Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்களுடன் மீண்டும் ஆயுதப்போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய சூழல் உருவாகும் - கோத்தபாய

Featured Replies

தமிழ் மக்களுடன் மீண்டும் ஆயுதப்போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய சூழல் உருவாகும் - கோத்தபாய

 

(ஆர்.யசி)

வடக்கின் அரசியல் போக்கினை கருத்திற்கொள்ளாது தேசிய நல்லிணக்கம் என்ற பெயரில் புலிகளை நினைவுகூரும் நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களுடனான ஆயுதப் போராட்டம் ஒன்றை உருவாக்கும் நிலையை தோற்றுவிக்கும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார்.

gotabaya-rajapaksa.jpg

கடுவளை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

பயங்கரவாத செயற்பாடுகளில் தொடர்புபட்ட விடுதலைப்புலிகள் இன்று எந்தவித அடிப்படை காரணமும் இல்லாது விடுதலை செய்யபட்டு வருகின்றனர். நல்லிணக்க அடையாளமாக இவற்றை அரசாங்கம் கூறுகின்றது. நல்லிணக்கம் என்ற பெயரில் பிரிவினைவாதத்திற்கு இடம்கொடுத்து பயங்கரவாதிகளை அனுஷ்டிக்கவும் அவர்களுக்கான நினைவு தூபிகளை எழுப்பவும் இடம் கொடுக்கப்படுகின்றது. 

அத்துடன் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த மூண்டு ஆண்டுகளில் விடுதலைப்புலிகளை நியாயப்படுத்தி எமது இராணுவத்தை குற்றவாளிகள் என்ற நிலைப்பாட்டிற்கு கொண்டுவந்து  சர்வதேசத்தை திருப்திப்படுத்தும் நோக்கத்தில் செயற்பட்டு வருகின்றனர்.  

இந்த நாட்டினை மீட்டெடுக்க உயிர் தியாகம் செய்து, யுத்தத்தை வெற்றிகொண்ட எமது இராணுவ வீரர்களை சர்வதேச தேவைக்காகவும் அரசியல் நோக்கங்களுக்காகவும்  காட்டிக்கொடுக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டால் இந்த நாடு முப்பது ஆண்டுகாலம் பின்னோக்கி பயணிப்பதுடன்  மீண்டும் தமிழ் மக்களுடன் ஆயுத போராட்டம் ஒன்றினை முன்னெடுக்க வேண்டிய சூழல் உருவாகும். 

வடக்கில் இன்று இடம்பெற்றுவரும் செயற்பாடுகளை கருத்தில் கொள்ளாது அவர்களின் நோக்கங்களுக்கு இடம்கொடுத்து வந்தால் மீண்டும் பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றார்.

http://www.virakesari.lk/article/33672

  • தொடங்கியவர்

ஆயு­தப் போராட்­டம் மீண்­டும் உரு­வா­கும்- இரா­ணு­வத்தைப் பாது­காப்புக்கு அழைக்கிறார் கோத்தா !!

Capture-211.jpg
 
 
 
 

வடக்கு -– கிழக்­கில் நல்­லி­ணக்­கம் என்று சொல்­லிக் கொண்டு விடு­த­லைப் புலி­களை நினை­வு­கூ­ரும் செயற்­பா­டு­கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இந்த அர­சி­யல் போக்­கைக் கருத்­தில் எடுக்­காது இருந்­தால், போரை வெற்­றி­கொண்ட எமது இரா­ணு­வத்தை பன்­னாட்­டுச் சமூ­கத்­தின் தேவைக்­கா­க­வும் அர­சி­யல் நோக்­கங்­க­ளுக்­கா­க­வும் காட்­டிக்­கொ­டுக்­கும் செயற்­பா­டு­கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டால், இந்த நாடு 30 ஆண்­டு­ கா­லம் பின்­னோக்­கிப் பய­ணிப்­ப­து­டன், மீண்­டும் தமிழ் மக்­க­ளு­டன் ஆயு­தப் போராட்­டத்தை முன்­னெ­டுக்க வேண்­டிய சூழல் உரு­வா­கும்.

இவ்வாறு முன்­னாள் பாது­காப்­புச் செய­லர் கோத்­த­பாய ராஜ­பக்ச தெரிவித்தார். கடு­வ­லை­யில் நேற்று இடம்­பெற்ற மக்­கள் சந்­திப்­பி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.  அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

பயங்­க­ர­வா­தச் செயல்­க­ளில் ஈடு­பட்ட விடு­த­லைப் புலி­கள் விடு­விக்­கப்­ப­டு­கின்­ற­னர். நல்­லி­ணக்­கத்­துக்­காக இத­னைச் செய்­வ­தாக அரசு சொல்­கின்­றது. நல்­லி­ணக்­கம் என்ற பெய­ரில் பிரி­வி­னை­வா­தத்­துக்கு இடம் கொடுத்து பயங்­க­ர­வா­தி­களை நினை­வு­கூ­ர­வும் அவர்­க­ளுக்­கான நினை­வுத் தூபி­களை எழுப்­ப­வும் இடம் கொடுக்­கப்­ப­டு­கின்­றது என்­றால் நாட்­டின் உண்­மை­யான நல்­லி­ணக்­கம் அது­வாக அமை­யாது.

