Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்­தியத் தேசி­ய­வா­தமும் ராஜபக் ஷ விசு­வா­சமும்

Featured Replies

இந்­தியத் தேசி­ய­வா­தமும் ராஜபக் ஷ விசு­வா­சமும்

samakalamgota1-6767532122df4e6b78cf32c55d5abf13673a035f.jpg

 

“2020 ஜனா­தி­பதித் தேர்­தலில் கோத்­தா­பய ராஜபக் ஷ போட்­டி­யிட்டால், அவரை வெற்றி பெறச்­செய்­வது தேசப்­பற்­றுள்ள இந்­தி­யர்­களின் கடமை. பாது­காப்பு அமைச்சர் என்ற வகையில், விடு­தலைப் புலி­களைத் தோற்­க­டித்­தவர் அவர்”­என்று கடந்­த­வாரம் டுவிட்டர் பதிவு ஒன்றின் மூலம், மீண்டும் சர்ச்­சையைக் கிளப்­பி­யி­ருந்தார் சுப்­பி­ர­ம­ணியன் சுவாமி.

பா.ஜ.க.வின் மூத்த தலை­வ­ராக குறிப்­பி­டப்­பட்­டாலும், தமி­ழ­கத்தில் சுப்­ர­ம­ணியன் சுவாமி எப்­ப­டிப்­பட்ட ஒரு­வ­ராக மதிக்­கப்­ப­டு­கி­றவர் என்­பதை இங்கு சொல்லிக் கொண்­டி­ருக்க வேண்­டி­ய­தில்லை. அந்­த­ள­வுக்கு அவர் கடு­மை­யான விமர்­ச­னங்­க­ளுக்கும், கேலி, கிண்­டல்­க­ளுக்கும் உள்­ளா­கின்ற ஒருவர்.

எனினும், தனக்கு எது சரி­யெ­னப்­பட்­டதோ, அதனை துணிச்­ச­லுடன் யாருக்கும் அஞ்­சாமல் முன்­வைக்கும் நபர் என்­பதை யாராலும் மறுக்க முடி­யாது.

பா.ஜ.கவில் அங்கம் வகித்­தாலும், இவர் எப்­போதும் பா.ஜ.கவின் கொள்­கை­களை பின்­பற்றி வரு­பவர் என்று சொல்ல முடி­யாது. அதன் கொள்­கை­க­ளுக்கு முர­ணா­கவும் பேசி சர்ச்­சையில் சிக்கிக் கொள்வார்.

கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு ஆத­ர­வாக சுப்­ர­ம­ணியன் சுவாமி இப்­போது டுவிட்­டரில் செய்த பதி­வுக்கு சரி­யாக ஒரு மாதம் முன்­ன­தாக, 2018 பெப்­ர­வரி 12ஆம் திகதி டுவிட்­டரில் அவர் ஒரு பதிவை போட்­டி­ருந்தார். உள்­ளூ­ராட்சித் தேர்தல் முடி­வுகள் வெளி­யா­கிய பின்னர் அந்தப் பதிவு போடப்­பட்­டது.

அதில், ராஜபக் ஷ மீண்டும் இலங்கை அர­சி­யலில் பலம்­வாய்ந்­த­வ­ராக வந்­தி­ருப்­பது நல்­லது. அவர் மீண்டும் ஜனா­தி­ப­தி­யாக வர வேண்டும் என்று குறிப்­பிட்­டி­ருந்தார்.

மஹிந்த ராஜபக் ஷவுக்கும் சுப்­பி­ர­ம­ணியன் சுவா­மிக்கும் நெருங்­கிய உற­வு உண்டு. மஹிந்த அர­சாங்கம் பத­வியில் இருந்த போது அடிக்­கடி கொழும்பு வந்து ஆலோ­ச­னை­க­ளையும் வழங்கி வந்­தவர். குறிப்­பாக, ஜெனீவா நெருக்­க­டி­களை தீர்ப்­ப­தற்கு இரா­ஜ­தந்­திர முயற்­சி­களை சுப்­ர­ம­ணியன் சுவா­மியும் மேற்­கொண்­டி­ருந்தார். ஆட்­சியில் இருந்­த­போதும், ஆட்­சியை இழந்த பின்­னரும் இவர்­க­ளுக்­கி­டையில் நெருங்­கிய உற­வும் தொடர்­பு­ம் இருந்து வந்­தன.

