Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் படைத்துறை ஆளுமை - சில புரிதல்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் படைத்துறை ஆளுமை - சில புரிதல்கள்

-பிரான்சிலிருந்து பரணி கிருஸ்ணரஜனி

01. நோர்வேயைப் பொறிக்குள் மாட்டி விட்ட புலிகள்.

- சம்பூரிலிருந்து புலிகள் பின்வாங்கியது குறித்து அரசியல் ஆய்வாளர் இதயச்சந்திரன்.

02. களமுனையில் முன்னேறுதலும், பின்வாங்குதலும், தந்திரோபாய ரீதியிலானதான நடவடிக்கைகளாகவே பெரும்பாலும் இருப்பதுண்டு. ஆனால் சிதறி ஓடுதலும் திக்குத் தெரியாமல் ஓடுவதும் தோல்வியின் வடிவமாகவே இருக்கும்.

- பனிச்சங்கேணி, முகமாலை முறியடிப்புச் சமர்களை முன்வைத்து ஈழநாதம் ஆசிரியர் ஜெயராஜ்.

03. மோதவேண்டிய களத்தையும்;, தவிர்க்க வேண்டிய களத்தையும் நன்கு அறிந்தவர்கள் புலிகள். வாகரையில் இருந்து புலிகள் ஏன் விலகிச்சென்றார்கள் என்பதில் தெளிவாக வேண்டுமானால் ஒன்றை புரிந்து கொள்ளல் அவசியம். மகிந்த ஒரு அரசியல்வாதி ஆனால் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு போராளி. தனது அரசியல் நலன்களுக்காகவோ அல்லது தனது பெயரை உயர்த்த வேண்டும் என்பதற்காகவோ பாதகமான களங்களில் போராளிகளையும், மக்களையும் பலிகொடுக்க வேண்டிய தேவையும் ஆசையும் தலைவர் பிரபாகரனுக்கு இல்லை.

- வாகரைச் சமரை முன்வைத்து படைத்துறை ஆய்வாளர் அருஸ்.

கடந்த வாரம் நான் எழுதியிருந்த 'புலிகளின் ஏகபிரதிநிதித்துவமும் சமதரப்பு அங்கீகாரமும்" என்ற கட்டுரைக்கு ஏகப்பட்ட எதிர்வினைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அது நான் எதிர்பார்த்ததுதான். ஆனால் நான் எதிர்பார்த்த கோணத்திலிருந்து மாறுபட்டிருந்தன அவை. ஏனெனில் நான் அந்தக் கட்டுரையை எழுதத் தொடங்கியபோதிருந்த மனநிலை அதை முடித்திருந்த போது எனக்கிருக்கவில்லை.

கொஞ்சக்காலமாகவே தனிப்பட்ட ரீதியில் மன உளைச்சலுக்கு உள்ளாகிக்கொண்டிருக்கிறேன். அதிலிருந்து மீள்வதும் வீழ்வதுமாக அது தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதற்குக் காரணமானவர்களில் முக்கியமானவர்கள் அரச புலனாய்வுத்துறையினர் என்று நான் சந்தேகிக்கின்ற போதிலும் யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் ஒரு உளவளத்துணை நிலைய நிர்வாகத்தினரும், அதன் இயக்குனர்களில் ஒருவரான ஒரு உளவியற்துறை பேராசிரியரும் அவரது உறவினர்களும் அடங்குவர் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால்; நிஜம் என்னவோ அதுதான்.

தமது பதவி, நிலையத்தின் நோக்கம் என்பவற்றையெல்லாம் மறந்து ஒரு இனத்தின் பண்பாட்டுச் சீரழிவுக்குத் துணைபோகும் அவர்களின் அரசியலை அடையாளங்காண முடியவில்லை. இதையெல்லாம் தெரிந்துதான் செய்கிறார்களா இல்லை தெரியாமல் செயகிறார்களா என்பதையும் புரிந்துகொள்ள முடியவில்லை.

'விடுதலைப் போராட்டத்தில் பண்பாட்டின் பாத்திரம்" என்ற அமில்கர் கப்ராலின் தத்துவத்தை முன்வைத்து உளவியல், பெண்ணியம், மனித உரிமை என்ற தளங்களில் விரிவாகப் பேச வேண்டிய விடயங்கள் அவை. இது குறித்து பிறிதொரு கட்டத்தில் விரிவாகவும் ஆழமாகவும் பேசுவோம். இப்போது நாம் விடயத்திற்கு வருவோம்.

