்து முடிந்த உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் காலப்­ப­கு­தியில், அந்த தேர்­தல்கள் விட­யங்­க­ளுக்கு சமாந்­த­ர­மாக பேசப்­பட்ட ஒரு விட­யமே, ரஷ்­யா­வுக்­கான முன்னாள் இலங்கை தூதுவர் உத­யங்க டுபாயில் கைது செய்­யப்­பட்ட விவ­காரம். எனினும் அந்த விடயம் ஒரு வாரத்­துக்­குள்­ளேயே புஷ்­வா­ண­மாகிப் போனது. காரணம் கைதான அவரை ஐக்­கிய அரபு இராச்சிய அதிகாரிகள் விடு­தலை செய்­த­மையும், அவரை இலங்­கைக்கு அழைத்­து­வர எம் நாட்டு அதி­கா­ரி­களால் முடி­யாமல் போன­மை­யு­மாகும். இந்த இய­லாமை இலங்­கையைப் பொறுத்­த­வரை மிகப் பெரிய பின்­ன­டை­வாக கரு­தப்­பட்ட நிலையில், அந்த பின்­ன­டை­வினை மிகப் பல­மாக எதிர்­கொண்டு இலங்­கையின் சட்டம், ஒழுங்கை பாது­காக்கும் அதி­கா­ரிகள் வெற்றிப் பாதையில் தற்­போது காலடி எடுத்து வைத்­தி­ருப்­ப­தா­கவே தோன்­று­கின்­றது.

 உண்­மையில் இற்­றைக்கு 69 ஆண்­டு­க­ளுக்கு முன்னர் ஆரம்­ப­மான இலங்­கையின் வெளி­வி­வ­கார சேவையில் உதயங்க வீர­துங்க எனும் நபர், அல்­லது தூதுவர் மிகப் பெரும் கறுப்புப் புள்­ளி­யாக கரு­தப்­ப­டு­கின்றார்.

காரணம் 9 வரு­டங்­க­ளாக தொடர்ச்­சி­யாக ஒரே நாட்டின் தூது­வ­ராக அவர் பணி­யாற்றும்போது இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் பல்­வேறு சம்­ப­வங்­க­ளாகும். முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் குடும்­பத்­துடன் மிக நெருங்­கிய உற­வுக்­கா­ர­ரான உத­யங்க வீர­துங்க, அந்த ஒரே தகை­மையின் அடிப்­ப­டை­யி­லேயே இவ்­வாறு ஒரே இடத்தில் தொடர்ச்­சி­யாக தூது­வ­ராக அவரால் இருக்க முடிந்­தது.

 இன்று இவ்­வ­ளவு பிர­ப­ல­மாக பேசப்­படும் உத­யங்க வீர­துங்க 2005 ஆம் ஆண்­டுக்கு முன்னர் ஒரு சாதா­ரண சிறிய ஒரு வர்த்­தகர். உக்­ரைனின் தலைநக­ரான கிவ் நகரில் ' கிளப் ஸ்ரீலங்கா' எனும் பெயரில் சிறிய உண­வகம் ஒன்­றினை நடாத்­தி­யவர். இவ்­வா­றான பின்­னணி கொண்ட உதயங்க 2005 ஆம் ஆண்டு மஹிந்த ராஜ­ப­க் ஷவின் ஆட்­சி­யோடு இன்று கோடீஸ்­வர வர்த்­தகர் ஆகி­விட்டார். அதற்­காக அவர் உக்­ரேனின் தூது­வ­ராக நிய­மிக்­கப்பட்ட பின்னர் கிடைத்த இராஜதந்­திர வரப்­பி­ர­சா­தத்­தி­னையும் பயன்­ப­டுத்­திக்­கொண்டார் என்­பது ஒன்றும் இர­க­சி­ய­மில்லை.

