Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரிட்டன் ரக்பி அணி வீரர் இலங்கையில் மர்ம மரணம்

Featured Replies

பிரிட்டன் ரக்பி அணி வீரர் இலங்கையில் மர்ம மரணம்

நட்பு ரீதியான ரக்பி போட்டிகளில் விளையாட இலங்கை வந்த பிரித்தானியாவின் 'Clems Pirates Rugby' அணியின் வீரர் ஒருவர் இலங்கையில் உயிரிழந்தார். அதே அணியைச் சேர்ந்த இன்னுமொரு வீரர் சுகவீனமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பிரித்தானியா அணிபடத்தின் 

 

இலங்கை வந்த பிரித்தானியாவின் 'Clems Pirates Rugby' அணி

கடந்த சனிக்கிழமை கொழும்பு CR & FC அணியுடன் நடந்த போட்டியின் பின்னர், அன்றிரவு இந்த வீரர்கள் வெளியே சென்றுள்ளனர். ஞாயிறு அதிகாலை இவர்கள் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு திரும்பியுள்ளனர்.

ஞாயிறு காலை 10 மணியளவில் இரண்டு வீரர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. உடனடியாக இவர்கள் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். இதில் ஒருவர் ஞாயிறு (மே 13) நண்பகல் 12 மணியளவில் உயிரிழந்ததாக பொலிசார் இன்று தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட அடுத்த வீரருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ரக்பி வீரர் உயிரிழந்தமை குறித்து கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தைத் தொடர்புகொண்டு கேட்டபோது, உயிரிழந்த மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் வீரர்களின் குடும்பத்தாருடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளதாக உயர்ஸ்தானிகராலயப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். அத்துடன், சுகாதார சேவைப் பிரிவினருடனும் இதுகுறித்து தகவல்களைப் பரிமாறி வருவதாகவும் கூறினார்.

பிரித்தானியாவின் 'Clems Pirates Rugby' அணியினர், நட்பு ரீதியான ரக்பி போட்டிகள் இரண்டில் விளையாட, கடந்த மே மாதம் 9ஆம் திகதி இலங்கைக்கு வந்தனர். மே மாதம் 11ஆம் திகதி கொழும்பு 'CR & FC' அணியுடன் முதல் போட்டியில் விளையாடியது. இரண்டாவது போட்டி மே 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கடற்படை அணியுடன் வெலிசர என்ற மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ரக்பி வீரரின் மரணத்தின் பின்னர், இலங்கை ரக்பி சங்க அதிகாரியொருவரைத் தொடர்புகொண்டு இதுகுறித்து கேட்டோம். எனினும், கொழும்பு 'CR & FC' அணியுடனான போட்டியில் குறிப்பிடும் அளவிற்கு எந்தவொரு நிகழ்வும் பதிவாகவில்லை என அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-44111351

  • தொடங்கியவர்

பிரித்­தா­னிய றக்பி வீரர் கொழும்பில் மரணம்

 

மற்­றொ­ருவர் அவ­சர சிகிச்சைப் பிரிவில் 

(எம்.எப்.எம்.பஸீர்)

 பிர­பல கழகம் ஒன்று ஏற்­பாடு செய்த சிநே­க­பூர்வ றக்பி போட்­டித்­தொடர் ஒன்றில் பங்­கேற்க இலங்கை வந்­துள்ள பிரித்­தா­னி­யாவின் றக்பி அணி­யொன்றில் அங்கம் வகிக்கும் இரு இளம் வீரர்­க­ளுக்கு ஏற்­பட்ட மூச்­சுத்­தி­ணறல் கார­ண­மாக ஒருவர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் மற்­றொ­ருவர் கொழும்பு பிர­பல தனியார் மருத்­துவமனை­யொன்றில் அவ­சர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரு­கிறார்.

