Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தையும் திருகோணமலையையும் ஒரே நேரத்தில் கைப்பற்ற பிரபாகரன் திட்டம்-சிங்களநாளேடுகளில் இருந்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தையும் திருகோணமலையையும் ஒரே நேரத்தில் கைப்பற்ற பிரபாகரன் திட்டம்

[23 - March - 2007] [Font Size - A - A - A]

அரச படையினர் கிழக்கு பிரதேசங்களில் மட்டுமன்றி, வடக்குப் பகுதிகளிலுள்ள புலிகள் இயக்கத்தினரின் பிரதான முகாம்கள் மீதும் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியிருக்கும் நிலையில் படையினரின் தாக்குதல்களை எதிர்கொள்ளவோ அல்லது பதில் தாக்குதல்களை நடத்தவோ முடியாதவாறு புலிகள் அமைப்பின் தலைமைத்துவம் பெரும் ஆயுதத் தட்டுப்பாட்டுக்கு முகம் கொடுத்திருப்பதாகவும் தற்போது புலிகள் இயக்கத்தினரிடையே எழுந்துள்ள முக்கிய பிரச்சினை ஆயுதங்கள் இல்லாமையே எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்குக் காரணம் அண்மைக் காலங்களில் வெளிநாடுகளிலிருந்து ஆயுதங்களைக் கொண்டு வந்து சேர்ப்பதற்கு புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனும் அவருடைய நெருங்கிய சகாக்களும் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்து விட்டமையே எனவும், இவ்வாறு ஷ்ரீலங்கா விமானப்படையினரின் குண்டு வீச்சு விமானங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக எஸ்.ஏ.17 மற்றும் ஸ்ரிஞ்சர் வகை விமான எதிர்ப்பு மிசைல்ஸ் ஏவுகணைகளை வெளிநாடுகளிலிருந்து கடல் மார்க்கமாகக் கொண்டு வர புலிகள் இயக்கத் தலைவர்கள் எடுத்த பல முயற்சிகள் கடற்படையினரால் முறியடிக்கப்பட்டு விட்டன எனவும் மேலும், பாதுகாப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுதங்களைப் பெற்றுக் கொள்ளும் முயற்சியாக அரசாங்கத்துடன் சமாதானப் பேச்சுகளை ஆரம்பித்து அந்த சந்தர்ப்பத்தைப் பிரயோகித்து 11 கப்பல்களில் ஆயுதங்களைக் கொண்டு வந்து சேர்க்க புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் திட்டமிட்டிருந்தார். இதற்கு வசதியாக சமாதானப் பேச்சுகளை முடிந்தவரை இழுத்தடிப்பதே பிரபாகரனின் உபாயமாக இருந்தது. மேலும், இவ்வாறு திட்டமிட்டபடி ஆயுதங்களைப் பெற்றுக் கொண்ட பின்னர் ஒரே நேரத்தில் தீவிர தாக்குதல்களை மேற்கொண்டு யாழ்ப்பாணத்தையும் திருகோணமலையையும் கைப்பற்றுவதற்குத் திட்டமிட்டிருந்தார் பிரபாகரன். பிரபாகரனின் இந்தத் திட்டம் பற்றிய தகவல் அண்மையில் அவருடைய நெருங்கிய சகாவாகிய வீ. பாலகுமார் விடுத்துள்ள ஒரு அறிக்கையிலிருந்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த அந்த அறிக்கையில் பாலகுமார் தெரிவித்துள்ளதற்கேற்ப, புலிகள் இயக்கத் தலைவரின் திட்டங்களுக்கேற்ப களநிலைமை சீர்செய்யப்பட்டு வருவதாகவும் விரைவில் ஷ்ரீலங்கா பாதுகாப்புப் படையினர் பூகம்பத்துக்கு முகம் கொடுப்பர் எனவும் அதற்கேற்ப ஒரே நேரத்தில் அதிரடியாகச் செயற்படுவதே பிரபாகரனின் நோக்கம் எனவும் கூறியுள்ளார். இவ்வாறான தாக்குதல் திட்டம் ஒன்றை பிரபாகரன் நடைமுறைப்படுத்துவார் என்பது கடந்த காலங்களில் நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போதே தெரிந்து விட்டிருந்தது. ஏனெனில், அவ்வாறு சமாதானப் பேச்சுகள் நடைபெறவிருந்த சிறிது காலத்துக்கு முன்னரே அதாவது,கடந்த 2006 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் திகதி புலிகளுக்கு ஆயுதங்களை ஏற்றி வந்த கப்பல் ஒன்றை மன்னார்க் கடல்பிராந்தியத்தை அண்டிய அரிப்பு கடல்பகுதியில் வைத்து கடற்படையினர் தாக்கி அழித்தனர். இந்தச் சந்தர்ப்பத்தின் பின்னரே புலிகள் இயக்கத் தலைவரின் மேற்படி தாக்குதல் திட்டம் பற்றி ஷ்ரீலங்கா அரச பாதுகாப்புத்துறையும் தெரிந்துகொண்டது.

