Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மைத்திரி முன்னெடுத்த இன்னொரு ஒப்பரேசன்

Featured Replies

மைத்திரி முன்னெடுத்த இன்னொரு ஒப்பரேசன்

15-601ef6b7968603cc917ba96c6a8ec64325b06ad6.jpg

 

சுப்த்ரா

 

“பௌதிக ரீதி­யாக பயங்­க­ர­வா­தி­களைத் தோற்­க­டித்த போதிலும், அவர்­களின் கொள்­கையைத் தோற்­க­டிக்க முடி­யாது போயுள்­ளது. கடந்த மூன்று ஆண்­டு­க­ளாக, சர்­வ­தேச ஒத்­து­ழைப்­புடன் அந்தக் கொள்­கையைத் தோற்­க­டிப்­ப­தற்கே முயன்று வந்தேன்“

கடந்த 8ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தின் இரண்­டா­வது கூட்­டத்­தொ­டரை ஆரம்­பித்து வைத்து, கொள்கை விளக்க உரை நிகழ்த்­திய போதே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இவ்­வாறு கூறி­யி­ருந்தார்.

இதற்கு முன்­னரும், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உள்­ளிட்ட பலரும், போரில் விடு­தலைப் புலி­களைத் தோற்­க­டித்த போதிலும், அவர்­களின் சித்­தாந்­தத்தை தோற்­க­டிக்க முடி­ய­வில்லை என்று ஒப்­புதல் வாக்­கு­மூலம் கொடுத்­தி­ருந்­தனர்.

புலி­களை இரா­ணுவ ரீதி­யாகத் தோற்­க­டித்­த­தாக பெருமை கொள்ளும் மஹிந்த ராஜபக் ஷவும் கூட, புலி­களின் கொள்கை தோற்­க­டிக்­கப்­பட்டு விட்­டது என்று கூறத் தயா­ராக இல்லை. அது இன்­னொரு அர­சியல்.

ஆனாலும், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அர­சாங்­கத்தின் கொள்கை விளக்க அறிக்­கையில் கூறி­யுள்ள கருத்­துக்கள் ஆழ­மா­னவை, மாத்­தி­ர­மன்றி, அறி­யப்­பட வேண்­டிய விட­யங்கள் பல­வற்­றையும் உள்­ள­டக்­கி­யவை என்றே தோன்­று­கி­றது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தனது உரையில் புலி­களின் கொள்­கையைத் தோற்­க­டிக்க முடி­ய­வில்லை என்று குறிப்­பிட்­டதை விட முக்­கி­ய­மான விடயம், கடந்த மூன்று ஆண்­டு­களில் புலி­களின், கொள்­கையைத் தோற்­க­டிப்­ப­தற்கு மேற்­கொள்­ளப்­பட்ட முயற்சி பற்­றி­ய­தே­யாகும்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தனது உரையில், விடு­தலைப் புலிகள் என்றோ விடு­தலைப் புலி­களின் கொள்கை என்றோ கூற­வில்லை. பயங்­க­ர­வா­திகள் என்ற பதத்­தையே பயன்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார்.

இது, மஹிந்த ராஜபக் ஷவின் காலத்து அணு­கு­முறை. மஹிந்த ராஜபக் ஷ தான் பயங்­க­ர­வா­தத்­துக்கு எதி­ரான போர் என்று தமிழ்­மக்­க­ளுக்கு எதி­ரான- விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான போரை நடத்­தி­யவர்.

அந்த அர­சாங்­கத்தின் முக்­கிய அமைச்­ச­ராக, போரின் இறு­திக்­கட்­டத்தில் முக்­கி­ய­மான பல தரு­ணங்­களில் பதில் பாது­காப்பு அமைச்­ச­ராக இருந்­தவர் என்ற வகையில், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் பயங்­க­ர­வா­தத்­தையே பற்றிப் பிடித்­தி­ருக்­கிறார்.

ஆனால், மைத்­தி­ரி­பால சிறி­சேன கூறும் பயங்­க­ர­வாதம் என்­பது புலி­களின் ஆயுதப் போராட்ட வழி­மு­றையைத் தான். ஆனால் ஆயுதப் போராட்­டத்தை நடத்­து­வது தான் புலி­களின் கொள்­கையோ சித்­தாந்­தமோ அல்ல.

