Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

10 நாட்களுக்கு அவசரகால நிலை பிரகடனம்

Featured Replies

அவசரகால நிலையை பிரகடனப்படுத்த அரசாங்கம் தீர்மானம் :வர்த்தமானி விரைவில்

 

 

நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்திற்கொண்டு அவசரகால நிலையை பிரகடனப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

s-b-dissanayake.jpg

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியுடன் இன்று நடைபெற்ற விசேட சந்திப்பின் பின்னர் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இன்று காலை இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்திலேயே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

10 நாட்களுக்கு அவசரகால நிலையை பிரகடனப் படுத்தவதற்கான உத்தரவை பிறப்பிப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்குள்ளதாகவும் மேலும் அதனை நீடிக்க வேண்டுமாயின் மாத்திரமே பாராளுமன்றத்தில் அதற்கான அனுமதியைப் பெற வேண்டும் எனவும் அமைச்சர்  தெரிவித்தார்.  

இந்நிலையில், இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் உடனடியாக வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

கண்டி, திகன பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற வன்முறையையடுத்து நேற்றையதினம் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்ட நிலையில், இன்று மீண்டும் பல்லேகல மற்றும் தெல்தெனிய ஆகிய பகுதிகளில் இன்று மாலை 6 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

http://www.virakesari.lk/article/31321

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
10 நாட்களுக்கு அவசரகால நிலை பிரகடனம்
 

சட்டம் மற்றும் ஒழுங்கை பேணுவதற்காக, நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 10 நாட்களுக்கு அவசரகால நிலைமையை பிரகடனப்படுத்துவதற்கு, அரசாங்கம் தீர்மானித்துள்ளது என அமைச்சர் எஸ்.பீ. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/10-நாட்களுக்கு-அவசரகால-நிலை-பிரகடனம்/150-212336

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, நவீனன் said:
10 நாட்களுக்கு அவசரகால நிலை பிரகடனம்
 

சட்டம் மற்றும் ஒழுங்கை பேணுவதற்காக, நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 10 நாட்களுக்கு அவசரகால நிலைமையை பிரகடனப்படுத்துவதற்கு, அரசாங்கம் தீர்மானித்துள்ளது என அமைச்சர் எஸ்.பீ. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/10-நாட்களுக்கு-அவசரகால-நிலை-பிரகடனம்/150-212336

10 நாட்களுக்குள்ளும் பல புதிய புத்த விகாரைகள் தேரர்களினால் ஈழத்தில் பிரகடணமும் செய்யப்படலாம். :shocked:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.