 இந்த நிலையில்தான் இவ்­வாறு ரஷ்யா, உக்­ரை­னுக்­கான இலங்கை தூது­வ­ராக செயற்­பட்ட உத­யங்க வீர­துங்க மீது பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்கள் உள்­ளன. முன்னாள் வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்­த­மைக்கு அமை­வாக, உக்­ரைனின் டொனக்ஸ் பிராந்­திய கிளர்ச்­சி­யா­ளர்­க­ளுக்கு ஆயுதம் வழங்­கி­ய­தாக ஒரு குற்றச்­சாட்டு உள்­ளது. இது உக்ரைன் ஊடாக எமது நாட்டு வெளி­வி­வ­கார அமைச்­சுக்கு முறைப்­பா­டாக அளிக்­கப்பட்­ட­தாக முன்னாள் வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்­தி­ருந்தார்.

 இத­னை­விட ரஷ்யா தூத­ர­கத்தில் மொழி­பெ­யர்ப்­பா­ள­ராக சேவை­யாற்­றிய 21 வய­து­டைய நொயல் எனும் இளை­ஞனின் சந்­தே­கத்­துக்கிட­மான மரணம் தொடர்­பிலும் உதயங்க வீர­துங்க மீது குற்றம் சுமத்­தப்­ப­டு­கின்­றது. இந்த சம்ப­வங்கள் தொடர்பில் இன்னும் விசா­ர­ணைகள் அடுத்த கட்டம் நோக்கி நக­ராமல் உள்ள நிலையில், உதயங்­க­வுக்கு மிகப் பெரும் சிக்­கலை அல்­லது அவரை கைது செய்ய முடி­யு­மான அத்­தனை சான்­று­களும் திரட்­டப்­பட்ட குற்­றச்­சாட்­டாக 2006 ஆம் ஆண்டு இலங்­கைக்கு மிக் 27 ரக போர் விமானங்கள் நான்­கினை கொள்­வ­னவு செய்யும் போதும் அதே ரக விமானங்கள் 4 இனை மீள திருத்தும் போதும் இடம்­பெற்ற மோச­டிகள் தொடர்­பி­லான விடயம் உள்­ளது.

 இந்த விடயம் தொடர்பில் 2015.03.10 ஆம் திகதி நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு கிடைக்கப் பெற்ற முறைப்­பாட்­டுக்கு அமை­வாக விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டி­ருந்­தன. நிதிக் குற்றப் புல­ன­ாய்வுப் பிரிவின் பிர­தானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி வைத்­தி­யலங்­கார, அதன்­ப­ணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் பி.டி.கே.பிரி­யந்த ஆகி­யோரின் நேரடி கட்­டுப்­பாட்டில் இரண்டாம் இலக்க விசா­ரணை அறையின் பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் நிஹால் பிரன்சிஸ் தலை­மை­யி­லான குழு­வினர் இது குறித்த விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர்.

இந்த நிலையில் கடந்த பெப்ர­வரி 4 ஆம் திகதி சுதந்­திர தின­மன்று இந்த விசா­ர­ணைகள் தொடர்பில் நல்ல செய்தி கிடைத்­தது. அதா­வது, இந்த விவ­கா­ரத்தில் நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் சந்­தேக நப­ராக பெய­ரி­டப்­பட்­டுள்ள உதயங்க வீர­துங்க டுபாயில் வைத்து கைது செய்­யப்பட்­ட­மையே அந்த செய்­தி­யாகும்.

 உதயங்க தனது மனை­வி­யுடன் அமெ­ரிக்­காவில் அப்­போதிருந்த முன்னாள் பாது­கா­ப்பு செயலர் கோத்­தபாயவை சந்­திக்க செல்ல முற்­பட்டவேளை இவ்­வாறு கைது செய்­யப்பட்­ட­தாக அப்­போது தெரி­விக்­கப்­பட்­டது.

 இந்த நிலையில் கைதான உத­யங்க வீர­துங்க, ஐக்­கிய அரபு இராச்சியத்தின் தலை நகர் அபு­தா­பியில் 48 மணி நேரம் தடுத்து வைக்­கப்பட்ட பின்னர், இராச்சியத்தை விட்டு வெளி­யேற முடி­யாது எனும் நிபந்­த­னையில் விடு­விக்­கப்பட்­டி­ருந்தார். குறிப்­பாக அவர், குடி­வ­ரவு குடி­ய­கல்வு சட்ட மீறல்கள் தொடர்­பிலும், இலங்­கையின் அறி­வித்தல் பிர­கா­ர­முமே தடை செய்­யப்பட்ட கடவுச் சீட்டில் அமெ­ரிக்கா செல்ல முற்பட்ட போது இவ்­வாறு கைது செய்­யப்பட்­டி­ருந்தார்.