2014 ஆம் ஆண்டு மஹிந்த ராஜ பக் ஷ ஆட்­சியில் இருந்த போது, அவ­ருக்கு இந்­திய அர­சாங்கம் "பாரத ரத்னா" விருது வழங்க வேண்டும் என்று கோரி­யி­ருந்தார் சுப்­ர­ம­ணியன் சுவாமி. விடு­தலைப் புலி­களைத் தோற்­க­டித்­தவர் என்­ப­தற்­கா­கவே அவ­ருக்கு இந்­தி­யாவின் உயர் விருது வழங்­கப்­பட வேண்டும் என்­பது அவ­ரது கோரிக்கை.

அந்த வகையில் ராஜபக் ஷ விசு­வா­சத்தை சுப்­ர­ம­ணியன் சுவாமி மீண்டும் தனது டுவிட்­டரில் வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார். மஹிந்த ராஜபக் ஷ உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் வெற்றி பெற்­றதை அவர் வர­வேற்­றதில் தவறு இல்லை. ஆனால் அவர் மீண்டும் ஜனா­தி­ப­தி­யாக வேண்டும் என்று போட்ட பதிவு தான் தவ­றா­னது.

ஏனென்றால், மீண்டும் மஹிந்த ராஜபக் ஷவினால் ஜனா­தி­ப­தி­யாக முடி­யாது. அதற்கு தற்­போ­துள்ள அர­சி­ய­ல­மைப்­புச்­சட்டம் இட­ம­ளிக்­காது.

வேண்­டு­மானால் பிர­த­ம­ரா­கலாம்.

இதனை சுப்­ர­ம­ணியன் சுவாமி அறி­யாமல் இருந்­தாரா அல்­லது மீண்டும் அர­சி­ய­ல­மைப்பை திருத்தி மஹிந்த ராஜபக் ஷ ஜனா­தி­ப­தி­யாக வேண்டும் என்ற விருப்­பத்தை அவர் வெளி­யிட்­டாரா என்று தெரி­ய­வில்லை.

ஏனென்றால், ஒரு மாதம் கழித்து அவர் செய்த டுவிட்டர் பதிவில், அடுத்த ஜனா­தி­பதித் தேர்­தலில் கோத்­தா­பய ராஜபக் ஷ போட்­டி­யிட்டால் அவரை ஆத­ரிக்க வேண்டும் என்று கூறி­யி­ருக்­கிறார். எனவே, மஹிந்த மீண்டும் ஜனா­தி­பதி பத­விக்குப் போட்­டி­யிட முடி­யாது என்­பதை சுப்­ர­ம­ணியன் சுவாமி அறி­யா­தி­ருந்தார் எனக் கூற­மு­டி­யாது.

மஹிந்த ராஜபக் ஷவுக்கு ஆத­ர­வாக, கடந்த மாதம் சுப்­ர­ம­ணியன் சுவாமி இட்­டி­ருந்த பதிவு, கடு­மை­யான விமர்­ச­னங்­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. வட­இந்­தி­யர்கள் கூட அவ­ரது இந்தப் பதி­வுக்கு கடு­மை­யான விமர்­ச­னங்­களை முன்­வைத்­தி­ருந்­தனர்.

‘றோ’ தானே அவரைத் தோற்­க­டித்­தது பிற­கெப்­படி அவர் ஆட்­சிக்கு வரு­வது இந்­தி­யா­வுக்கு நல்­ல­தாக இருக்க முடியும்” என்று கேள்வி எழுப்­பி­யி­ருந்த பலரும், ராஜபக் ஷ மீண்டும் ஜனா­தி­ப­தி­யா­வது இந்­தி­யா­வுக்கு நல்­ல­தல்ல அவர் சீனா­வுக்கு நெருக்­க­மா­னவர் என்றும் பதி­வு­களை இட்­டி­ருந்­தனர்.

இந்­த­நி­லையில் இப்­போது சுப்­ர­ம­ணியன் சுவாமி, கோத்­தா­பய ராஜபக் ஷ அடுத்த ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட்டால், அவரை ஆத­ரிக்க வேண்­டி­யது தேசப்­பற்­றுள்ள இந்­தி­யர்­களின் கடமை என்று கூறி­யி­ருக்­கிறார்.

அவர் இந்தக் கருத்தை எங்­கி­ருந்து ஆரம்­பிக்­கிறார் என்­பது தான் முக்­கி­ய­மா­னது.