இச்­சம்­பவம் நேற்று முன் தினம் இடம்­பெற்­றுள்­ள­தா­கவும் சம்­ப­வத்தில் 26 வய­தான ஹவார்ட் தோமஸ் அன்றூ எனும் இளம் வீரரே உயி­ரி­ழந்­துள்­ள­தா­கவும் 27 வய­தான பெட் தோமஸ் ரீட் சிகிச்சைப் பெற்று வரு­வ­தா­கவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.  

இந்த சம்­பவம் குறித்து கோட்டை பொலிஸார் தீவிர விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­தா­கவும் மர­ண­ம­டைந்த றக்பி வீரரின் உற­வி­னர்கள் பிரித்­தா­னி­யாவில் இருந்து இலங்கை வந்­ததும் பிரேத பரி­சோ­த­னைகள் நடாத்­தப்­ப­ட­வுள்­ள­தா­கவும் அதன் பின்­னரே மர­ணத்­துக்­கான உறு­தி­யான கர­ணத்தை கண்­ட­ரிய முடியும் எனவும் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர சுட்­டிக்­க­ட­டினார்.

இந்த சம்­பவம் தொடர்பில் மேலும் அறி­ய­மு­டி­வ­தா­வது,

கடந்த 10 ஆம் திகதி பிரித்­தா­னி­யா­வி­லி­ருந்து றக்பி அணி ஒன்று அதன் முகா­மை­யாளர் உள்­ளிட்ட 22 பேருடன் இலங்­கைக்கு வந்­துள்­ளது. பிர­பல கழகம் ஒன்று ஏற்­பாடு செய்த சினேக பூர்வ போட்­டி­யொன்றில் பங்­கேற்­கவே அந்த அனி இலங்கை வந்­துள்­ளது. இவ்­வாறு இலங்கை வந்­துள்ள குறித்த றக்பி அணி­யினர் கொழும்பின் பிர­பல ஹோட்டல் ஒன்றில் தங்­கி­யி­ருந்­துள்­ளனர்.

கடந்த 12 ஆம் திகதி டி.ஆர். என்ட் எப்.சி. மைதா­னத்தில் குறித்த சினே­க­பூர்வ போட்டி இடம்­பெற்­றுள்­ளது. அதில் பங்­கேற்ற அந்த அணி­யினர், குறித்த மைதான கட்­டிடத் தொகு­தியில் அன்­றைய தினம் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­துள்ள இரவு நேர விருந்­திலும் கலந்­து­கொண்­டுள்­ளனர்.

பின்னர் அவர்கள் அங்­கி­ருந்து தாம் தங்­கி­யி­ருந்த நட்­சத்­திர ஹோட்­ட­லுக்கு சென்­றுள்­ளனர். அன்­றைய தினம் இரவு 10.45 மனி­ய­ளவில் அந்த றக்பி அணி­யினர், ஹோட்­டலில் இருந்து வெளி­யேறி கொள்­ளு­பிட்டி பகு­தியில் உள்ள இரவு நேர களி­யாட்ட விடுதி ஒன்­றுக்கு சென்­றுள்­ளனர். அந்த களி­யாட்ட விடு­தியில் அவர்கள் களி­யாட்ட நிக்ழ்­வு­களில் ஈடு­பட்­டுள்ள நிலையில், அவ்­வ­ணியின் பல வீரர்கள் சிறு சிறு குழுக்­க­ளாக தங்­கி­யி­ருக்கும் ஹோட்­ட­லுக்கு திரும்­பி­யுள்­ளனர்.

