Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகின் மகிழ்ச்சியான நாடு இதுவா?

Featured Replies

உலகின் மகிழ்ச்சியான நாடு இதுவா?

உலகின் மகிழ்ச்சியான நாடு இதுவா?

 

ஐ.நா. சபையின் நிலையான வளர்ச்சி தீர்வுகள் பிணையம், 201 ஆம் ஆண்டின் உலக மகிழ்ச்சி அறிக்கையை (வேர்ல்ட் ஹேப்பினஸ் ரிப்போர்ட்) வெளியிட்டு உள்ளது.

வருமானம், சுகாதாரம், ஆயுட்காலம், சமூக ஆதரவு, சுதந்திரம், அகதிகள் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் ஆராய்ந்து இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது.

இந்த அறிக்கையில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலிடப்பட்டு உள்ளன. இதில் முதல் இடத்தில் பின்லாந்து இருக்கிறது.

பின்லாந்து, நார்வே, டென்மார்க், ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, கனடா, நியூசிலாந்து, சுவீடன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள்தான், மகிழ்ச்சியான முதல் 10 நாடுகளின் பட்டியலை ஆக்கிரமித்து உள்ளன.

மக்களின் கனவு பிரதேசமாக திகழ்கிற அமெரிக்கா, மகிழ்ச்சிகரமான நாடுகளின் பட்டியலில் 2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 5 இடங்கள் பின்னுக்குப் போய் 18 ஆவது இடத்தில் உள்ளது.

மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் கடைசி இடத்தில் இருப்பது, மத்திய ஆப்பிரிக்க நாடான புரூண்டி.

உள்நாட்டுப்போரால் சிரியாதான் மிகவும் மோசமான நாடு என எல்லோரும் நினைத்து இருக்கும் வேளையில் அந்த நாட்டை விட மோசமான நாடுகள் என்று கூறத்தக்கவிதத்தில் ருவாண்டா, ஏமன், தான்சானியா, தெற்கு சூடான், மத்திய ஆப்பிரிக்க குடியரசு ஆகிய நாடுகள் உள்ளன.

http://tamil.adaderana.lk/news.php?nid=100724

 

 

 

உலகில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் 116ஆவது இடத்தில இலங்கை….

world-happiness-report.jpg?resize=650%2C

உலகில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் 116ஆவது இடத்தில இலங்கை உள்ளது. கடந்த ஆண்டு 120வது இடத்தில் இருந்த இலங்கை இம்முறை நான்கு இடங்கள் முன்னேறி உள்ளது ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில் 156 நாடுகள் பட்டியலிடப்பட்டன.

 

அதன்படி இதில் பின்லாந்து முதலிடம் பெற்றுள்ளதுடன், நோர்வே, டென்மார்க் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன. இதில் இந்தியாவை விட இலங்கை முன்னேற்றகரமான நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மொத்த உள்நாட்டு உற்பத்தி, தனிநபர் வருமானம், சமூக உதவிகள், ஆரோக்கியமான வாழ்க்கை, சிறுவர் பாதுகாப்பு, சமூக சுதந்திரம், நன்கொடை வழங்கும் தன்மை, ஊழல் இல்லாத நிலை உள்ளிட்ட பல விடயங்கள் இதில் முக்கியத்துவம் பெறுகின்றன

http://globaltamilnews.net/2018/71104/

  • தொடங்கியவர்

மகிழ்ச்சியில் இந்தியாவுக்கு 133வது இடம்.. ஏன்?

 
 

இந்தியா

Chennai: 

வ்வொரு வருடமும், 'உலகத்தில் எந்த நாட்டு மக்கள் அதிக மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்' என்று ஐ.நா பட்டியலிட்டு வருகிறது. 'மக்களின் வாழ்வாதாரம், ஆரோக்கியம், அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை என அனைத்திலும் மக்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் நாடு எது?' என்ற அடிப்படைத் தகுதிகளோடு இந்தக் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில்,  இந்த ஆண்டு அத்தகைய கருத்துக்கணிப்பை 'ஐ.நா-வுக்கான நிலையான அபிவிருத்தி தீர்வுகள் கட்டமைப்பு' என்ற அமைப்பு நடத்தியது. சுமார் 156 நாடுகளில் நடத்தப்பட்ட இந்தக் கருத்துக்கணிப்பில் ஃபின்லாந்து நாடு முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியா 133-வது இடத்தைப் பிடித்து பின்னோக்கிச் சென்றுள்ளது. 

