Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முத­ல­மைச்சர் சி.வி.யின் அறி­விப்பும் சிந்­திக்­க­வேண்­டி­யதன் அவ­சி­யமும்

Featured Replies

முத­ல­மைச்சர் சி.வி.யின் அறி­விப்பும் சிந்­திக்­க­வேண்­டி­யதன் அவ­சி­யமும்

 

எதிர்­வரும் வட­மா­காண சபைத் தேர்­தலில் தனித்தோ, கூட்­டணி அமைத்தோ போட்­டி­யி­டு­வ­தற்­கான சமிக்­ஞையை வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் காண்­பித்­துள்ளார். புது­வ­ரு­டத்தை முன்­னிட்டு ஊட­க­வி­ய­லா­ளர்­களின் கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளித்­துள்ள முத­ல­மைச்சர் தனது இந்த முடிவு குறித்து சூச­க­மாக தெரி­யப்­ப­டுத்­தி­யுள்ளார்.

கடந்த வாரம் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பேச்­சா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ. சுமந்­திரன் வட­மா­காண சபைத் தேர்தல் தொடர்பில் யாழ்ப்­பா­ணத்தில் கருத்துத் தெரி­வித்­தி­ருந்தார். இதன்­போது, எதிர்­வரும் மாகா­ண­சபைத் தேர்­தலில் முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வ­ரனை கள­மி­றக்கும் உத்­தேசம் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பிடம் இல்லை என்று தெரி­வித்­தி­ருந்தார். சுமந்­தி­ரனின் இந்த கருத்துக் குறித்த கேள்­விக்கு பதி­ல­ளித்­துள்ள முத­ல­மைச்சர் தனது அர­சியல் பயணம் தொடரும் என்று கூறி­யி­ருக்­கின்றார்.

நான் அடுத்த தேர்­தலில் போட்­டி­யிட வேண்­டு­மென்று பெரு­வா­ரி­யான மக்கள் விரும்­பு­கின்­றனர். நான் செல்லும் இடங்­க­ளி­லெல்லாம் மக்­க­ளி­ட­மி­ருந்து இந்தக் கோரிக்கை முன்­வைக்­கப்­ப­டு­கின்­றது. எனது பயணம் தொட­ர­வேண்டும் என்­பதும் அவன் சித்­தமும் மக்கள் விருப்­பமும் போலுள்­ளது. இந்தப் பின்­ன­ணியில் மக்­களின் கருத்­துக்கும் முக்­கி­யத்­துவம் கொடுக்­க­வேண்­டி­யுள்­ளது. தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும் தமி­ழ­ரசுக் கட்­சி­யி­ட­மி­ருந்து எனக்கு அழைப்பு வரக்­கூ­டிய சாத்­தியம் இல்லை. எனவே, மக்கள் நன்மை கருதி கொள்கை ரீதி­யாக எம்­முடன் உடன்­படும் வேறு ஒரு கட்­சிக்­கூ­டாக தேர்­தலில் நிற்­கலாம். ஆனால், கடந்த கால அனு­ப­வங்­களின் அடிப்­ப­டை­யிலும் மூலோ­பாய ரீதி­யா­கவும் நடை­முறை அடிப்­ப­டை­யிலும் அவ்­வாறு நிற்­பதால் பல பிரச்­சி­னைகள், இடை­யூ­றுகள் ஏற்­பட வாய்ப்­புக்­க­ளுள்­ளன. புதிய கட்­சி­யொன்றை தொடங்­கு­மாறு பலரும் ஆலோ­சனை வழங்கி வரு­கின்­றனர். கொள்கை ரீதி­யாக உடன்­படும் அனை­வ­ரு­டனும் கூட்­டணி அமைத்து போட்­டி­யி­டலாம் என்றும் கூறு­கின்­றனர். ஆனால், இதற்­கு­ரிய காலம் கனிந்­து­விட்­டதோ என்­பதை நான் அறியேன் என்றும் முத­ல­மைச்சர் தனது பதிலில் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

சுமந்­தி­ரனின் கருத்து குறித்த தனது பதிலின் ஆரம்­பத்தில் என்மேல் இருக்கும் உருக்­கத்­தினால், பாசத்­தினால், பரி­வினால் என்னைக் கஷ்­டப்­ப­டுத்­தக்­கூ­டாது என்ற மனோ­நி­லையில் என் மாணவன் கார­ணங்­களை அடுக்­கி­யுள்ளான். அதன் முழு தாற்­ப­ரி­யத்­தையும் மக்கள் அறிந்­து­கொள்ள வேண்டும் என்றும் முத­ல­மைச்சர் தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

