Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்காலும் நினைவுச்சின்னமும்

Featured Replies

முள்ளிவாய்க்காலும் நினைவுச்சின்னமும்

01-ef85b3118b74466b3ddafe8a80d3e406e7a69707.jpg

 

கபில்

 

ஜன­நா­யக வெளியை எதிர்­கொள்­வதில் தமிழர் தரப்பு எந்­த­ள­வுக்குப் பல­வீ­ன­மான நிலையில் உள்­ளது என்­பதை, மீண்டும் ஒரு முறை நினை­வு­ப­டுத்திச் சென்­றி­ருக்­கி­றது முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் நிகழ்வு.

ஜன­நா­யக சூழலில் அர­சியல் செய்­வதில் தமிழர் தரப்பில் நிறை­யவே போதா­மைகள் இருப்­பதைப் போலவே, ஜன­நா­யக சூழலில் நினை­வேந்­தல்­களை நடத்­து­வ­திலும் கூட, தமிழர் தரப்­பிடம் போதா­மைகள் இருக்­கின்­றன.

மஹிந்த ராஜபக் ஷவின் இறுக்­க­மான ஆட்­சியில் முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் பற்றி கரி­ச­னைப்­ப­டாமல் இருந்­த­வர்கள் கூட, ஜன­நா­யக சூழலில், அதற்­காக மோதத் தொடங்­கி­யுள்­ளார்கள்.

இப்­போ­துள்ள ஜன­நா­யக இடை­வெ­ளி­யா­னது, தமிழர் தரப்பின் ஒற்­று­மை­யின்­மையை வெளிப்­ப­டுத்­திய சம்­ப­வங்கள் பல உள்­ளன. அதில் ஒன்று தான், முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் நிகழ்­வுக்­காக நடத்­தப்­பட்ட இழு­ப­றிகள்.

முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் நிகழ்வை ஒழுங்­கு­ப­டுத்­து­வதில் ஏற்­பட்ட இழு­ப­றிகள், சிக்­கல்­க­ளுக்கு கடைசி நேரத்தில் தீர்­வுகள் எட்­டப்­பட்ட போதும், அது நிரந்­த­ர­மா­னதோ நிலை­யா­னதோ அல்ல.  இப்­போது கிளம்­பிய பிரச்­சினை நிரந்­த­ர­மா­கவும் அவ­ச­ர­மா­கவும் தீர்க்­கப்­பட வேண்­டிய அவ­சி­யத்­தையும் உணர்த்­தி­யி­ருக்­கி­றது. 

ஏனென்றால், கறையான் புற்­றெ­டுக்க கரு­நாகம் குடி­கொண்ட நிலை­யாகி விடக் கூடாது என்­பதில் கவ­ன­மாக இருக்க வேண்டும்.

முள்­ளி­வாய்க்­காலில் படு­கொலை செய்­யப்­பட்ட தமி­ழர்­க­ளுக்கு ஒரு நினைவுத் தூபி அமைக்­கப்­பட வேண்டும் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­டமும், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வி­டமும் தாம் கோரிக்கை விடுத்­தி­ருப்­ப­தாக அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் கூறி­யி­ருக்­கிறார்.

முள்­ளி­வாய்க்­காலில் ஒரு நினைவுச் சின்­னத்தை அமைக்­கின்ற தகுதி அர­சாங்­கத்­துக்கு இருக்­கி­றதா என்­பது தான் முத­லா­வது பிரச்­சினை.

தாமும் அர­சியல் செய்­யப்­போ­வ­தாக கிளம்பி வந்த பலரும், இப்­போது தமிழ் மக்­களின் பிர­தி­நி­திகள் என்ற போர்­வையில் எதையும் பேசலாம், என்ற நிலையே உரு­வா­கி­யி­ருக்­கி­றது.

முள்­ளி­வாய்க்­காலில் நிகழ்ந்த பேர­ழி­வு­க­ளுக்கு காரணம், ஆட்­சியில் இருந்த அர­சாங்கம்.