 

இந்தியா

'ஐ.நா.வுக்கான நிலையான அபிவிருத்தி தீர்வுகள் கட்டமைப்பு' 2018-ம் ஆண்டில் உலகிலேயே அதிக மகிழ்ச்சியாக மக்கள் வாழும் நாடுகள் என்ற ஆன்லைன் கருத்துக்கணிப்பை கடந்த சில மாதங்களாக நடத்தி வந்தது. தற்போது இந்தக் கருத்துக்கணிப்பின் முடிவுகள் வெளியிடப்பட்டன. அதனடிப்படையில் ஃபின்லாந்து நாட்டு மக்களே மிகவும் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் உள்ள நாடுகளில் இந்தியா 133-வது இடத்தைப் பிடித்துள்ளது. ஆனால், நம் அண்டை நாடான பாகிஸ்தான், 75-வது இடத்தில் உள்ளது. 2017-ம் ஆண்டில் இந்தியா, மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் 122- வது இடம் வகித்தது. அதுவே, இந்தாண்டில் 11 இடங்கள் பின்தங்கி 133-வது இடத்துக்குச் சென்றுள்ளது. பாகிஸ்தானைப் பொறுத்தவரை, கடந்தாண்டு 80-வது இடத்தில் இருந்தது. ஆனால், இந்த ஆண்டு ஐந்து இடங்கள் முன்னேறி 75-வது இடத்தைப் பெற்றுள்ளது. மேலும் நார்வே, டென்மார்க், ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, கனடா, நியூசிலாந்து, சுவீடன் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் முதல் பத்து இடங்களைப் பெற்றுள்ளன. 

இந்தியா

அதேபோல மலாவி, ஹைத்தி, லைபீரியா, சிரியா, ருவாண்டா, ஏமன், தான்சானியா, தெற்கு சூடான், மத்திய ஆப்பிரிக்கன் ரிபப்ளிக், புருண்டி ஆகிய நாடுகள் கடைசி பத்து இடங்களைப் பிடித்துள்ளன. இந்தக் கருத்துக்கணிப்பில் அமெரிக்கா 18-வது இடத்தையும், பிரிட்டன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் முறையே 19-வது மற்றும் 20-வது இடங்களையும் பிடித்துள்ளன. 2016-ம் ஆண்டு  கணக்கெடுப்பின்படி, உலகில் மகிழ்ச்சியான மக்கள் வாழும் நாடுகளில் இந்தியா 188-வது இடத்தைப் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜனவரி மாதம் 'உலகப் பொருளாதார மையம்' வெளியிட்ட 'வளரும் பொருளாதார நாடுகள்' வரிசைப் பட்டியலில் இந்தியா 62-வது இடத்துக்குத் தள்ளப்பட்டது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் சீனா, பாகிஸ்தான் போன்ற இந்தியாவின் அண்டை நாடுகள் இந்தியாவைவிட முன்னேறிய வரிசையில் இருந்தன. வளரும் பொருளாதார நாடுகள் பட்டியலில் இந்தியா பின்னோக்கிச் சென்றதால் இந்திய மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். அதன் பிறகு ஒரு சில மாதங்கள் கழித்து 'உலகிலேயே அதிக மகிழ்ச்சியாக மக்கள் வாழும் நாடுகள்' என்ற பட்டியலில் இந்தியா முன்பைவிட அதிக அளவு பின்னோக்கிச் சென்றது. இந்தப் பட்டியல் இந்திய மக்களைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்தியா

 

சமீபகாலமாக இந்தியாவில் உள்நாட்டுப் பிரச்னைகள் அதிக அளவில் உருவாகின. அரசியல், விவசாயம், கல்வி, மருத்துவம் போன்ற துறைகளில் பொதுமக்களை, அரசியல்வாதிகள் நாளுக்கு நாள் நசுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் அரசியல்வாதிகளுக்கு மத்தியில், பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வாழ்வதே பொதுமக்களின் அன்றாட சாதனை போன்ற சூழல் உருவாகி விட்டது. இன்னும் என்னென்ன கணக்கெடுப்புகளிலெல்லாம் இந்தியா பின்னோக்கிச் செல்லப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

https://www.vikatan.com/news/india/119321-india-ranks-133-in-global-list-of-happiest-nation.html

  • தொடங்கியவர்

`குரோதமில்லை... வெறுப்பில்லை` - எப்படி எப்போதும் ஃபின்லாந்து மக்களால் மகிழ்வாக இருக்க முடிகிறது?

 

மகிழ்ச்சியாக இருப்பவரை எந்த நோயும் அண்டாது என்று இந்திய கிராமங்களில் சொல்வார்கள். இதையே கொலம்பியா எழுத்தாளர் கேப்ரியல், சந்தோஷத்தால் குணப்படுத்த முடியாத நோயை, உலகின் எந்த மருந்தாலும் குணப்படுத்த முடியாது என்கிறார். மகிழ்ச்சி அனைத்தையும் குணப்படுத்தவல்லது.

