Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனீ­வாவும் தமிழர் தரப்பும்

Featured Replies

ஜெனீ­வாவும் தமிழர் தரப்பும்

samakalamgeneva1-5e8b1b155add388832384ded7c2d1a6ff9f9365e.jpg

 

கபில்

 

ஐ.நா.மனித உரி­மைகள் பேர­வையில் இலங்கை தொடர்­பான முக்­கிய விவா­தங்கள் இரண்டு இம்­முறை இருப்­பதால், ஜெனீ­வாவை நோக்­கிய தமிழர் தரப்பின் ஓட்டம் ஆரம்­ப­மா­கி­யி­ருக்­கி­றது.

போர் நடந்து கொண்­டி­ருந்த காலத்தில் ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் கூட்­டத்­தொ­டர்­களின் கவ­னத்தை ஈர்க்­கின்ற பல்­வேறு போராட்­டங்­களும், பக்க அமர்­வு­களும் நடத்­தப்­பட்ட போதிலும், போருக்குப் பின்னர் தான், ஜெனீவா நோக்­கிய தமிழர் தரப்பின் நகர்­வு­களும், ஓட்­டங்­களும் கூர்­மை­ய­டைந்­தன.

போரில் தமி­ழர்­க­ளுக்கு இழைக்­கப்­பட்ட அநீ­தி­க­ளுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்­பதை வலி­யு­றுத்தும் போராட்­டங்கள் ஜெனீவா களத்தில் கிட்­டத்­தட்ட ஒரு தசாப்­த­மாகத் தொடர்­கின்ற போதிலும், ஜெனீவா தனது நிகழ்ச்சி ஒழுங்­கிற்குள் மாத்­தி­ரமே சுற்றிக் கொண்­டி­ருக்­கி­றது.

ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையை எதிர்ப்­ப­வர்­களும், அதன் ஊடாக மனித உரிமை மீறல்­க­ளுக்கு தீர்வைப் பெற்­றுக்­கொள்ள முடி­யாது என்று கூறு­ப­வர்­களும் கூட, பேர­வையின் கூட்­டத்­தொ­டரில் பங்­கேற்­ப­தற்­காக ஒவ்­வொரு முறையும் ஜெனீவா நோக்கிக் கிளம்பி விடு­கின்­றனர்.

அந்­த­ள­வுக்கு ஜெனீவா கூட்­டத்­தொடர் தமிழர் அர­சி­ய­லுடன் இணைந்த ஒரு கலா­சா­ர­மாக மாறி­யி­ருக்­கி­றது.

ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் கவ­னத்தை ஈர்ப்­பது, சர்­வ­தேச சமூ­கத்தின் கவ­னத்தைப் பெறு­வது, இந்த இரண்டும், ஜெனீ­வாவில் தீர்வைத் தேடு­கின்ற தரப்­பு­க­ளுக்கு முக்­கி­ய­மான விட­யங்கள்.

தமிழர் தரப்பு இது­வ­ரையில் ஜெனீ­வாவில் சர்­வ­தேச கவ­னத்தை ஈர்ப்­ப­தற்கும், ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் கவ­னத்தை ஈர்ப்­ப­தற்கும் செய்­தி­ருக்­கின்ற இரண்டு வேலைகள் என்­ன­வென்றால், ஜெனீ­வாவில் பேர­ணியை நடத்­து­வது ஒன்று.

பக்க அமர்­வு­க­ளிலும், பொது அமர்வில் எப்­போ­தா­வது ஓரிரு முறையும் வரை­ய­றுக்­கப்­பட்ட நேரத்­துக்குள் தட்­டுத்­த­டு­மாறி உரை­யாற்றி விட்டு வரு­வது இன்­னொன்று. இலங்கை விவ­காரம் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­ப­டு­கின்ற ஒவ்­வொரு கூட்­டத்­தொ­ட­ரிலும், இந்த இரண்டு விட­யங்­க­ளையும் செய்து விட்டு வரு­வதே தமது ஜெனீவா கட­மை­யாக தமிழர் தரப்பில் பலரும் கருதிக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

அதற்கு அப்பால் இந்தக் களத்தை மேலும் எவ்­வாறு பய­னுள்ள வகையில் அணு­கலாம் என்று சிந்­திக்கும் நிலையில் யாரு­மில்லை. ஒவ்­வொரு தரப்பும் ஒவ்­வொரு நிகழ்ச்சி நிர­லுடன், தத்­த­மது நிகழ்ச்சி நிர­லுக்­கேற்ப ஜெனீ­வாவைக் கையா­ளு­கின்­றன.