 இந் நிலையில் அவரை நாட்­டுக்கு அழைத்­து­வர 7 பேர் கொண்ட சிறப்புக் குழு, அபு­தாபி நோக்கி சென்றபோதும், சிவப்பு அறி­வித்­தலை மையப்­ப­டுத்தி எழுந்த சர்ச்­சை­களால் அவரை அழைத்து வரு­வது சாத்­தி­ய­மற்றுப் போனது. இதனால் அங்கு சென்ற சிறப்புக்குழு வெறுங்­கை­யுடன் திரும்­பி­யது.

 பின்னர், நாட்­டுக்கு வந்த அந்த குழு, பொலிஸ் உயர் மட்டம், சட்ட மா அதிபர் திணைக்­கள அதி­கா­ரிகள் கலந்­து­ரை­யா­டலில் ஈடு­பட்­டனர். இதன்­போது, உதயங்­கவை அழைத்து வர டுபாய் நீதி­மன்றில் அறிக்கை தாக்கல் செய்­வது, ஏற்­க­னவே பிறப்­பிக்­கப்பட்­டுள்ள நீல அறி­வித்­தலை சிவப்பு அறி­வித்­த­லாக மாற்­றிக்­கொள்­வது குறித்து கலந்­து­ரை­யா­டப்பட்­டி­ருந்­தது.

 இந் நிலையில் உதயங்க வீர­துங்­கவை கைது செய்­வ­தற்­கான சிவப்பு அறி­வித்­தலை சர்­வ­தேச பொலிஸார் விடுத்­தி­ருப்­ப­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் சட்­டத்­த­ரணி ருவன் குண­சே­கர கேச­ரி­யிடம் தெரி­வித்தார். இந்த சிவப்பு அறி­வித்­த­லுடன் சட்ட மா அதிபர் திணைக்­க­ளத்தின் மேல­திக சொலி­சிட்டர் ஜெனரல் யசந்த கோதா­கொட, நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் பிரி­யந்த ஆகியோர் டுபாய் நோக்கி சென்­றுள்­ளனர்.

 இந் நிலையில் டுபாய் கைதில் இருந்து சூட்­சு­ம­மாக தப்­பிய உதயங்க, சிவப்பு அறி­வித்தல் விடுக்­கப்பட்­டுள்­ளது என்­பதை தெரிந்­து­கொண்­டதும் இராச்சியத்தில் வழ­மை­யாக இருந்த முக­வ­ரியில் இருந்து மாய­மா­கி­யுள்­ள­தாக உயர் மட்ட தக­வல்கள் கேச­ரிக்கு தெரி­வித்­தன. இந் நிலையில் இராச்சியம் எங்கும் அமீ­ரக பொலி­ஸாரும், சர்­வ­தேச பொலி­ஸாரும் அவரைக் கைது செய்ய நட­வ­டிக்கை எடுத்­துள்­ளனர்.