மக்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஆனாலும் அனைவராலும் எப்போதும் சந்தோஷமாக இருக்க முடியாது. சந்தோஷத்தை தீர்மானிப்பதில் குடும்பம் முதல் உலக அரசியல் வரை பல காரணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

அண்மையில் ஐ.நா வெளியிட்ட உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்தியா 133 வது இடத்தில் இருக்கிறது. இன்னும் துல்லியமாக சொல்லவேண்டுமென்றால் சந்தோஷ விஷயத்தில் காங்கோவுக்கும் நைஜீரியாவுக்கும் மத்தியில் இருக்கிறது இந்தியா.

ஃபின்லாந்து இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. உலகெங்கும் குடிபெயர்தல் பிரச்னை தலைப்பு செய்தியாக இருக்கும் இக்காலக்கட்டத்தில், ஃபின்லாந்தில் குடியேறியவர்களும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்கிறது இந்த ஐ.நா அறிக்கை.

இது எப்படி சாத்தியமானது?

இலவச கல்வி, தரமான சுகாதாரம்

மகிழ்ச்சி என்பது ஒரு அகநிலை அனுபவம். ஆனால், அதையெல்லாம் கடந்து எம்மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு இலவச கல்வியும், தரமான சுகாதார வசதியும்தான் காரணம் என்கிறார் ஃபின்லாந்தை சேர்ந்த அன்ட்டி காப்பினன்.

அன்ட்டி காப்பினன்படத்தின் காப்புரிமைPEPPI HELLEN Image captionஅன்ட்டி காப்பினன்

அதே மனநிலையில் அவர், "என்தேசம் குறித்து நான் பெருமை கொள்கிறேன். ஐ.நா அறிக்கைகாக அல்ல. இந்த மகிழ்ச்சி குறியீடு அறிக்கையில் என் நாடு இடம் பெறாமல் போயிருந்தாலும், நான் இதே மனநிலையில்தான் இருப்பேன்."என்கிறார்.

எல்லாருக்கும் எல்லாமும்

மேலும் அவர், "எல்லாருக்கும் எல்லாவற்றுக்குமான வாய்ப்பு இங்கு இருக்கிறது. அது அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு ஒரு முக்கிய காரணம். அதுமட்டுமல்ல, இரண்டாவது உலக போருக்குப் பின் இங்கு எந்த அரசியல் நெருக்கடியும் நிலவவில்லை. ஃபின்லாந்த் ஒரு நடுநிலையான நாடு. எங்களுக்கு யாருடனும் விரோதம் இல்லை." என்கிறார்.

மகிழ்ச்சிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

"நாங்கள் இருபத்துநான்கு மணிநேரமும் வேலை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்க மாட்டோம். ஓய்வு நேரங்களை எங்களுக்கு பிடித்தமான விஷயத்தில் செலவிடுவோம். இசை, குடும்பம், விளையாட்டு என எங்களுக்கு விருப்பமானவற்றில் மூழ்குவோம். இவையெல்லாம்தான் நாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு காரணமென்று கருதுகிறேன்." என்கிறார் அதே மகிழ்வுடன்.

முழுமையான பாலின சமத்துவமும், பொருளாதார சமத்துவமும் நிலவுகிறது. எல்லாருக்கும் எங்கள்நாடு வாய்ப்பு வழங்குகிறது.

சமத்துவம்

இதே கருத்தைதான் முன் வைக்கிறார் தொடர்பியல் துறை மாணவரான யெனா வுரெலாவும். இலவச கல்வியையும், தரமான மருத்துவ வசதியையும் சுட்டிக்காட்டும் யெனா, "ஃபின்லாந்து ஒரு பாதுகாப்பான நாடு. இங்கு யாருக்குள்ளும் எந்த வேற்றுமையும் இல்லை. முழுமையான பாலின சமத்துவமும், பொருளாதார சமத்துவமும் நிலவுகிறது. எல்லாருக்கும் எங்கள்நாடு வாய்ப்பு வழங்குகிறது. இவையெல்லாம் எங்களை மகிழ்சியாக வைத்துக் கொள்கிறது." என்கிறார்.

யெனா வுரெலாவும்படத்தின் காப்புரிமைNICOLAI MARCO Image captionயெனா வுரெலாவும்

இந்த ஆய்வில் வெளிநாடுகளிலும் குடியேறியவர்களும் ஃபின்லாந்தில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக யெனா, " எங்கள் நாட்டில் குடியேறியவர்களிடமும் நாங்கள் எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை. ஒரு ஃபின்லாந்து நாட்டவருக்கு என்னென்ன வாய்ப்புகள் எல்லாம் கிடைக்குமோ... அது அனைத்தையும் வெளிநாடுகளிலிருந்து குடியேறியவருக்கும் என் நாடு வழங்குகிறது. அம்மக்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள். ஒரு விஷயம் சம்பந்தப்பட்ட ஒருவரை சந்தோஷப்படுத்துகிறது என்றால், அது சரி என்றுதானே அர்த்தம். அந்த `சரி` எங்களுக்கும் (ஃபின்லாந்து மக்கள்) மகிழ்ச்சியையே தருகிறது.