மேற்குறிப்பிட்ட மன உளைச்சலின் காரணமாக அந்தக் கட்டுரையில் சொல்ல வந்த விடயத்தை சரியான முறையில் சொல்லவில்லையோ என்று குழம்பிக்கொண்டிருந்தேன். எனவே எதிர்வினைகளில் நான் எதிர்பார்த்தது அது குறித்துத்தான். ஆனால் மாறாக எதிர்வினைகள் வேறு இரு வடிவங்களில் இருந்தன.

01. வழமை போன்று புலிகளின் ஏகப் பிரதிநிதித்துவத்தை அங்கீகரிக்க மறுக்கும் தேசவிரோதக் குரல்கள்.

02. தமிழ்த் தேசியத்தை ஆதரித்தும் நேசித்தும், ஆனால் சமாதான காலத்தில் நம்பிக்கையிழந்துபோன குரல்கள்.

முதலாவது வகையினரின் அரசியல் வெளிப்படையானது. அது குறித்து இங்கு பேசுவது பொருத்தமற்றது என்பதுடன் அது தேவையில்லை என்றும் நினைக்கிறேன். ஆனால் என்னால் இரண்டாவது வகையினரின் குரல்களைத்தான் ஒரு அளவிற்கு மேல் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்களது நம்பிக்கையீனம் ஒருவித எரிச்சலையும் தோற்றுவிக்கிறது.

இந்த நம்பிக்கையீனங்களிலிருந்து அவர்களை மீட்டெடுக்கும் முயற்சியாக சிலவற்றைப் பேசலாம் என நினைக்கிறேன். குறிப்பாகப் புலிகளின் படைத்துறை ஆளுமை குறித்த புரிதல்கள் பற்றிப் பார்ப்போம்.

எனது முன்னைய கட்டுரையில் 'சில சூழ்ச்சிகளின் அடிப்படையில் இன்று வலுச்சமநிலை தளம்பி சிங்களத்தின் கை மேலோங்கியுள்ளது. இருந்தபோதிலும் மேற்குறித்த படிநிலை வளர்ச்சியின் படி புலிகள் எந்தநேரத்திலும் வலுச்சமநிலையைத் தம்பக்கம் திருப்பக்கூடிய நிலையிலேயே இன்னும் இருக்கிறார்கள். ஆகையால்தான் உடன்படிக்கையை இன்னும் தொடர்கிறார்கள், மதிக்கிறார்கள்" என்று நான் குறிப்பிட்டிருந்ததை நம்புவதற்கு பெரும்பாலானவர்கள் தயாராக இல்லை.

இங்கு குறிப்பான ஒரு விடயம் என்னவெனில் கள நிலவரங்களின் யதார்த்தத்திற்கு அப்பால் அதீதமான நம்பிக்கைகளையூட்டுவது எந்தளவிற்குப் பாதகமானதோ அதே அளவு பாதகம் நம்பிக்கையீனங்களை வளர்ப்பதும்தான். இது தெரியாதவன் அல்ல நான். ஏற்கனவே முகமாலை மோதல்களை எமது ஊடகங்கள் அணுகிய விதம் குறித்தும் அதீத நம்பிக்கைகளை வளர்த்தது குறித்தும் எனது கடும் விமர்சனங்களை முன்வைத்திருக்கிறேன். (பார்க்க: யாழ் குடா முற்றுகையும் தமிழ்ஊடகங்கிள் அரசியலும்-)

எனவே புலிகளின் படைத்துறை ஆளுமை குறித்து எனக்கு ஆழ்ந்த புரிதல் இருக்கிறது. அதன் அடிப்படையிலேயே படைவலுச் சமநிலையை தம்பக்கம் திருப்பும் ஆற்றலை புலிகள் கொண்டுள்ளார்கள் என்ற எனது கருத்தைப் பதிவு செய்திருந்தேன்.

புலிகள் தோற்றுவிட்டார்கள், பலமிழந்து விட்டார்கள் என்ற ரீதியில் பிரச்சினையை அணுக முற்படுவதும் மதி;ப்பிடுவதும் முதல் தவறு. புலிகள் பலத்துடன் இருக்கிறார்களா இல்லையா என்ற உண்மை நிலைப்பாட்டிற்கும் அப்பால் எதிரிகளுக்கு புலிகளை பலமிழந்தவர்களாகக் காட்டுவதில் சில அரசியல் வெற்றிகள் இருக்கின்றன. அதே போன்று மேற்குலகத்திற்கும் சில சாதகங்கள் இருக்கின்றன. எனவே அதைச்சுற்றியதான பொய்ப் பரப்புரைகளும் புனைவுகளும் எழுவது இயல்பானது. இதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும்.

