Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தல் விவகாரம்: ரியல் அட்மிரல் ஆனந்த குருகேயிடம் நாளைய தினம் சி.ஐ.டி. விசாரணை

Featured Replies

5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தல் விவகாரம்: ரியல் அட்மிரல் ஆனந்த குருகேயிடம் நாளைய தினம் சி.ஐ.டி. விசாரணை

 

(எம்.எப்.எம்.பஸீர்)

ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் வெள்ளை வேனில் கடத்தி காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பிலான விசாரணை நடவடிக்கைகளுக்காக கடற்படையின் ரியல் அட்மிரல் ஆனந்த குருகேவை நாளை மூன்றாம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கு உட்படுத்தவுள்ளது. கோட்டை நீதிவானின் உத்தரவுக்கு அமைய நாளை செவ்வாய்க்கிழமை ரியல் அட்மிரல் ஆனந்த குறுகே குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகவுள்ள நிலையில், அன்றைய தினம் அவரிடம் விஷேட விசாரணைகளை முன்னெடுக்க, குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக கொள்ளை தொடர்பிலான விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா தலைமையிலான குழுவினர் தயார் நிலையில் உள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 முன்னதாக 5 மாணவர் கடத்தல் விவகாரத்தில் ரியல் அட்மிரல் ஆனந்த குருகேவை விசாரிக்க குற்றப் புலனாய்வுப் பிரிவு பல முறை அவருக்கு அழைப்பு விடுத்தும் அவர் புலனாய்வுப் பிரிவில் ஆஜராவதை தவிர்த்து வந்தார். இதனையடுத்து ஆனந்த குறுகேவை குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராக உத்தரவிடக் கோரி சி.ஐ.டி. கோட்டை நீதிவானிடம் விண்ணப்பம் செய்தது. அதன்படி கடந்த மாதம் சி.ஐ.டியில். ஆஜராக திகதியொன்றினை நீதிமன்றம் அறிவித்த நிலையில் நீதிமன்றுக்கு இடையீட்டு மனுவூடாக விண்ணப்பித்திருந்த ஆனந்த குறுகே நாளை சி.ஐ.டி.யில் ஆஜராக அனுமதி கோரி அதற்கான அனுமதியையும் பெற்றுக்கொண்டார். இந் நிலையிலேயே அவரிடம் நாளை சிறப்பு விசாரணைகள் இடம்பெறவுள்ளன.

  5 மாணவர் உள்ளிட்ட 11 பேர் கடத்தல் விவகாரத்தில் பிரதான சந்தேக நபர்களில் ஒருவராக கருதப்பட்டு தேடப்பட்டு வரும், லெப்டினன் கொமாண்டர் ஹெட்டி ஆராச்சியின் கீழ் சேவையாற்றியோரின் விபரங்களை குற்றப் புலனாய்வுப் பிரிவு கடற்படையிடம் கோரியுள்ள நிலையில் அந்த பெயர் பட்டியல் கிடைக்கப் பெறும் பட்சத்தில் பல இரகசியங்கள் வெளிவரும் என நம்பப்படுகின்றது. குறித்த பெயர் பட்டியல் இதுவரை தமக்கு கிடைக்கவில்லை எனவும் அந்த பட்டியல் கிடைத்ததும், உடனடியாக மேலதிக நடவடிக்கைகளை ஆராய்ந்து மேலும் இவ்விவகாரத்தில் கைது செய்யப்படவேண்டியவர்கள் தொடர்பில் தெளிவான முடிவினை அறிவிக்க முடியும் என ஏற்கனவே குற்றப் புலனாய்வுப் பிரிவு நீதிமன்றுக்கும் அறிவித்திருந்தது.

கொழும்பு, கொட்­டாஞ்­சேனை, தெஹி­வளை, வத்­தளை மற்றும் கட்­டு­நா­யக்க உள்­ளிட்ட பல பிர­தே­சங்­களில் பல்­வேறு உத்­தி­களை கையாண்டு இந்த கடத்­தல்கள் அரங்­கேற்­றப்­பட்­டுள்­ளன. குறிப்­பாக தெஹி­வ­ளையில் 2008.09.17 அன்று பெர்­னாண்டோ மாவத்­தையில் உள்ள அலி ஹாஜியார் அன்வர் என்­ப­வ­ரது வீட்டில் வைத்து அவரும் ரஜீவ நாக­நாதன், பிரதீப் விஸ்­வ­நாதன், தில­கேஸ்­வரன் ராம­லிங்கம், மொஹம்மட் திலான், மொஹம்மட் சாஜித் ஆகிய ஐந்து மாண­வர்­களும் கடத்­தப்­பட்­டி­ருந்­தனர். இத­னை­விட கொட்­டாஞ்­சே­னையைச் சேர்ந்த கஸ்­தூரி ஆராச்­சி­லாகே ஜோன் ரீட், அரிப்பு பிர­தே­சத்தைச் சேர்ந்த அமலன் லியோன் மற்றும் ரொஷான் லியோன், கொட்­டாஞ்­சே­னையை சேர்ந்த அன்­டனி கஸ்­தூரி ஆராச்சி, திரு­கோ­ண­ம­லையை சேர்ந்த தியாக­ராஜா கஜன் உள்­ளிட்­டோரும் கடத்­தப்­பட்­டி­ருந்­தனர்.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்­க­கோனின் உத்­தர­வுக்கு அமை­வாக குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி சென­வி­ரட்­னவின் ஆலோ­ச­னைக்கு அமைய புல­னாய்வுப் பிரிவின் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் நாக­ஹ­முல்­லவின் வழி­காட்­டலின் கீழ் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சானி அபேசேகரவின் நேரடி கட்டுப்பாட்டில் உதவி பொலிஸ் அத்தியட்சர் திசேரா, புல­னாய்வு பிரிவின் கூட்டுக் கொள்ளை தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் நிஸாந்த டீ சில்வா தலை­மையில் முன்­னெ­டுக்­கப்­படும் இரு­வேறு விசா­ர­ணை­களில் இந்த பிர­தான கடத்­தல்கள் தொடர்பில் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தன.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-04-02#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.