இந் நிலை­யி­லேயே மறுநாள் அதா­வது 13 ஆம் திகதி அதி­காலை 4.00 மணிக்கு 26 வய­தான ஹவார்ட் தோமஸ் அன்றூ , 27 வய­தான பெட் தோமஸ் ரீட் ஆகியோர் ஹோட்­ட­லுக்கு திரும்­பி­யுள்­ளனர். அவர்கள் ஹோட்­ட­லுக்கு திரும்பி உறங்­கிக்­கொண்­டி­ருக்­கையில் முற்­பகல் 10.00 மணி­ய­ளவில் அவ்­வி­ரு­வ­ருக்கும் மூச்சுத் திணறல் ஏற்­பட்­டுள்­ளது. இத­னை­ய­டுத்து ஹோட்டல் முகா­மைத்­து­வத்­தி­னரால் அவ்­வி­ரு­வரும் கொழும்பின் பிர­பல தனியார் வைத்­தி­ய­சாலை ஒன்றில் சேர்க்­கப்­பட்ட நிலையில் நண்­பகல் 12.00 மணி­யாகும் போது 26 வய­தான ஹவார்ட் தோமஸ் அன்றூ எனும் இளம் வீரர் உயி­ரி­ழந்­துள்ளார்.

 உயி­ரி­ழந்த வீரரின் சடலம் தற்­போது கொழும்பு தேசிய வைத்­தி­ய­சாலை பொலிஸ் சவச்­சா­லையில் வைக்­கப்­பட்­டுள்­ளது.

 இந்த விடயம் தொடர்பில் கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்­தி­நா­யக்க, கொழும்பு மத்தி சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் பாலித்த பனாமல் தெனி­யவின் ஆலோ­ச­னைக்கு அமைய கோட்டை பொலிஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தனர்.

 இது­வரை இடம்­பெற்ற விசா­ர­ணைகள் மற்றும் பதிவு செய்­யப்­பட்ட வாக்கு மூலங்­க­ளுக்கு அமைய களி­யாட்ட விடு­தியில் மது, போதைப் பொருள் பாவனை இடம்­பெற்­றுள்­ளமை தெரி­ய­வந்­துள்­ள­துடன் இதன்­போது இவ்­வி­ரு­வரும் பயன்­ப­டுத்­திய மது, போதைப் பொருள் அள­வுக்­க­தி­க­மா­னதால் இவ்­வி­ளைவு ஏற்­பட்­டி­ருக்­கலாம் என பொலிஸார் சந்­தே­கிக்­கின்­றனர்.

 எனினும் பிரேத பரி­சோ­தனை நிறைவுறும் வரை எதனையும் உறுதியாக கூற முடியாது என பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

 வட அயர்லாந்தில் உள்ள குறித்த மரணமடைந்த வீரரின் உறவினர்கள் எதிர்வரும் 6 நாட்களில் இலங்கை வரவுள்ள நிலையில் அதன் பின்னர் பிரேத பரிசோதனைகள் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொலிஸ் விசாரணைகள் தொடர்கின்றன.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-05-15#page-1

  • தொடங்கியவர்

மற்றைய ரக்பி வீரரும் உயிரிழந்தார் !

கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மற்றைய ரக்பி வீரரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

rugby.jpg

மூச்சுத் திணறல் காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இரு பிரித்தானிய ரக்பி வீரர்களுள் ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்தார்.

இந் நிலையில் தொடர்ந்தும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மற்றைய ரக்பி வீரரும் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். 

இவ்வாறு உயிரிழந்தவர் 27 வயதுடையவர் என தெரியவருகின்றது.

குறித்த இரு பிரித்தானிய ரக்பி வீரர்களும் இலங்கையில் இடம்பெறும் போட்டியை முன்னிட்டு கொழும்பு ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/33478

  • கருத்துக்கள உறவுகள்

எனது நண்பன் பொலீஸில் உயர்பதவியில்..

அவரது தனிப்பட்ட தகவல் படி....  

Drug, Booze and Girls?  என பதிவிட்டேன்

உத்தியோகபூர்வ தகவல் அல்லாததால் மூலம தரமுடியவில்லை.

அதை கத்திக்காரர்கள், கத்தரித்து விட்டார்கள்.