இங்கு எந்த ஒருங்­கி­ணைப்போ, கூட்டு முயற்­சியோ கிடை­யாது. அத்­த­கைய ஒருங்­கி­ணைப்­புக்கோ, கூட்டு முயற்­சிக்கோ இணங்கும் நிலையில் எந்தத் தரப்­பு­மில்லை. ஜெனீ­வாவில் நீதி கேட்டுச் செல்லும் தரப்­பு­க­ளுக்­கி­டையில் நான் பெரிது நீ பெரிது என்ற வேறு­பா­டுகள் ஊறி­யி­ருக்­கின்­றன.

பத்து வரு­ட­மாக வரு­கின்ற நான் தான் மூப்பு என்ற வகையில் செயற்­ப­டு­ப­வர்­களும், இந்­த­ளவு காலம் வந்து எதை சாதித்­தீர்கள் என்று கேள்வி எழுப்­பு­கி­ற­வர்­க­ளு­மாகத் தான் ஜெனீவா அமர்வில் பங்­கேற்­கின்­ற­வர்கள் இருக்­கி­றார்கள்.

இறு­திக்­கட்டப் போரிலும், அதற்கு முன்­னரும் பின்­னரும் தமி­ழர்­க­ளுக்கு இழைக்­கப்­பட்ட அநீ­தி­க­ளுக்கு நியாயம் கோரு­வது தான், ஜெனீவா நோக்கிப் படை­யெ­டுக்கும் தமிழர் தரப்­பி­லுள்ள அனை­வ­ரி­னதும் ஒரே குறிக்கோள்.

ஆனாலும், ஒருங்­கி­ணைந்த வகையில் ஜெனீ­வாவைக் கையாளும் முனைப்­புகள் மாத்­திரம் இன்­னமும் சறுக்கிக் கொண்டே செல்­கின்­றன.

ஜெனீ­வாவில் மாத்­தி­ர­மன்றி, இலங்­கையில் இருந்து ஜெனீ­வா­வுக்கு செல்­வ­திலும் கூட ஒற்­றுமை கிடை­யாது.

இலங்­கையில் இடம்­பெற்ற மனித உரிமை மீறல்­க­ளுக்கு பொறுப்­புக்­கூ­று­வதை ஐ.நா. மனித உரி­மைகள் பேரவை உறு­திப்­ப­டுத்த வேண்டும் என்றும் அதற்கு அழுத்­தங்­களைக் கொடுக்க வேண்டும் என்றும், கூறு­கின்ற தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் கூட, ஒரு­மு­றை­யேனும் ஜெனீ­வா­வுக்குச் சென்­ற­தில்லை.

மாவை சேனா­தி­ரா­சா­வையோ, சுமந்­தி­ர­னையோ அனுப்பி விட்டு அவர் இருந்து விடு­கிறார்.

ஒரு­வேளை, எதிர்க்­கட்சித் தலை­வ­ராக இருந்து கொண்டு ஜெனீ­வா­வுக்குச் சென்றால் சிங்­கள மக்கள் தன்னை எதிர்ப்­பார்கள் என்ற கவலை அவ­ருக்கு இருக்­கி­றதோ தெரி­ய­வில்லை.

அது­போல தான், வடக்கு அர­சி­ய­லுக்குள் முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் நுழைந்து நான்கு ஆண்­டு­க­ளாகி விட்ட நிலையில், அவரும் கூட ஜெனீ­வாவை எட்­டியும் பார்க்­க­வில்லை.

கடந்­த­வாரம் அவ­ரிடம், ஏன் ஜெனீவா செல்­ல­வில்லை என்று கேள்வி எழுப்­பப்­பட்ட போது, தனக்கு அதிகம் வேலைப்­பளு இருப்­பதால், ஜெனீவா செல்­ல­வில்லை என்று சமா­ளித்துக் கொண்டார்.

அப்­ப­டி­யானால், ஜெனீ­வா­வுக்குச் செல்­ப­வர்கள் என்ன வேலை­யில்­லா­த­வர்­களா? வேலைப் பளு இல்­லா­த­வர்­களா? பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி கோரு­வதை விட பெரிய வேலை வேறென்ன இருக்­கி­றது? என்று முத­ல­மைச்­சரை நோக்கி கேள்­விகள் பறக்­கின்­றன. இத்­த­கைய கேள்­விகள் நியா­ய­மா­ன­வையும் கூட.

முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன், பொறுப்­புக்­கூறல் விடயம் சார்ந்து இனப்­ப­டு­கொ­லைகள் சார்ந்து இப்­போது கொண்­டி­ருக்­கின்ற நிலைப்­பாட்டை ஆரம்­பத்­தி­லேயே கொண்­டி­ருந்­தவர் அல்ல.

