Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

23 ரஸ்ய தூதரக அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேறுமாறு பிரித்தானியா உத்தரவிட்டுள்ளது

Featured Replies

23 ரஸ்ய தூதரக அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேறுமாறு பிரித்தானியா உத்தரவிட்டுள்ளது

UK-Russia.jpg?resize=660%2C371
முன்னாள் உளவாளி ரசாயன விஷம் மூலம் தாக்கப்பட்டுள்ள விவகாரத்தில் ரஸ்யாவுடன் மோதல் அதிகரித்துள்ள நிலையில், 23 ரஸ்ய தூதரக அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேற பிரித்தானியா கெடு விதித்துள்ளது. ரஸ்யாவின் ராணுவ உளவுப்பிரிவில் அதிகாரியாக பணியாற்றிய செர்ஜய் ஸ்கிர்பால் என்பவர் சில ரஸ்ய உளவாளிகளை பிரித்தானிய உளவுத்துறையினரிடம் காட்டி கொடுத்தமைக்காக கடந்த 2004-ம் ஆண்டு மொஸ்கோவில் கைது செய்யப்பட்டு 13 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இந்தநிலையில் 2010-ம் ஆண்டு பிரித்தானியா அவரை மீட்டு அடைக்கலம் கொடுத்திருந்த நிலையில் அவரும் அவரது மகளும் கடந்த வாரம் ஒரு வணிக வளாகத்தில் விசம் ஏற்றப்பட்டு மயங்கியிருந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக ரஸ்யா மீது குற்றம் சுமத்திய பிரித்தானியா ரஸ்யா இது தொடர்பில் விளக்கம் அளிக்க வேண்டும் என கோரியது.

 

எனினும் பிரித்தானியாவின் குற்றச்சாட்டுக்களை மறுத்த ரஸ்யா எவ்வித விளத்தினையும் அளிக்கவில்லை. இந்தநிலையில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் தெரசா மே, ஸ்கிர்பால் மற்றும் அவரது மகளுக்கு விசம் ஏற்றப்பட்டமை தொடர்பில் ரஸ்ய அரசுதான் குற்றவாளி எனத் தெரிவித்து 23 ரஸ்ய தூதரக அதிகாரிகள் பிரித்தானியாவை விட்டு வெளியேற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/2018/70869/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரஷ்யா இப்ப ஒரு மார்க்கமாய்த்தான் திரியுது.....:grin:

  • தொடங்கியவர்

ரஷ்ய அதிகாரிகளை வெளியேற்ற முடிவு: பிரிட்டனுக்கு அமெரிக்கா ஆதரவு

பிரிட்டனில், முன்னாள் உளவாளி மீது நடத்தப்பட்ட தாக்குதல் விவகாரத்தில் பிரிட்டனிற்கு, அமெரிக்கா தனது முழு ஆதரவை தெரிவித்துள்ளது.

ரஷ்ய அதிகாரிகளை வெளியேற்ற முடிவு: பிரிட்டனிற்கு அமெரிக்கா ஆதரவுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஐ.நாவிற்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி, இந்த தாக்குதலுக்கு பின்னனியில் ரஷ்யா இருப்பதாக அமெரிக்கா நம்புகிறது என பாதுகாப்பு கவுன்சிலிடம் தெரிவித்தார்.

பிரிட்டனிற்கு ஜெர்மனியும் தனது முழு ஆதரவை தெரிவித்துள்ளது. இருப்பினும் ரஷ்யா மீது குற்றம் சுமத்துவதற்கு முன் மேலும் சில ஆதாரங்களை பார்க்க வேண்டும் என ஃபிரான்ஸ் தெரிவித்துள்ளது.

முன்னதாக முன்னாள் ரஷ்ய உளவாளி செர்கெய் ஸ்கிர்பால் மீதான கொலை முயற்சி தொடர்பாக உரிய விளக்கத்தை ரஷ்யா அளிக்காததால் தங்கள் நாட்டில் பணியாற்றும் 23 ரஷ்ய அதிகாரிகளை பிரிட்டன் வெளியேற்றும் என பிரிட்டன் பிரதமர் தெரீசா மே தெரிவித்துள்ளார்.

அந்த உளவுப் பிரிவு அதிகாரிகளின் அடையாளங்கள் வெளியிடப்படவில்லை.

பிரிட்டனில் கடந்த மார்ச் 4 அன்று மயங்கிய நிலையில் காணப்பட்டு, தற்போது மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருக்கும் முன்னாள் ரஷ்ய உளவாளி செர்கெய் ஸ்கிர்பால் மற்றும் அவரது மகள் யூலியாவை கொல்ல நச்சு வேதிப்பொருள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக காவல் துறை கூறியுள்ளது.

