Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இராணுவத்தினரால் சேதமாக்கப்பட்ட கோவில்கள் புனரமைப்பு

Featured Replies

இராணுவத்தினரால் சேதமாக்கப்பட்ட கோவில்கள் புனரமைப்பு
 
 

-பைஷல் இஸ்மாயில்

யாழ். மாவட்டத்தில், 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர், குறிப்பாக கடந்த மூன்று வருடகாலப் பகுதியில், இராணுவத்தினரின் நடவடிக்கைகளால், பகுதி அளவிலோ அல்லது முழுமையாகவோ கோவில்கள் ஏதேனும் சேதமடைந்திருந்தால், அவற்றை இராணுவத்தின் முழுமையான செலவில் புனரமைத்துத் தருவதாக, யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.

மேலும், யாழ். மாவட்டத்தில், போதிய வசதியற்ற மற்றும் வருமானம் குறைந்த கோவில்களின் புனர்நிர்மாண வேலைதிட்டத்தின் கீழ், மணல் மற்றும் சீமெந்து உதவிகோரிய ஆலயங்களுக்கு, அடுத்த வாரம் முதல் அவற்றைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உதவி கோரிய கோவில்களின் தலைவர்கள், நிர்வாகச் சபை உறுப்பினர்களுக்கும் யாழ். கட்டளைத் தளபதிக்கும் இடையிலான சந்திப்பொன்று, யாழ். படைத் தலைமையகத்தில், நேற்று  (06) இடம்பெற்றது. இதன்போதே அவர், மேற்கண்டவாறு தெரிவித்தார்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/இராணுவத்தினரால்-சேதமாக்கப்பட்ட-கோவில்கள்-புனரமைப்பு/71-215575

  • தொடங்கியவர்

தென்பகுதி மக்கள்தான் யுத்தத்தை முன்னெடுத்தனர் எனும் சிந்தனை வட பகுதி மக்களிடம் உள்ளது :

thatshan-Hetiyachi.jpg?resize=800%2C444

தென்பகுதி மக்கள்தான் யுத்தத்தை முன்னெடுத்தனர் எனும் சிந்தனை வட பகுதி மக்களிடம் உள்ளது என இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி கூறியுள்ளார். வட பகுதி மக்களுக்கும், தென்பகுதி மக்களுக்கும் இடையிலான நல்லுறவு சிதைக்கப்பட்டதாகவும் 30 வருடங்களுக்கும் மேலாக இடம்பெற்ற யுத்தத்தில் வட பகுதி மக்கள் மாத்திரம் அன்றி தென்பகுதி மக்களும் பெரிதும் துன்பப்பட்டனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

நாட்டையும், மக்களையும் பாதுகாத்து அமைதியை நிலைநாட்ட பிரிவினைவாதத்துக்கு எதிராக இராணுவம் போராட நேர்ந்ததாக கூறிய அவர் அதற்காக தமிழ் மக்களை எதிரிகளாக ஒருபோதும் தென்பகுதி மக்களும் சரி, இராணுவமும் சரி எண்ணவே இல்லை எனவும் குறிப்பிட்டார்.

நல்லிணக்க வேலைத் திட்டங்களையே இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தலைமையகம் முன்னெடுத்து வருவதாகவும் இதனை தேர்தல் நோக்கத்துக்காகவோ, அரசியலுக்காகவோ செய்யவில்லை எனவும் அவர் தெரிவித்தா்ர.

யாழ். மாவட்ட கட்டளை தலைமையகத்தில் வைத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வறியவர்களுக்கு உதவி வழங்கும் நிகழ்வில் உதவிகளை வழங்கி வைத்து உரையாற்றியபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்

http://globaltamilnews.net/2018/78124/

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் வறியவர்களுக்கு உதவிவழங்குவதும் இராணுவம்தானா? இவங்க இப்போதைக்கு நம்ம இடத்தைவிட்டு கிளம்பமாட்டாங்க.

Edited by vanangaamudi

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நவீனன் said:

தென்பகுதி மக்கள்தான் யுத்தத்தை முன்னெடுத்தனர் எனும் சிந்தனை வட பகுதி மக்களிடம் உள்ளது :

 

நாட்டையும், மக்களையும் பாதுகாத்து அமைதியை நிலைநாட்ட பிரிவினைவாதத்துக்கு எதிராக இராணுவம் போராட நேர்ந்ததாக கூறிய அவர் அதற்காக தமிழ் மக்களை எதிரிகளாக ஒருபோதும் தென்பகுதி மக்களும் சரி, இராணுவமும் சரி எண்ணவே இல்லை எனவும் குறிப்பிட்டார்.

ஆமாம் அவர்சொல்வது மிகவும் சரியானதே. சிங்கள அரசுகளின் பிரதமர்களும், சனாதிபதிகளுமே தமிழ் மக்களை எதிரிகளாக எண்ணுகிறார்கள் என்பதற்கு ஆதாரங்கள் இதோ:-

மிகப்பிரபலமான வாசகமான "போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்" என்ற அறைகூவல் யெயவர்த்தனவால் விடுக்கப்பட்டது.

தமிழ் இன அழிப்பு 1983 யூலை மாதக் காலபகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சியே ஆட்சியில் இருந்தது. 2009-ஆம் ஆண்டு மே 18-ஆம் நாள் நடந்தேறிய இனப்படுகொலையின் போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே ஆட்சியில் இருந்தது, 
 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.