ஓர் இலக்கை அடை­வ­தற்­காக தெரிவு செய்­யப்­பட்ட வழி தான் ஆயுதப் போராட்டம். அர­சாங்­கத்தின் பார்­வையில், அது பயங்­க­ர­வா­த­மாக இருந்­தாலும், தமிழ் மக்­களின் பார்­வையில் அது பயங்­க­ர­வா­த­மாக தெரி­ய­வில்லை.

அதனால் தான், போர் முடிந்து ஒன்­பது ஆண்­டு­க­ளுக்குப் பின்­னரும், புலி­களின் கொள்­கையைத் தோற்­க­டிக்க முடி­ய­வில்லை என்று ஜனா­தி­ப­தியே புலம்­பு­கின்ற நிலைக்குக் காரணம். (5ஆம் பக்கம் பார்க்க)

புலி­களின் கொள்கை ஏன் தோற்­க­டிக்க முடி­யாமல் போயுள்­ளது என்­ப­தையும் பார்க்க வேண்டும். புலி­களின் கொள்கை என்­பது அர­சாங்கம் சொல்லும் ஒரு பயங்­க­ர­வாத அமைப்­பி­னது கொள்கை அல்ல.  தமிழ் மக்­களால், ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட ஓர் இலட்­சி­யத்தை நோக்­கிய பய­ண­மா­கவே அந்தக் கொள்கை அமைந்­தி­ருந்­தது. அமைதி வழியில், அர­சியல் வழி­மு­றை­களின் ஊடாக, தமிழ் மக்கள் தமக்­கான நியா­ய­மான நீதி­யான தீர்வு கிடைக்­காத போது, தான், தனி­நாடு என்ற கொள்­கையைத் தெரிவு செய்­தார்கள். அதுவே நிரந்­த­ர­மான- நிம்­ம­தி­யான வாழ்வைத் தரும் என்று நம்­பி­னார்கள்.  அதனை அர­சியல் வழி­மு­றையின் ஊடாக அடைய முடி­யாது என்­பதால் தான், ஆயுத வழி­மு­றையைத் தெரிவு செய்­தார்கள். ஆயுத வழிப் போராட்டம் முள்­ளி­வாய்க்­காலில் தோற்­க­டிக்­கப்­பட்­டாலும், தமி­ழர்கள் தமக்­கான நிம்­ம­தியைத் தரக்­கூ­டிய தீர்வு என்று கருதும் கொள்­கையை இன்­னமும் முழு­மை­யாகக் கைவி­ட­வில்லை. 

அத்­த­கைய கொள்­கையை – இலட்­சி­யத்தை அடை­வது சாத்­தி­யமா என்ற சந்­தே­கங்கள் இருந்­தாலும், அந்தக் கொள்கை இன்­னமும் உயிர்ப்­புடன் தான் இருக்­கி­றது என்­பதை, சிங்­களத் தலை­வர்­களே கூறு­கி­றார்கள்.

ஏனென்றால், அந்தக் கொள்கை உரு­வா­ன­தற்­கான கார­ணங்­க­ளுக்கு இன்­னமும் தீர்வு காணப்­ப­ட­வில்லை. தமிழ் மக்­களின் உரி­மைகள் பறிக்­கப்­பட்டு, அர­சியல் அதி­கா­ரங்கள் அற்­ற­வர்­க­ளாக வாழ நிர்ப்­பந்­திக்­கப்­பட்ட போது தான், தனி­நாட்­டுக்­கான கொள்கை உரு­வா­னது.

இன்­னமும் கூட தமி­ழர்கள் நாட்டின் இரண்­டாந்­தரக் குடி­மக்­க­ளாக பார்க்­கப்­ப­டு­கின்ற நிலை மாற­வில்லை. வந்­தேறு குடி­க­ளாக வர்­ணிக்­கப்­ப­டு­கின்­றனர். தமி­ழர்­களின் பாரம்­ப­ரிய நிலங்கள் பறிக்­கப்­பட்டு, தாயகப் பிர­தே­சங்­க­ளி­லேயே சிறு­பான்­மை­யி­ன­ராக்­கப்­ப­டு­கின்­றனர்.

