Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அம்­பா­றை தாக்­கு­தல்.... செய்திகள்

Featured Replies

அம்­பா­றை தாக்­கு­தல் : ஹர்த்­தா­லுக்கு அழைப்பு

 

 

அம்­பா­றையில் இடம்­பெற்ற வியா­பார நிலை­யங்கள் மற்றும் பள்­ளி­வாசல் தாக்­கு­தல்­க­ளுக்கு எதிர்ப்புத் தெரி­வித்து இன்று முதலாம் திகதி அம்­பாறை மாவட்­டத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்­டிக்க  ஒன்­றி­ணைந்த பள்­ளி­வாசல் சம்­மே­ளனம் அழைப்பு விடுத்­துள்ளது.

நேற்று முன்தினம் அதி­காலை உண­வகம் ஒன்றில் ஏற்­பட்ட தக­ராறு கார­ணத்­தினால் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த கடை­யு­ரி­மை­யாளர் தாக்­கப்­பட்டு அதனை அண்­மித்த பகு­தியில் உள்ள பள்­ளி­வாசல், மோட்­டார்­வண்­டிகள் மற்றும் இஸ்­லா­மிய மத குர்ஆன் ஆகி­யன சேதப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது. இது தொடர்­பாக சரி­யான முறையில் பொலிஸார் விசா­ரணை நடத்த வேண்டும் எனவும் குற்­ற­வா­ளிகள் உட­ன­டி­யாக கைது செய்­யப்­பட வேண்டும் எனவும் பல கோரிக்­கை­களை முன்­வைத்தே ஹர்த்­தா­லுக்­கான அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ள­தாக ஒன்­றி­ணைந்த பள்­ளி­வாசல் சம்­மே­ள­னத்தின் தலைவர் ஏ.எல்.எம். ஹனிபா தெரி­வித்தார்.

அத்­துடன் எதிர்ப்புத் தெரி­விக்கும் வகையில் வர்த்­தக நிலை­யங்கள், தனியார் வங்­கிகள் மூடப்பட்டு  தனியார் பேருந்துகள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளனர். 

http://www.virakesari.lk/article/31132

 

 

அம்பாறை சம்பவம் : உணவு மாதிரிகள் இரசாயன பகுப்பாய்வுக்கு

 

 

அம்பாறை நகரில் ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மீது நடத்தப் பட்ட தாக்குதல் தொடர்பில் 5 பேரை  கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர கேசரிக்கு தெரிவித்தார்.

விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக குறித்த வன்முறை க்கு வந்த குழுவினரை அடையாளம் காண பிரதேசத்தின் பல முக்கிய இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி. கண்காணிப்பு கமரா பதிவுகளை பெற்று அதனை ஆரய்ந்து வரும் சிறப்பு பொலிஸ் குழு, சம்பவத்தின் போது சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட தொலைபேசி அழைப்புக்களை மையப்படுத்தியும் சந்தேக நபர்களைக் கைது செய்ய நடவடிக்கைஎ டுத்துள்ளது. 

இது தொடர்பில் தொலைபேசி பகுப்பாய்வு நடவடிக்கைகளை முன்னெடுத்து  அந்த அறிக்கையினை பெறவும் அதனை மையப்படுத்தி மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கவும் பொலிஸார் நீதிவானின் அனுமதியையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர  விசாரணைகளை முன்னெடுக்க வேண்டிய கோணங்கள் தொடர்பில் உரிய அதிகாரிகளை தெளிவுபடுத்தியுள்ள நிலையில் கிழக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கபில ஜயசேகர, மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வெதசிங்க ஆகியோரின் நேரடி மேற்பார்வையில்  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்  சமந்த டி விஜேசேகரவின் நேரடி கட்டுப்பாட்டில் விசாரணைகள் இடம்பெறுகின்றன.

 நேற்று மாலைவரை இடம்பெற்ற விசாரணைகளில் 30 க்கும் மேற்பட்ட முக்கிய வாக்கு மூலங்களைப் பெற்றுள்ள பொலிஸார்,  பிரதேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக தொடர்ந்தும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினருடன் இணைந்து செயற்படுவதாக  பிரதேசத்தின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

 அத்துடன் தாக்குதலுக்கு உள்ளான பள்ளிவாசல் நேற்று மீளவும் தொழுகை நடவடிக்கைகளுக்காக திறக்கப்பட்டதுடன் பள்ளிவாசலின் பாதுகாப்புக்கு பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த  வன்முறை சம்பவங்களின் பின்னனியில் இருந்து செயற்பட்டோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து சட்ட மா அதிபரின் ஆலோசனைகளையும் பெற உத்தேசிக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் தொடர்கின்றன.

http://www.virakesari.lk/article/31129

  • தொடங்கியவர்

குற்றவாளிகள் தப்பிக்க முடியாது : திட்டமிட்டு செய்யப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணைகள் என்கிறது அரசாங்கம்

2-2a613be3d94a88a9f63d962ad3db08ded7122ed5.jpg

 

(ரொபட் அன்டனி)

அம்பாறை பிரதேசத்தில் ஏற்பட்ட அசம்பாவிதம் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது இந்த சம்ப வத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் தப்பிக்க முடியாது என்று அமைச் சரவை பேச்சா ளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.  

