Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்கா விரைந்தார் சுமந்திரன் – மாற்று வழிகளுக்கு தலைமையேற்குமாறு கோருவார்

Featured Replies

அமெரிக்கா விரைந்தார் சுமந்திரன் – மாற்று வழிகளுக்கு தலைமையேற்குமாறு கோருவார்

 

sumanthiranஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மாற்றுவழிகளை முன்னெடுக்குமாறு அமெரிக்காவிடம் வலியுறுத்துவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர். எம்.ஏ.சுமந்திரன் நேற்று வொசிங்டனுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்கா தொடர்பாக  2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சிறிலங்கா அரசாங்கம் முழு மையாக நடைமுறைப்படுத்தத் தவறியுள்ளது.

இந்தத் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படும் விதம் குறித்து,  ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசேன் வரும் 21ஆம் நாள்  பேரவையில் வாய்மொழி அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளார். அதன் முற்கூட்டிய பிரதியை அவர் ஏற்கனவே வெளியிட்டிருந்தார்.

அதில், ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் சிறிலங்கா அரசு இழுத்தடிப்புச் செய்வதாகவும், இதனால்,  மாற்று வழிகள் குறித்து  பரிசீலிப்பதற்கு உறுப்பு நாடுகளுக்குப் பரிந்துரைப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையிலேயே ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரைப்படி, ஜெனிவா தீர்மானத்தை  நடைமுறைப்படுத்தவதற்கான அழுத்தத்தை அதற்குக் கொடுக்கும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா தலைமை தாங்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தவுள்ளது.

இதற்காக, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்று வொசிங்டனுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இவர்  ஐ.நாவுக்கான அமெரிக்காவின்  நிரந்தர வதிவிடப் பிரதிநிதி நிக்கி ஹாலேயையும்,  அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

ஐ.நா.வுக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி நிக்கி ஹாலேயுடனான சந்திப்பு வரும் திங்கட் கிழமை இடம்பெறவுள்ளது.

அதேவேளை, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் அலிஸ்  வெல்ஸ்சுடன்,  செவ்வாய்க் கிழமை சுமந்திரன் பேச்சு நடத்தவுள்ளார்.

இதுகுறித்து ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள சுமந்திரன்,

“சிறிலங்கா பொறுப்புக் கூறல் விடயத்தில் எதுவும் செய்யவில்லை. இதனால் இந்த விவகாரத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதற்காக, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் சிறிலங்கா மீது உலகளாவிய நியாயாதிக்கத்தை அழுத்துவதற்கு உறுப்பு நாடுகளைத் தான் ஊக்குவிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சில நாடுகளில், வேறு நாடுகளின் போர்க் குற்றவாளிகளைக் கைது செய்து விசாரிக்கவும் தண்டனை வழங்கவும் சட்ட ஏற்பாடுகள் உள்ளன. அதனை அந்தந்த நாடுகள் செயற்படுத்த வேண்டும்.

இதுவே ஆணையாளர் வலியுறுத்தும் உலகளாவிய நியாயாதிக்கம். இதனை ஐ.நா. மனித உரிமைகள் சபையினால் நேரடியாகச் செயற்படுத்த முடியாது.

எனவே அதனைச் செய்வதற்கு அமெரிக்க தலைமையேற்க வேண்டும். போர்க் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் உள்ள ஏனைய நாடுகளும் அதனைச் செயற்படுத்துவதற்கு ஊக்குவிக்க வேண்டும். அதனையே நான் வலியுறுத்தவுள்ளேன்” என்று கூறியுள்ளார்.

http://www.puthinappalakai.net/2018/03/17/news/29849

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்தில் கூட்டம் போட வெளிக்கிட  தமிழ்சனம் செமகடுப்பில் நிக்குது என்றவுடன் கூட்டம் நடக்கும் வாசலில் பெரிதாக எழுதி போட்டவர்கள் சுமத்திரன் அவர்கள் இலங்கை பாரளுமன்ற கூட்டத்தில் அவசரமாக கலந்துகொள்ள இருப்பதால் கூட்டம் நடைபெறாது என்று  ஆனால் நடந்தது சும் இங்கு தமிழ் சனத்தின் கேள்விகளை எதிர்கொள்ளமுடியாது உடனே கனடாவுக்கு போய் ஆட்களே இல்லாத மண்டபத்தில் கொஞ்ச செய்தியாளர்களுக்கு இடையில் நின்றுகொண்டு தன்னுடைய வழக்கமான பொய்களை அவுட்டு விட்டு வார்த்தை ஜாலம் பண்ணியவர் .

இதில் கவனிக்க வேண்டிய விடயம் அந்த துண்டில் கூறியது போல் அவர் இலங்கை பாரளுமன்ற கூட்டத்துக்கு செல்லவில்லை அதாவது சொல்லப்படுவது பொய் என்று தெரிந்தும் மக்களுக்கு அந்த பொய்யை சொல்வதால் தமக்கு இழப்பு இல்லை என்று இன்னமும் இந்த சுமத்திரன் ,தமிழரசு கூட்டம் நம்புது . அவ்வளவுக்கு புலம்பெயர் தமிழரை மடையர்களாக நினைத்து உள்ளனர் இப்படி சுமத்திரன் அமெரிக்காவுக்கு தலைமயிர் நடபோனாலும் அவரின் கூட்டம் எப்படி புரிசு வானம் காட்டுவினம் அட  இவர் அரசியலுக்கு வந்து தமிழனை குனிய வைத்ததை தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

அவங்க முடிவையே இவரு மாத்துவாரு...சிங்களத்துக்காக...

On 3/17/2018 at 10:54 AM, நவீனன் said:

அமெரிக்கா விரைந்தார் சுமந்திரன் – மாற்று வழிகளுக்கு தலைமையேற்குமாறு கோருவார்

பொறுக்கித்தனமான வேலைகளைச் செய்ய சுமந்திரன் ஆடும் இன்னொரு நாடகம்!

ஐக்கிய தேசியக் கட்சி எனப்படும் சிங்கள-பௌத்த பயங்கரவாதக் கட்சியின் தற்போதைய தலைவர் ரணில் விக்ரமசிங்க வழங்கவிருந்த அமைச்சு பதவியை பெற்றுக்கொள்ள இவர் ஆசையாக முன்வந்தும் கூட்டமைப்பு ஏற்படுத்திய  இறுக்கமான சூழ்நிலைகளால் சாத்தியமாகாமல் போன கடுப்பில் அலைவதாக கேள்வி!

இவர் எதற்கு எப்போதும் தனியாகவோ அல்லது சம்மந்தனுடன் மட்டுமே சந்திப்புக்களை நடத்த போகவேண்டும்? இதற்கான விடைகளை தேடினால் இவர்கள் அரங்கேற்றும் நாடகம் வெளிப்படும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.