 

மைத்­திரி அரசு ஆட்­சிக்கு வந்து, விடு­த­லைப்பு லிகளை நியா­யப்­ப­டுத்தி எமது இரா­ணு­வத்தை குற்­ற­வா­ளி­கள் என்ற நிலைப்­பாட்­டிற்கு கொண்­டு­வந்து பன்­னாட்­டுச் சமூ­கத்தை திருப்­திப்­ப­டுத்­தும் நோக்­கத்­தில் செயற்­பட்டு வரு­கின்­றது.

அவ்­வா­றன ஒரு சூழல் ஏற்­பட்­டால் மீண்­டும் எமது இரா­ணு­வத்­தி­னர் தமது உயிர்­களை தியா­கம் செய்து நாட்­டினை மீட்­டெ­டுக்க முன்­வர மாட்­டார்­கள்.

வடக்­கில் இன்று இடம்­பெற்­று­வ­ரும் செயற்­பா­டு­களை கருத்­தில் கொள்­ளாது அவர்­க­ளின் நோக்­கங்­க­ளுக்கு இடம்­கொ­டுத்து வந்­தால் மீண்­டும் பார­தூ­ர­மான விளை­வு­க­ளைச் சந்­திக்க நேரி­டும். நல்­லி­ணக்­கம் என்ற பெய­ரில் நாட்­டில் மிகப்­பெ­ரிய அச்­சு­றுத்­தல்­களை சந்­திக்க நேரி­டும்.
இங்கு எம்மை இரா­ணுவ வெற்றி தினத்தை கொண்­டாட வேண்­டாம் என்று கூறும் நபர்­கள் வடக்­கில் புலி­களை நினை­வு­கூ­று­வதை அனு­ம­தித்­துள்­ள­னர்.

இரா­ணுவ வெற்றி தினம் நல்­லி­ணக்­கத்­துக்­குத் தடை என்­றால் புலி­களை நினைவு கூறு­வது நல்­லி­ணக்­கத்தை பாதிக்­காதா? எந்த கொள்­கை­யின் அடிப்­ப­டை­யில் அரசு இவ்­வா­றான தீர்­மா­னங்­களை முன்­னெ­டுக்­கின்­றது.

வடக்­கில் ஒரு வார காலம் துக்க தினம் கடைப்­பி­டிக்க முடி­யும். பாட­சா­லை­க­ளில், பல்­க­லைக் கழ­கங்­க­ளில் கொடி­களை பறக்­க­விட்டு புலி­களை நினை­வு­கூ­றும் செயற்­பா­டு­கள் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளது. ஆனால் எமது இரா­ணு­வத்­தி­னர் இன்று சிறைச்­சா­லை­க­ளில் அடைத்து வைக்­கப்­பட்­டுள்­ள­னர். அவர்­க­ளுக்கு பிணை வழங்­கக்­கூட தயா­ராக இல்லை.

இரா­ணு­வம் பொது­மக்­களை கொன்­றது என்ற கூற்று மிக பார­தூ­ர­மா­னது. அவ்­வா­றான எந்­தச் செயற்­பா­டு­க­ளும் இரா­ணு­வத்­தி­ன­ரால் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. பொது­மக்­களை இலக்கு வைத்து இரா­ணு­வத் தாக்­கு­தல்­கள் இடம்­பெ­ற­வில்லை என்று என்­னால் உறு­தி­யாக கூற முடி­யும். நாம் தூய்­மை­யான போரை முன்­னெ­டுத்­தோம். எமது கைக­ளில் இரத்த கறை­கள் இல்லை.

ஆனால் பழி­வாங்­கு­வது மட்­டுமே இந்த அர­சின் நோக்­க­மாக உள்­ளது. இன்று புலம்­பெ­யர் புலி அமைப்­பு­க­ளின் நோக்­கங்­களை நிறை­வேற்­ற­வும், மேற்கு நாடு­க­ளின் கட்­ட­ளை­களை நிறை­வேற்­ற­வும் இரா­ணுவ தண்­டிப்பு கொள்­கை­யினை அரசு கடைப்­பி­டித்து வரு­கின்­றது. மக்­கள் தெளி­வாக சிந்­திக்க வேண்­டிய தேவை ஏற்­பட்­டுள்­ளது. எமது நாட்­டின் இரா­ணு­வத்தை பாது­காக்க முன்­வ­ர­வேண்­டும். ஐக்­கி­ய­மான இலங்­கையை உரு­வாக்க வேண்­டும் – என்­றார்.

http://newuthayan.com/story/08/ஆயு­தப்-போராட்­டம்-மீண்­டும்-உரு­வா­கும்-இரா­ணு­வத்தைப்-பாது­காப்புக்கு-அழைக்கிறார்-கோத்தா.html

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு இப்ப புலிகளும் ஒரு ஆயுதப் போராட்டமும் தேவைப்படுகுது. தங்கட குடும்ப அடுத்த கட்ட இன அழிப்பு அரசியலை கொண்டு நடத்தி நாட்டைக் கொள்ளையடிக்க. உலகப் பயங்கரவாதங்களுக்கு ஆயுத சப்பளை செய்து காசு பார்க்க.

இந்த போர்க்குற்றவாளிகளை எல்லாம் உலகம் வெளில விட்டு வைச்சிருப்பது தான் கொடுமை. ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.