Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பின் ஆதரவைப்பெற திண்டாடும் அரசியல் கட்சிகள்

Featured Replies

கூட்டமைப்பின் ஆதரவைப்பெற திண்டாடும் அரசியல் கட்சிகள்

06-a711a9adda246902b1dc188cf76810cd74d8bc18.jpg

 

(ரொபட் அன்டனி)

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதமும் வாக்கெடுப்பும் எதிர்வரும் நான்காம் திகதி நடைபெறவுள்ள நிலையில் பிரேர ணைக்கு ஆதரவாகவும் எதிராகவும் வாக்குகளைப் பெறும் தீவிர முயற்சியில் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. விசேடமாக அரசியல் கட்சிக ளுக்கிடையிலான பேச்சுவார்த்தைகள் இந் நாட்களில் அடிக்கடி இடம் பெற்று வருவதுடன், பேச்சுவார்த்தைகள் தீர்க்கமானதாக அமைந்திருக் கின்றன. ஐக்கிய தேசியக் கட்சியானது பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுக்கு ஆதரவாகவும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராகவும் வாக்குகளைப் பெறும் நோக்கில் அரசியல் காய் நகர்த்தி வருகின்றது. இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியானது பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 

 மேலும் ஐக்கிய தேசியக் கட்சியானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் இவ்வாரம் பேச்சுவார்த்தை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசேடமாக இந்த பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானிக்கும் சக்தியாக மாறியிருக்கின்ற நிலையில் கூட்டமைப்பின் ஆதரவை பெறும் நோக்கில் ஐக்கிய தேசிக் கட்சி கடும் காய் நகர்த்தல்களை மேற்கொண்டு வருகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை இந்த விடயம் தொடர்பில் எவ்விதமான தீர்மானத்தையும் எடுக்கவில்லை. எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை பெறுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சி முயற்சித்து வருகிறது.

அத்துடன் கூட்டமைப்பு நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்த்து வாக்களிக்கும் என ஐக்கிய தேசியக் கட்சி தலைமை நம்பிக்கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை கூட்டு எதிரணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை பெறும் நோக்கில் காய் நகர்த்தல்களை மேற்கொண்டு வருகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது வடக்கு கிழக்கின் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரத்து வாக்களிக்க முன்வர வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சியினர் பகிரங்கமாக கோரிக்கை விடுத்து வருகிறது.

அதுமட்டுமன்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு கூட்டு எதிரணியும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் இதுவரை எந்த முடிவையும்எடுக்கவில்லை. ஆனால் மக்கள் விடுதலை முன்னணியானது பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்கும் என அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-03-26#page-1

  • தொடங்கியவர்

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து 2ம் திகதி தீர்மானிக்கப்படும் – TNA

tna.jpg?resize=518%2C388
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ம் திகதி தீர்மானிக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றில் 16 ஆசனங்களைக் கொண்டுள்ளது.  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் குழுக்கூட்டம் எதிர்வரும் 2ம் திகதி நடைபெறவுள்ளதாக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்களும், ஜே.வி.பியும் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதவரளிக்கத் தீர்மானித்துள்ளனர்.  கடந்த வாரம் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

http://globaltamilnews.net/2018/72326/

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நவீனன் said:

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து 2ம் திகதி தீர்மானிக்கப்படும் – TNA

tna.jpg?resize=518%2C388
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ம் திகதி தீர்மானிக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 

சிறீலங்க சிங்கள அரசியல் கட்சிகளுள், ஐ தே கட்சி புத்துக்குள் இருக்கும் பாம்பு எனவும், ஏனையவை வெளியில் இருக்கும் பாம்புகள் எனவும் வர்ணிக்கப்பட்டு வந்துள்ளது. இதில் வெளியில் இருக்கும் பாம்புகளை இனங்கண்டு தப்பித்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் அவற்றிக்கே சாதகமாக இருந்த தமிழினம் இதுவரை கண்டது அழிவைத்தவிர வேறு எதுவுமில்லை. ஆகவே புத்துக்குள் இருக்கும் பாம்பிற்கும் ஒருமுறை பாலூற்றிப் பார்க்கலாம். சிலவேளை அதன் ஆசீர்வாதமும் கிடைக்கலாம். :innocent:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.