Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்டியில் முப்படைகளும் குவிப்பு – திரும்பிய திசையெங்கும் கவசவாகனங்கள்

Featured Replies

கண்டியில் முப்படைகளும் குவிப்பு – திரும்பிய திசையெங்கும் கவசவாகனங்கள்

 

kandy-apc (3)கண்டி மாவட்டத்தில் முப்படைகளையும் சேர்ந்த 3000இற்கும் அதிகமானோர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தார்.

“சிறிலங்கா இராணுவத்தினர் 2500 பேரும், கடற்படையினர் 600 பேரும், விமானப்படையினர் 30 பேரும், பொதுமக்களின் பாதுகாப்புக்கான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவசர தேவைகளுக்கு உதவத் தயார் நிலையில் மேலும் படையினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

படையினர் பாதுகாப்புக்கு நிறுது்தப்பட்ட பின்னர் வன்முறைகள் தணிந்துள்ளன. சட்டத்தை மீறுகின்ற எவர் மீதும் நாங்கள் கடுமையான நடவடிக்கையை எடுப்போம்.

எந்தச் சூழ்நிலையையும் எதிர்கொள்வதற்குத் தேவையான ஆளணி எம்மிடம் உள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

kandy-apc (1)kandy-apc (3)SRI LANKA-UNREST-RELIGION-MUSLIMkandy-apc (4)

kandy-apc (5)

அதேவேளை, நேற்று கண்டிக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க வன்முறைகள் இடம்பெற்ற திகண, கலஹா, கட்டுகஸ்தோட்ட, மெனிக்கின்ன, அம்பத்தென்ன, அக்குறணை, பூஜாபிட்டிய உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று நிலைமைகளை அவதானித்தார்.

அத்துடன், கண்டியில் உள்ள மத்திய படைகளின் தலைமையகத்தில், இராணுவ அதிகாரிகளுடன், பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.

இதையடுத்து, பள்ளிவாசல்களின் மௌலவிமாரைச் சந்தித்துப் பேசிய சிறிலங்கா இராணுவத் தளபதி, முஸ்லிம்கள் வாழும் பகுதிகளிலுள்ள பள்ளிவாசல்கள், வீடுகளுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும். எல்லா பொதுமக்களினதும் பாதுகாப்பை சிறிலங்கா படையினர் உறுதிப்படுத்துவர்.

கூடிய விரைவில் வழமை நிலையை ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் பாதுகாப்பு முழுமையாக உறுதிப்படுத்தப்படும் வரை சிறிலங்கா இராணுவத்தினர் விலக்கிக் கொள்ளப்படமாட்டார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, கண்டி மாவட்டத்தில் பிரதான வீதிகளெங்கும், சிறிலங்கா இராணுவத்தின் கவசவாகனங்களும், துருப்புக்காவிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

பெரும் எண்ணிக்கையான படையினர் வீதிகள், முக்கிய இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. இராணுவ வாகனங்களின் ரோந்து நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளுக்கு அனுப்புவதற்காக வெள்ளை நிறப்பூச்சு அடிக்கப்பட்ட துருப்புக்காவிகளும் கண்டி வீதிகளில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளன.

 

http://www.puthinappalakai.net/2018/03/09/news/29640

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
கண்டியில் 12 பெற்றோல் குண்டுகள் மீட்பு
 

கண்டி- இலுக்தென்ன,பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 12 பெற்றோல் குண்டுகளை பொலிஸார் இன்று (09) அதிகாலை மீட்டுள்ளனர்.

தாக்குதல்களை மேற்கொள்ளும் வகையில் இவ்வாறு பெற்றோல் குண்டுகளை மறைத்து வைத்திருக்கலாம் என, பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/கண்டியில்-12-பெற்றோல்-குண்டுகள்-மீட்பு/175-212463

  • தொடங்கியவர்

கண்டியில் முண்டியடித்துக் கொண்டு பொருள் கொள்வனவில் ஈடுபட்ட மக்கள்

 

50 இற்கும் மேற்பட்ட வீடுகள், வாகனங்கள் சேதம்
(வத்துகாமம் நிருபர்)

கண்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதி களிலும் ஊரடங்கு தளர்த்தப்பட்ட போது மக்கள் முண்டியடித்துக் கொண்டு உணவுப் பொருட்கள் கொள்வனவில் ஈடுபட் டிருந்ததை அவதானிக்க முடிந்தது . பொதுமக்கள் அதிகமாக சில்லறை பொருட்கள், மளிகை பொருட்கள் 