முத­ல­மைச்­சரின் இந்த பதி­லி­லி­ருந்து எதிர்­வரும் மாகா­ண­சபைத் தேர்­தலில் தனித்தோ அல்­லது கூட்­டா­கவோ போட்­டி­யி­டு­வ­தற்கு தான் தயார் என்ற விடயம் தெளி­வு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. ஆனால் தேர்­தலில் கள­மி­றங்­கு­வ­தற்கு மூன்று வழி­மு­றை­களை அவர் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார். அதில் முத­லா­வது தெரி­வான வேறு ஒரு கட்­சிக்­கூ­டாக தேர்­தலில் நிற்கும் செயற்­பாட்டை அவர் பெரி­தாக விரும்­ப­வில்லை என்­பது தெரி­கின்­றது. அடுத்­த­தாக புதிய கட்­சி­யொன்றை ஆரம்­பித்து கள­மி­றங்­கு­வது அல்­லது கொள்கை ரீதி­யாக உடன்­படும் அனை­வ­ரு­டனும் கூட்­டணி அமைத்து போட்­டி­யி­டு­வது என்ற விட­யங்­களில் அவர் விருப்பம் கொண்­டுள்­ள­தா­கவே புலப்­ப­டு­கின்­றது.

இவ்­வாறு அவர் தனிக்­கட்சி அமைத்தோ அல்­லது கொள்கை ரீதி­யாக கூட்­டணி அமைத்தோ போட்­டி­யி­டு­வா­ரானால் அது தேர்­தலில் பெரும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும். இந்த விட­யத்தில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் விட்­டுக்­கொ­டுப்பை மேற்­கொள்­ளாது ஏட்­டிக்குப் போட்­டி­யாக முத­ல­மைச்சர் வேட்­பா­ளரை நிறுத்­து­மானால் இரு­த­ரப்­புக்­கு­மி­டையில் கடும் போட்டி நிலை உரு­வாகும் சூழலும் ஏற்­ப­டக்­கூ­டிய வாய்ப்­புக்கள் உள்­ளன.

உண்­மை­யி­லேயே இவ்­வா­றான ஒரு நிலைமை ஏற்­ப­டு­வ­தற்கு காரணம் என்ன என்ற விட­யத்தை நாம் ஆரா­ய­வேண்­டி­யுள்­ளது. 2013ஆம் ஆண்டு வட­மா­காண சபைக்­கான தேர்தல் அறி­விக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் சார்பில் யாரை முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராக நிய­மிப்­பது என்ற கேள்வி எழுந்­தி­ருந்­தது. இந்­த ­நி­லையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் இந்த விடயம் குறித்து ஆராய்ந்தார். ஓய்­வு­பெற்ற உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ர­ச­ரான சி.வி. விக்­கி­னேஸ்­வ­ரனை முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராக நிய­மிக்­கலாம் என்று தீர்­மா­னித்­த­துடன் அவ­ரிடம் கூட்­ட­மைப்பின் தலைமை அணுகி தமது விருப்­பத்தை தெரி­வித்­தது.

அந்­த­வே­ளையில், முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கு­வ­தற்கு நீதி­ய­ரசர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் மறுப்புத் தெரி­வித்­தி­ருந்தார். ஆனாலும் கூட்­ட­மைப்பின் தலை­மையின் நெருக்­குதல் கார­ண­மாக அவர் போட்­டி­யி­டு­வ­தற்கு சம்­ம­தித்­த­துடன் கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும் கட்­சி­களின் தலை­வர்கள் நால்­வரும் ஒன்­றி­ணைந்து தம்மை அழைத்தால் மட்­டுமே தேர்­தலில் போட்­டி­யிடத் தயார் என்றும் அவர் அறி­வித்­தி­ருந்தார். இதற்­கி­ணங்க, கூட்­ட­மைப்பில் அப்­போது அங்கம் வகித்த நான்கு கட்சித் தலை­வர்­களும் அவ­ரது இல்­லத்­துக்குச் சென்று அழைப்பு விடுத்­த­தை­ய­டுத்தே அவர் தேர்­தலில் கள­மி­றங்­கினார்.

தேர்­தலில் ஒரு இலட்­சத்து 33 ஆயிரம் வாக்­கு­களைப் பெற்று வெற்­றி­பெற்று முத­ல­மைச்­ச­ரான விக்­கி­னேஸ்­வரன் ஆரம்­பத்தில் தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­மையின் நிலைப்­பாட்­டுக்கு ஏற்­பவே செய­லாற்றி வந்தார். இதனால், கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய மூன்று கட்­சி­களின் தலை­மை­களின் அதி­ருப்­திக்கும் உள்­ளானார். ஆனால், படிப்­ப­டி­யாக யதார்த்­தத்தை உணர்ந்த அவர் நடு­நிலைப் போக்­குடன் தனது செயற்­பா­டு­களை மாற்­றிக்­கொண்டார்.

இதனால் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­மைக்கும் முத­ல­மைச்­ச­ருக்­கு­மி­டையில் முறுகல் நிலைமை வளர்ந்து வந்­தது. முத­ல­மைச்சர் தன்­னிச்­சை­யாக செயற்­ப­டு­வ­தாக கூட்­ட­மைப்பின் தலைமை குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்து வந்­தது. இவ்­வா­றான நிலை­யில்தான் முத­ல­மைச்­சரின் இணைத்­த­லை­மையில் ‘தமிழ் மக்கள் பேரவை’ என்ற அமைப்பும் உரு­வாக்­கப்­பட்­டது. இனப்­பி­ரச்சினைக்­கான தீர்வு விட­யத்­திலும் தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்வு தொடர்­பிலும் கூட்­ட­மைப்பின் தலைமை உரிய அக்­கறை காட்­டா­மை­யினால் அந்த நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தற்­கா­கவே தமிழ் மக்கள் பேரவை ஆரம்­பிக்­கப்­பட்­ட­தா­கவும் விளக்­க­ம­ளிக்­கப்­பட்­டது.

