Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான்காவது முறையாக ஜெர்மனியின் அதிபரானார் ஏஞ்சலா மெர்கெல்!

Featured Replies

நான்காவது முறையாக ஜெர்மனியின் அதிபரானார் ஏஞ்சலா மெர்கெல்!

 
 

ஜெர்மனியில் 6 மாத கால அரசியல் முட்டுக்கட்டைகளை தகர்த்தெறிந்து நான்காவது முறையாக பெரும்பான்மை கூட்டணி கட்சிகளால் அதிபர் பதவிக்கு ஏஞ்சலா மெர்கெல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சிறந்த பொருளாதார பின்னியை கொண்ட ஜெர்மனியில் 2005ஆம் ஆண்டு முதல் மூன்று முறை ஏஞ்சலா மெர்க்கல் அதிபராக பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில், ஏஞ்சலா மெர்க்கல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டும் பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் ஆட்சியமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனையடுத்து, கடந்த 6 மாக காலமாக கூட்டணி அரசு அமைப்பது தொடர்பாக இடம்பெற்று வந்த அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வி கண்டன.

இந்நிலையில், அந்நாட்டு பாராளுமன்ற கீழ் சபையில் இன்று நடந்த வாக்கெடுப்பில் 355 உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்ற நிலையில், 364 உறுப்பினர்களின் வாக்கை பெற்று ஏஞ்சலா மெர்கெல் மீண்டும் பதவியை கைப்பற்றியுள்ளார்.

எனவே, ஏஞ்சலா மெர்கெல் ஜெர்மன் அதிபராக நான்காவது முறையாக விரைவில் பதவிப்பிரமாணம் செய்துகொள்வார் என கருதப்படுகிறது.

https://news.ibctamil.com/ta/world-affairs/Angela-begins-fourth-term-as-German-Chancellor

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருந்தப்பிலை ஒரு ஆட்சி அரங்கேறிட்டுது. tw_lol:

  • தொடங்கியவர்

4 ஆவது முறையாக ஜேர்மனியின் சான்சிலரானார் ஏஞ்சலா மெர்க்கல் 

 

பலம்பொருந்திய ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாக திகழும் ஜேர்மனியில் கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் ஏஞ்சலா மெர்க்கல் சான்சிலராக பதவி வகித்து வருகிறார். தொடர்ந்து 3 முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்றவர் என்ற சிறப்பும் அவருக்கு உண்டு.

Angela-Merkel.jpg

இந்த நிலையில் அந்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இடம்பெற்றது. இதில் ஏஞ்சலா மெர்க்கலின் பழமைவாத கட்சி (சி.டி.யூ.) மற்றும் ஹோர்ஸ்ட் சீஹோபரின் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம் (சி.எஸ்.யூ.) ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிட்டன.

 

மெர்க்கலுக்கு அதிக ஆதரவு இருந்தாலும், 246 இடங்களையே அந்த கூட்டணி கைப்பற்றியது. மேலும், கடந்த முறை அந்த கூட்டணி பெற்ற வாக்குகள் 41.5 சதவீதத்தில் இருந்து 32.9 சதவீதமாக குறைவடைந்தது.

 

அதேநேரம், அகதிகளுக்கு அடைக்கலம் அளிப்பது தொடர்பான விவகாரத்தில் ஏஞ்சலா மெர்க்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பழமைவாத கூட்டணியில் இருந்து தேர்தலுக்கு முன்பே விலகிய எஸ்.பி.டி. கட்சி 153 இடங்களை கைப்பற்றியது. ஏ.எப்.டி. 94 இடங்களிலும், எப்.டி.எப். 80, டி லிங்கே, 69, கிரீன் கட்சி 67 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. 

 

பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் ஆட்சியமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. கூட்டணி அரசு அமைப்பது தொடர்பாக நடந்த அனைத்து பேச்சுவார்த்தைகளும் உடன்பாடு எட்டப்படாமல் தோல்வியிலேயே முடிந்தன. இதனால், புதிய அரசு அமைக்க முடியாமல் அரசியல் குழப்பம் ஏற்பட்டது.

 

இதனால் சர்ச்சைகள் எழுந்த நிலையில், தேவைப்பட்டால் பதவியை ராஜினாமா செய்து விட்டு தேர்தலை சந்திக்க தயார் என சான்சிலர் ஏஞ்சலா மெர்க்கல் அதிரடியாக அறிவித்தார்.

 

கடந்த ஜனவரி மாதம் மெர்கெலுக்கு ஆதரவளிக்க தயார் என எஸ்.பி.டி கட்சி அறிவித்தது. 

இந்நிலையில், அந்நாட்டு பாராளுமன்ற கீழ் சபையில் இன்று நடந்த வாக்கெடுப்பில் சி.எஸ்.யூ - சி.டி.யூ, எஸ்.பி.டி உறுப்பினர்கள் ஆதரவுடன் அவர் வெற்றி பெற்றார். 355 உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்ற நிலையில், 364 உறுப்பினர்கள் ஆதரவு மெர்கெலுக்கு கிடைத்தது.

 

171 நாள் காத்திருப்புக்கு பின்னர் ஆட்சியமைத்துள்ள மெர்கெல் விரைவில் ஜனாதிபதியை சந்தித்த பின்னர் சான்சிலராக பொறுப்பேற்றுக்கொள்வார் என உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.virakesari.lk/article/31635

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.