Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆரம்பத்திலேயே சர்வதேசத்திடம் சரணடைந்திருக்கலாம்; மஹேஷ் சேனாநாயக்க

Featured Replies

ஆரம்பத்திலேயே சர்வதேசத்திடம் சரணடைந்திருக்கலாம்; மஹேஷ் சேனாநாயக்க

 

 

ஆரம்பத்திலேயே சர்வதேசத்திடம் சரணடைந்திருக்கலாம்; மஹேஷ் சேனாநாயக்க

போர்க் குற்ற விவகாரத்தில் ஒருசிலர் தனிப்பட்ட ரீதியில் கருத்துக்களை வெளியிட்டு செயற்பட்டதால் இலங்கை மீதான போர்க் குற்ற விவகாரத்தில் சர்வதேச ரீதியில் எரிகிற நெருப்புக்கு எண்ணெய் ஊற்றியதுபோலாகிவிட்டது என இராணுவத் தளபதி ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

இறுதிப்போரில் குற்றம் இழைத்திருக்காத போதிலும், போர் முடிந்த கையுடன் சர்வதேசத்திடம் சென்று சரணடைந்திருந்தால் சர்வதேசத்திடம் இருந்து வருகின்ற அறிவுறுத்தல்களை தவிர்த்திருக்கலாம் என்று தெரிவித்த அவர், சர்வதேச பொறிமுறையை விட, உள்நாட்டுப் பொறிமுறைக்கு அடிபணிவதே தனது கடமை என்றும் கூறினார்.

ஐ.நா அமைதிகாக்கும் படைப் பிரிவில் சேவையாற்றுவதற்காக இலங்கை படையினரில் குழுவொன்று அனுப்புவது பற்றி தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பிலுள்ள தேசிய பாதுகாப்பு தொடர்பான மத்திய நிலையத்தில் இன்று வியாழக்கிழமை முற்பகல் நடைபெற்றது.

இதில் இராணுவத் தளபதி ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க மற்றும் இராணுவத்திலுள்ள உயரதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டிருந்தனர்.

ஐ.நா அமைதிகாக்கும் படையில் இன்னும் அதிகமான ஸ்ரீலங்கா படையினர் ஈடுபடுத்த வேண்டிய தேவை காணப்படுவதாக நீங்கள் கூறினீர்கள். ஆனால் 2009ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போரில் 40 ஆயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டார்கள் என்று அதே ஐ.நாவினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக ஊடகவியலாளர்கள் வினா எழுப்பினர்.

அதேபோல 2011ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற முதலாவது பாதுகாப்பு மாநாட்டில் அப்படியொரு சம்பவம் ஸ்ரீலங்காவில் இடம்பெறவில்லை என்று அமெரிக்க உயர் பாதுகாப்பு அதிகாரியொருவர் தெரிவித்திருந்தார். கடந்த அரசாங்கம், தற்போதைய அரசாங்கம் மற்றும் ஸ்ரீலங்கா இராணுவம் நாட்டின் நிலைமை தொடர்பில் சரியான தகவலை அளிக்காத படியினால் இவ்வாறு பேசப்படுகிறது.

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் 2017ஆம் ஆண்டு ஒக்டோபரில் அந்நாட்டிலுள்ள ஸ்ரீலங்கா அதிகாரி, 40 ஆயிரம் பேர் படுகொலை செய்யப்படவில்லை. அதிகபட்சமாக 8000 பேர்தான் கொல்லப்பட்டார்கள். அவர்களில் நான்கில் ஒருபகுதி விடுதலைப் புலி உறுப்பினர்களாவர் என்றும் கூறியிருந்தார். ஏன் நாடு என்ற வகையிலும், இராணுவம் என்ற ரீதியிலும் சரியான தகவல்களை மக்களுக்குத் தெரியப்படுத்தாமல் மறைக்கிறீர்கள் என வினா தொடுத்தனர்.