இதைத் தொடர்ந்து கிழக்கில் சம்பூர் மற்றும் வாகரைப் பிரதேசங்களில் தீவிர தாக்குதல்களை பாதுகாப்பு படையினர் ஆரம்பித்தனர். இந்தத் தாக்குதல்களின் போதும் புலிகள் இயக்கத்தினரிடையே உருவாகியுள்ள ஆயுதத் தட்டுப்பாடு பற்றி மேலும் பாதுகாப்புத்துறை தெளிவாகத் தெரிந்து கொண்டது. இதனை உறுதிப்படுத்திய மற்றுமொரு விடயம் அமெரிக்க சமஷ்டிப் புலனாய்வுப் பிரிவு (எவ்.பி.ஐ.) புலிகள் அமைப்பு பற்றி வெளியிட்ட புலனாய்வு அறிக்கையாகும். இந்த அறிக்கையை அமெரிக்க புலனாய்வுப் பிரிவு ஆயுதக் கடத்தல் சம்பந்தமாக புலிகள் அமைப்பினர் ஆயுத முகவர் ஒருவரைக் கைது செய்த பின்னர் வெளியிட்டது. மேற்படி புலிகளின் ஆயுத முகவரிடம் எவ்.பி.ஐ. உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட தீவிர விசாரணைகளின் போது தெரியவந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்ட மேற்படி அறிக்கையை எவ்.பி.ஐ. வெளியிட்டிருந்தது.

இவ்வாறு அமெரிக்க புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்ட நபர் வோட்டர்லூ சுரேஷ் என்பவராகும். இவர் தெரிவித்த தகவல்களில் அவர் புலிகளின் ஆயுத முகவராக நெடுங்காலம் செயற்பட்டு புலிகள் அமைப்புக்காக வெளிநாடுகளிலிருந்து சட்ட விரோதமாக ஆயுதங்களைக் கடத்தி வந்ததும், தற்போது புலிகளின் முகாம்கள் மீது ஷ்ரீலங்கா விமானப்படையின் கிபீர் மற்றும் மிக் விமானங்களின் குண்டு வீச்சுகளால் மிக மோசமான பின்னடைவுக்குள்ளாகியிருப்ப

முன்னர் புலிகளுக்கு ஆள் பற்றாக்குறை என்று இதே பத்திரிகையில் ஆய்வு எழுதியிருந்தார்கள். இப்போது ஆயுதப் பற்றாக்குறை என்று எழுதுகிறார்கள். இந்த இரண்டையும் எழுதியவர் ஒரே நபரோ தெரியவில்லை. மொத்தத்தில் கள நிலவரம் படையினருக்கே சார்பாக உள்ளதாக சிங்கள மக்களை திருப்திப்படுத்த இப்படியான பிரச்சாரங்களும் ஆயுதக் கப்பல்களை மூழ்கடிக்கும் நாடகங்களும் தேவை.

சிங்களத்திற்கு எத்தனை தடவை பாடம் சொல்லிக் கொடுத்தாலும் புரியவில்லை.