இன்று எம்மில் பலர் அடைந்திருக்கும் நம்பிக்கையீனங்கள் கூட சிங்களம் எதிர்பார்க்கிற வெற்றிகளில் ஒன்றுதான். போர் என்பது ஆயுதத்தினால் மட்டும் நடத்தப்படுவதல்ல. அது பலவகைப்பட்டது. உளவியற்போர் (pளலஉழடழபiஉயட றயச) அதில் முக்கியமான ஒன்று. சமாதான காலத்தில் மிக உக்கிரமாக நிகழும் இந்தப் போரில் எம்மில் பலர் பலியாகிவிட்டார்கள் என்பதன் சாட்சிதான் அந்த நம்பிக்கையீனங்கள். இதில் நாம் இனியாவது முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என்பதைத்தான் எனக்கு வந்த எதிர்வினைகள் அடையாளங்காட்டுகின்றன.

சமாதான காலத்தில் ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பின் செயற்பாடுகளை முடக்கிவிட்டு அதைத் தமக்குச் சாதகமாக்கி சில சூழ்ச்சிகள் முலம் வலுச்சமநிலையைத் தம்பக்கம் திருப்பி வைத்திருக்கும் எதிரிகளின் படையாளுமையையும்; அந்தச் சூழ்ச்சிக்குள்ளான விடுதலை அமைப்பின் படையாளுமையையும் ஓரே தட்டில் வைத்து மதிப்பிடுவது சரியானதாகவோ உண்மையானதகவோ ஒருபோதும் இருக்க முடியாது.

புலிகள் என்றில்லை ஒரு விடுதலை அமைப்பின் படைவலுவை ஒரு யுத்த காலத்தில்தான் சரியாக மதிப்பிட முடியும். நீண்ட காலம் சமாதானம் நிலவி - அதிலிருந்து வெளியேறாமலே சில படை நடவடிக்கைகளை நடத்திவிட்டு கொக்கரிக்கும் ஒரு படைத்தரப்பை முன்னிறுத்தி - அந்த சமாதானம் சாகும் தருவாயில் இந்த மதிப்பீட்டை நிகழ்த்துவது போன்ற அபத்தம் உலகத்தில் வேறில்லை.

அண்மைக்காலமாக புலிகளினுடைய முக்கிய கவனம் எல்லாம் சமாதான காலத்தில் தமக்கெதிராகப் பின்னப்பட்டுள்ள சூழ்ச்சிகளிலிருந்து வெளியேறுவது குறித்துத்தான் குவிக்கப்பட்டுள்ளது. இப்போதுதான் மெதுமெதுவாக அதிலிருந்து மீண்டு கொண்டிருக்கிறார்கள். புலிகள் அடையும் இராணுவ வெற்றிகள் தொடர்ந்து தக்கவகை;கப்பட வேண்டியதும் அதை அரசியல் வெற்றியாக மாற்றுவதும் என்று புலிகளின் படை நகர்த்தல்களுக்குப் பல பரிமாணங்கள் இருக்கின்றன. ஆனால் சிங்கள இராணுவத்தின் வெற்றிகள் மட்டுமல்ல தோல்விகள் கூட பலவீனமான அடித்தளத்திலிருந்து மேலெழுபவை.

முழுமையான யுத்த காலத்தில்தான் ஒரு விடுதலை அமைப்பின் இராணுவ வெற்றிகளுக்கு முழுமையான விளைவுகள் கிடைக்கும்.

நான் முன்பே ஒரு கட்டுரையில் குறிப்பிட்டதுபோல், சர்வதேச தடைகளும் அழுத்தங்களும் தொடரும் ஒரு சூழலில் - புரிந்துணர்வு ஒப்பந்தம் முழுமையாக முறிவடையாத ஒரு நிலையில் - நில மீட்பென்பதும் இராணுவ வெற்றி என்பதும் குறிப்பான விளைவுகளை எமக்குத் தந்துவிடாது. மறுவளமாகப் பார்த்தால் ஒருவகையில் அது வேறு சில அழுத்தங்களுக்குத்தான் வழிவகுக்கும். எனவே யுத்த காலம்தான் எல்லாவற்றையும் மதிப்பிடுவதற்கான சரியான காலமும் களமும்.

இனி சமாதான காலத்தில் நடந்த சில படை நடவடிக்கைகள் குறித்துப் பார்ப்பது புலிகளின் உண்மையான படையாளுமையையும் ராஜதந்திர நகர்வுகளையும் மதிப்பிடுவதற்கு உதவும் என்று நம்புகிறேன். அதற்கு சிறந்த வழி அந்த படை நடவடிக்கைகளையொட்டி தமிழீழத்தின் முக்கியமான ஆய்வாளர்கள் வெளிப்படுத்திய கருத்துக்களை மீளாய்வு செய்வதுதான். அவைதான் நான் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ள முக்கியமான 3 ஆய்வாளர்களின் கருத்துக்;கள்.

