Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சாகுவரை ஜனாதிபதியாக இருக்கப் போகும் ஷீ ஜின்பின் (Xi Jinping)…

Featured Replies

சாகுவரை ஜனாதிபதியாக இருக்கப் போகும் ஷீ ஜின்பின் (Xi Jinping)…

China-president.png?resize=800%2C485

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் தொடர்ந்தும் பதவியில் இப்பதற்கான அரசியலமைப்பு திருத்த ஒப்பந்தத்திற்கு அந்நாட்டின் அரசு உடன்பட்டுள்ளதாக சர்வதேச  ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தேசிய மக்கள் காங்கிரஸில் இட்பெற்ற வாக்களிப்பில் உயிர் வாழும்வரை ஜனாதிபதியாக இருக்கும் அரசியல் அமைப்பு திருத்த ஒப்பந்தத்திற்கு,  2964 மொத்த வாக்குகளில், 2,958  வாக்குகள் ஆதரவாகவும் வாக்களித்துள்ளனர். 2 வாக்குகள் எதிராகவும், 3 பேர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை எனவும், ஒரு வாக்கு செல்லுபடியற்றதாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

 

இதன் மூலம் ஒருவர் சீன அதிபராக இரண்டு முறைக்குமேல் பதவி வகிக்கக்கூடாது என்ற கட்டுப்பாட்டை சீன நாடாளுமன்றமான ‘தேசிய மக்கள் காங்கிரஸ்’ நீக்கியுள்ளது.இத்தீர்மானத்தின் மூலம் தற்போதைய சீன அதிபரான ஷி ஜின்பிங் வாழ்நாள் முழுவதும் அதிபராக நீடிப்பதற்கு வழிவகை ஏற்படுகிறது.

XI-Mavo.jpg?resize=624%2C255

கடந்த ஒக்டோபர் மாதம் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டின்போது அடுத்த அதிபரின் பெயரை முன்மொழியும் நடைமுறையை தற்போதைய சீன அதிபரான ஷி ஜின்பிங் தவிர்த்தார். மாறாக, ஷி ஜின்பிங்கின் பெயரையும், கொள்கையையும் கட்சியின் அமைப்புச் சட்டத்தில் இடம் பெறச் செய்யும் முடிவுக்கு கட்சி மாநாட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் தமது அரசியல் அதிகாரத்தை நிலைபெறச் செய்த ஷி, கட்சி நிறுவனரான மா சேதுங்குக்கு இணையான நிலைக்கு தம்மை உயர்திக்கொண்டார்.

ஷி ஜின்பிங்கின் பதவிக்காலம் வரும் 2023 ஆம் ஆண்டு முடிவடையவுள்ள நிலையில், அதிபருக்கான பதவிக்கால வரம்புகளை அரசமைப்புச் சட்டத்தில் இருந்து நீக்கவேண்டும் என்று பிப்ரவரியில் கம்யூனிஸ்ட் கட்சி முன்மொழிந்தது. இந்நிலையில், இன்று கூடவுள்ள தேசிய மக்கள் காங்கிரசின் ஆண்டு கூட்டத்தின்போது எவ்வித சிரமமுமின்றி திருத்தமானது நிறைவேற்றப்பட்டுள்ளது.

http://globaltamilnews.net/2018/70355/

  • கருத்துக்கள உறவுகள்

க்ஸி ஜின்பிங் இற்கும் மாவோவிட்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது.

க்ஸி ஜின்பிங் சாதாரண ஓர் விவசாயியாக கொம்யூனிஸ்ட் கட்சியின் அடிமட்டத்தில் இருந்து வளர்ந்த தலைவர்.

க்ஸி ஜின்பிங் ஐ மேற்கத்திய ஊடகங்கள் கண்டனமும், வசைபாடும் விமர்சனமும் செய்வதற்கண காரணம்,  க்ஸி ஜின்பிங் சீனாவின் இராணுவத்தில் இருந்த முதலை தனமான ஊழல்களையும், அதனை செய்யும் அதிகாரிகளையும், அவ்வாறே சீன அரச, மற்றும் தனியார்  இயந்திரத்தில் நிலைக்குத்தாகவும், பக்கவாட்டிலும் உள்ள ஊழல்களையும், அதனை செய்யும் அதிகாரிகளையும் கலையெடுத்துக்கொண்டிருக்கிறார்.