"யாழ்ப்பாணத்தையும் திருகோணமலையையும் ஒரே நேரத்தில் கைப்பற்ற பிரபாகரன் திட்டம்-

-சிங்களநாளேடுகளில் இருந்து"

சிங்கிள நாளேட்டின் எதிர்பார்ப்பு மெய்ப்பிக்க எனது வாழ்த்துக்கள்!

சிங்களவர்களுக்கே புரிந்து விட்டது. சில தமிழர்களுக்கு தான் இன்னும் புரியவில்லை.

தஞ்சையில் பறந்த கொடி!

எங்கள் நெஞ்சினில் பறக்கும் கொடி!

ஐ.நா சபையினில் பறந்தபடி!

தமிழன் வெற்றியை சொல்லுமடி!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"யாழ்ப்பாணத்தையும் திருகோணமலையையும் ஒரே நேரத்தில் கைப்பற்ற பிரபாகரன் திட்டம்-

-சிங்களநாளேடுகளில் இருந்து"

சிங்கிள நாளேட்டின் எதிர்பார்ப்பு மெய்ப்பிக்க எனது வாழ்த்துக்கள்!

<<

அதுவே எங்கள் ஆசை,வேண்டுதல், விருப்பம் எல்லாமே!. அவரின் வாய் முகூர்த்தம் விரைவில் பலிக்கட்டும்!...

திவயின காரன் இப்படி எழுதுகின்றான் என்றால் எமது மக்களின் ஆசையும் இதுதான் ஆனால் நிச்சயம் நடக்கும் நடக்க வேண்டியதை சிங்களம் தாங்குமா? அதை திவயின எழுத மறுத்துட்டான் பொறுத்து இருங்கள் திவயின சொன்னது நியமாகும் காலம் விரைவில் வரும்!

நாதன்

இப்ப விளங்குதுதானே பிறகு ஏன் மிணக்கெடுகிறீர்கள். உலகம் எல்லாம் ஓடி ஓடி

புலி பயங்கரவாதி பூச்சாண்டிகாட்டி பாதுகாப்பு ஒப்பந்தங்கள் எழுதி என்ன பிரயோசனம் நடப்பது தான் நடக்கும். கைகொடுத்தால் கையையே வெட்டும் நாகரிகமில்லாத வேட்டுவ வம்சதிற்கு(காட்டு மிராண்டிகள்). இறந்த உடலையே

குதறி கண்ணை புடுங்கி பிச்சு எறியும் இனவெறியர்களே இனி புலம்பி என்ன பிரியோசனம்..... எல்லாம் காலம் கடந்துவிட்டது... எதுவும் எந்த நேரத்திலும் நடக்கலாம்... உனது ஆசை தீர அப்பாவி சனங்களை வேட்டையாடு... உனது பரம்பரைப்பழக்கம்..... உனக்கு துதி பாட ஒரு கூட்டம்.... எத்தனை நாட்களுக்கு

உன் ஆட்டம் பார்ப்போம். யாழ், திருமலை மட்டுமில்லை எமது மண் முட்டாள்களே

உலகம் முழுவதும் எப்போதெ ஒன்றுபட்டு வெற்றி செய்திக்கும் ஆதரவுக்கும் காத்திருக்கு...... மனங்களை ஒரு போதும் அழிக்க முடியது...... ஒப்பாரிக்கு ஆயத்தப்படு.......

கட்டுரையாளரின் ஆய்வுக்கு ஆதாரம் சிங்களப் புலநாய்த்துறையா?

சிங்களவன் ஏதோ தன்னுடைய அப்பன் வீட்டுச் சொத்து பறிபோகப் போகினறது போல் எழுதியிருக்கிறான். என்ன இருப்பினும் அது தமிழர் தாயகம். இன்று இல்லாவிட்டாலும் நாளை எம் தானைத் தலைவன் தலைமையில மீட்கப்படத்தான் போகின்றது. என்ன தான் சதிராடினாலும் ஒரு நாள் விட்டு விட்டு சிங்களப் வெறிநாய்கள் ஓடத் தான் போகின்றனர். அதுவும வெகு சீக்கிரம்.

ஈழத்திலிருந்து

ஜானா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.