Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரதமருக்கு எதிராக நேரடி குற்றச்சாட்டுக்கள் இல்லை...பிரேரணையை எதிர்க்கின்றோம் என்கிறார் சம்பந்தன்

Featured Replies

பிரதமருக்கு எதிராக நேரடி குற்றச்சாட்டுக்கள் இல்லை

06-fedca72ae5f5c728d8e93f6a20bb2f6a55a22b47.jpg

 

பிரேரணையை எதிர்க்கின்றோம் என்கிறார் சம்பந்தன்

(எம். எம். மின்ஹாஜ், ஆர்.யசி)

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் எந்த அடிப்படை காரணிகளும் உறுதியாக இல்லை. பிரதமருக்கு எதிராக எந்த நேரடி  குற்றச்சாட்டும் இல்லாத காரணத்தினால் பிரேரணையை ஆதரிக்கவில்லை என சபையில் எதிர்க்கட்சி தலைவர் ஆர்.சம்பந்த தெரிவித்தார்.  

 பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மூலம் பிரதமருக்கு வைக்கப்பட்டுள்ள இலக்கு நாளை ஜனாதிபதியை நோக்கி திரும்பலாம். பிரதமருடன் இது முடிந்துவிடாது, ஜனாதிபதியையும் இலக்கு வைத்து இந்த ஆட்சியினை வீழ்த்தும் முயற்சிகளே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை குறித்த விவாதத்தின் போதே எதிர்க்கட்சி தலைவர் இதனை குறிப்பிட்டார். 

அவர் மேலும் உரையாற்றுகையில் கூறியதாவது 

பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் முக்கிய விடயங்களாக ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த நாட்டில் ஊழல் ஒரு மிகப்பெரிய சாபக்கேடாக மாறியுள்ளது. இந்த நாட்டில் ஒரு கால கட்டத்தில் ஊழல் குறித்து எம்மால் கேட்டறிய முடியாத நிலைமை இருந்தது. ஆனால் இன்று எங்கு பார்த்தாலும் ஊழல் குறித்தே அனைத்து தரப்பினாலும் பேசப்பட்டு வருகின்றது. இதில் அரசியல் வாதிகளே அதிகம் ஊழல் வாதிகள் என்ற எண்ணக்கரு எழுந்துள்ளது. இதனை துடைத்தெறிய வேண்டும். ஊழல் வாதிகள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் மூலமாக தண்டிக்கப்பட வேண்டும். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். ஊழலை தடுக்க அதுவே சிறந்த வழியாகும். மத்திய வங்கி விவகாரத்தை பொறுத்தவரையில் குற்றவாளிகள் என குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள் குறித்து சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சிலர் சிறையில் உள்ளனர். மேலும் சிலர் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் கூறியுள்ளது. இந்த விடயத்தில் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கபட வேண்டும். பாகுபாடு இன்றி சட்டத்தின் முன்னாள் தண்டிக்கபட வேண்டும். 

மேலும் இந்த விடயத்தில் பிரதமர் மீது குற்றம் சுமத்தி சில விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதனை மையப்படுத்தியே பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையின் பின்னணியில் அரசியல் சூழ்ச்சி உள்ளது. கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணையில் நேரடியாக பிரதமர் குற்றவாளி என எங்கேயும் கூறப்பட்டவில்லை. இப்போது ஏன் இந்த பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது? சுட்டிக்காட்டப்பட்ட விடயங்களில் என்ன கூற வருகின்றார்கள், மத்திய வங்கி பிணைமுறி குறித்த அறிக்கையில் பிரதமரினால் நியமிக்கப்பட்ட நபர் மூலமாக பிரதமர் ஏமாற்றப்பட்டுள்ளார். இதனையே பிரேரணையிலும் சுட்டிக்காட்டியுள்ளனர். எனினும் பிரதமருக்கு எதிராக எந்த நேரடி குற்றச்சாட்டும் இல்லாது பிரேரணையை எம்மால் ஏற்றுகொள்ள முடியாது. பிரதமருக்கு எதிராக நேரடியாக எந்த குற்றச்சாட்டுக்களும் சுட்டிக்காட்டபடவில்லை என்பதே எமது நிலைப்பாடாக உள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற ஊழல் குற்றங்களை கொண்டு இப்போது நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று கொண்டுவரப்படுகின்றது என்றால் இதன் பின்னணி பாரிய அரசியல் சூழ்ச்சியினை அடிப்படியாக கொண்டது என்பதேயாகும் என்ற சந்தேகம் உள்ளது. ஆகவே பிரதமருக்கு எதிராக கொண்டுவரும் நம்பிக்கையில்லா பிரேரணையை வெற்றிகொண்டு அதன் மூலமாக இந்த ஆட்சியினை வீழ்த்தி நாட்டின் நல்லிணக்கத்தை அழிக்கவே முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்ற சந்தேகும் எழுகின்றது. 