அத்துடன், சீன பொருளாதாரம், இராணுவத்தையம், இராணுவ துறையையும்,  தொழிநுட்ப அடிப்படையில் நவீனமயப்படுத்தல் மட்டுமல்லாது, நிறுவனப்படுத்தப்பட்ட முறையிலும்  நவீன மையப்படுத்தி வருகிறார். அதனால், வளர்ந்து  வரும், நன்கு பயிட்டப்பட்ட, திறமைகளை வெளிப்படுத்தும் இளநிலை அதிகாரிகளுக்கு திறமை, மற்றும் தகுதி அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படுகிறது.

இது பொதுவாகவே, மூப்பின் அடிப்படியில் வளர்ந்த, வளந்துவரும் அதிகாரிகளுக்கு பிடடிக்காத, எரிச்சலூட்டும் விடயமாகும். அப்படியானவர்கள், மீள்பயிட்சி, மற்றும் துறை சார்ந்த சிறப்பு பயிட்சி எடுக்கவேண்டிய நிலையில் உள்ளார்கள்.

அத்தோடு, க்ஸி ஜின்பிங் பொருளாதாரத்திடற்கும், பாதுகாப்பு, நவீனமயப்படுத்தல், வாழ்கைத்தர வளர்ச்சி என்பவற்றிற்கு இடையேயான மிகவும் நெருக்கமான தொடர்புகளை அறிந்தவராக ஆக்க குறைந்தது காட்டிக்கொள்கிறார்.

மற்றும் நிதி நிலை உறுதி தன்மை, தனியார், மற்றும் அரச கடன் பளுவை குறைதல், கட்டுக்குள் வைத்திருத்தல், உள்நாட்டு, மற்றும் வெளிநாட்டு சந்தைகளை திறத்தல் அல்லது அதற்கண வாய்ப்புக்களை ஏற்றப்படுத்தல்  என்பவற்றில் மிகவும் கரிசனையோடு செயற்றப்படுகிறார்.

சீனாவின் வாழ்க்கைத்தரம் கூடிவிட்டது, வறுமை குறைக்கப்பட்டு விட்டது, நகர வாழ்க்கை வறுமை அடியோடு ஒழிக்கப்பட்டுவிட்டது. அதோடு, அடிநிலை சிறப்புத்தேர்ச்சி தொழிலாளர் சம்பளமும், வருமானமும் கூடிவிட்டது.

இவையெல்லாம் டெங் க்ஸியாபிங் இந்த காலத்தில் இருந்து முன்னேறியதாயினும், க்ஸி ஜின்பிங் இன்  ஆட்சியில் மிகுந்த வேகத்துடன் மேலும் முன்னோக்கி பாயும் அசுர வளர்ச்சியடைந்து விட்டன.

இதுவும், மற்றும் நிர்வாக, ஆட்சி ஒழுங்கு முறையும்  மற்றும் சர்வதேச உறவுகளை கையாண்ட விதமும், சீன மக்களின் பொதுவான அங்கீகாரமும்  , க்ஸி ஜின்பிங் ஐ 2 தடவைக்கு மேலும் அதிபராக இருபதத்திற்கு தேசிய மக்கள் அவையும். மற்றும் முன்னாள் அதிபர்கள் பொலிட்பீரோ வும் அங்கீகாரம் தந்துள்ளதத்திற்கு காரணங்கள்.

இவ்வளவு பெரிய சனத்தொகையை கொண்ட நாட்டில்,   2 தடவைக்கு மேலும் அதிபராக இருப்பதற்கு அனுமதிக்காத யாப்பை மாற்றுவது என்பது அவ்வளவு இலகுவான விடயமல்ல.

ஆயினும், சீனாவின் சனத்தொகை மற்றும் ஆட்சி முறையில் அனைத்து பங்குதாரர்களை ஒரே நேரத்தில் திருப்பதிபடுத்துவது எனபது முடியாத ஒன்று.    

அதனால், கண்டனங்களும், வசை மற்றும் அறம் பாடுதலும், எதிர்ப்புகளும் இருந்து கொண்டேயிருக்கும்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.