இப்போது இதோ உத்தியோகபூர்வ தகவல் வந்தள்ளது. 

http://www.dailymirror.lk/article/Deaths-of-two-British-rugby-players-Police-probe-drug-use-150026.html

  • தொடங்கியவர்

பிரிட்டன் ரக்பி வீரர்களின் மர்ம மரணம் தொடர்பில் முச்சக்கரவண்டி சாரதிகளிடம் விசாரணை

 

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்ட இரு பிரிட்டனின் ரக்பி வீரர்களின் மர்மமரணம் குறித்து முக்சக்கரவண்டி சாரதிகள் சிலரை விசாரணை செய்து வருவதாக இலங்கையின் குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

British-rugby-player.jpg

கொழும்பின் இரவு விடுதியொன்றிற்கு சென்ற பின்னர் ரக்பி வீரர்கள் மரணமடைந்தது குறித்தே குற்றப்புலனாய்வு பிரிவினர்  முச்சக்கர வண்டி சாரதிகள் சிலரை விசாரணை செய்கின்றனர்.

கொள்ளுப்பிட்டியில் உள்ள இரவு விடுதிக்கு ரக்பி வீரர்கள் சென்று கொண்டிருந்த வேளை அவர்களிற்கு பிரவுண் சுகரை வழங்கிய முச்சக்கரவண்டி சாரதியை கைதுசெய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மரணமடைந்த இரு ரக்பி வீரர்களில் ஒருவரான தோமல் பட்டி தனது மரண வாக்குமூலத்தில் முக்சக்கரவண்டி சாரதி கொடுத்த பிரவுன் சுகரை தான் பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பல  முச்சக்கர வண்டி சாரதிகளிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

http://www.virakesari.lk/article/33774

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

இலங்கையில் பிரிட்டன் ரக்பி வீரர்கள் மரணம்: நடந்தது என்ன? - விவரிக்கும் சாட்சியம்

ரக்பி வீரர்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

''அன்று நள்ளிரவு ஒரு மணி இருக்கும். இரண்டு வெள்ளைக்காரர்கள் எனது ஆட்டோவில் வந்து ஏறினார்கள். அவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு செல்ல வேண்டும் எனக் கூறினார்கள். 300 ரூபாய் கேட்டேன். சரியெனக் கூறி ஏறிக்கொண்டார்கள். அவர்களில் ஒருவர் என்னிடம் ஹெராயின் கிடைக்குமா என கேட்டார். நான் முடியும் எனக் கூறினேன். அவர்களை பம்பலப்பிட்டிக்கு அழைத்துச் சென்றேன். அங்கு முக்கால் மணி நேரம் வரை ஹெராயின் வாங்குவதற்காக காத்திருந்தோம்.'' என்று தனது சாட்சியத்தைப் பதிவு செய்தார் ஆட்டோ சாரதி நியாஸ்.

நட்பு ரீதியான ரக்பி போட்டிகளில் விளையாட கடந்த மே 10 அன்று பிரிட்டனைச் சேர்ந்த 'Clems Pirates Rugby' அணியினர் இலங்கை வந்தனர். இந்த அணியின் தாமஸ் ஹாவர்ட் (25 வயது) மே 13 ஆம் தேதியன்று உயிரிழந்தார்.

இதன்பின்னர் தாமஸ் பெட்டி ( 26 வயது) அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் மே 15ஆம் தேதியன்று உயிரிழந்தார். இவர்களின் மரணங்களில் மர்மம் நீடிக்கும் நிலையில் காவல் துறையினர் புலன்விசாரணைகளைத் தீவிரப்படுத்தினர்.

ரக்பி வீரர்கள்

இந்த மரணங்களின் சாட்சியம் இன்று (ஜூன் 01) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் பதியப்பட்டது. மர்மமாக உயிரிழந்த ரக்பி வீரர்களை இறுதியாக ஏற்றிவந்த ஆட்டோ சாரதி இன்று தனது சாட்சியத்தைப் பதிவுசெய்தார்.