அர­சியல் அதி­கா­ரங்கள் ஏது­மற்­ற­வர்­க­ளாக வாழ நிர்ப்­பந்­திக்­கப்­படும் நிலை இன்­னமும் தொடர்­கின்ற சூழ்­நி­லையில், எப்­படி தனி­நாட்­டுக்­கான கோரிக்கை பல­வீ­ன­ம­டையும் என்று எதிர்­பார்க்க முடியும்.?

ஒரு கொள்­கையைத் தோற்­க­டிக்க வேண்­டு­மாயின், அதன் வழி­யி­லேயே செல்ல வேண்டும். அந்தக் கொள்கை உரு­வாக கார­ண­மான பிரச்­சி­னை­களைத் தேடித் திரிந்து தீர்க்க வேண்டும். ஆனால் அர­சாங்கம் வெறு­மனே ஆயுதப் போராட்ட வழி­மு­றையை மாத்­திரம் தோற்­க­டித்து விட்டு, அதன் மூலம் தனி­நாட்டுக் கொள்­கையைத் தோற்­க­டிக்­கலாம் என்று நம்­பி­யது.

அந்த நம்­பிக்கை தான் இன்­னமும் புலி­களின் கொள்கை உயிர்ப்­புடன் இருப்­ப­தற்குக் காரணம்.

தமிழ் மக்­களின் அபி­லா­சை­களை நிறை­வேற்றக் கூடிய ஒரு நியா­ய­மான அர­சியல் தீர்வை வழங்­கு­வதன் மூலம் மாத்­தி­ரமே, புலி­களின் கொள்­கையின் உயிர்ப்­புக்கு சவால் விடுக்க முடியும்.

ஆனால் முன்­னைய அர­சாங்கம் மாத்­தி­ர­மன்றி, இப்­போ­தைய அர­சாங்­கமும் அதனைச் செய்யத் தவ­றி­யி­ருக்­கின்­றது

மஹிந்த ராஜபக் ஷ தமி­ழர்­க­ளுக்­கான அர­சியல் தீர்வைப் பற்றி கவ­லைப்­பட்­ட­வ­ரில்லை. ஆனால் தற்­போ­தைய அர­சாங்கம் தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு நியா­ய­மான தீர்வைப் பெற்றுத் தரு­வ­தாக வாக்­கு­றுதி அளித்தே ஆட்­சியில் அமர்ந்­தது.

இந்த அர­சாங்கம், தனது ஆட்­சிக்­கா­லத்­திலும், அர­சியல் தீர்வு ஒன்றை எட்­டு­வ­தற்­கான எந்த முயற்­சி­க­ளையும் முன்­னெ­டுத்­தி­ருக்­க­வில்லை. வெறும் ஒப்­புக்­காக அர­சி­ய­ல­மைப்பு மாற்றம், அர­சியல் தீர்வு, அதி­காரப் பகிர்வு என்­றெல்லாம் பேசி­யதே தவிர, அவை யாவும் ஏட்டுச் சுரைக்­கா­யா­கவே இருக்­கின்­றன.

இது தவிர, இப்­போ­தைய அர­சாங்­கமும் கூட தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வை வழங்­கு­வ­தற்­காக பணி­யாற்­று­வதை விட, புலி­களின் கொள்­கையைத் தோற்­க­டிக்கும் சிந்­த­னை­யி­லேயே காலத்தைக் கடத்தி வந்­தி­ருக்­கி­றது என்ற உண்மை, ஜனா­தி­ப­தியின் உரையில் இருந்து உறு­தி­யா­கி­யி­ருக்­கி­றது.

ஜனா­தி­பதி தனது உரையில்- அதா­வது அர­சாங்­கத்தின் கொள்கை விளக்க உரையில் கூறி­யி­ருந்த விடயம் இது. எனவே, ஜனா­தி­பதி வேறு, அர­சாங்கம் வேறு என்ற வேறு­பா­டில்­லாமல், புலி­களின் கொள்­கையை தோற்­க­டிப்­ப­தற்­கான முயற்சி கடந்த மூன்று ஆண்­டு­களில் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

அதுவும், சர்­வ­தேச நாடு­களின் துணை­யுடன் இந்த முயற்­சி­களை மேற்­கொண்டும் அது முடி­யாமல் போயி­ருக்­கி­றது என்ற உண்­மையை ஒப்­புக்­கொண்­டி­ருக்­கிறார் ஜனா­தி­பதி.

மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்­கத்தின் வழி­யி­லேயே இந்த அர­சாங்­கமும் பய­ணித்துக் கொண்­டி­ருக்­கி­றது என்ற உண்மை இதன்­மூலம் புல­னா­கி­றது.

மஹிந்த ராஜபக் ஷ போரில் தான் வெற்றி பெற்றார் . தமிழ் மக்­களின் இத­யங்­களை வெற்­றி­பெறத் தவறி விட்டார் என்று கூறிய பலரும் அங்கம் வகிக்­கின்ற அர­சாங்கம் தான், தோல்­வி­யுற்ற மஹிந்­தவின் வழி­யிலே தானும் சென்று பார்த்­தி­ருக்­கி­றது,

அதுவும் சர்­வ­தேச ஆத­ர­வுடன் விடு­தலைப் புலி­களை எவ்­வாறு மஹிந்த அர­சாங்கம் தோற்­க­டித்­ததோ, அது­போ­லவே சர்­வ­தேச ஆத­ர­வுடன் புலி­களின் கொள்­கையைத் தோற்­க­டிக்க இந்த அர­சாங்­கமும் முயன்று பார்த்­தி­ருக்­கி­றது.

விடு­தலைப் புலி­களின் அச்­சு­றுத்தல் உள்­நாட்டில் இருக்­காத போது, அவர்­களின் கொள்­கையை பல­வீ­னப்­ப­டுத்­தவோ அழிக்­கவோ அர­சாங்கம் ஏன் வெளி­நா­டு­களின் உத­வி­யுடன் முயற்­சிக்க வேண்டும்? அதற்­கான எந்த தேவையும் இல்­லையே?

ஆனாலும் அர­சாங்கம் அத்­த­கைய முயற்­சியில் இறங்­கி­யி­ருக்­கி­றது. காரணம், புலி­களின் கொள்கை முழு­மை­யாகத் தோற்­க­டிக்­கப்­பட்டு விட்டால், அது பல­வீ­னப்­ப­டுத்­தப்­பட்டு விட்டால், உள்­நாட்டில் தமி­ழர்­களின் நிலை பல­வீ­ன­ம­டையும்.

நியா­ய­மான அர­சியல் தீர்வு ஒன்­றுக்குச் செல்லத் தேவை­யற்ற நிலை காணப்­படும். தமி­ழர்­களின் உரிமைக் கோரிக்­கையைப் பல­வீ­னப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே அரசாங்கம் இன்னமும் புலிகளின் கொள்கையைத் தோற்கடிக்க முனைகிறது.

உள்நாட்டில் வாழுகின்ற தமிழ் மக்களுக்கான நியாயமான உரிமைகளையும் அரசியல் தீர்வையும் வழங்குவதற்கு அரசாங்கத்துக்கு ஈடுபாடு இல்லாத காரணத்தினால் தான், புலிகளின் கொள்கையைத் தேடிச் சென்று கொண்டிருக்கிறது. இதற்கு வெளிநாடுகளின் உதவிகள் வேறு.

மூன்று ஆண்டுகளை இப்படி வீணடித்த பின்னராவது, அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நியாயமான தீர்வை எட்டுகின்ற முயற்சியில் இறங்கியிருக்க வேண்டும்.

புலிகளின் கொள்கையைத் தோற்கடிப்பதற்கான தனது மூன்றாண்டு கால முயற்சி தோல்வியில் முடிந்திருக்கிறது என்பதை ஜனாதிபதி நேர்மையாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.

அதே நேர்மையை தமிழ் மக்களுக்கான நியாயமான அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதிலும் அவர் சிரத்தையைக் காண்பித்தால், புலிகளின் கொள்கையைப் பலவீனப்படுத்துவதற்காக அவர் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்க வேண்டிய நிலை ஏற்படாது. 

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-05-13#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.