Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லாட்சி அரசை கவிழ்த்தே தீருவோம் : மே 8 இல் எதிர்க்கட்சியில் அமர்வோம் என்கிறது சு.க.வின் ரணில் எதிர்ப்பு குழு

Featured Replies

நல்லாட்சி அரசை கவிழ்த்தே தீருவோம் : மே 8 இல் எதிர்க்கட்சியில் அமர்வோம் என்கிறது சு.க.வின் ரணில் எதிர்ப்பு குழு

04-27050de97955d7c5a51c36f1d3e729e44d0bc92e.jpg

 

(ரொபட் அன்டனி)

தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்ப்பதே எமது நோக்கமாகும். அதற்காக நாம் முழுமுயற்சியுடன் செயற்படுவோம். அரசாங்கத்தின் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளை உள்ளிருந்து எதிர்த்த நாங்கள் தற்போது தைரியமாக வெளியே வந்து எதிர்க்க ஆரம்பித் திருக்கின்றோம் என்று சுதந்திரக்கட்சியின் ரணில் எதிர்ப்புக்குழுவின் முக்கியஸ்தரும் முன்னாள் அமைச்சருமான சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.

அரசாங்கத்திலிருந்து வெளியேறிய 16 சுதந்திரக்கட்சியின் முன்னாள் அமைச்சர்களும் எதிர்வரும் மே மாதம் 8ஆம்திகதி பாராளுமன்ற அமர்வின்போது எதிர்க்கட்சியில் அமர்வோம். அந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்றும் சந்திம வீரக்கொடி சுட்டிக்காட்டினார்.  

சிறிலங்கா சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே சந்திம வீரக்கொடி இந்தவிடயங்களை குறிப்பிட்டார்.

அரசாங்கத்திலிருந்து வெளியேறிய சுதந்திரக்கட்சியின் 16 பேரும் பாராளுமன்றத்தின் சுதந்திரக்கட்சி என்ற அடிப்படையில் எதிர்க்கட்சியில் அமர்வதற்கு தீர்மானித்துள்ளோம். அந்தத் தீர்மானத்தில் எந்த மாற்றமும் இல்லை. இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சுதந்திரக்கட்சியின் மத்தியக்குழுகூட்டம் செவ்வாய்க்கிழமை இரவு (நேற்று ) நடைபெற ஏற்பாடாகியுள்ளது. பெரும்பாலும் இதில் தீர்க்கமான ஒரு முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கின்றோம். நாம் ஒருபோதும மீண்டும் அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளமாட்டோம் மாறாக அரசாங்கத்திலிருந்து ஒருசிலர் எம்முடன் இணைந்துகொள்ளும் சாத்தியம் உள்ளது. எமது தீர்மானத்தில் எந்த மாற்றமும் இல்லை.

கேள்வி: நல்லாட்சி அரசாங்கம் நாட்டுக்கு ஒன்றையும் செய்யவில்லையாயின் ஏன் கடந்த மூன்று வருடங்களாக அரசாங்கத்தில் இருந்தீர்கள்?

பதில்: அரசாங்கம் ஒன்றும் செய்யவில்லை என்று சொல்ல முடியாது? அரசாங்கத்தில் நாட்டின் நீதித்துறை சுயாதீனமடைந்துள்ளது. நாம் பலநேரங்களில் அமைச்சரவையின் உள்ளே இருந்து போராடியிருக்கின்றோம். பல வெற்றிகளைப் பெற்றிருக்கின்றோம். ஆனால் முடியாத பட்சத்திலேயே அரசாங்கத்தை விட்டு வெளியேறினோம். தற்போது எந்த சிக்கலும் இன்றி மக்களின் பிரச்சினை குறித்து பேசுகிறோம்.

கேள்வி: எவ்வாறான அமைச்சரவை மாற்றம் இடம்பெறும்?

பதில்: நாங்கள் தற்போது அரசாங்கத்தில் இல்லை, எனவே அமைச்சரவை மாற்றம் குறித்து எமக்கு எதுவும் தெரியாது.

கேள்வி: எப்போது எதிர்க்கட்சியில் அமர்வீர்கள்?

பதில்: மே 8ஆம் திகதி எதிர்க்கட்சியில் அமர்வோம்.

கேள்வி: அன்றைய தினம் ஜனாதிபதி நடத்தவுள்ள அக்கிராசன உரையை எதிர்ப்பீர்களா?

பதில்: ஜனாதிபதி அக்கிராசன உரையை நிகழ்த்தமாட்டார். மாறாக விளக்க உரையை நிகழ்துவார். அதன்போது வாக்கெடுப்பு நடத்தப்பட மாட்டாது.

கேள்வி: அதன்போது அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சி இடம்பெற்றால் என்ன செய்வீர்கள்?

பதில்: இந்த அரசாங்கத்தை கவிழ்ப்பதே எமது பிரதான நோக்கம். அதற்காகவே வெளியே வந்திருக்கின்றோம். நிச்சயம் இந்த அரசாங்கத்தை கவிழ்த்தே தீருவோம்.

கேள்வி: உங்களது சுதந்திரக்கட்சியில் 23 பேர் அங்கம் வகிக்கின்ற அரசாங்கத்தை கவிழ்ப்பதாக கூறுவது எந்தளவு தூரம் சரியானது?

பதில்: அவசரப்படாமல் பொருத்திருந்து பாருங்கள்சுதந்திரக்கட்சியின் நான்கின் மூன்று பெரும்பான்மை உறுப்பினர்கள் தற்போது எதிரணியிலேயே உள்ளனர் எனவே எங்கள் பக்கமே பெரும்பான்மை பலம் உள்ளது. எனவே எங்களால் அரசாங்கத்தை கவிழ்க்க முடியும்.

கேள்வி: உங்களது தரப்பு 16 எம்.பிக்கள் பல இடங்களில் பிரிந்து கூட்டங்களை நடத்துவதாக தெரிவிக்கப்படுகின்றதே?

பதில்: பல்வேறு விடயங்கள் தொடர்பில் பல இடங்களில் ஆராய்கின்றோம். மாறாக முரண்பாடுகள் எதுவும் இல்லை.

கேள்வி: ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் சுதந்திரக்கட்சியின் செயலாளர் பதவிகளை உங்கள் தரப்பு கோருகின்றதா?

பதில்: தற்போதைக்கு செயலாளர் பதவிகளை கோரவில்லை. மாறாக மறுசீரமைப்பையே கோருகின்றோம்.

கேள்வி: உங்களால் அரசாங்கத்தில் எஞ்சியிருக்கின்ற 23 எம்.பி.க்களை வெளியே எடுக்க முடியாமல் இருக்கின்றது அல்லவா?

பதில்: என்ன நடக்கப்போகின்றது என்பதை பொறுத்திருந்து பாருங்கள்

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-04-25#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.