Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அடாத்தாக வீடுகளில் குடியிருப்போர் மீதான சட்ட நடவடிக்கைக்கான காலக்கெடு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அடாத்தாக வீடுகளில் குடியிருப்போர் மீதான சட்ட நடவடிக்கைக்கான காலக்கெடு.

சாதாரண சட்டத்தின்படி வாடகை செலுத்தாமல், அல்லது கோரப்படாமல், ஒரு வீட்டில் அல்லது ஆதனத்தில் குடியிருக்கும் ஒருவர், 10 ஆண்டுகளின் பின்னர் அந்த ஆதனத்தின் 'ஆட்சி உரித்து' மூலமான உரிமையாளர் ஆகின்றார். அதன் பின்னர் ஒரிஜினல் உரிமையாளர் உரிமை கோர முடியாது.

இலங்கையின் வடக்கு கிழக்கு யுத்தத்தின் காரணமாக, இந்த 10 ஆண்டுகள் காலப்பகுதி,  30 ஆண்டுகள் என விசேட வர்த்தமானி அறிவிப்பினை அரசு வெளியிட்டிருந்தது.

வடக்கு கிழக்கில், யுத்த காலத்தில் உங்கள் வீடுகளில் குடியிருந்தோரை எழுப்பி வீட்டினைப் மீள பெறும் சட்ட நடவடிக்கைக்கான காலக்கெடு இம்மாதம் 30ம் திகதி என அறிவிக்கப் பட்டுள்ளது என தெரிய வருகிறது.  அதாவது இந்த 30 வருட காலப்பகுதிக்கான சட்டநடவடிக்கைக்காக நீதிமன்றை அணுக வேண்டிய காலக்கெடு மாத கடைசி நாளாகும்.

இதன் பின்னர் சாதாரண 10 வருட விதி அமுலுக்கு வருகின்றது. இது தொடர்பான பத்திரிகை குறிப்புகள் கிடைக்காவிடினும், உங்கள் வழக்கறிஞர்களுடன் தொடர்ப்பு கொண்டு ஆவண செய்யுங்கள்.

மேலும் சில ஏமாத்து பேர்வழிகளிடம் கவனமாக இருங்கள். வன்னியில் ஒரு இடத்தில் குடும்பத்துடன்,  உரியவர்கள் ஒரிஜினல் உறுதியுடன்  வந்தால் இந்த பத்திரம் ரத்தாகும் என்ற நிபந்தனையுடன், தற்காலிக காணி அனுமதிப்பத்திரம் வழங்கப் பட்டு குடி அமர்த்தப் பட்டுள்ள பலர், அதே போல பல இடங்களில் சிறு கொட்டில்கள், போட்டு போலி உறுதிகள், தற்காலிக காணி அனுமதிப்பத்திரம் வைத்துக் கொண்டு, உரியவர்கள் வரும் போது அதைக் காட்டுவதும், கெஞ்சுவதும், பயமுறுத்துவதும் நடக்கின்றது.

அண்மையில் கிளிநொச்சியில் கொலை கூட நடந்து உள்ளது. அதாவது, வலு இல்லாதவர்கள் தொடர்ந்து தவிக்க, பலர் தகுதி இல்லாத நிலையிலும், திடடம் போட்டு ஏமாத்துகின்றனர். வேறு இடங்களில் நிலங்கள் கிடைத்தும் மேலும் ஆசையுடன், நிலம் இல்லாத ஏதிலிகள் என நடித்து ஏமாத்த முனைகின்றனர். 

சிறந்த முன்னேற்றப்பாடுகளுடன் செல்லுங்கள். உங்கள் காணிகளில் ஒரு பகுதியினை, அங்கே இருக்கிறார்கள், அகதிகள் தானே என கருதி கொடுக்க விரும்பின், தீவிர விசாரணை செய்து, அந்த நபர்களுக்கு வேறு இடங்களில் காணிகள் வழங்கப் பட வில்லை என அறிந்தே வழங்கவும்.

உதவி அரச அதிபர் அலுவலகமே இந்த விஷயத்தில் உதவும். நீங்கள் ஒருவருக்கு கொடுக்க விரும்பின் அரசு தடுக்க முடியாது, ஆனால் அவருக்கு வேறு இடங்களில் ஆதனம் கொடுக்கப் பட இல்லை என்பதை உறுதி செய்து கொடுங்கள், இருந்தால் வேறு ஒருவருக்கு கொடுங்கள் என்றால் அரசு உதவும்.

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.