Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மார்ச் மாதம் வந்தாலே நாட்டில் அமைதியீனம்!

Featured Replies

மார்ச் மாதம் வந்தாலே நாட்டில் அமைதியீனம்!

 

*கிழக்கு பொதுச்சேவை ஆணைக்குழு கலைக்கப்படும்      
*பட்டதாரிகளுக்கு விரைவில் நியமனம் - ஜனாதிபதி கூறுகிறார்


பட்­டி­ருப்பு, காங்­கே­ய­னோடை நிரு­பர்கள்  

இந்த நாட்டில் வாழும் அனைத்து இன மக்­களும் ஒற்­று­மை­யு­டனும் சக­வாழ்­வு­டனும் வாழ­வேண்டும்.அதுவே நான் காணும் கன­வாகும். அந்தக் கனவை நன­வாக்­க­மு­டி­யா­விட்டால் இந்த நாடே அழிந்­து­விடும் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார்.

வட,­கி­ழக்கு மாகா­ணத்தில் உள்ள மக்­களின் பிரச்­சி­னை­களை இனங்­கண்டு தீர்க்கும் வகையில் இரண்டு ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுக்­களை அமைக்­க­வுள்­ள­தா­கவும் அவர் தெரி­வித்தார்.

கிழக்கு மாகாண பட்­ட­தா­ரி­க­ளுக்கு ஆசி­ரியர் நிய­மனம் வழங்கும் நிகழ்வும் பாட­சா­லை­க­ளுக்கு விஞ்­ஞான உப­க­ர­ணங்கள் வழங்கும் நிகழ்வும் நேற்று சனிக்­கி­ழமை காலை நடை­பெற்­றன.

கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித போகொல்­லா­கம தலை­மையில் நடை­பெற்ற இந்த நிகழ்வில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பிர­தம அதி­தி­யாகக் கலந்­து­கொண்டார்.

மார்ச் மாதம்...

இந்த நிகழ்வில் இரா­ஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லா,பிர­தி­ய­மைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்­அலி,பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான பி. .யோகேஸ்­வரன்,அலி­சாகிர் மௌலானா உட்­பட பலர் கலந்­து­கொண்­டனர்.

இந்த நிகழ்­வின்­போது கிழக்கு மாகா­ணத்தில் உள்ள வேலை­யற்ற 342 பட்­ட­தா­ரி­க­ளுக்கு ஆசி­ரிய நிய­ம­னங்கள் வழங்­கப்­பட்­டன.அத்­துடன் சுமார் 300 பாட­சா­லை­க­ளுக்கு விஞ்­ஞான ஆய்­வு­கூட உப­க­ர­ணங்­களும் வழங்­கி­வைக்­கப்­பட்­டன.

இதன்­போது நாடெங்­கிலும் உள்ள வேலை­யற்ற பட்­ட­தா­ரி­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு ஆறு மாத­கா­லத்­திற்குள் தீர்வு காணப்­படும் எனவும் உறு­தி­ய­ளித்தார்.

கிழக்கு மாகா­ணத்தில் உள்ள வேலை­யற்ற பட்­ட­தா­ரி­க­ளுக்­கான நிய­ம­னங்­களை வழங்­கு­வ­தற்கு தேவை­யான நட­வ­டிக்­கை­யினை உட­ன­டி­யாக மேற்­கொள்­ளு­மாறும் அதற்கு தேவை­யான நிதி­களை வழங்­கு­வ­தா­கவும் இங்கு ஆளு­ந­ருக்கு ஜனா­தி­பதி பணிப்­புரை விடுத்தார்.

இங்கு தொடர்ந்து உரை­யாற்­றிய ஜனா­தி­பதி,

ஒரு மாதத்­திற்கு முன்­பாக நான் மட்­டக்­க­ளப்பு வந்­த­போது கிழக்கு மாகாண பட்­ட­தா­ரிகள் தமது பிரச்­சி­னை­களை எனக்கு தெரி­வித்­தனர்.அன்­றுநான் மட்­டக்­க­ளப்பில் இருந்து பொல­ந­று­வைக்கு வாக­னத்தில் செல்­லும்­போது தொலை­பே­சியில் ஆளு­நரை தொடர்­பு­கொண்டு உள்­ளூ­ராட்சி தேர்தல் முடிந்த பின்னர் பட்­ட­தா­ரி­க­ளுக்­கான நிய­ம­னங்கள் வழங்­கப்­ப­ட­வேண்டும் என்று கூறி­யி­ருந்தேன்.