கடந்த ஜனாதிபதி தேர்தலில் இந்த நாட்டில் தேசிய பிரச்சினைகள் நீண்டகால அரசியல் நெருக்கடிகள் அனைத்திற்கும் தீர்வு பெற்றுத்தர வேண்டும் எனவும், சர்வாதிகார தன்மையில் பயணித்த ஆட்சியில் மாற்றங்களை ஏற்படுத்தி நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சிமுறைமை நீக்கப்பட வேண்டும் எனவும் கருதியே மக்கள் இந்த ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்தனர். இதில் புதிய அரசியல் அமைப்பு விவகாரம் மிகவும் முக்கியமானதாகும். இதற்கு முன்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில் புதிய அரசியல் அமைப்பு ஒன்றினை கொண்டுவந்து தீர்வு காண அப்போதைய ஆட்சியாளர்கள் முயற்சித்த போதும் அவை இடம்பெறவில்லை. இந்த ஆட்சியாளர்களும் அதே வாக்குறுதிகளை கொண்டுத்தே மக்கள் ஆதரவை பெற்று ஆட்சியமைதனர். இதற்கு எமது ஆதரவும் வழங்கப்பட்டது. அதேபோன்று தேசிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்படும் நிலையில் அது பாரிய சவால்களுக்கு முகம்கொடுக்கவும் வேண்டும். இந்த நாட்டில் சகல இன மக்களுக்கும் ஏற்ற வகையில் அபிவிருத்திகள் சென்றடைய வேண்டும். அனைத்து மக்களையும் இணைத்துக்கொண்டு நாடாக கட்டியெழுப்பப்பட வேண்டும். ஆனால் அந்த நகர்வுகளை முன்னெடுப்பதில் நெருக்கடிகள் உள்ளதாக ஜனாதிபதி பல்வேறு சந்தர்ப்பங்களில் கூறியுள்ளார். எனினும் கடந்த மூன்று ஆண்டுகளை போல் அல்லாது அடுத்த இரண்டு ஆண்டுகளில் மாற்றங்களை மக்கள் உணர முடியும். எஞ்சியுள்ள காலத்தில் மக்கள் மனங்களில் மாற்றங்கள் ஏற்படும் செயற்பாடுகள் அமையலாம். அவ்வாறு அமைவது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினருக்கு பிடிக்கவில்லை. 

  பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மூலம் பிரதமருக்கு வைக்கப்பட்டுள்ள இலக்கு நாளை ஜனாதிபதியை நோக்கி திரும்பலாம். பிரதமருடன் இது முடிந்துவிடாது, ஜனாதிபதியையும் இலக்கு வைக்கப்பட்டு இந்த ஆட்சியினை வீழ்த்தும் முயற்சிகளே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2015 ஆம் ஆண்டு இந்த ஆட்சிக்கு மக்கள் கொடுத்த ஆதரவை இவர்கள் எவரும் ஏற்றுகொள்ளவில்லை. எம்மை பயன்படுத்தி அதன் மூலமாக இந்த ஆட்சியினை வீழ்த்த எவரும் முயற்சித்தால் அதற்கு எம்மால் இடமளிக்க முடியாது. அதேபோல் நீண்டகால அரசியல் பிரச்சினைகள், தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்றால் அனைத்து தர்பபினரும் இணைந்து புதிய அரசியல் அமைப்பினை உருவாக்க வேண்டும். நாம் தீர்வுகளை பெற்றுக்கொள்ளும் பயணத்தில் சகல சிங்கள தரப்புடனும் இணைந்து செயற்பட தயார். ஒத்துழைப்புகளை வழங்கி ஆரோக்கியமான தீர்வுகளை பெற்றுக்கொள்ளத்தயார். இப்போது நல்ல வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளன. அதனை பயன்படுத்தி நாட்டினை சரியான பாதையில் கொண்டுசெல்ல வேண்டும் என அவர் குறிப்பிட்டார். 