தமிழ் மக்­களின் மீது ஈவி­ரக்­க­மற்ற போரைத் தொடுத்து, அந்த மண்ணை குரு­தியில் குளிக்க வைத்­தது அர­சாங்­கமும், அதன் படை­களும் தான்.

அப்­போது, ஆட்­சி­யி­லி­ருந்­தது மஹிந்த ராஜபக் ஷவாக இருக்­கலாம். இப்­போது இருப்­பது மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வாக இருக்­கலாம். ஆனால் போரை நடத்­தி­யது, சிங்­கள பௌத்த பேரி­ன­வாத அர­சாங்கம் தான்.

முள்­ளி­வாய்க்­காலில் நிகழ்ந்த பேர­ழி­வு­க­ளுக்கு இப்­போது ஆட்­சியில் இருப்­ப­வர்­க­ளுக்கும் பங்­குள்­ளது. அவர்­களின் ஆசி­யு­டனும், துணை­யு­டனும் தான் போர் நிகழ்த்­தப்­பட்­டது என்­பதை வர­லாறு ஒரு­போதும் மறந்­து­வி­டாது.

அதை­விட, போர் முடி­வுக்குக் கொண்டு வரப்­பட்ட காலப்­ப­கு­தியில், பதில் பாது­காப்பு அமைச்­ச­ராக இருந்­தவர் தற்­போ­தைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தான். இவ்­வாறு, ஈவி­ரக்­க­மற்ற ஒரு போரை நடத்தி வகை­தொ­கை­யின்றி தமிழ் மக்­களைக் கொன்று குவித்த ஓர் அர­சாங்கம், அந்த மக்­க­ளுக்­காக ஒரு நினை­வுச்­சின்­னத்தை அமைக்­கின்ற தகு­தியைக் கொண்­டி­ருக்­கி­றதா என்­பதைப் பற்­றிய எந்தப் பிரக்­ஞையும் அர­சி­யல்­வா­திகள் பல­ருக்கும் இருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை.

ஏதோ தாமும் அர­சி­யலில் இருக்­கிறோம் என்­ப­தற்­காக எதை­யா­வது கூறிக் கொண்டு திரி­வது அவர்­களின் வழக்­க­மாக மாறி விட்­டது.

முள்­ளி­வாய்க்கால் என்­பது தமிழ் இனத்தின் ஓர் அடை­யா­ள­மாக மாறி­யுள்ள நிலையில், அந்த மண்ணில் இன்­னமும் ஒரு நினைவுச் சின்னம் அமைக்­கப்­ப­டாமல் இருப்­பது வருத்­தத்­துக்­கு­ரிய விடயம்தான்.

வடக்கு மாகா­ண­சபையால், முள்­ளி­வாய்க்­காலில் ஒரு நினைவுச் சின்­னத்தை அமைப்­ப­தற்கு தீர்­மானம் எடுக்­கப்­பட்டு இரண்டு ஆண்­டு­க­ளாகி விட்ட போதிலும், அதற்­கான எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­ட­வில்லை. தீர்­மா­னத்தை எடுத்­த­தற்குப் பின்னர், முள்­ளி­வாய்க்­காலில் நினைவுச் சின்­னத்தை அமைப்­ப­தற்கு வடக்கு மாகா­ண­சபை எதையும் செய்­ய­வில்லை.

நினை­வேந்தல் நடத்­தப்­படும் காணி பிர­தேச சபைக்குச் சொந்­த­மா­னது என்றும், அது தன்­னிடம் உள்ள உள்­ளூ­ராட்சி அமைச்சின் கட்­டுப்­பாட்டில் தான் வரு­கி­றது என்றும் முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் கூறி­யி­ருந்தார்.

அவ்­வா­றாயின், ஏன் அந்த இடத்தில் ஒரு நினைவுச் சின்­னத்தை அமைப்­ப­தற்கு இந்­த­ளவு தாமதம் ஏற்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது?