வேலை­யற்ற பட்­ட­தா­ரி­களின் பிரச்­சினை கிழக்கு மாகா­ணத்தில் மட்­டு­மல்ல முழு இலங்­கைக்­கு­மான பிரச்­சி­னை­யாக இருக்­கின்­றது.ஏழு மாதங்­க­ளுக்கு முன்­பாக பட்­ட­தா­ரி­க­ளிடம் இருந்து விண்­ணப்­பங்கள் கோரப்­பட்­டன.அந்த காலத்தில் தேர்தல் வந்­ததன் கார­ண­மாக நேர்­மு­கத்­தேர்­வினை அனை­வ­ருக்கும் நடத்த முடி­யாத சூழ்­நி­லை­யேற்­பட்­டது.

அனைத்து விண்­ணப்­பங்­களும் பரி­சீ­லிக்­கப்­பட்டு இலங்கை முழு­வ­திலும் உள்ள பட்­ட­தா­ரி­க­ளுக்­கான நிய­ம­னங்­களை வழங்­கு­வ­தற்கு வெகு­வி­ரைவில் நட­வ­டிக்­கை­யெ­டுக்­கப்­படும்.அர­சாங்கம் வழங்கும் இவ்­வா­றான நிய­ம­னங்­க­ளுக்கு மேலா­கவே மாகா­ண­ச­பைகள் நிய­ம­னங்­களை வழங்­கு­கின்­றன.இலங்­கையில் உள்ள வேலை­யற்ற பட்­ட­தா­ரிகள் அனை­வ­ருக்கும் எதிர்­வரும் 06 மாதங்­க­ளுக்குள் நிய­ம­னங்­களை வழங்­குவேன்.

நான் இங்கு வந்­த­போது மட்­டக்­க­ளப்பு வேலை­யற்ற பட்­ட­தா­ரிகள் எனக்கு ஒரு கடிதம் தந்­தனர்.கிழக்கு மாகாண பொதுச்­சேவை ஆணைக்­கு­ழு­வுடன் அவர்கள் நடத்­திய பேச்­சு­வார்த்­தைகள் தொடர்பில் அதில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. பொதுச்­சேவை ஆணைக்­கு­ழு­வினை சேர்ந்­த­வர்கள் பட்­ட­தா­ரி­க­ளுக்கு கூறிய பல கருத்­து­களை அதில் அவர்கள் கூறி­யி­ருந்­தனர்.பொதுச்­சேவை ஆணைக்­குழு கூறிய கருத்­துகள் அவர்­க­ளுக்­கு­ரிய கருத்­துகள் அல்ல.பொதுச்­சேவை ஆணைக்­குழு பாரிய தவ­றினை புரிந்­துள்­ளார்கள்.

மாகாண பொதுச்­சேவை ஆணைக்­கு­ழு­வுக்கு இவ்­வா­றான கருத்­து­களை தெரி­விப்­ப­தற்கு எந்த அதி­கா­ரமும் இல்லை.இவ்­வா­றான பேச்­சு­வார்த்­தை­யினை நடத்­தி­யது கூட தவ­றான விட­ய­மாகும்.குறித்த பட்­ட­தா­ரி­களின் பிரச்­சி­னையை மாகாண ஆளுநர் அல்­லா­து­விட்டால் குறித்த அமைச்சின் கவ­னத்­திற்கு பொதுச்­சேவை ஆணைக்­குழு கொண்­டு­சென்­றி­ருக்­க­வேண்டும்.குறித்த கிழக்கு மாகாண பொதுச்­சேவை ஆணைக்­கு­ழு­வினை கலைத்­து­வி­டு­மாறு ஆளு­ந­ருக்கு நான் பணிப்­புரை விடுத்­துள்ளேன்.