உண்­மையில் 2006 ஆம் ஆண்டு உக்­ரைனின் யுக்­ரேன்­மாஷி எனும் நிறு­வ­னத்­திடம் இருந்து லண்டன் தரகு நிறு­வனம் என கூறப்­பட்ட பெலிம்ஷா ஹோல்டிங்ஸ் நிறு­வ­னத்தின் தலை­யீட்­டுடன் 4 மிக் 27 ரக விமானங்கள் கொள்­வ­னவு செய்­யப்பட்­டி­ருந்­தன. அத்­துடன் இலங்­கை­யிடம் இருந்த அதே ரக விமானங்கள் நான்­கினை ஓவர்ஹோல் நட­வ­டிக்­கைக்கு உட்­ப­டுத்­தவும் நட­வ­டிக்கை எடுக்­கப்பட்­டி­ருந்­தது. இதன்­போது பாரிய ஊழல் மோச­டிகள் இடம்­பெற்­றுள்­ள­தாக 2015.03.10 ஆம் திகதி நிதிக் குற்றப் புல­ன­ாய்வுப் பிரி­வுக்கு முறைப்­பாடு கிடைக்கப் பெற்­றி­ருந்த நிலையில் அது தொடர்­பி­லான விசா­ர­ணை­களில் லண்­டனில் உள்­ள­தாக கூறப்­பட்ட பெலிம்ஷா ஹோல்டிங்ஸ் நிறு­வனம் குறித்த முக­வ­ரியில் இல்லை என்­பது தெரி­ய­வந்­தது. அத்­துடன் உக்ரைன் சென்ற நிதிக் குற்றப் புல­னா­ய்வுப் பிரிவு அதி­கா­ரிகள் அங்கு விமா­னத்தை விற்ற நிறு­வனம் உள்­ளிட்ட பல்­வேறு தரப்பை விசா­ரித்­தது. 1980 ஆம் ஆண்­டு­களில் உற்­பத்தி செய்­யப்பட்ட குறித்த விமானங்கள் கொள்­வ­னவின்போது உரிய விலையை விட கிட்­டத்­தட்ட 400 மில்­லியன் ரூபா அதிகம் விலை வைக்­கப்பட்­டுள்­ளமை தொடர்பில் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்பட்­டன. இது குறித்­தான மேல­திக விசா­ர­ணை­களில் உதயங்க வீர­துங்க இக்­கொ­டுக்கல் வாங்­கலின் பிர­தான நப­ராக செயற்­பட்­டுள்­ள­மையை நிதிக் குற்றப் புல­ன­ாய்வுப் பிரி­வினர் கண்­ட­றிந்­தனர்.

 இந் நிலை­யி­லேயே இம்­மோ­சடி தொடர்பில் நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் B 639/15 எனும் இலக்­கத்தின் கீழ் கோட்டை நீதிவான் நீதி­மன்றில் வழக்குத் தாக்கல் செய்து அதில் ஒரு சந்­தேக நப­ராக உதயங்­கவை பெய­ரிட்­டனர்.

 பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர கூறு­கையில்,

 இந்த விசா­ர­ணை­களில் உத­யங்க வீர­துங்க இணைந்து செயற்­பட்­டுள்­ள­மையை நாம் விசா­ர­ணை­களில் கண்­ட­றிந்தோம். மேலும் அவ­ரது பல வங்­கிக்­க­ணக்­கு­க­ளுக்கு சந்­தே­கத்­துக்கிட­மான முறையில் பாரிய நிதித் தொகை கிடைக்கப் பெற்­றுள்­ளது. இவை தொடர்பில் அவ­ரிடம் விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும் என்றார்.

 உண்­மையில் நிதிக் குற்றப் புல­ன­ாய்வுப் பிரி­வினர் முன்­னெ­டுத்த விசா­ர­ணை­களில், உத­யங்க வீர­துங்­கவின் இரு வங்­கிக்­க­ணக்­கு­க­ளுக்கு வைப்­பி­லி­டப்­பட்ட பெருந் தொகை பணத்தை அண்­மைய விசா­ர­ணை­களில் கண்­ட­றிந்­தி­ருந்­தனர். கோட்டை நீதி­வானின் உத்­தர­வுக்கு அமை­வாக நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி வைத்­தி­யலங்­கா­ரவின் மேற்­பார்­வையில் அதன் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் கே.டி.பிரி­யந்­தவின் ஆலோ­ச­னைக்கு அமை­வாக இரண்டாம் இலக்க விசா­ரணை அறையின் பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் நிஹால் பிரான்சிஸ் தலை­மை­யி­லான பொலிஸ் குழு­வினர் முன்­னெ­டுத்த விசா­ர­ணை­க­ளி­லேயே இது கண்­டு­பி­டிக்­கப்பட்­டி­ருந்­தது.