 விற்பனை செய்யும் நிலையங்கள் மற்றும் ஆங்கில மருந்தகங்கள் என்பவற்றில் முன்டியடித்துக் கொண்டு கொள்ளவனவில் ஈடுபட்டதை அவதானிக்க முடிந்தது. எனினும் ஹோட்டல்கள் வெருச்சோடிக்கிடந்தன. வங்கிகளில் நீண்ட வரிசைகளைக் காண முடிந்தது. ஏ.டி.எம். (தன்னியக்க யந்திரங்களுக்கு) முன்னால் அதிக சனக் கூட்டங்களைக்காண முடிந்தது.

அதேநேரம் கண்டி நகரில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. ஒரு சில கடைகள் மட்டுமே திறந்திருந்தன. போக்கு வரத்துக்கள் மட்டுப் படுத்தப்பட்ட அளவில் காணப்பட்டன.

அதேநேரம் இராணுவ பாதுகாப்பு மற்றும் பொலீஸ் ரோந்து நடவடிக்கைகளும் பொதுவாக இருந்தன. பிரதான சந்திகளில் கூட்டுப்படைகள் காவலில் ஈடுபட்டு வருகின்றன . இடைக்கிடை ஆகாயமார்க்கமாக சீ-பிலேன் மூலமான அவதானிப்பு நடவடிக்கைகளும் இடம் பெற்றன. புதன் கிழமை இரவு நீண்ட நேரம் ஆகாய மார்க்கமான அவதானிப்புக்கள் இடம் பெற்றன.

பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தாலும் இடைக்கிடை மோட்டார் சைக்கிள்களில் அல்லது முச்சக்கர வண்டிகளில் வந்த கோஷ்டிகள் ஆங்காங்கே கல் வீச்சு நடவடிக்கைகளுக்கு முற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. எனினும் பாதுகாப்புத் தரப்பினர் நடவடிக்கையை அடுத்து அவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகல் வேளையில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டபின் பொதுமக்கள் நடமாட்டம் காணப்பட்ட போதும் இரவு வேளைகளில் ஒருவித பீதியுடனே மக்கள் வாழ்கின்றனர்.

கண்டி மாவட்டத்திலுள்ள சிறிய கிராமங்களைச் சேர்ந்த அதிகமானோர் பிரதான கிராமங்களில் உள்ள உறவினர்களது வீடுகளுக்கு வந்து தஞ்சமடைந்துள்ளனர்.

திகனை, மெனிக்கின்ன, தெல்தெனிய பகுதிக்கடைகள் தாக்கப்பட்டதன் காரணமாக கும்புக்கந்துறை, ஹிஜ்ராபுர, பலகொல்ல, கெங்கல்ல, அலுத்வத்த போன்ற பகுதிகளில் உள்ளோர் வெகு தூரம் வந்து மடவளை போன்ற இடங்களில் பொருட்களை எடுத்துச் சென்றதையும் காண முடிந்தது.

அதேநேரம் கட்டுகஸ்தோட்டை, நுகவல பகுதியில் உற்பகுதியில் அமைந்துள்ள என்டருதென்ன பகுதி மக்களே அவசர உதவி வேண்டி தகவல் அனுப்பி வருகின்றனர். அங்கு சுமார் 280 பேரளவில் பாடசாலையில் தஞ்சமடைந்துள்ளதாகவும் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். ஊரடங்கு தளர்த்தப்பட்ட போது ஒருசிலர் தனிப்பட்ட முறையில் நிவாரணங்களை அனுப்பி வைத்தனர்.

சிறு குழந்தைகளும் கர்ப்பிணித் தாய்மார்களும் இருப்பதாகவும் காடுகளில் ஓடி ஒளிந்த போது காயமடைந்த சிலருக்கு அவசர முதலுதவிகள் கூட தாமதிப்பதாகவும் தெரிவித்தனர். தற்போது நிலைமை சீரடைந்து வருவதாக என்டருதென்ன பிரதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்தும் அவர்கள் பாடசாலையிலே தங்கியுள்ளனர். இங்கு 50 ற்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வாகனங்கள் வாகனங்கள் தாக்கப்பட்டுள்ளன.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-03-09#page-1

  • கருத்துக்கள உறவுகள்

உதெல்லாம் சும்மா படப்பிடிப்புக்கு 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.