கிழக்கு மாகாண பொதுச்­சேவை ஆணைக்­கு­ழுவில் தொடர்ந்து 14 வரு­டங்கள் கட­மை­யாற்­றி­ய­வர்­களும் உள்­ள­தாக நான் அறி­கின்றேன்.ஆணைக்­குழு நிய­ம­னங்கள் மூன்று அல்­லது ஐந்து வரு­டங்­களில் மாற்­றப்­ப­ட­வேண்டும்.இது தொடர்பில் விசேட கவ­னத்­தினை ஆளு­ந­ரிடம் தெரி­வித்­தி­ருக்­கின்றேன்.

கிழக்கு மாகா­ணத்தில் நிய­ம­னங்­களை வழங்­கும்­போது நிதிப்­பற்­றாக்­குறை இருக்­கு­மானால் அதனை நிவர்த்­தி­செய்­வ­தற்கு நான் நட­வ­டிக்­கை­யெ­டுப்பேன்.ஆசி­ரிய நிய­ம­னங்­க­ளுக்கு அப்பால் பல்­வேறு பகு­தி­க­ளுக்கும் நிய­ம­னங்கள் வழங்­கப்­படும்.பட்­ட­தா­ரிகள் இந்த நாட்டின் மிகப்­பெரும் சொத்­தாகும்.நாட்டின் அபி­வி­ருத்­திக்கு அவர்­களை சரி­யான முறையில் நாங்கள் பயன்­ப­டுத்­திக்­கொள்­ள­வேண்டும்.நாட்டின் எதிர்­கா­லத்­திற்கு அவர்­களின் பங்­க­ளிப்பு மிக அவ­சி­ய­மா­னது.பட்­ட­தா­ரி­க­ளுக்கு வேலை­வாய்ப்­பினை ஏற்­ப­டுத்­திக்­கொ­டுக்­க­வேண்­டி­யது அர­சாங்­கத்தின் கட­மை­யாகும்.

எமது கல்வி முறையில் இருக்­க­கூ­டிய சில தவ­றுகள் கார­ண­மாக பட்­ட­தா­ரிகள் போராட்­டங்­களை நடாத்­த­வேண்­டிய நிலைக்கு தள்­ளப்­ப­டு­கின்­றனர்.அது­பட்­ட­தா­ரி­களின் தவறு அல்ல.அந்த கல்வி முறையின் தவறு.தற்­போது இந்த கல்­வி­மு­றை­யினை மாற்­று­வ­தற்­கான நட­வ­டிக்­கை­யினை அர­சாங்கம் மேற்­கொண்­டு­வ­ரு­கின்­றது.அந்த பொறுப்­பினை அர­சாங்கம் இன்று நிறை­வேற்­றி­வ­ரு­கின்­றது.மூன்று வரு­டங்­களில் கல்­வியில் நாங்கள் சரி­யான பெறு­பேற்றை பெற்­றுக்­கொள்­ள­மு­டியும்.

வெளி­நா­டு­களில் தமது நாட்­டுக்கு தேவை­யா­ன­வற்­றையே பல்­க­லைக்­க­ழ­கத்தில் கற்­பிக்­கின்­றனர்.நாட்­டுக்கு தேவை­யா­ன­வர்­க­ளையே பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளுக்கு உள்­வாங்­கு­கின்­றனர்.ஆனால், எமது நாடு அந்த நிலைக்கு இன்னும் வர­வில்லை.அதற்­காக அர­சாங்கம் என்ற வகையில் நட­வ­டிக்­கை­யினை எடுத்­து­வ­ரு­கின்றோம்.

ஆசி­ரிய தொழில் ஏனைய தொழில்­களை விட மிக முக்­கி­ய­மான தொழில்.ஏனைய அரச தொழிலை விட ஆசி­ரிய தொழில் மிக முக்­கி­ய­மாக கரு­தப்­ப­டு­கின்­றது.இந்த உல­கத்தில் பல்­வேறு தரப்­பி­ன­ரையும் உரு­வாக்­கு­வது இந்த ஆசி­ரி­யர்­க­ளாகும்.ஆசி­ரியர் தொழில் என்­பது மிகவும் கௌர­வ­மான தொழில்.ஆசி­ரிய தொழிலில் உள்­ள­வர்கள் தமது வாழ்க்கை முறை­யினை சரி­யாக நடாத்­திச்­செல்­ல­வேண்டும்.அனைத்து பிள்­ளை­களும் ஆசி­ரி­யர்­களின் குண­ந­லன்­க­ளையும் ஒழுக்­கத்­தி­னையும் பார்த்­துக்­கொண்­டுதான் உள்­ளனர்.