இரு தனியார் நிதி நிறு­வனங்­களில் உள்ள உத­யங்­கவின் கணக்­கு­க­ளுக்கே இந்த நிதி­யா­னது, லத்­வியா, சைப்ரஸ், ஐக்­கிய அரபு இராச்­சியம், மாஷல் தீவுகள், ரஷ்யா, பனாமா மற்றும் அமெ­ரிக்­காவில் இருந்து வெவ்­வேறு நபர்கள், நிறு­வனங்­களால் வைப்­பிலி­டப்­பட்­டுள்­ளமை நிதிக் குற்றப் புல­ன­ாய்வுப் பிரி­வி­னரால் கண்­டு­பி­டிக்­கப்பட்­டுள்­ளது. இந்த பணத்­தொகை உத­யங்­கவின் கணக்கில் இவ்­வாறு வைப்­பிலி­டப்பட்­ட­மையை சந்­தே­கத்­துக்கிட­மான கொடுக்கல் வாங்கலாக கருதும் நிதிக் குற்றப்புல­னா­ய்வுப் பிரி­வினர் அதன் பிர­கா­ரமே, அந்த நிதியின் ஊடாக கொள்­வ­னவு செய்­யப்­பட்ட உதயங்­கவின் சொத்­துக்­களை நீதி­வானின் உத்­தரவுக்கு அமைய கடந்த வாரத்­துக்கு முதல் வாரம் தடை செய்­த­தாக நிதிக் குற்றப் புல­னா­ய்வுப் பிரிவின் உயர் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.

எவ்­வா­றா­யினும் இந்த சந்­தே­கத்­துக்கிட­மான பண வைப்­புக்கள் தொடர்பில் 2002 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க குற்­ற­வியல் நட­வ­டிக்­கைகள் தொடர்­பி­லான பரஸ்­பர தகவல் பறி­மாற்றுச் சட்­டத்தின் அடிப்­ப­டையில் தகவல்­களைப் பெற்று மேல­திக விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க தீர்­ம­ானிக்கப்பட்டு, அதன்­படி லத்­வியா, சைப்ரஸ், ஐக்­கிய அரபு இராச்­சியம், மாஷல் தீவுகள், ரஷ்யா, பனாமா மற்றும் அமெ­ரிக்கா ஆகிய நாடு­களின் புல­னாய்வுப் பிரி­வு­க­ளுக்கு இது தொடர்பில் தகவல் கோரும் எம்.எல்.ஏ.கடிதம் அனுப்பி வைக்­கப்பட்­டுள்­ளது.

உதயங்க வீர­துங்­க­வுக்கு கோட்டை நீதி­மன்றில் ஆஜ­ரா­கு­மாறு முதன் முதலில் 2016.07.15 அன்று அறி­வித்தல் விடுக்­கப்பட்­டது. அது அவ­ரது சகோ­தரி, மனை­வியின் தாய், வெளி­வி­வ­கார அமைச்சு ஊடாக செயற்­ப­டுத்­தப்பட கோட்டை நீதி­வானால் உத்­தர­வி­டப்பட்­டது. எனினும் அதற்கு எந்த பதிலும் அளிக்­கப்­ப­ட­வில்லை.

 இந் நிலையில் இலங்­கையில் நியா­யத்தை நிலை நாட்ட எடுக்­கப்­படும் முயற்­சி­க­ளுக்கு உதயங்க வீர­துங்க எந்த ஒத்­து­ழைப்­பையும் வழங்­கு­வ­தில்லை என நீதி­மன்­றுக்கு கருத்­துக்கள் முன்­வைக்­கப்பட்ட நிலை­யி­லேயே கடந்த 2016.10.20 ஆம் திகதி அவரைக் கைது செய்­வ­தற்கான உத்­தரவை நீதி­மன்றம் பிறப்­பித்­த­தாக பொலிஸ் பேச்­சாளர் ருவன் குண­சே­கர கூறு­கின்றார்.