இதற்கு பதிலளித்த ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க “முக்கியமான கேள்வி ஒன்றை கேட்டீர்கள். எனக்கு முன்னர் இருந்த இராணுவத் தளபதிகள் தங்களது கடமைகளை சரிவர செய்தார்கள். எவ்வாறாயினும் செயற்படுத்தப்படுகின்ற பொறிமுறைகளில் சில பிரச்சினை காணப்படுகிறது. யுத்த வெற்றியின் பின்னர் உள்ள நிலைமை அல்ல இன்று. கதையொன்று இருக்கிறது குற்றம் இழைத்துவிட்டால் கைது செய்யப்படுவதற்கு முன்னர் பொலிஸில் சரணடைந்தால் அமர்ந்திருக்கவாவது சந்தர்ப்பம் கிடைக்கும் என்று. கைது செய்யப்பட்டால் சிறைதான்.

அதனால் மிகவும் வேகமாக ஒரு கிரமத்திற்கு இதனை செய்திருந்தால் அறிவுறுத்தல்களில் இருந்து தப்பித்திருக்கலாம். எனினும் துரதிஷ்டவசமாக சிலரது தனிப்பட்ட காரணங்களுக்காகவும், காலத்திற்கு காலம் ஒருசில விடயங்களை கூறுகின்றனர். அதுவும் இந்த நெருப்புக்கு எண்ணெய் ஊற்றுவதுபோலாகும். தற்போது பணிப்பாளர் குழு அமைக்கப்பட்டு ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் நெருக்கமாக செயற்பட முயற்சிகள் இடம்பெறுவது நாங்கள் சரி என்ற காரணத்தினால்தான். பிழை செய்திருந்தால் நான்தான் முதலில் பின்வாங்க வேண்டும்.

எமது காட்சிப்படுத்தல் செயற்பாட்டில் பலவீனம் உள்ளது. இனிமேல் படைப்பிரிவில் ஸ்ரீலங்கா படையினரை சேர்ப்பதாயின் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும். இலங்கையின் பொறிமுறைக்கு அடிபணிவது எனது கடமையாகும். தனிப்பட்ட முறையில் நான் சர்வதேச பொறிமுறைக்கு எப்படி விருப்பம் தெரிவிப்பது? எமது பிரச்சினையை ஏன் நாங்கள் தீர்க்கக்கூடாது? என்றார்.

இதேவேளை சில இலங்கை இராணுவ உயர்மட்ட அதிகாரிகளுக்கு வெளிநாடு செல்ல விசா பெறுவதில் சிக்கல்நிலை உள்ளது. இன்னும் அந்த நிலை இருக்கிறது. எனவே அந்த தடையை நிவர்த்தி செய்ய வெளிவிவகார அமைச்சோ அல்லது தூதரகமோ சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. பிரித்தானிய நாடாளுமன்றத்தில் ஸ்ரீலங்காவுக்காக பேசப்பட்ட பேச்சுகூட ஜெனீவா சென்ற எமதுநாட்டு அதிகாரிகள் மேற்கோடிட்டு பேசவில்லை என சுட்டிக்காட்டி வினா எழுப்பினார்கள்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட இராணுவத் தளபதி ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க “ஸ்ரீலங்கா இராணுவம் என்ற அடிப்படையில் பாதுகாப்பு அமைச்சு, வெளிவிவகார அமைச்சு, தூதரகங்கள் மேற்கொள்ளும் பணிகள் தொடர்பாக விமர்சிக்க என்னால் முடியாது.

இருந்த போதிலும் ஒரே கதவில் அனைவரும் நுழைந்து வெளியே வரதான் முயற்சிக்கிறார்கள். ஆனால் நெருக்கடியிலிருந்து வெளியே வர பல ஜன்னல்கள் இருக்கின்றன. நான் முயற்சிப்பது அந்த ஜன்னலில் பிரவேசித்து வெளியே வரதான். வித்தியாசமான முறையில் அணுகவேண்டும் என்பதே எனது கருத்தாகும்” என்று தெரிவித்தார்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/Gen-mahesh-Senanayake-comment-on-international

உலகின் மிக மோசமான கொலைகாரக் கும்பல்களில் ஒன்றான சிங்கள-பௌத்த இராணுவப் பயங்கரவாதிகளை கதைக்கவிட்டால் இப்படித்தான் உண்மைகளை மறைக்க எதையாவது உளறிக்கொண்டிருப்பார்கள்.

சிங்கள-பௌத்த இராணுவப் பயங்கரவாதக் கொலைகார்களை விசாரிக்க அவர்களை இயக்கிய சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளின் எந்தவொரு பிரிவுக்கும் தார்மீக உரிமை இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.