இனப்­ப­டு­கொ­லைக்கு நீதி கோரும் தீர்­மா­னத்தை வடக்கு மாகா­ண­ச­பையில் நிறை­வேற்­று­வதை அவரும் கூட இழுத்­த­டித்து வந்­தவர் தான். இப்­போது அவர் தான்­சார்ந்த அர­சி­ய­லுக்­காக, பல விட­யங்­களைப் பேசி­னாலும், ஜெனீவா நோக்கி நீதி கேட்கச் செல்­வ­தற்கு மாத்­திரம் அவர் தயா­ரில்லை.

சம்­பந்­தனோ, விக்­னேஸ்­வ­ரனோ ஜெனீ­வா­வுக்­கான பய­ணத்தை மேற்­கொள்­வது, சற்றுக் கூடுதல் கவ­னத்தை ஈர்ப்­ப­தற்­கான வழி­யாக இருக்­கலாம். அதற்­காக, ஜெனீவா நோக்­கிய இந்தப் பய­ணங்­களும், போராட்­டங்­களும் மாத்­திரம், பொறுப்­புக்­கூ­றலை உறு­திப்­ப­டுத்தி விடும் என்று இந்தப் பத்தி நம்­ப­வில்லை.

ஏனென்றால் ஜெனீவா என்­பது, ஒரு சர்­வ­தேச அர­சியல் ஒழுங்கின் கீழ் செயற்­படும் அமைப்பு. அங்கு சர்­வ­தேச அர­சியல் ஒழுங்­கிற்கு, யார் யார் குழப்பம் விளை­விக்க முனை­கி­றார்­களோ அவர்­களைத் தண்­டிக்­கின்ற அல்­லது கண்­டிக்­கின்ற விட­யங்­க­ளுக்கே முக்­கி­யத்­துவம் அளிக்­கப்­ப­டு­கி­றது.

எனவே, சம்­பந்­தனோ, விக்­னேஸ்­வ­ரனோ போய் அங்கே ஒன்­றையும் சாதித்து விட முடி­யாது. ஆனால் கவ­னத்தை ஈர்க்­கலாம். இப்­போ­துள்­ளதை விட சர்­வ­தேச சமூ­கத்தின் கவ­னத்தை பெற்றுக் கொள்­ளலாம்.

தாம் செல்­லாது விட்­டாலும், வடக்கு மாகா­ண­ச­பையின் உறுப்­பி­னர்கள் சிவா­ஜி­லிங்­கமும், அமைச்சர் அனந்­தியும் செல்­கி­றார்கள் அவர்கள் சொல்ல வேண்­டி­யதை அங்கு சொல்­வார்கள் என்று முத­ல­மைச்சர் நழுவிக் கொண்­டி­ருக்­கிறார். அப்­ப­டி­யாயின், இங்கும் கூட முத­ல­மைச்சர், தான் சொல்ல வேண்­டி­யதை அவர்­களை வைத்தே சொல்லிக் கொள்­ள­லாமே.

அது­போல, உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் கிடைத்த அடி­யி­னாலும், கடும் விமர்­ச­னங்­க­ளி­னாலும், தமி­ழ­ரசுக் கட்­சியும் ஐந்து பேர் கொண்ட குழுவை பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிறி­தரன் தலை­மையில் அனுப்ப முடிவு செய்­தி­ருக்­கி­றது.

வழக்­கம்­போ­லவே , தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியின் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­ப­லமும் வேறு சிலரும் ஜெனீ­வா­வுக்கு சென்­றி­ருக்­கி­றார்கள்.

கடை­சி­யாக நடந்த தமிழ் மக்கள் பேரவைக் கூட்­டத்தின் பின்னர், முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன், பேரவை சார்­பிலும் பிர­தி­நி­திகள் ஜெனீ­வா­வுக்கு செல்வர் என்று கூறி­யி­ருந்தார். ஆனாலும் அவர்கள் யார், அங்கு செல்­கின்­றனர் என்ற விபரம் ஏதும் வெளி­யா­க­வில்லை.

அது­போல பல்­வேறு நாடு­களில் இருந்தும் ஜெனீவா நோக்கி பலரும் கிளம்­பி­யுள்­ளனர்.