இதன்போது போலீசாரின் குற்றத் தகவல் புத்தகத்தில் ஒட்டப்பட்டிருந்த உயிரிழந்த ஒரு ரக்பி வீரரின் கடவுச்சீட்டு பிரதியை பார்த்து அடையாளம் காட்டினார். சம்பவ தினம் இரவு தனது ஆட்டோவில் வந்த ஒருவரே அது என ஆட்டோ சாரதி குறிப்பிட்டார்.

என்ன நடந்தது?

அப்போது அன்றைய தினம் இரவு (மே 12) நடந்த சம்பவத்தை விரிவாக விபரித்தார் சாரதி.

"கடந்த 15 வருடங்களாக நான் ஆட்டோ ஓட்டுகிறேன். இரவு நேரங்களிலேயே கூடுதலாக ஆட்டோ ஓடுகிறேன். அன்று பின்னிரவு 1 மணியளவில் இருவர் வந்தனர். அவர்கள் வெளிநாட்டவர்கள். கொழும்பில் உள்ள கிங்ஸ்பெரி ஹோட்டலுக்கு செல்ல வேண்டும் எனக் கூறினர். 300ரூபாய் கேட்டேன். சரி என்றார்கள். ஏறியவுடன் ஹெராயின் கிடைக்குமா எனக் கேட்டனர். நாங்கள் பம்பலப்பிட்டிய பிரதேசத்திற்கு சென்றோம்.”

"பம்பலப்பிட்டி கடற்கரை ஓரத்தில் ரயில் நிலையத்திற்கு அருகில் போதைப் பொருள் பயன்படுத்துபவர்கள் இருக்கிறார்கள். அவர்களைத் தேடி சென்றோம். அப்போது அங்கிருந்த மற்றுமொரு ஆட்டோ சாரதியை சந்தித்தேன். அவரை எனக்குத் தெரியும். அவரது பெயர் சனா. 'மச்சான் இவர்கள் ஹெராயின் கேட்கிறார்கள்' என்றேன். அவர் எடுக்க முடியும் எனக் கூறினார்."

"சனாவை வெள்ளைக்காரருக்கு அறிமுகம் செய்தேன். வெள்ளைக்காரர் ஹெராயின் எடுக்க முடியுமா எனக் கேட்டனர். சனா முடியும் என்றார். காத்திருக்க முடியுமா எனக் கேட்க வெள்ளைக்காரர்கள் முடியும் எனக் கூறினார்கள். அவர்கள் குடிபோதையில் இருந்தார்கள்."

10 நிமிடத்தின் பின்னர் தன்னைப் பின்தொடருமாறு கூற, நாமும் சனாவின் ஆட்டோவை பின்தொடர்ந்தோம் என்றும், பின்னர் என்ன நடந்தது என்றும் ஆட்டோ சாரதி தொடர்ந்து விபரித்தார்.

"சனாவின் ஆட்டோ பம்பலப்பிட்டிய ரயில் நிலையத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டது. ஒரு 30 மீ்ட்டர் தள்ளி நாம் காத்திருந்தோம். அப்போது சனா வெள்ளைக்காரரிடம் காசு கேட்டார். முடியாது எனக் கூறினர். பொருளை (போதைப் பொருளை) சோதனை செய்த பின்னரே பணம் தருவதாகக் கூறினார்கள். அப்படியென்றால் அரை மணி நேரம் காத்திருக்க வேண்டும் என சனா கூறினார். அவர்களும் சம்மதித்தனர். 35 - 40 நிமிடங்களில் சனா திரும்பி வந்தார். 7 பக்கற் போதைப்பொருளை வெள்ளைக்காரர்களின் கையில் கொடுத்தார். அவர்கள் டார்ச் அடித்து பரிசோதித்தனர். ஒருவர் அதனை உறுதிப்படுத்தினார். ரூ.17,000 பணம் கொடுத்தனர். போதைப் பொருள் பக்கற்றுகளை வெள்ளைக்காரர் ஒருவர் (படத்தில் உறுதிப்படுத்தியவர்) தனது உள்ளாடைக்குள் மறைத்துக்கொண்டார். வேகமாக செல்வோம் எனக் கூறினார். அங்கிருந்து நாம் கிளம்பிவிட்டோம்”

