Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இதற்கு என்ன செய்ய போகின்றோம்

Featured Replies

விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை சர்வதேச ரீதியில் முன்னெடுக்க விசேட திட்டம்

-வெளிவிவகார அமைச்சு துரித நடவடிக்கை

புலிகளுக்கு எதிரான இலங்கையின் நிலைப்பாட்டை சர்வதேச ரீதியில் கொண்டு செல்ல வெளிவிவகார அமைச்சு உத்தேச திட்டமொன்றை வகுத்துள்ளதாக அறிவித்துள்ளது.

புலிகளின் ஆயுத நடவடிக்கைகள் மற்றும் சர்வதேச ரீதியில் அவர்களுக்குள்ள தொடர்புகள் ஆகியவற்றை துண்டிக்கும் வகையிலேயே இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

புலிகளினால் நாட்டில் உருவாகியுள்ள ஸ்திரமற்ற நிலைமை, பிராந்திய நாடுகள் எதிர்நோக்கியுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல், சர்வதேச ரீதியில் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகள், பட்டியல் படுத்தப்பட்டிருக்கும் சர்வதேச பயங்கரவாத குழுக்களுடன் உள்ள தொடர்புகள் போன்ற முக்கிய காரணிகள் உட்பட மேலும் பல விடயங்கள் இத்திட்டத்தில் கவனத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

புலிகள் குறிப்பிட்ட சில நாடுகளை தளமாக பயன்படுத்தி பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு தேவையான பணத்தை திரட்டி வருகின்றனர். இன்னும் சில நாடுகள் மூலம் ஆயுத கடத்தலை மேற்கொண்டு வருகின்றனர். பிரிவினைவாதத்தை நோக்கமாகக் கொண்டு இயங்கும் அமைப்புகளுடன் தொடர்புகொண்டு பயிற்சிகள் மற்றும் ஏனைய ஒத்துழைப்புகளை பெற்றுக் கொள்கின்றனர்.

இவ்வாறான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைத்து வரும் வெளிநாட்டவர்கள், அமைப்புகள் ஆகியவற்றின் செயற்பாடுகள் ஆகியவற்றை முற்றாக ஒழித்துக்கட்ட அமைச்சு சர்வதேச நாடுகளின் உதவிகளை பெறவுள்ளது.

இதேவேளை, சர்வதேச கடல் எல்லைகளை பயன்படுத்தி ஆயுதக் கடத்தலை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை தடுக்கவும் ஆயுத விற்பனையாளர்களை கண்டுபிடிக்கவும் ஆட்கடத்தல்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தல்களை முறியடிக்கவும் இந்த உத்தேச திட்டத்தின் நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டுள்ளது.

மேலும், இலங்கைக்கு உல்லாசப் பயணிகள் மற்றும் முதலீட்டாளர்களை ஈர்த்தெடுக்கும் விடயங்கள் மற்றும் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவதற்கும் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்று தகவல் தந்த அதிகாரி தெரிவித்தார்.

http://www.thinakkural.com/news/2007/3/22/...s_page23735.htm

முதலில் கொழும்பு வெள்ளை வான் ஆட்கடத்தல் கொலைகளை கப்பம் அறவிடுவதை நிறுத்தட்டும். பிறகு மற்றவைகளைப் பார்க்கலாம்.

ஈழத்திலிருந்து

ஜானா

Edited by Janarthanan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதற்கு நாம் ஒன்றும் செய்ய வேண்டியதில்லை.. எல்லாமே செய்து விட்டார்கள்..

ஒன்றும் பெரிதாக பயன்தரவில்லை..

அந்த வகையில்தான் புலிகளை சர்வதேச நாடுகள் பலதில் தடை செய்தார்கள்.. இதற்கு மேல் செய்வதற்கு என்ன இருக்கிறது.?

பயன் உள்ளது அதைப் பெறுவதும் எம் கையிலேயே

நிங்கள் இருக்கும் நாடுகளில் அரசியல்வாதிகளோ பிரதானிகளோ சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் ஊடகங்களில் நேரடி விவாதங்களிலோ மக்களின் கேள்விகளுக்கு பதில் கூறும் நிகழச்சிகளில் பங்கு கொள்ளும்போது தமிழர் பிரச்சினை பற்றி கதைக்க முடியாதா?