முள்­ளி­வாய்க்­காலில் ஒரு நினைவுச் சின்­னத்தை அமைப்­ப­தற்கு இது­வரை நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டா­தி­ருப்­பதால் தான், அர­சாங்கம் அங்கு நினைவுச் சின்­னத்தை அமைக்க வேண்டும் என்று சிலர் கோரு­கின்ற நிலை உரு­வா­கி­யி­ருக்­கி­றது.

ஏற்­க­னவே, போரில் இறந்­த­வர்­களை நினைவு கூரும் பொது நினைவுச் சின்னம் அமைக்­கப்­பட வேண்டும் என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டக்ளஸ் தேவா­னந்தா பாரா­ளு­மன்­றத்தில் கோரி­யி­ருந்தார்.

பொது நினைவுச் சின்னம் என்ற போர்­வையில், தமிழ் மக்­களின் வர­லாற்றுச் சின்­னங்­களும், அடை­யா­ளங்­களும் அழிக்­கப்­பட்டு விடக் கூடிய ஆபத்து உள்­ளது.

அத்­த­கை­ய­தொரு, பொது நினைவுச் சின்னம், பொது நினைவு நாளுக்கு அப்பால் எந்த நினை­வேந்­த­லையும் செய்ய முடி­யாத ஒரு நிலை தமிழ் மக்­க­ளுக்கு ஏற்­ப­டுத்­தப்­பட்­டாலும் ஆச்­ச­ரி­யப்­பட முடி­யாது.

ஏனென்றால் அர­சி­யலில் எதுவும் நடக்­கலாம். யாரும் ஆட்­சிக்கு வரலாம். அவ்­வா­றான ஒரு சூழல் ஏற்­பட்டால், தமி­ழர்­களால் மர­பு­ரீ­தி­யாக கடைப்­பி­டிக்­கப்­பட்டு வரும் பல நினை­வேந்தல் நாட்­களில் விளக்­கேற்­றவோ அஞ்­சலி செலுத்­தவோ முடி­யாத நிலை கூட ஏற்­படும். அதை­விட பொது நினைவுச் சின்னம் ஒன்றை அமைக்கும் போது, அங்கு நடக்­கின்ற நினைவு கூரல்கள் அனைத்தும், அர­சாங்­கத்­தி­னா­லேயே ஒழுங்­க­மைக்­கப்­படும். அர­சாங்­கத்தின் நிகழ்ச்சி நிரலே தமிழ் மக்­களின் மீது திணிக்­கப்­படும்.

சாதா­ரண மக்­களின் கவ­லை­களைக் கொட்டித் தீர்க்­கின்ற இட­மாக அமை­வ­தற்குப் பதி­லாக, அது அர­சியல் ஒழுங்கில் அமைக்­கப்­பட்ட ஒன்­றா­கவே இருக்கும்.

முள்­ளி­வாய்க்­காலில் அர­சாங்கம் ஒரு நினைவுச் சின்­னத்தை அமைத்­தாலும் கூட, அங்கு பொது­மக்­க­ளுக்கு அஞ்­சலி செலுத்­தப்­படும் நிலைக்குப் பதி­லாக, படை­யி­ன­ருக்­கான அஞ்­சலி நிகழ்­வா­கவே மாற்­றப்­படும். இரா­ணு­வத்­தி­னரின் அணி­வ­குப்பு மரி­யா­தை­களும் நிகழ்த்­தப்­ப­டலாம்.

அது முள்­ளி­வாய்க்­காலில் உயிர்­களை உர­மாக்­கி­ய­வர்­க­ளுக்கு செய்­யப்­படும் அநீ­தி­யா­கவே இருக்கும்.

முள்­ளி­வாய்க்­காலில் நிகழ்ந்­தே­றிய கொடு­மைகள், போர்க்­குற்­றங்­க­ளுக்கு நியாயம் வழங்க முன்­வ­ராத ஓர் அர­சாங்­கத்­துக்கு, அங்கு நினைவுச் சின்­னத்தை அமைக்­கின்ற உரிமை ஒரு­போதும் கிடை­யாது.