இங்கு முன்பே ஒன்றைப்பதிவு செய்வது நல்லதென்று நினைக்கிறேன். முதூர், சம்பூர், வாகரை உட்பட சில இடங்கள் பறிபோனது குறித்து எமது தரப்பிலும் அதெல்லாம் பெரிய விடயங்கள் இல்லை என்ற ரீதியில் சில ஊடக ஆய்வுகளும் விமர்சனங்களும் இருக்கத்தான் செய்கின்றன. இந்த அபத்தத்திற்கும் முட்டாள்தனத்திற்கும் என்ன பதில் எழுதுவதென்று எனக்குத்தெரியவில்லை. இந்த போலித்தனமான பொறுப்பற்ற ஊடகத் தார்ப்பரியம்தான் எமது மக்களையே ஒருவித நம்பிக்கையீனங்களிற்கும் விரக்திக்கும் இட்டுச்சென்றிருக்கிறது. புலிகள் பற்றிய போலி மதிப்பீட்டிற்கும் வழி சமைத்திருக்கிறது.

எந்தவித சந்தேகங்களும் தேவையில்லை, அந்த இடங்கள் பறிபோனது எமக்குப் பாரிய பின்னடைவுகள்தான். இதை மறுப்பதோ மறைப்பதோ எமக்கு எந்தவிதமான லாபத்தையும் தரப்போவதில்லை. மாறாக இந்த கட்டுரையின் மையக்கருத்ததாக நான் பேச விழையும் புலிகளின் படையாளுமை குறித்த எமது மக்களின் நம்பிக்கையீனங்களிற்குத்தான

ஆகவே புலிகள் குறித்து முன்பு நான் எழுதிய சில வரிகளைத்தான் திரும்பவும் ஞாபகப்படுத்த வேண்டியிருக்கிறது.

'உலக இராணுவ மேதைகளினதும் படை வரலாற்றாளர்களினதும் சமன்பாடுகளுக்கும் அடங்க முடியாமல் திமிறிக் கொண்டு நிற்கிறது புலிகளின் சேனை. புலிகளின் வீரத்தை உணரமுடிகிறதேயொழிய உற்றுப் பார்க்க முடியவில்லை. காற்றைப் போல் அலையும் மையமாகியிருக்கிறது அவர்களின் போர்த்திறனும் வீரமும். 'இப்படித்தான் இருப்பார்கள்" என்று எல்லோராலும் கணிக்கப்படுகிற போது புலிகள் அந்தக் கட்டத்திலிருந்து வேறொரு கட்டத்துக்கு சத்தமின்றி பாய்ந்து விடுகிறாhகள். முடிவில் மீண்டும் அறுபட முடியாத புதிராய் புலிகள். புலிகளின் இந்த வீரம் எதிரிகளை கிலி கொள்ளச் செய்கிறது. தமிழனை தலைநிமிரச் செய்கிறது".

எனவே நாம் தலைநிமிர்விற்குத் தயாராவோம்.

பரணி !

உமது கருத்து மிகச் சரியானதே.

தோல்விகளைச் சாதகமாக்கிக் கொள்ளுதலே வெற்றியெனப்படும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடந்த வாரம் நான் எழுதியிருந்த 'புலிகளின் ஏகபிரதிநிதித்துவமும் சமதரப்பு அங்கீகாரமும்" என்ற கட்டுரைக்கு ஏகப்பட்ட எதிர்வினைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அது நான் எதிர்பார்த்ததுதான். ஆனால் நான் எதிர்பார்த்த கோணத்திலிருந்து மாறுபட்டிருந்தன அவை. ஏனெனில் நான் அந்தக் கட்டுரையை எழுதத் தொடங்கியபோதிருந்த மனநிலை அதை முடித்திருந்த போது எனக்கிருக்கவில்லை.

கொஞ்சக்காலமாகவே தனிப்பட்ட ரீதியில் மன உளைச்சலுக்கு உள்ளாகிக்கொண்டிருக்கிறேன். அதிலிருந்து மீள்வதும் வீழ்வதுமாக அது தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இவர்கள் எல்லாம் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் என்று நான் நினைத்தது சரியாகத்தான் இருக்கு. மன நலம் பாதிக்கப்பட்டிருந்ததை ஒத்துக்கொண்ட எழுத்தாளர் தான் எங்கிருந்து எழுதினார் என்பதை ஏன் சொல்ல வில்லை? இலங்கையில் அதை அங்கொடை என்பார்கள்.

இந்த புலத்து ஆய்வாளர்கள் எல்லாம் தமிழீழம் விடியும்வரை தங்களின் அதிமேதவித்தனமாக ஆய்வுகளை நிறுத்தி வைத்தால் மெத்த மகிழ்ச்சி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.