கிழக்கு மாகா­ணத்தில் சில வேலைத்­திட்­டங்கள் இடை­நி­றுத்­தப்­பட்­டுள்­ள­தாக எனது கவ­னத்­திற்கு கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது.நான் கொழும்பு சென்­றதும் இது தொடர்பில் கவனம் செலுத்­துவேன்.அந்த வேலைத்­திட்­டங்­களை துரி­தப்­ப­டுத்­து­வ­தற்கு நான் நட­வ­டிக்­கை­யெ­டுப்பேன்.

மக்­களின் பிரச்­சி­னைகள் அனைத்தும் பொது­வா­ன­தா­கவே இருக்­கின்­றன.மாகாண ரீதி­யாக அது­வே­று­ப­ட­வில்லை.ஆனால் சில இடங்­களில் கூடு­த­லாக இருக்­கின்­றது,சில இடங்­களில் குறை­வாக இருக்­கின்­றது.மேல்­மா­கா­ணத்தில் ,சப்­ர­க­முவ மாகா­ணத்தில் இவ்­வா­றான பிரச்­சி­னைகள் குறை­வான நிலையில் உள்­ள­போது வட­கி­ழக்கு பகு­தி­யி­லேயே அதி­க­ள­வான பிரச்­சி­னைகள் இருக்­கின்­றன.

நீண்­ட­கால யுத்தம் கார­ண­மாக இப்­ப­கு­தியில் அபி­வி­ருத்­திப்­ப­ணிகள் குறை­வ­டைந்­ததே இதற்­கான மூல­கா­ர­ண­மாகும்.ஏழ்மை அதி­க­ரித்­தது.இதன்­கா­ர­ண­மாக வட­கி­ழக்கு மாகா­ணங்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு அர­சாங்கம் என்ற ரீதியில் முன்­னு­ரி­மை­ய­ளிக்­கின்றோம்.

வட­கி­ழக்கில் உள்ள மக்­களின் இவ்­வா­றான பிரச்­சி­னை­களை தீர்க்கும் வகையில் இரண்டு ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுக்­களை அமைக்­க­வுள்ளேன்.அதற்கு அனைத்து அர­சி­யல்­வா­தி­களும் ஒத்­து­ழைப்பு வழங்­க­வேண்டும் என்று கோரிக்கை விடுக்­கின்றேன்.

இனங்­க­ளுக்கு மத்­தியில் ஒற்­று­மை­யினை ஏற்­ப­டுத்­த­வேண்டும் என்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை நாங்கள் முன்­னெ­டுத்­து­வ­ரு­கின்றோம்.தேசிய சக­வாழ்வு,ஒற்­று­மை­யினை சிலர் தவ­றான முறையில் தெரி­வித்­து­வ­ரு­கின்­றனர்.அவ்­வாறு அவர்கள் செய்­வது தேசிய அநீ­தி­யா­கவே நான் பார்க்­கின்றேன்.

சில தினங்­க­ளுக்கு முன்னர் அம்­பா­றையில் நடை­பெற்ற சம்­பவம் மிகவும் கவ­லைக்­கு­ரி­ய­தாகும்.மதஸ்­த­லங்கள் மீது தாக்­குதல் நடத்­து­வது மிகவும் தவ­றான விட­ய­மாகும்.இவ்­வா­றான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ப­வர்­க­ளுக்கு இன,மத,பேதம் பாராமல் நட­வ­டிக்­கை­யெ­டுக்­க­வேண்டும்.இல்­லா­து­போனால் இந்த நாட்டு மக்கள் மத்­தியில் ஒற்­று­மை­யீனம் ஏற்­ப­டலாம்.நாம் எல்­லோரும் அதற்­காக அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­ப­ட­வேண்டும்.எமது பொறுப்­பினை தெரிந்து சரி­யாக பணி­யாற்­ற­வேண்டும்.நான் அதற்­காக அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட்­டு­வ­ரு­கின்றேன்.