ஆனாலும், இந்த விட­யத்­துக்குள் அர­சாங்­கத்தின் மூக்­கையும் நுழைத்து விடு­வ­தற்கு சிலர் எத்­த­னிக்­கி­றார்கள்.  முள்­ளி­வாய்க்­காலில் இன­அ­ழிப்பு நடந்த போது, அதற்குத் துணை­யாக இருந்­த­வர்கள், அதனை முன்­னின்று செய்­த­வர்­க­ளுக்கு, நினைவுச் சின்­னங்­களை அமைப்­பது பற்றிப் பேசு­கின்ற அரு­கதை எப்­படி வந்­தது என்ற கேள்வி பல­ராலும் எழுப்­பப்­ப­டு­கி­றது. 

அதே­வேளை, தற்­போ­துள்ள சூழலில், தமிழர் தரப்பு இது­போன்ற விட­யங்­களில் பிரிந்து நின்று மோதிக் கொள்ளும் போது, அதனை தமக்குச் சாத­க­மாக்கிக் கொள்­வ­தி­லேயே அர­சாங்கம் ஈடு­படும் என்­பதை மறந்து விடு­கி­றார்கள்.

அன்னை பூப­தியின் நினைவு நிகழ்வில், நிகழ்ந்­தது போன்ற சூழ­லுக்கே இதுவும் வழி­கோலும். அத்­த­கை­ய­தொரு நிலையை நோக்கித் தான் முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்­த­லையும், கொண்டு செல்லப் போகி­றோமா என்ற கேள்­வியை தமிழர் தரப்பில் உள்ள ஒவ்­வொ­ரு­வரும் கேட்டுக் கொள்ள வேண்­டிய நிலை ஏற்­பட்­டி­ருக்­கி­றது,

முள்­ளி­வாய்க்கால் தமி­ழரின் வர­லாற்றில் ஒரு முக்­கி­ய­மான இட­மாக மாறி விட்ட நிலையில், ஆண்­டுக்கு ஒரு­முறை கூடு­வதும் அதற்குப் பின்னர், யாருமே கண்­டு­கொள்­ளப்­ப­டாத இட­மாக இருப்­பதும் அபத்­த­மா­னது.

முள்­ளி­வாய்க்­காலை முன்­னி­றுத்­தியே, தமிழர் தரப்பின் உரி­மைக்­கான போராட்டம் முன்­னெ­டுத்துச் செல்லப்படுகின்ற சூழலில், பேரவலங்கள் நிகழ்ந்த இடம், ஒரு வரலாற்றுச் சின்னமாக மாற்றப்படுவது முக்கியம்.

அந்தப் பொறுப்பை தமிழர் தரப்பு செய்யாத நிலையில் தான், அரசாங்கம் அதனைச் செய்ய வேண்டும் என்று கோருகின்ற நிலை உருவாகியிருக்கிறது.

இத்தகையதொரு தருணத்தில் விழித்துக் கொள்ளத் தவறினால், அதுவும் கூட கைதவறிப் போய் விடும் நிலை ஏற்படலாம்.

சுதந்திரமான ஒரு குழு அமைக்கப்பட்டு, முள்ளிவாய்க்கால் அவலத்தை நினைவு கொள்ளும் ஒரு வரலாற்றுச் சின்னத்தை உருவாக்கும் பணிகள் உடனடியாக முன்னெடுக்கப்படுவது, இன்று காலத்தின் கட்டாயமாக மாறியிருக்கிறது.

தற்போதுள்ள ஜனநாயக வெளி எந்தளவுக்கு நீடிக்கும் என்ற கேள்விகள் எழத் தொடங்கியிருக்கின்ற நிலையில், இப்போது கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை, பயன்படுத்திக் கொள்ளத் தவறினால், அதற்காக வருந்துகின்ற நிலை கூட ஏற்படலாம்.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-05-20#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.