கோத்­தா­பய ராஜபக் ஷ மிகத்­தி­ற­மை­யா­னவர் என்றோ, அவரால் இந்­தி­யா­வுக்கு நன்மை ஏற்­படும் என்றோ, அவ­ரது வரு­கையால் இந்­தியா பல­ம­டையும் என்றோ சுப்­ர­ம­ணியன் சுவாமி கூற­வில்லை.

பாது­காப்பு அமைச்­ச­ராக இருந்து அவர் விடு­தலைப் புலி­களை தோற்­க­டித்­தவர் என்­பதால் தான், அவரை இந்­தியா ஆத­ரிக்க வேண்டும் என்ற கருத்­தையே சுப்­ர­ம­ணியன் சுவாமி முன்­வைத்­தி­ருக்­கிறார்.

இந்­தியா எதி­ரி­யாக கரு­திய விடு­தலைப் புலி­களைத் தோற்­க­டித்­தவர் என்­பதால் அவரை ஆத­ரிப்­பது தேசப்­பற்­றுள்ள இந்­தி­யர்­களின் கடமை என்­பது அவ­ரது வாதம்.

தீவிர விடு­தலைப் புலி எதிர்ப்­பா­ள­ரான, சுப்­ர­ம­ணியன் சுவாமி, இலங்­கையில் உள்ள தமி­ழர்கள் மாத்­தி­ர­மன்றி இந்­தி­யாவில் உள்ள தமி­ழர்­களின் நலன்­களில் கூட துளி­யேனும் அக்­க­றை­யற்­றவர். அவரைப் போன்­ற­வர்கள் இது­போன்ற கருத்­துக்­களை முன்­வைப்­பது ஒன்றும் ஆச்­ச­ரி­ய­மான விட­ய­மல்ல.

ஆனால், தம்மை தீவிர இந்­தியத் தேசி­ய­வா­தி­க­ளாக காட்டிக் கொள்ளும் இவர்கள், தமக்குத் தேவைப்­ப­டு­கின்ற போது, இந்­தி­யாவின் நலன்­களைக் கூட பலி­யிடத் தயா­ராக இருப்­பார்கள் என்­ப­தற்கு சுப்­ர­ம­ணியன் சுவா­மியின் இந்த டுவிட்டர் பதிவும் ஒரு உதா­ரணம்.

ராஜபக் ஷக்கள் சீனா சார்பு நிலைப்­பாட்டைக் கொண்­டி­ருந்­த­வர்கள் என்­பது ஒன்றும் இர­க­சி­ய­மான விட­ய­மல்ல. அவர்கள் ஆட்­சியில் இருந்­த­போதும், ஆட்­சியில் இருந்து வில­கிய பின்­னரும், சீனா­வுடன் நெருங்­கிய தொடர்­பு­களைப் பேணி வரு­கின்­றனர்.

மஹிந்த ராஜபக் ஷ, அதி­கா­ரத்தை இழந்த பின்னர், ஒரு­முறை கூட புது­டில்லிப் பக்கம் எட்டிப் பார்க்­க­வில்லை. சில மத­வ­ழி­பா­டு­க­ளுக்­காக மாத்­திரம் அவர் திருப்­பதி, பெங்­களூர், மும்­பைக்கு சென்று வந்­தி­ருக்­கி­றாரே தவிர, புது­டில்­லிக்குச் செல்­ல­வில்லை.

இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி இரண்டு தட­வைகள் அவ­ருக்கு அழைப்பு விடுத்தும் அதனை அவர் பயன்­ப­டுத்திக் கொள்­ள­வில்லை. ஒரு­வேளை, மீண்டும் ஆட்­சியைக் கைப்­பற்­றிய பின்னர் தான் புது­டில்­லியில் கால் வைப்பேன் என்று சபதம் செய்­தி­ருக்­கி­றாரோ தெரி­ய­வில்லை.

ஏனென்றால், மஹிந்த ராஜபக் ஷவை பத­வியில் இருந்து கவிழ்த்­ததில் இந்­தியப் புல­னாய்வு அமைப்பு கணி­ச­மான பங்கை வகித்­தி­ருந்­தது. றோ மீது மஹிந்த ராஜபக் ஷவே இந்தக் குற்­றச்­சாட்டை கூறி­யி­ருந்தார்.

எனவே, அவர், மீண்டும் அதி­கா­ரத்­துக்கு வந்து, புது­டில்­லிக்கு தனது பலத்தை நிரூ­பிப்பேன் என்­றொரு சப­தத்தை அவர் எடுத்­தி­ருந்­தாலும் ஆச்­ச­ரி­யப்­பட முடி­யாது.