' ஆம், இந்த கைது உத்­தரவுடன் அவ­ரது 16 வங்­கிக்­க­ணக்­கு­க­ளையும் தடை செய்ய நாம் நட­வ­டிக்­கை எடுத்தோம். அந்த கணக்­கு­களில் 1.7 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்கள் வரை இருந்­தது. நீதி­வானின் கைது உத்­தரவை சர்­வ­தேச பொலிஸார் ஊடாக செயற்­ப­டுத்த நட­வ­டிக்­கை எடுக்­கப்பட்ட நிலையில் சர்­வ­தேச பொலிஸார் ஊடாக முதலில் நீல அறி­வித்­தலும் தற்­போது சிவப்பு அறிவித்­தலும் அவ­ருக்கு எதி­ராக பிறப்­பிக்­கப்பட்­டுள்­ளது' என பொலிஸ் அத்­தி­யட்சகர் ருவன் குண­சே­கர சுட்­டிக்­காட்­டு­கின்றார்.

உதயங்க வீர­துங்­கவின் இராஜ தந்­திர சேவை உத்­தி­யோ­க­பூர்வ அறிக்­கைகள் பிர­காரம் கடந்த 2015.02.28 ஆம் திக­தி­யுடன் நிறை­வுக்கு வந்­துள்­ளது. இந் நிலையில் அவர் வெளி­வி­வ­கார அமைச்சு ஊடாக வழங்­கப்பட்ட இரா­ஜ­தந்­திர கடவுச் சீட்­டான D 3643585 எனும் கடவுச் சீட்டை மீளக் கைய­ளிக்­காது, அல்­லது அதனை இரத்து செய்­யாது 2015.03.06 ஆம் திகதி N 5400885 எனும் சாதா­ரண கடவுச் சீட்­டொன்­றினை இலங்கை குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­களம் ஊடாக பெற்று நுழைந்­துள்ளார்.

எவ்­வா­றா­யினும் கடந்த 2017.06.30 ஆம் திகதி N 5400885, D 3643585 எனும் இரு கடவுச் சீட்­டுக்­களும் கோட்டை நீதிவான் லங்கா ஜய­ரத்­ன­வினால் இடை நிறுத்­தப்பட்ட நிலை­யி­லேயே கடந்த பெப்ர­வரி 4 ஆம் திகதி உதயங்க D 3643585 எனும் கடவுச் சீட்டில் அமெ­ரிக்கா செல்ல முற்­பட்ட போதே கைது செய்­யப்பட்­டுள்ளார்.

 இவை இவ்­வாறிருக்க கடந்த 20 ஆம் திகதி ஊடக அறிக்கை ஒன்­றினை வெளி­யிட்ட உதயங்க வீர­துங்க, மிக் விவகாரம் தொடர்பில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை செய்ய உக்ரைன் வந்த போது அது தொடர்பில் வாக்கு மூலம் வழங்க தான் முன் வந்ததாகவும் அதனை பெற அவர்கள் மறுத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

 எனினும் இதனை பொலிஸார் மறுக்கின்றனர். பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர இது குறித்து பதிலளிக்கையில்,

உண்மையில் உதயங்க ஒருபோதும் வாக்கு மூலம் அளிக்க எம்மிடம் கோரிக்கை முன்வைக்கவில்லை. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான கருத்து. அவர் 2016. 10. 04 ஆம் திகதியே உக்ரைனில் இருந்து டுபாய் சென்றுவிட்டார். எனினும் அதன் பின்னரேயே நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு உக்ரைன் சென்று விசாரித்தது. அப்படி இருக்கையில் எப்படி உக்ரைனில் வைத்து உதயங்க வேண்டுகோள் விடுக்கலாம்.

உதயங்க ஒரு இலங்கை பிரஜை. அவர் இலங்கை சட்டத்துக்கு கட்டுப்பட வேண்டும். அவர் சார்பில் நியாயங்கள் இருப்பின் அவர் தனது உண்மை நிலையை இங்கு வந்து நிரூபிக்கலாம் என பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.

 எவ்வாறாயினும் தற்போதைய சூழலில் மிக் விமான கொள்வனவு மோசடிகள் தொடர்பிலான விசாரணைகள் தீர்க்கமான கட்டத்தை அடைந்துள்ளன. அதன்படி இந்த விவகாரத்தில் அடுத்து சில அதிரடி மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-02-24#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.