ரக்பி வீரர்கள்படத்தின் காப்புரிமைDCRFC

இதன்பின்னர் கொள்ளுப்பிட்டி பிரதேசத்திற்கு வந்தபோது வெள்ளைக்காரர்கள் தனக்கு ஒரு சிக்கரெட் தந்ததாகவும் சிகரட்டைப் புகைத்துக்கொண்டே, அவர்கள் சொன்ன ஹோட்டலில் அவர்கள் இருவரையும் பின்னிரவு 2 மணியளவில் இறக்கிவிட்டதாகவும் ஆட்டோ சாரதி தனது சாட்சியத்தில் குறிப்பிட்டார்.

சவாரிக்கு ரூ.300 பேசப்பட்டாலும் அவர்கள் தனக்கு 2000 ரூபா கொடுத்ததாகவும் நீதிமன்றில் ஆட்டோ சாரதி தெரிவித்தார். எதற்காக அதிகமாக பணம் கொடுத்தனர் என நீதிபதி இதன்போது கேட்டார். அதற்குப் பதிலளித்த ஆட்டோ சாரதி, போதைப் பொருள் எடுக்க உதவியதற்காகவே இதனைக் கொடுத்ததாகக் குறிப்பிட்டார்.

சாட்சியத்தை முழுமையாக கேட்டுக் கொண்டிருந்த நீதிபதி லங்கா ஜயரத்ன, போதைப் பொருள் விற்பதும், போதைப்பொருளைப் பெற்றுக்கொள்ள உதவுவதும் இலங்கைச் சட்டத்தின்படி குற்றம் என அறிவித்தார்.

எனவே, வெள்ளைக்காரருக்கு யார் போதைப் பொருளைப் பெற்றுக்கொடுத்தது என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தி, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோட்டை போலீஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு நீதிமன்றம் உத்தரவிடுவதாக அறிவித்தார்.

இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்கும் போலீசாரிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, குறித்த பிரிட்டன் ரக்பி வீரர்கள் அதீத போதைப் பொருள் பாவனையினால் உயிரிழந்திருக்கக் கூடும் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக இதற்கு முன்னர் தெரிவித்தனர்.

 

 

மர்மமாக உயிரிழந்த பிரிட்டன் ரக்பி வீரர்களின் முழுமையான மரண விசாரணை அறிக்கை இன்னமும் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை.

மரண விசாரணை அதிகாரி சமர்ப்பித்த முதல் அறிக்கையில், உடலில் ஏற்பட்ட காயங்களினாலோ இயற்கையாகவோ இந்த வீரர்கள் உயிரிழக்கவில்லை என தெரியவந்தது.

இதனால் உயிரிழந்தவர்களின் உடற்பாகங்கள் இரசாயனப் பகுப்பாய்வுப் பிரிவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இரசாயனப் பகுப்பாய்வுப் பிரிவினரின் அறிக்கையும் இதுவரை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. இந்த அறிக்கைகள் எப்போது சமர்ப்பிக்கப்படும் என்று நீதிபதி இன்று போலீசாரிடம் கேள்வியெழுப்பினார்.

தமக்கு உரிய திகதியொன்றை கூற முடியாது என போலீசார் தெரிவிக்க, இந்த மரண விசாரணையை எதிர்வரும் ஜூன் 8ஆம் திகதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

இந்த நிலையில், போதைப் பொருளை வெள்ளைக்காரர்களுக்கு விநியோகித்தது யார்? அதனை விற்பனை செய்தது யார்? என்பது குறித்து போலீசார் புலன்விசாரணைகளை தற்போது ஆரம்பித்துள்ளனர்.

https://www.bbc.com/tamil/sri-lanka-44333534

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.