முதலில் கொழும்பு வெள்ளை வான் ஆட்கடத்தல் கொலைகளை கப்பம் அறவிடுவதை நிறுத்தட்டும். பிறகு மற்றவைகளைப் பார்க்கலாம்.

ஈழத்திலிருந்து

ஜானா

நல்ல விடைகளையும் கருத்துக்களையும் தந்ததுக்கு நன்றி அத்துடன் இன்னும் ஆட்கடத்தல்களை தமிழர் பகுதிகளில் அசிறிலங்கா அசிங்கப்படையினரும் காட்டிக்கொடுக்கு குள்ளநரிக் கூட்டமும் செய்யும் கோளைத்தனமான ஆட்கடத்தல்களையும் கப்பம் அறவிடுவதையும் நிறுத்தினால் இன்னும் நன்றாய் இருக்கும்

நன்றி

நாதன்

கருணை-நிலல் நீங்கள் குறிப்பிட்ட விடையங்கள் போன்று நாம் செயல்படாவிட்டால்

இலங்கையின் பொய்யுரைகள் தான் வெளி நாடுகளில் தொடர்ந்து எடுக்பட்டு தமிழ்மக்களுக்கு எதிராக நடவடிக்கைகள் தொடர வாய்ப்பு உண்டு.இது கருத்து களத்தில் முக்கியமாக எடுக்கப்பட்டு எந்த யுக்திகளை பயன்படுத்தி இலங்கையின்

போய் பிரச்சாரங்களை முறியடிக்கலாம் என்பது கருப்பொருளாக வைத்து பயனுள்ள கருத்துக்களை செயலுருவம் கொடுப்பதன் மூலம் இலங்கையிடம் வெளி நாடுகளே கேள்விகள் கேட்டு திணறடிக்க கூடிய நிலைமையை உருவாக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ புதிசாக திட்டங்கள் போடுறாங்கள், ஜயா நாம் அதாவது தமிழர்கள் ஒன்றிணைவதைப் பற்றி பல திட்டங்களை வகுப்போம், தேசியத் தலைவரின் சிந்தனையை செயல்படுத்துவோம், அப்போது இதெல்லாம் தூசு. முக்கியமாக எமது தேசிய விடுதலை இயக்கத்தில் நாம் பூரண நம்பிக்கை வைக்க வேண்டும்,

Edited by Valvai Mainthan

உங்கள் கருத்து முற்றிலுமுண்மையே. எதுவும் பெரிதாகப் பயன்தராத

நிலையிலும் தங்கள்மீது விழுந்துள்ள பாரிய அழுத்தங்களையும்

சமாளிக்கும் பொருட்டு (உ - ம்) மார்ச் மாதக் கடைசியில் தீர்வுத்

திட்டத்தை முன்வைத்தல்) ஏதேதோ செய்ய வெளிக்கிடுகின்றார்கள்.

ஒன்றும் பலிக்கப் போவதில்லை.

இதற்கு நாம் ஒன்றும் செய்ய வேண்டியதில்லை.. எல்லாமே செய்து விட்டார்கள்..

ஒன்றும் பெரிதாக பயன்தரவில்லை..

அந்த வகையில்தான் புலிகளை சர்வதேச நாடுகள் பலதில் தடை செய்தார்கள்.. இதற்கு மேல் செய்வதற்கு என்ன இருக்கிறது.?

உங்கள் கருத்து முற்றிலுமுண்மையே. எதுவும் பெரிதாகப் பயன்தராத

நிலையிலும் தங்கள்மீது விழுந்துள்ள பாரிய அழுத்தங்களையும்

சமாளிக்கும் பொருட்டு (உ - ம்) மார்ச் மாதக் கடைசியில் தீர்வுத்

திட்டத்தை முன்வைத்தல்) ஏதேதோ செய்ய வெளிக்கிடுகின்றார்கள்.

ஒன்றும் பலிக்கப் போவதில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.