"போரில் பயன்படுத்த தடைசெய்யப்பட்ட கொடூரமான ஆயுதத்தை", "அமைதியான பிரிட்டன் நகரில்" ரஷ்யா பயன்படுத்தியுள்ளதாக ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலிடம் பிரிட்டன் தெரிவித்துள்ளது.

கொலைமுயற்சி செய்ததாக எழுந்த புகாரை ரஷ்யா மறுத்துள்ளது. தகுந்த பதில் தருவதாகவும் தெரிவித்துள்ளது.

ரஷ்ய அதிகாரிகள் வெளியேற ஒரு வார காலம் அவகாசம் அளித்துள்ள பிரிட்டன் பிரதமர் தெரீசா மே, இந்த ஆண்டு ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பிரிட்டன் அரச குடும்பத்தினர் கலந்துகொள்ள மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.

வெளியுறவு துறை அதிகாரிகளை வெளியேற்றியதற்கு ரஷ்யா கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை பகை உணர்வு கொண்டது, முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது, நியாயமற்றது, குறுகிய பார்வை கொண்டது என்று லண்டனிலுள்ள ரஷ்ய தூதரகம் கூறுகிறது.

Sergei Skripal and his daughter Yuliaபடத்தின் காப்புரிமைEPA/ YULIA SKRIPAL/FACEBOOK Image captionசெர்கெய் ஸ்கிர்பால் மற்றும் அவரது மகள் யூலியா

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு சீர்குலைந்து போனதற்கு காரணம் பிரிட்டன் தலைவர்கள் என்று ரஷ்யா குற்றம் சாட்டுகிறது.

பிரிட்டனை ஆதரிக்கும் நேட்டோ, செர்கெய் ஸ்கிர்பால் மீதான தாக்குதல் சர்வதேச விதிமுறைகளை மீறியிருப்பதை தெளிவாக காட்டுவதாக கூறுகிறது.

இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக பிரிட்டன் கூறும் நோவிசோக் (novichok) நச்சு வேதிப்பொருள் பற்றி அனைத்தையும் ரஷ்யா வெளிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. எனினும், தாங்கள் அந்தத் தாக்குதலை நடத்தவில்லை என்று ரஷ்யா மறுத்திருந்தது.

ஓய்வுபெற்ற ரஷ்ய ராணுவ அதிகாரியான செர்கெய், ஐரோப்பாவில் ரகசியமாக இயங்கும் ரஷ்ய உளவு அமைப்பினர் பற்றிய தகவல்களை பிரிட்டனுக்கு கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டு ரஷ்யாவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 2010இல் விடுவிக்கப்பட்ட அவர் பிரிட்டனில் வசித்து வந்தார்.

http://www.bbc.com/tamil/global-43408298

  • தொடங்கியவர்

ரஸ்யாவில் பணியாற்றும் பிரித்தானிய பணியாளர்களும் விரைவில் வெளியேற்றப்படுவார்கள்

uk-vs-russia.jpg?resize=777%2C462
23 ரஸ்ய தூதரக அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேற பிரித்தானியா கெடு விதித்துள்ளதனை அடுத்து ரஸ்யாவில் பணியாற்றும் பிரித்தானியாவைச் சேர்ந்த பணியாளர்களும் விரைவில் வெளியேற்றப்படுவார்கள் என ரஸ்ய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வெளியேற்றம் நிச்சயம் இடம்பெறும் என ரஸ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.

ரஸ்ய முன்னாள் உளவாளியான செர்ஜய் ஸ்கிர்பால் மற்றும் அவரது மகள் மீதான கொலை முயற்சி தொடர்பாக உரிய விளக்கத்தை ரஸ்யா தெரிவிக்காமையினால் பிரித்தானியாவில் பணி புரியும் 23 ரஸ்ய அதிகாரிகளை பரித்தானியா வெளியேற்றும் என பரித்தானிய பிரதமர் தெரீசா மே நேற்றையதினம் அறிவித்திருந்தார்.

 

அந்தத் தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை எனத் தெரிவித்துள்ள ரஸ்யா பிரித்தானியாவின் நடவடிக்கை பொறுப்பற்றது எனவும் அடிப்படை ஆதாரங்களின்றி எடுக்கப்பட்ட முடிவு எனவும் தெரிவித்துள்ளது

uk-vs-russia-2.jpg?resize=292%2C173

http://globaltamilnews.net/2018/71033/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.