Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அர்ஜுன மகேந்­தி­ர­னுக்கு அனுப்­பிய நீதி­மன்ற அறி­வித்தல் திரும்பிய வந்­தது

Featured Replies

அர்ஜுன மகேந்­தி­ர­னுக்கு அனுப்­பிய நீதி­மன்ற அறி­வித்தல் திரும்பிய வந்­தது

 

 

குற்றப் புல­னாய்வுப் பிரிவின் பணிப்­பாளர் முன்­னி­லையில் எதிர்­வரும் மார்ச் மாதம் 8 ஆம் திகதி அல்­லது அதற்கு முன்­ன­தாக  ஆஜ­ரா­கு­மாறு  மத்­திய வங்கி பிணைமுறி மோசடி விவ­கா­ரத்தின் பிர­தான சந்­தேக நப­ரான அர்ஜுன மகேந்­தி­ரனின்    சிங்கப்பூரில் அவர் வசித்து வந்த முக­வ­ரிக்கு கோட்டை நீதிவான்  அதி­வேக அஞ்சல் சேவை ஊடா­கவும் டி.எச்.எல். கூரியர் சேவை ஊடா­கவும் அனுப்­பிய உத்­த­ரவு மீள திரும்பி வந்­துள்­ள­தாக குற்றப் புல­னாய்வுப் பிரிவின் உயர் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.

arjun-mahendran.jpg

 அர்ஜுன மகேந்திரன் வசிப்­ப­தாக உறுதி செய்­யப்­பட்ட அவ­ரது 20, கஸ்­காடன் வீதி, 18/1, டெம்சன், சிங்­கப்பூர், 2497726 என்னும் முக­வரியிலுள்ள வீட்டில் அவர் தற்­போது இல்லை என்­பதும் அவர் அங்­கி­ருந்து முக­வ­ரியை மாற்றி தலை­ம­றை­வா­கி­யுள்­ள­மையும்  குற்றப் புல­ன­ாய்வுப் பிரிவு முன்­னெ­டுத்த விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது. 

இந் நிலையில் அர்ஜுன மகேந்­திரன் மார்ச் மாதம் 8 ஆம் திக­திக்குள் இலங்­கைக்கு வந்து குற்றப் புல­னா­ய்வுப் பிரிவில் ஆஜ­ரா­வது சாத்­தி­ய­மில்லை என்­பதால், அவர் தொடர்பில் முன்­னெ­டுக்­கத்­தக்க அடுத்த கட்ட நட­வ­டிக்கை தொடர்பில் குற்றப் புல­னாய்வுப் பிரிவும் சட்ட மா அதிபர் திணைக்­கள அதி­கா­ரி­களும் ஆராய்ந்து வரு­கின்­றனர். பெரும்­பாலும் அவரைக் கைது செய்ய சர்­வ­தேச பொலி­ஸா­ருக்கு சிவப்பு அறி­வித்­தலை நீதி­மன்றம் ஊடாக விடுப்­பது தொடர்பில் அவ­தானம்   செலுத்­தப்பட்­டுள்­ளது.

 ஏற்­க­னவே கடந்த  பெப்­ர­வரி மாதம்  15 ஆம் திக­திக்கு முன் நீதிமன்றில் ஆஜ­ராக நீதி­மன்றம் அர்ஜுன மகேந்தி­ர­னுக்கு  அறி­வித்­தலை இன்­டர்போல் பொலிஸார் ஊடாக அனுப்­பி­யி­ருந்த போதும் அது தொடர்பில்  உள்ள நடைமுறை சிக்கல் கார­ண­மாக அது சாத்­தி­யப்­ப­ட­வில்லை.

 எவ்­வா­றா­யினும் அர்ஜுன மகேந்தி­ரனின் தொலை­பேசி இலக்கம் என நம்­பப்­படும் இலக்­கத்தை விசா­ர­ணைகள் ஊடாக குற்றப் புல­ன­ாய்வுப் பிரி­வினர் பெற்­றி­ருந்த நிலையில், குற்றப் புல­ன­ாய்வுப் பிரிவின் உதவிப் பணிப்­பாளர் பொலிஸ் அத்­தி­யட்சகர் பி.அம்­பா­வில நேற்றுக் காலை வரை அவ்­வி­லக்­கத்­துக்கு அழைக்க முயற்­சித்த போதும்,  அவ்­வி­லக்கம் பாவ­னையில் இருக்­க­வில்லை.  எவ்­வா­றா­யினும் கடந்த 15 ஆம் திக­திக்கு முன்னர் நீதிமன்றில் ஆஜ­ராக வேண்டும் என்­பதை அர்ஜுன மகேந்திரன் அறிந்­தி­ருந்தார் என்­பதை சி.ஐ.டி. உறுதி செய்­தி­ருந்­தது. 

 இன்­டர்போல் பொலி­ஸாரின் சட்ட விதி­களில் 10.1 ஆம் அத்­தி­யா­யத்­துக்கு அமை­வாக நீதி­மன்ற அறி­வித்­தலை கைய­ளிக்க முடி­யாது என அறி­வித்­தி­ருந்த நிலையில், இலங்­கை­யுடன் உள்ள தொடர்பு கார­ண­மாக விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து அர்ஜுன மகேந்திரன் குறித்த சிங்­கப்பூர் முக­வ­ரியில் வசிப்­பதை உறுதி செய்­தனர். அதன்படியே அந்த முகவரிக்கு அறிவித்தல் அனுப்பப்பட்டிருந்தது.  

 பெரும்பாலும் அர்ஜுன மகேந்திரனை கைதுசெய்ய சிவப்பு அறிவித்தலை பெற குற்றப் புலனாய்வுப் பிரிவு நடவடிக்கை களை முன்னெடுத்துள்ளதாக அறிய முடி கின்றது.

http://www.virakesari.lk/article/31099

  • தொடங்கியவர்

மகேந்திரன் சிங்கப்பூரிலிருந்தும் தப்பியோட்டம்.!

 

 

(எம்.சி.நஜிமுதீன்)

பாராளுமன்றத்தில் புதிய சட்டம் ஒன்றை நிறைவேற்றி அதன் மூலம் மத்திய வங்கி மோசடியைவிட பன்மடங்கு பெரிய மோசடி மேற்கொள்வதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்பார்த்துள்ளார். அத்துடன் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் சிங்கப்பூரிலிருந்தும் தப்பியோடி விட்டார். எனவே அவரை நாட்டுக்கு கொண்டு வராது வெளிநாடுகளில் தங்க வைப்பதற்காகவே பிரதமர் ரணில் விக்ரமசிங்க சட்டம் ஒழுங்கு அமைச்சை பொறுப்பேற்றிருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

Image result for பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் virakesari

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. எனினும் அவர் வசித்த சிங்கப்பூர் விலாசத்தில் தற்போது இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆகவே அவர் தப்பியோடிவிட்டார்.  அவர் தற்போது எந்த நாட்டில் இருக்கிறார் என்பது குறித்து யாருக்கும் தெரியாது. அவரை பிடிப்பதாக இருந்தால் சர்வதேச பொலிஸாரின் உதவியை நாட வேண்டும். அர்ஜுன மகேந்திரன் இல்லாது மத்திய வங்கி மோசடிக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பொரளை என்.எம்.பேரேரா நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். 

http://www.virakesari.lk/article/31117

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.