இந்தப் பேர­வை­யா­னது இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு தொடர்­பி­லான தனது யோச­னை­யையும் புதிய அர­சியல் யாப்பு சபை­யிடம் சமர்ப்­பித்­தி­ருந்­தது. அத்­துடன் எழுக தமிழ் நிகழ்­வு­க­ளையும் நடத்­தி­யது. இந்தப் பின்­ன­ணியில் முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையும் கூட்­ட­மைப்பின் உறுப்­பி­னர்­களால் முன்­வைக்­கப்­பட்­டது. இந்த விவ­கா­ரத்­தை­ய­டுத்து முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வ­ர­னுக்கு ஆத­ர­வாக இளை­ஞர்கள் தலை­மையில் மக்கள் எழுச்சி ஏற்­பட்­டது. இந்த எழுச்­சி­யை­ய­டுத்து நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை கைவி­டப்­பட்­ட­போ­திலும் கூட்­ட­மைப்பின் தலை­மைக்கும் முத­ல­மைச்­ச­ருக்­கு­மி­டை­யி­லான முரண்­பா­டுகள் தொடர்ந்து வந்­தன.

இத்­த­கைய நிலை­யில்தான் அடுத்த மாகா­ண­சபைத் தேர்­தலில் முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராக விக்­கி­னேஸ்­வ­ரனை நிறுத்­து­வ­தில்லை என்று கூட்­ட­மைப்பின் பேச்­சாளர் சுமந்­திரன் கருத்துத் தெரி­வித்­தி­ருந்தார். இவ்­வி­டயம் தொடர்பில் திரு­கோ­ண­ம­லையில் கருத்துத் தெரி­வித்­துள்ள கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் முத­ல­மைச்சர் வேட்­பாளர் தொடர்பில் இன்­னமும் தீர்­மா­னிக்­க­வில்லை. இது­ தொ­டர்பில் தற்­போது கருத்­துக்­கூ­ற­மு­டி­யாது என்று தெரி­வித்­தி­ருந்தார்.

இந்­த­நி­லை­யில்தான் முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வ­ரனின் அறி­விப்பு வெளி­யி­டப்­பட்­டி­ருக்­கின்­றது. எதிர்­வரும் மாகா­ண­சபைத் தேர்­தலில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் தலை­மை­யி­லான அணி­யி­னரும் ஏட்­டிக்­குப்­போட்­டி­யான செயற்­பா­டு­களில் ஈடு­ப­டு­வ­தா­னது பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­களைப் பொறுத்­த­வரையில் நன்மை பயக்­குமா அல்­லது தீமையை ஏற்­ப­டுத்­துமா என்­பது குறித்து தற்­போது சிந்­திக்க வேண்­டி­யுள்­ளது.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பா­னது தற்­போது பிள­வ­டைந்­துள்­ளது. கூட்­ட­மைப்­பி­லி­ருந்து ஈ.பி.ஆர்.எல்.எவ். விலகியுள்ள நிலையில் மூன்று கட்சிகளே அதில் அங்கம் வகிக்கின்றன. முதலமைச்சர் விக்கினேஸ்வரன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது குறித்தும் கருத்து வெளியிட்டுள்ளார். எனவே, அவ்வாறான கூட்டணி அமைக்கப்­படு­மானால் கூட்டமைப்புக்குள் மேலும் பிளவுகள் ஏற்படவும் சாத்தியமுள்ளது.

எனவே, இத்தகைய முரண்பாடுகள் தொடர்வதற்கு கூட்டமைப்பின் தலைமையானது இனியும் அனுமதிக்கக்கூடாது. எதிர்கால திட்டங்கள் குறித்து முடிவுகள் எடுக்கும்போது அவசரப்படாது ஆறுதலாக நன்கு சிந்தித்து கூட்டமைப்பின் தலைமை செயற்படவேண்டும். கூட்டமைப்பிலுள்ள ஒவ்வொருவர் ஒவ்வொரு கருத்துக்களை தெரிவித்து வருவதே பிளவுகள் மேலும் அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு விடிவை ஏற்படுத்தும் வகையில் தமிழ் தலைமைகள் செயற்படவேண்டுமே யொழிய ஏட்டிக்குப்போட்டியான நிலைப்பாடுகளை மேற்கொள்வ­தனால் தமிழ் மக்களே பாதிக்கப்படப்போகின்றனர். எனவே, இந்த விடயம் குறித்து சிந்திக்க வேண்டியது அனைவரதும் கடமையாகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.