இந்த நாட்டில் வாழும் அனைத்து இன மக்­களும் ஒற்­று­மை­யு­டனும் சக­வாழ்­வு­டனும் வாழ­வேண்டும்.அதுவே நான் காணும் கன­வாகும்.அந்த கனவை நன­வாக்­க­மு­டி­யா­விட்டால் இந்த நாடே அழிந்­து­விடும்.எல்லா பகு­தி­க­ளிலும் கடும்­போக்­கா­ளர்கள் இருக்­கின்­றார்கள் என்­பதை நாங்கள் உணர்ந்­து­கொள்­ள­வேண்டும்.

மார்ச் மாதம் மற்றும் செப்­டெம்பர் மாதங்கள் நெருங்­கும்­போது இந்த நாட்டு மக்கள் மத்­தியில் அமை­தி­யின்­மையை ஏற்­படும் நட­வ­டிக்­கைகள் ஏற்­ப­டுத்­தப்­ப­டு­கி­னற்ன.அவை திட்­ட­மிட்டே செய்­யப்­ப­டு­கின்­றன.இவை இந்த கடும்­போக்­கா­ளர்கள்,தீவி­ர­வா­தி­களின் செயற்­பா­டு­க­ளாகும்.

மார்ச் மற்றும் செப்­டெம்பர் மாதங்­க­ளி­லேயே ஜெனீ­வாவில் இலங்கை தொடர்பில் பேசப்­ப­டு­கின்­றன.இவ்­வா­றான மாதங்­க­ளி­லேயே தீவி­ர­வா­திகள் இவ்­வா­றான செயற்­பா­டு­களை மேற்­கொண்டு நாட்டில் அமை­தி­யீ­னத்தை ஏற்­ப­டுத்தி நாட்டை சீர­ழித்து வரு­கின்­றனர்.அர­சாங்­கத்­தினை மிகவும் கஸ்­ட­மான நிலைக்கு கொண்­டு­செல்­வதே அவர்­களின் நோக்­க­மாகும்.

அதனால் நாடுதான் அழிந்துபோகின்றது.இதனால் உலகத்தில் எங்களை ஏற்றுக்கொள்ளும் தன்மை குறைந்துவிடுகின்றது அல்லது இல்லாமல்போய்விடுகின்றது.எங்களுக்கு இல்லாமல்போன சர்வதேச ஒத்துழைப்பினை பெற்றுக்கொள்வதற்கே கடந்த மூன்று வருடமாக செயற்பட்டுவருகின்றேன்.இந்த நாட்டுக்கு நல்ல பெயரை ஏற்படுத்தும் வகையிலேயே செயற்பட்டுவந்தேன்.

ஆனால், சில அரசியல்வாதிகளும் இயக்கங்களும் தேவையற்ற வகையில் எங்களை பார்த்து விமர்சிக்கின்றனர்.நாட்டுக்கு தேவையானவற்றையே செய்தோம். செய்துவருகின்றோம் என்பதை எதிர்கால சரித்திரம் கூறும்.

நாட்டில் உள்ள இவ்வாறான கடும்போக்காளர்கள்,தீவிரவாதிகளை நாட்டு மக்கள் இனங்காணவேண்டும்,தெரிந்துகொள்ளவேண்டும்.நாங்கள் மிகவும் புத்திசாதுரியமாகவும் பொறுமையாகவும் செயற்படவேண்டும்.

இந்த நாட்டில் உள்ள அனைத்து இன மக்களும் இந்த நாட்டை பாதுகாக்க ,அர்ப்பணிப்புடன் செயற்படுவார்கள் என நான் நம்புகின்றேன்.இந்த நாட்டில் அரசியல் செய்யும் அனைத்து தரப்பினரும் இந்த பொறுப்பினை சரியாக புரிந்துகொள்ளவேண்டும்.தமது அதிகாரங்களை நாட்டுக்காக அவர்கள் தியாகம் செய்யவேண்டும்.நாடு மீதும் நாட்டு மக்கள் மீதும் உண்மையான அன்பு கொண்டு செயற்படுபவர்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கும்.அந்த சமூக சமத்துவத்தினை நாங்கள் ஏற்படுத்தவேண்டும்.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2018-03-04#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.