அம்பாறை பகுதியில் ஹோட்டல் ஒன்றில் உணவில் கருத்தடை மாத்திரை கலக்கப்பட்டதா என்பது குறித்து பொலிஸார் விசாரிப்பர் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

 அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்;

அம்பாறையில் ஏற்பட்ட அசம்பாவித நிலைமை தற்போது கட்டுப்பாட்டக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்படுவார்கள். அதில் எந்த சிக்கலும் இல்லை.

கேள்வி: இந்தப் பிரச்சினை ஏன் ஏற்பட்டது?

பதில்: அது தொடர்பில் ஆராய்கின்றோம். அதாவது யாராவது வேண்டுமென்றே இந்தப் பிரச்சினையைத் தூண்டினார்களா? என்பது குறித்து ஆராய்ப்படுகின்றது.

கேள்வி: அம்பாறையில் உணவகம் ஒன்றில் உணவில் கருத்தடை மாத்திரை கலக்கப்பட்டு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டே இந்தப் பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. இது குறித்து ஆராய்ப்படுகின்றதா?

பதில்: அது தொடர்பில் பொலிஸார் விசாரிப்பர். ஆனால் அது நம்பமுடியாத குற்றச்சாட்டாகும். முன்னர் டாக்டர்கள் இவ்வாறு செய்வதாக குற்றம்சாட்டினர். அதன் பின்னர் நாங்கள் விசாரித்தோம். அது பொய் என்று நிரூபனமானது தற்போது இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். இது தொடர்பான விசாரணைக்கு நாங்கள் உதவலாம் ஆனால் அதனை நம்ப முடியாது.

கேள்வி: எனினும் அதனை ஏற்றுக்கொள்வதாக வியாபாரி கூறுகின்ற காணொலி ஒன்று சமூக ஊடகங்களில் வெளிவருகின்றதே?

பதில்: அதனை எவ்வாறு நம்பமுடியும். அதனை நானோ நீங்களோ காணவில்லை. அப்படி சமூக ஊடகங்களில் வந்தது என்பதற்காக நம்ப முடியாது.

கேள்வி: நாட்டில் சிவில் நிர்வாகம் குழம்பியுள்ளதா?

பதில்: அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. 30 வருடம் யுத்தம் இடம்பெற்ற நாடு என்பதை மறந்துவிடவேண்டாம். இங்கு அதன் தாக்கங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு இருக்கும்

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-03-01#page-1

  • தொடங்கியவர்

கைது செய்யப்பட்ட ஐந்து பேருக்கும் விளக்கமறியல்

 

தாம் வன்முறையுடன் தொடர்புபடவில்லையென சந்தேகநபர்கள் தெரிவிப்பு  
(எம்.எப்.எம்.பஸீர்)

 அம்பாறை நகரில் ஜும் ஆ பள்ளிவாசல் மற்றும் மூன்று ஹோட்டல்கள் உள்ளிட்ட நான்கு வர்த்தக நிலையங் கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட

ஐந்து சந்தேக நபர்களும் இன்று வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் ஐவரும் நேற்று முன் தினம் இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் நேற்று அம்பாறை நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டபோதே இவ்வாறு அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

 சந்தேக நபர்கள் நேற்று நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டபோது, தாம் வன்முறை இடம்பெற்ற இடங்களில் இருக்கவே இல்லை என அவர்கள் சார்பில் நீதிவானுக்கு கூறப்பட்டுள்ளது.

எனினும் பொலிஸார் அதனை மறுத்துள்ளதுடன் அவர்களுக்கும் வன்முறைகளுக்கும் தொடர்பிருப்பதாக கூறியுள்ள பொலிஸார் அது தொடர்பில் மேலதிக விசாரணை அறிக்கையை இன்று நீதிவானுக்கு சமர்ப்பிப்பதாக் கூறிய நிலையிலேயே வழக்கு இன்று வரை ஒத்தி வைக்கப்பட்டு சந்தேக நபர்கள் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே அம்பாறை நகரில் ஜும் ஆ பள்ளிவாசல் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மீதும் முஸ்லிம்கள் மீதும் நடாத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் அனைத்து சந்தேக நபர்களையும் கைது செய்ய விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. , வன்முறைக்கு வந்த பெரும்பான்மை இன குழுவினரை அடையாளம் காண பிரதேசத்தின் பல முக்கிய இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி. கண்காணிப்பு கமரா பதிவுகளை பெற்று அதனை தொடர்ந்து ஆராய்ந்து வருவதாகவும், சம்பவத்தின் போது சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட தொலைபேசி அழைப்புக்களை மையப்படுத்தியும் சந்தேக நபர்களைக் கைது செய்ய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டிய கோணங்கள் தொடர்பில் உரிய அதிகாரிகளை தெளிவுபடுத்தியுள்ள நிலையில் கிழக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கபில ஜயசேகர, மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வெதசிங்க ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சமந்த டி விஜேசேகரவின் நேரடி கட்டுப்பாட்டில் இந்த விசாரணைகள் இடம்பெறுகின்றன.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-03-02#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.