Jump to content

ஸ்டெர்லைட் போராட்டம்; துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு; 17 வயது மாணவியும் பலியான பரிதாபம்


Recommended Posts

 

Link to comment
Share on other sites

  • Replies 82
  • Created
  • Last Reply

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை உடல்களை வாங்க உறவினர்கள் மறுப்பு

இருவரின் உடல்கள் ஒப்படைப்பு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்த 13 பேரில் 7 பேரின் உடல்களை மறு உடற்கூறாய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி மறு உடற்கூறாய்வு செய்யப்பட்ட இருவரின் உடல்கள், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், மூன்று பேரது உடல்களை வாங்க உறவினர்கள் மறுத்துவிட்டனர்.

நீதிமன்ற உத்தரவுபடி, ஜிப்மர், ஸ்டான்லி மற்றும் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அடங்கிய குழு, மறு உடற்கூறாய்வை மேற்கொண்டது. ஜிம்பர் மருத்துவர் பத்ரா தலைமையில் இது நடத்தப்பட்டது.

மாசிலாமணி நகரை சேர்ந்த சண்முகம் மற்றும் சாயற்புரத்தை சேர்ந்த செல்வசேகர் ஆகியோரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இருவரின் உடல்கள் ஒப்படைப்பு

முன்னதாக, பாதுகாப்பு நலன் கருதி ஆளில்லா விமானம் ஒன்று பறக்கவிடப்பட்டு, 2 கிலோ மீட்டர் அளவிலான சுற்றுவட்டார பகுதிகளை அது கண்காணித்த பின்னரே உடல்கள் ஒப்படைக்கப்பட்டன.

இந்நிலையில், ஸ்னோலின், தமிழரசன், காளியப்பன் ஆகியோரது உடல்களை வாங்க அவரது உறவினர்கள் மறுத்துவிட்டனர்.

ஸ்டெர்லைட் ஆலையை அகற்றி, அந்த இடத்தில் உயிரிழந்தவர்களுக்கு நினைவுத் தூண் கட்ட வேண்டும் என்று அவர்களது உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

துப்பாக்கிச்சூடு நடத்த யார் அனுமதி அளித்தார்கள் என்று கேள்வி எழுப்பிய அவர்கள், இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர், எஸ்.பி, டி.எஸ்.பி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.

இருவரின் உடல்கள் ஒப்படைப்பு இருவரின் உடல்கள் ஒப்படைப்பு

ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்தது வெறும் கண்துடைப்புதான் என்றும் அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

"நீதிமன்ற உத்தரவு இருந்தாலும், முறையாக உடற்கூறாய்வு நடைபெறுகிறதா என்பதில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது" என்று அவர்கள் கூறினர்.

இந்நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவம

https://www.bbc.com/tamil/india-44319271

Link to comment
Share on other sites

ஸ்டெர்லைட்: துப்பாக்கிச்சூட்டில் இறந்த 17 வயது ஸ்னோலின் உடல் அடக்கம்

தூத்துக்குடியில் கடந்த மே 22 அன்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது காவல் துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இறந்த 17 வயது மாணவி ஸ்னோலின் உடல் இன்று அடக்கம் செய்யப்பட்டது.

ஸ்னோலின் உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உறவினர்களிடம் ஒப்படைப்புபடத்தின் காப்புரிமைNEWS MINUTE

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் உடல்களில் தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் முதல் கட்டமாக ஏழு பேரின் உடல்களுக்கு பிரேத பரிசோதனை நடத்தினர்.

இதனிடையே துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் உடலை பிரேத பரிசோதனை நடத்த தடை விதிக்க கோரியும் ஜிப்மர் மற்றும் எய்ம்ஸ் மருத்துவ குழு தலைமையில் பிரேதபரிசோதனை நடத்தபட வேண்டும் என வழக்கு தொடரப்பட்டதின் அடிப்படையில் ஏற்கனவே பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட ஏழு பேரின் உடலை மட்டும் மறு பிரேத பரிசோதனை நடத்தி உறவினர்களிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

  •  

இதனை தொடர்ந்து கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வந்த ஆறு பேர் அடங்கிய மருத்துவ குழு ஏழு பேரின் உடலை மறு பிரேத பரிசோதனை நடத்தி உயிர்யிழந்தவர்களின் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

ஆனால் ஸ்டைர்லைட் ஆலையை முற்றிலும் அகற்றி அந்த இடத்தில் துப்பாக்கி சூட்டில் உயிர்யிழந்த 13 பேருக்கும் நினைவுத் தூண் அமைக்க வலியுறுத்தி தமிழரசன்,காளியப்பன் மற்றும் ஸ்னோலின் ஆகியோரது உடலை வாங்க உறவினர்கள் மறுத்தனர்.

இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர், வட்டாச்சியர் மற்றும் வருவாய் கோட்டாச்சியர் தலைமையில் உறவினர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. நேற்று காளியப்பன் மற்றும் தமிழரசனின் உடலை உறவினர்கள் பெற்று கொண்டனர்.

ஸ்னோலின் உடலை நேற்று இரவு வரை அரசு எங்களது கோரிக்கையை ஏற்றால் மட்டுமே உடலை பெற்று கொள்வோம் என உறவினர்கள் உடலை வாங்க மறுத்து வந்தனர். இன்று காலை மீண்டும் அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

ஸ்னோலின் உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உறவினர்களிடம் ஒப்படைப்பு

இப்பேச்சுவார்த்தையில் இனி ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடியில் இயங்க தமிழக அரசு அனுமதிக்காது,விரைவில் உங்களது கோரிக்கைகள் அனைத்தும் அரசு நிறைவேற்றும் என உத்தரவாதம் அளித்ததின் பெயரில் இன்று பகல் 11 மணியளவில் ஸ்னோலின் உடலை உறவினர்கள் பெற்று கொண்டனர். அரசு மருத்துவமனையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் ஸ்னோலின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு மினி சகாயபுரம் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.

மேலும் முது நிலை காவல் கண்காணிப்பாளர் விபூல் பிரிட்டோ பிரசாந்த, ரஜ்வீர், நிதின்குமார், அருண் தியாகி, லால்பகர் உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட தேசிய மனித உரிமை ஆணையத்தின் குழு நேற்று மாலை தூத்துக்குடி வந்தடைந்தது. இந்தக் குழு முதற்கட்டமாக நேற்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் ஆலோசனை நடத்தியது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தென்மண்டல ஐ.ஜி. சைலேஸ்குமார் யாதவ், நெல்லை சரக டி.ஐ.ஜி. கபில்குமார், தூத்துக்குடி எஸ்.பி. முரளி ரம்பா ஆகியோர் கலந்து கொண்டனர். மனித ஆணைய குழு இன்று தூத்துகுடி மாவட்டதில் கலவரம் நடைபெற்ற பகுதியை பார்வையிட்டனர்.

துப்பாக்கி சூட்டியில் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கபட்டவர்களிடம் விசாரனை நடத்தியபின், தூத்துக்குடி மாநகராட்சியின் மேற்கு மண்டல அலுவலகத்தில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த கார்த்திக் குடும்பத்தினருடன் தேசிய மனித உரிமை ஆணையத்தின் குழு முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளது.

https://www.bbc.com/tamil/india-44346518

Link to comment
Share on other sites

"எங்கள் வேலை போனாலும், ஆலையை மூடியதில் மகிழ்ச்சி": ஸ்டெர்லைட் ஊழியர்கள்

ஸ்டெர்லைட் ஊழியர் விஜயபாலன் Image captionஸ்டெர்லைட் ஊழியர் விஜயபாலன்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட நிலையில், அதன் ஊழியர்கள் தங்களுக்கு மாற்றுத் தொழில் அமைத்துத் தர வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையில் வேலை வேண்டாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

தூத்துக்குடி மக்களின் தொடர் போரட்டத்தையடுத்து கடந்த மாதம் 28ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

ஆலையில் நிரந்திர ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் சார்பு தொழிலாளர்கள் என முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் அந்த ஆலையை நம்பி வாழ்ந்து வருகின்றனர். தமிழக அரசின் திடீர் நடவடிக்கையால், அவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

இதனிடையே அங்கு பணிபுரிந்து வந்த ஒப்பந்த ஊழியர்களை கடந்த மே 22ஆம் தேதி முதலே வேலையில் இருந்து நிறுத்திவிட்டதாகவும், இனிமேல் பணிக்கு வர தேவை இல்லை என ஒப்பந்த ஊழியர்களுக்கு ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஊழியர் ரமேஷ் Image captionஊழியர் ரமேஷ்

ஆனால் அதில் ஊதியம் குறித்த எந்தவித தகவலும் இல்லாததால் ஊழியர்கள் அனைவரும் செய்வதறியாது திகைத்துள்ளனர்.

