Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கரையோரமாக அடையாளம் காணமுடியாமல் விமானம் வரமுடியும் என்கிறார் இராணுவப் பேச்சாளர்

Featured Replies

-ராய்ட்டர் செய்திச் சேவை-

இலங்கையிடம் இருக்கும் யுத்த விமானங்களுடன் விடுதலைப் புலிகளின் இரண்டிற்கும் ஐந்திற்கும் இடைப்பட்ட சிறிய விமானங்களைக் கொண்ட விமானப் படையை ஒப்பிடமுடியாதெனக் கூறப்பட்டாலும் இலங்கை இராணுவத்திற்கு அவர்கள் அச்சுறுத்தலாக இருக்கின்றார்களென்பது நிரூபிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர்களின் வான் படையை குறைத்து மதிப்பிடுவது நல்லதல்ல என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

2002 போர் நிறுத்தத்தின் பின்னர் வணிகக் கப்பல்களில் பாகங்களாக கொண்டு வரப்பட்டு பொருத்தப்பட்ட விமானங்களை புலிகள் வைத்திருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

கட்டுநாயக்காவில் இடம்பெற்ற வான் தாக்குதலானது விமானப்படையினரை முற்றுமுழுதாக ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியதாக தோன்றுவதாகவும் பதில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதற்கு ஏற்பட்ட தாமதம் இதனை உறுதிப்படுத்துவதாகவும் தாமதமான இந்த நேரத்தில் தாக்குதல் நடத்தியோர் தமது தளத்திற்கு திரும்பிச் சென்றுவிடக்கூடியதாக இருந்ததாகவும் `ஜேன்ஸ் டிபென்ஸ் வீக்லி'யின் இக்பால் அத்தாஸ் கூறியுள்ளார்.

பல்வேறு காரணங்கள் கருதி இதனை குறிப்பிடத்தக்க அச்சுறுத்தல் எனலாம். தமது இலக்கை வென்றெடுப்பதில் அவர்கள் தோல்வி கண்டாலும் கூட தமக்கு ஆற்றல் இருக்கின்றதென்பதை இந்தத் தாக்குதல் மூலம் வெளிப்படுத்தி இருப்பதாகவும் அத்தாஸ் கூறியுள்ளார்.

அத்துடன், கடற்படையின் ரோந்துப் படகுகள், படையினரை ஏற்றிச் செல்லும் கப்பல்கள், களத்தில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஆயுதப் படைகள் பலவீனமடையும் நிலை உருவாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அதேசமயம், இத்தாக்குதலானது இலங்கையின் ராடார் பாதுகாப்பு நிலைமையும் நலிவடைந்த தன்மையில் இருப்பதை வெளிப்படுத்துவதாக ராய்ட்டர் செய்திச் சேவை தெரிவிக்கின்றது. 24 மணிநேரம் செய்மதி அவதானிப்புகளை மேற்கொள்வதற்கான நிலைமையில் இலங்கை இல்லை என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதேவேளை, ஓரிரு சிறிய விமானங்களில் புலிகள் எவ்விதம் கட்டுநாயக்கா பகுதிக்கு வரமுடிந்தது என்று ஆராய்வதற்கான முயற்சிகளில் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கான முயற்சியில் விமானப்படை ஈடுபட்டிருப்பதாகத் தெரிவித்துள்ள இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க, கடற்கரையோரமாக அல்லது தண்ணீருக்கு மேலாக கண்டுபிடிக்க முடியாதவாறு வர முடியும் என்று கூறியுள்ளார்.

தமிழ் ஈழத்தின் விமானப்படை என்று புலிகள் தெரிவித்திருப்பது தொடர்பாக ராய்ட்டருக்கு கருத்துத் தெரிவித்த பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க, தமிழ் ஈழம் என்று ஒன்று இல்லை, சிறிய விமானம் ஒன்று வந்து ஒன்றுஇரண்டு குண்டுகளை போடுகிறது. இது விமானப்படை அல்ல என்று கூறியுள்ளார். :rolleyes::rolleyes::o

http://www.thinakkural.com/news/2007/3/27/...s_page24116.htm

...

தமிழ் ஈழத்தின் விமானப்படை என்று புலிகள் தெரிவித்திருப்பது தொடர்பாக ராய்ட்டருக்கு கருத்துத் தெரிவித்த பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க, தமிழ் ஈழம் என்று ஒன்று இல்லை, சிறிய விமானம் ஒன்று வந்து ஒன்றுஇரண்டு குண்டுகளை போடுகிறது. இது விமானப்படை அல்ல என்று கூறியுள்ளார். :rolleyes::rolleyes::o

http://www.thinakkural.com/news/2007/3/27/...s_page24116.htm

தான் ஒரு கோமாளி என்பதை நிரூபித்து விட்டார்.

தமிழ் ஈழத்தின் விமானப்படை என்று புலிகள் தெரிவித்திருப்பது தொடர்பாக ராய்ட்டருக்கு கருத்துத் தெரிவித்த பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க, தமிழ் ஈழம் என்று ஒன்று இல்லை, சிறிய விமானம் ஒன்று வந்து ஒன்றுஇரண்டு குண்டுகளை போடுகிறது. இது விமானப்படை அல்ல என்று கூறியுள்ளார்.

சிலர் பட்டாலும் திருந்தார்கள் உதாரணம் த கிறேட் சிரிலங்கா கவர்ண்மன்ட் :rolleyes:

இந்த (பிரி) கேடியர் சமரசிங்க தான் கொஞ்ச நாளைக்கு முன்பு புலிகளின் விமானம் பலாலி மேல் பறந்தது பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, ஒரு பட்டம் பறந்ததை கூட பார்க்கவில்லை என்று ஏளனம் செய்தார். இனி சமரசிங்க போன்றவர்களும் சிங்கள அரசும் தான் ஒரு பட்டம் தலை மேல் பறந்தாலும் கூட பயப்பட வேண்டும்!!! :rolleyes::rolleyes::o

உணவுப்பொட்டலங்களை வீசிய இந்தியவிமானங்கள் இரண்டும் காரைநகர் கடற்படைதளத்துக்கு மேலாக மேலெழும்போது தான் அவர்களின் ராடர்களில் தெரிந்ததாம்.அதுவரை கடல்மட்டத்தில்தான் பறந்தார்கள்,இதுவும் அப்படியிருக்கலாம் அல்லவா!

பிரசாத் சமரசிங்க தன் வீட்டுக் கோடிக்க பங்கர் வெட்டத் தொடங்கீட்டாராம் என இலங்கை இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கிட்றன. :rolleyes::rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.