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உரையாற்றுகையில் உரையாற்றுகையில் 

ஊழலுக்கு எதிராகப் போராடுவதற்கு இந்த அரசாங்கம் மக்கள் ஆணையைப் பெற்றுள்ளது. 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது மிகவும் முக்கியமாகப் பேசப்பட்ட விடயமாக ஊழல் மோசடி குறிப்பிடத்தக்கது. இதனாலேயே பொது வேட்பாளராகக் களமிறங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மக்கள் ஆதரவு வழங்கியிருந்தனர். பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் ஊழலை ஒழிப்பது உள்ளிட்ட மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு பொது வேட்பாளருக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்தன. அதன் பின்னர் நடைபெற்ற பொதுத் தேர்தலில் இரு பிரதான கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்கத் தீர்மானித்தன. எனினும், ஐ.ம.சு.முவின் சில உறுப்பினர்கள் எதிரணியில் இருப்பதற்குத் தீர்மானித்தனர். 

இவ்வாறு எதிரணியில் அமர்ந்துள்ள உறுப்பினர்கள் தமது கட்சியின் தலைவருக்கு மக்கள் வழங்கிய ஆணைக்கு எதிராக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவந்துள்ளனர். இது தேசிய அரசாங்கத்தை அழிக்கும் முதலாவது சூழ்ச்சியாகும். இரண்டாவது சபாநாயகர் இலக்குவைக்கப்படுவார். அதன் பின்னர் ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை கொண்டுவரப்படும். இதுவே அவர்களின் நோக்கமாகவுள்ளது. கண்டியில் இடம்பெற்ற சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கு தவறிவிட்டதாக நம்பிக்கையில்லா பிரேரணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு அமைச்சர் என்ற ரீதியில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்குப் பாதுகாக்க வழங்கத் தவறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சிங்களவர் மற்றும் தமிழர்களுக்கு பாதுகாப்பு எனக் கூறப்பட்டுள்ளது. அவர்கள் முஸ்லீம் மக்கள் பாதுகாக்கப்படவில்லை என்பதைக் குறிப்பிட்டுக் கூற விரும்பவில்லை என்பதாலேயே சிங்களவர்கள் மற்றும் தமிழர்களையும் குறிப்பிட்டுள்ளனர். நிச்சயமாக முஸ்லீம்கள் தாக்கப்பட்டுள்ளனர் என்பது தெளிவாக இருக்கும் நிலையில் இனரீதியான நோக்கத்துடன் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நாட்டின் ஜனநாயக உரிமையில் பங்கெடுப்பதற்கு தமிழ் மக்களுக்கு உரிமை இல்லையா? ஜனாதிபதி அப்படிக் கூறியிருக்கமாட்டார் என நம்புகின்றேன். இது வதந்தியாக இருக்கும்.

 

 நாட்டில் சகலரும் இணங்கக் கூடிய அரசியலமைப்பைத் தயாரிப்பதாக இந்த அரசாங்கம் மக்கள் ஆணையைப் பெற்றுள்ளது. மூன்று மாதததில் மூன்று அரசியலமைப்பு தயாரிக்கப்படும் என பிரதமர் கூட்டமைப்புடன் உறுதியளித்திருப்பதாக விமல் வீரவன்ச கூறியிருந்தார். அதில் என்ன பிரச்சினை உள்ளது. கட்சியில் உள்ள சலகரும் அரசியலமைப்பை உருவாக்க இணங்கியுள்ளனர். வழிநடத்தல் குழுவில் சகல கட்சிகளும் அங்கம் வகிக்கின்றன . புதிய அரசியலமைப்பு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறது. இந்தச் செயற்பாடுக் மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டம். இந்த நகர்வுகளில் தேவையற்ற இழுபறி காணப்படுகிறது. இந்த விடயத்தை அரசாங்கத்திடம் நாம் வலியுறுத்துகிறோம். நாம் தமிழ் மக்களைப் பிரதிநிதிப்படுத்துகின்றோம். பல்வேறு விடயங்கள் கடந்த மூன்று வருடங்களில் அதிருப்தியில் உள்ளன. இது எமது மக்களின் வாழ்க்கையை வெகுவாக பாதித்துள்ளது. ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்து ஏறத்தாள ஒன்பது வருடங்கள் ஆகியுள்ளன. எனினும் இன்றும் தீர்வுகள் கிடைக்கவில்லை. அவற்றை அரசாங்க உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.  
 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-04-05#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.