இது குறித்து ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் சார்பு தொழிலாளர்களிடம் பிபிசி பேசியது.

"நான் பதினைந்து ஆண்டுகளாக ஸ்டைர்லைட் ஆலையில் வேலை செய்கிறேன். இந்த திடீர் மூடல் என்பது எங்களுக்கு குடும்ப ரீதியா கஷ்டம் தான். இன்று வரை எங்களுக்கு வேலை இருக்கிறதா இல்லையா என்று தெரியாத நிலையில்தான் 3000 பேரும் இருக்கிறோம்" என்று கூறுகிறார் ஊழியர் தங்கபாண்டி.

கடந்த மாதத்திற்கான ஊதியம் வருமா என்று தெரியாமல் இருக்கும் அவர், தன் குழந்தைகளுக்கான பள்ளிக் கட்டணத்தை எவ்வாறு செலுத்த போகிறோம் என்ற கவலையில் உள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரை சந்திக்க உள்ளதாகக் கூறிய அவர், "ஸ்டைர்லைட் ஆலையை மூடியது தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக" தெரிவித்தார்.

"புதிதாக ஆலையை விரிவாக்கம் செய்தால், எங்கள் ஊரே காணாமல் போயிடும். கம்பெனிக்குள்ள மாஸ்க் இல்லாம இருக்க முடியாது. ஒரு அடி தோண்னாலும் ஆசீட் தண்ணீ வருது. எங்களுக்கு மாவட்ட ஆட்சியர் மாற்று வேலைக்கு வழி செய்து கொடுக்க வேண்டும்" என்றும் தங்கபாண்டி கூறினார்.

இதுகுறித்து பேசிய ஒப்பந்த ஊழியர் ரமேஷ், "ஆலையில் பணிபுரிந்ததால் தோல் நோய், ஆஸ்தும்மா போன்ற நோய்கள் வருவதாகவும் வேறு வழி இல்லாமல் அங்கு வேலை செய்து வருவதாகவும்" குறிப்பிட்டார்.

ஊழியர்கள்

ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தூத்துக்குடி மக்களுக்கு ரொம்ப சந்தோஷம் என்கிறார் லாரி எடை மேடை ஊழியர் மணிகண்டன்.

"ஆலைக்கு தினமும் எங்க அண்ணன்தான் குடிநீர் சப்பளை செஞ்சாங்க. இப்ப தொழில் இல்லாம் கஷ்டப்படுறான். நாங்க மாற்று வழியை தான் பாக்கனும். இருந்தாலும் மக்கள பாதிக்கிற ஸ்டைர்லைட் எங்களுக்கு வேண்டாம்" என்று கூறுகிறார் ஆனந்த்.

ஸ்டெர்லைட் ஆலையில் வேலைக்கு சேர்த்து விட்ட, காண்ட்ராக்ட் நிறுவனம் சார்பில் ஒரு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

அதில், "மே 22ஆம் தேதியில் இருந்து எங்கள் வேலை முடிந்தது எனவும், எங்களுக்கான செட்டில்மென்ட் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதில் எந்த விதமான தெளிவும் இல்லை. மேலும், வேலையை விட்டு நீக்க வேண்டும் என்றால் ஒரு மாதத்திற்க்கு முன்பே அறிவிக்க வேண்டும் என்ற ஒப்பந்தம் உள்ளதாக" ஒப்பந்த ஊழியர் சோமசுந்தரம் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/india-44342498

Link to comment
Share on other sites

இந்த கொடுமையெல்லாம் வெளியே தெரிய கூடாது 
என்பதற்காகதான் இண்டர்நெட் cut பன்னியது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.