புது­டில்­லிக்­கான பய­ணத்தை இழுத்­த­டிக்கும் மஹிந்த ராஜபக் ஷ, இரண்டு தட­வைகள் சீனா­வுக்கு அதுவும் அதி­கா­ர­பூர்வ பய­ண­மாக சென்று வந்­தி­ருக்­கிறார். சீன அரசு அவ­ருக்கு அதி­கா­ர­பூர்வ அழைப்பை விடுத்து, அவ­ரது பய­ணத்­துக்­கான முழு­மை­யான வச­தி­க­ளையும் கொடுத்து கௌர­வித்­தி­ருந்­தது,

மஹிந்த ராஜபக் ஷ மாத்­தி­ர­மன்றி, கோத்­தா­பய ராஜபக் ஷவையும் கூட சீனா அழைத்து பேச்சு நடத்­தி­யி­ருந்­தது. அவ­ருக்கு ஒரு வருட அர­சியல் கற்­கை­நெறி ஒன்றைப் பயில்­வ­தற்­கான புல­மைப்­ப­ரிசில் வாய்ப்­பையும் கூட சீனா வழங்க முன்­வந்­தது.

அந்­த­ள­வுக்கு சீன சார்­பு­டை­ய­வர்­க­ளாக இருக்கும், ராஜபக் ஷக்கள் இந்­தி­யாவின் நலன்­க­ளுக்கு சார்­பாகச் செயற்­ப­டு­வார்­களா என்ற கேள்வி பர­வாக இருக்­கின்ற நிலையில், அவர்­களை ஆத­ரிக்க வேண்டும், ஆட்­சியில் அமர்த்த வேண்டும் என்று இந்­தி­யர்­களை உசுப்­பு­கிறார் சுப்­ர­ம­ணியன் சுவாமி.

இங்கு இந்­திய நலன் என்­பதை விட, விடு­தலைப் புலி­களை அழித்­தவர் என்­பதால், அவரை ஆத­ரிக்க வேண்டும் என்­பது தான் அவ­ருக்கு முக்­கி­ய­மா­ன­தாக உள்­ளது.

சுப்­ர­ம­ணியன் சுவாமி போன்­ற­வர்­களால் இந்­தி­யாவின் நலன்­க­ளுக்கு எதி­ரா­ன­வர்கள் என்று கூறப்­பட்ட விடு­தலைப் புலிகள் அழிக்­கப்­பட்டு விட்­டார்கள். அதற்குப் பின்­னரும் கூட, இவர்­களின் புலி­யெ­திர்ப்பு அர­சி­யலும், அதனைச் சார்ந்த வெறியும் அடங்­க­வில்லை.

ராஜீவ் காந்தி கொலையை மையப்­ப­டுத்­தியே புலி எதிர்ப்பு நிலைப்­பாட்டை இந்­தியா எடுத்­தி­ருந்­தது. அந்த நிலைப்பாடு இலங்கையிலுள்ள தமிழர்களையும் சேர்த்தே பாதிக்கும் என்பதை இந்தியா கருத்தில் கொள்ளவில்லை.

ராஜீவ் காந்தி கொலையாளிகளை தாங்கள் மன்னித்து விட்டோம் என்று ராகுல் காந்தியே பகிரங்கமாக கூறியுள்ள நிலையிலும், சுப்ரமணியன் சுவாமி போன்ற தேசியவாதிகளால், இன்னமும் புலியெதிர்ப்பு நிலையில் இருந்து மாற முடியவில்லை.

அதன் வழியே தான், இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையையும் கட்டியெழுப்ப ஆசைப்படுகிறார்கள். புலிகள் மீதான வன்மத்தை வெளிப்படுத்திய இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை இதுவரையில் இந்தியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவோ, சீனாவின் தலையீட்டையோ தடுக்க உதவவில்லை.

இதனை உணர்ந்து கொண்ட பின்னரும் கூட, இந்தியத் தேசியவாதிகளாக வரிந்து கட்டிக் கொள்பவர்கள் தம்மை மாற்றிக் கொள்ளத் தயாரில்லை என்பதை தான் சுப்பிரமணியன் சுவாமி போன்றவர்களின் நிலைப்பாடுகள் வெளிப்படுத்துகின்றன.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-03-18#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.