இவர்கள் எல்­லோரும், அர­சாங்கம் எதையும் செய்­ய­வில்லை, பாதிக்­கப்­பட்ட மக்­களின் காயங்­களைக் குணப்­ப­டுத்த எந்த நட­வ­டிக்­கை­கையும் எடுக்­க­வில்லை, பொறுப்­புக்­கூ­ற­லுக்­கான பொறி­மு­றை­க­ளையே உரு­வாக்­க­வில்லை என்று முறைப்­பா­டு­களை வாசிக்கப் போகி­றார்கள்.

அதனை பேர­வையின் உறுப்பு நாடுகள் கேட்டு விட்டு எழும்பிச் சென்று விடு­வார்கள். இலங்­கைக்கு வழங்­கப்­பட்ட ஒரு வருட கால­அ­வ­காசம் இன்­னமும் இருக்­கி­றது. அதற்குள் எல்­லா­வற்­றையும் செய்வோம் என்ற வாக்­கு­று­தியை அர­சாங்கம் கொடுக்கப் போகி­றது.

அதற்குப் பின்னர், எல்­லோரும் கலைந்து போய் விடு­வார்கள். இது தான் கடந்த காலங்­க­ளிலும் நடந்­தது. இம்­மு­றையும் நடக்கப் போவது.

ஜெனீ­வாவை வினைத்­தி­ற­னாகக் கையா­ளு­வது என்­பது சிக்­க­லா­னது. ஜெனீவா களம் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட வாய்ப்­பு­களைக் கொண்ட களம் மாத்­தி­ரமே, ஆனாலும், அதன் வரை­ய­றை­க­ளுக்­குட்­பட்ட வகையில் தமி­ழர்­த­ரப்பு நீதியைப் பெறு­வ­தற்கு ஒருங்­கி­ணைந்த முயற்­சி­களை முன்­னெ­டுத்­தி­ருக்­க­வில்லை என்றே தோன்­று­கி­றது.

இந்­த­நி­லையில் ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வை­யினால் கையா­ளப்­படும் இந்த விவ­கா­ரத்தை பாது­காப்புச் சபைக்கு கொண்டு செல்ல வேண்டும், சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்­திடம் பாரப்­ப­டுத்த வேண்டும் என்ற கோரிக்­கை­களும் தீவி­ர­மாக முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன.

சர்­வ­தேச விசா­ரணை, உள்­ளிட்­டவை நீண்­ட­கா­ல­மா­கவே தமிழர் தரப்­பினால் முன்­வைக்­கப்­பட்டு வந்த விட­யங்கள் தான். ஆனாலும், ஐ.நா. மனித உரி­மைகள் பேரவை உள்­ளக பொறி­மு­றைக்கு அப்பால் செல்­ல­வில்லை. அதற்கு அப்பால் செல்லும் அதி­கா­ரமும் அதற்கு இல்லை.

இந்த நிலையில் இந்த விவ­கா­ரத்­துக்கு பாது­காப்புச் சபை தீர்வைத் தரும் என்று எவ்­வாறு நம்­பு­வது? வீட்டோ அதி­காரம் கொண்ட பாது­காப்புச் சபையில் இலங்­கைக்கு சார்­பாக இரண்டு நாடுகள் அதனைக் கையில் வைத்­தி­ருக்­கின்ற நிலை­யிலும், அது­பற்­றி­யெல்லாம் எந்த யோசனையும் இல்லாமல் பாதுகாப்புச் சபையிடம் தீர்வைத் தேடுகின்ற நிலையில் தமிழர் தரப்பு இருக்கிறது.

ஒருவேளை இந்த விவகாரம் பாதுகாப்புச் சபைக்கு சென்று. அங்கு நிராகரிக்கப்பட்டால் அடுத்து என்ன செய்யலாம் என்ற மாற்றுத் திட்டத்தைக் கையில் வைத்துக் கொண்டாவது இந்த முனைப்பு முன்னெடுக்கப்படுகிறதா என்று தெரியவில்லை.

போரின் போது தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது என்பதை உலகம் ஏற்றுக்கொண்டாலும் அதற்குப் பொறுப்புக்கூறப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினாலும், அதனை எவ்வாறு செய்வது என்பதில் உலகம் பிளவுபட்டிருக்கிறது.

இந்தப் பிளவு நிலை தமிழர்களுக்கு பாதகமானது. அரசுக்கு சாதகமானது. அதுபோலவே, நீதி கோரும் தமிழர்களும் ஒன்றுபட்டு நிற்கவில்லை. ஒரே அணியாக ஒரே குரலாகச் செயற்படவில்லை.

அது ஜெனீவா களத்தை இன்னும் சாதகமாகப் பயன்படுத்தும் வாய்ப்புகளுக்கு இடையூறாக இருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-03-18#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.