கடந்த ஆண்டு இந்தப் பட்டியலில் நார்வே முதல் இடத்தில் இருந்தது. ஃபின்லாந்து ஐந்தாவது இடத்தில் இருந்தது.

மகிழ்ச்சிக்கான முதலீடு

நார்வே, சுவீடன் என நார்டிக் நாடுகளில் தனது நானோ தொழிற்நுட்ப ஆய்வை மேற்கொண்டு வரும் தமிழகத்தைச் சேர்ந்த விஜய்சங்கர் , "நார்டிக் நாடுகள் அனைத்து தரப்பு மக்களையும் அங்கீகரிக்கின்றன. அனைவரையும் எப்போதும் கொண்டாட்டத்தில் வைத்திருக்க தன்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கின்றன. அதனால்தான், நார்டிக் நாடுகள் இந்த மகிழ்ச்சி குறியீடு பட்டியலில் எப்போதும் முதல் பத்து இடத்தில் இருக்கின்றன." என்கிறார்.

விஜய்சங்கர்படத்தின் காப்புரிமைVIJAY SHANKER Image captionவிஜய்சங்கர்

மேலும், "மக்களை கொண்டாட்டத்தில் வைத்திருப்பதற்காக அவர்கள் செலவிடும் தொகையை செலவாக அந்நாட்டு அரசுகள் கருதுவதில்லை. அவர்களை பொறுத்தவரை அது `சமூக முதலீடு`. மனித மனம் ஆரோக்கியமாக மகிழ்ச்சியாக இருந்தால்தான், அதனால் ஆரோக்கியமாக சிந்திக்க முடியும். அப்படி சிந்தித்தல் நல்ல விளைவுகளை கொண்டு வரும் என்று அந்நாட்டு அரசுகள் தொலைநோக்கு பார்வையுடன் சிந்திக்கின்றன. அதற்காக மெனக்கெடுகின்றன. அதனால் அவை இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது எந்த வியப்பும் இல்லை." என்று விவரிக்கிறார் விஜய் அசோகன்.

மனித மனம் ஆரோக்கியமாக மகிழ்ச்சியாக இருந்தால்தான், அதனால் ஆரோக்கியமாக சிந்திக்க முடியும்.

குரோதமில்லை... வெறுப்பில்லை

நார்டிக் நாடுகளில் வரி அதிகம்தான். ஆனால், பெறும் வரி அனைத்தும் மக்கள் நல திட்டங்களுக்காக மட்டும்தான் செலவிடப்படுகிறது. அதனால், பெரும்பாலும் அம்மக்களுக்கு வரி குறித்த எந்த வருத்தங்களும் இல்லை என்கிறார் அவர்.

"வெளிநாடுகளிலிருந்து அங்கு குடிபெயர்பவர்களுக்கு அவர்கள் அளிக்கும் முக்கியத்துவம் அலாதியானது. தாய் மொழி கல்வியை அந்நாடுகள் ஊக்குவிக்கின்றன. உதாரணமாக, முப்பது குடும்பங்கள் சேர்ந்து எங்கள் பிள்ளைகள் தமிழ் மொழியில் படிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அதற்கு ஆவனசெய்ய வேண்டும் என்று அரசிடம் முறையிட்டால், அவர்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்கிறார்கள். அனைத்தையும், அனைவரையும் உள்ளடக்கிய சமூகமாக இருக்க வேண்டும் என்பதில் அதிகம் கவனம் செலுத்துகிறார்கள். இப்படியான சமூகத்தில் வெறுப்பிற்கும், குரோதத்திற்கும் எங்கு இடம் இருக்கப் போகிறது. எங்கும் எப்போதும் மகிழ்ச்சிதான்" என்கிறார் விஜய் அசோகன்.

மகிழ்ச்சிகரமான பத்து நாடுகள்

  1. ஃபின்லாந்து
  2. நார்வே
  3. டென்மார்க்
  4. ஐஸ்லாந்து
  5. ஸ்விட்சர்லாந்து
  6. நெதர்லாந்து
  7. கனடா
  8. நியூஸ்லாந்து
  9. சுவீடன்
  10. ஆஸ்திரேலியா

http://www.bbc.com/tamil/global-43460444

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.