Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மத­வா­தி­க­ளால் சீர­ழிகின்ற- இலங்­கைத் திரு­நாடு!!

Featured Replies

மத­வா­தி­க­ளால் சீர­ழிகின்ற- இலங்­கைத் திரு­நாடு!!

 

61044_441392988800_754613800_5026948_400

 
 
 

‘‘இந்த நாட்­டின் பெரும்­பான்­மை­யி­ன­மான பெளத்த சிங்­கள மக்­க­ளை­யும், பெளத்த தேரர்­க­ளை­யும் கட்­டுப்­ப­டுத்­து­கின்ற முயற்­சி­க­ளில் அரசு ஈடு­பட்­டுள்­ள­தாக மகிந்த கூறி­யி­ருப்­பது சிறு­பிள்­ளைத் தன­மா­னது. மதத் தலங்­கள் கட்­டுப்­பா­டு­க­ளின்றி நிர்­மா­ணிக்­கப்­ப­டு­வ­தைத் தடுக்­கும் வகை­யி­லான சட்­ட­மூ­லம் ஒன்றை அரசு தயா­ரித்து வரு­வ­தைத் திரி­பு­ப­டுத்­திக் கூறி, மக்­களை அர­சுக்கு எதி­ரா­கக் கிளர்ந்ெ­த­ழச் செய்­வதே மகிந்­த­வின் நய­வஞ்­ச­கத் திட்­ட­மா­கும். பெளத்த மதத்­தின் ஆதிக்­கம் அர­சி­னுள் நிலை பெற்­று­வ­ரும் நிலை­யில், மகிந்­த­வின் கருத்து வெளி­யா­கி­யுள்­ளது. எந்­த­வொரு நாட்­டி­லும் அர­சின் நட­வ­டிக்­கை­களில் மதம் நுழை­யு­மா­னால் அந்த நாட்­டில் அமை­தியை எதிர்­பார்க்க முடி­யாது. மத ரீதி­யான மோதல்­க­ளைத்­தான் காண­மு­டி­யும்.

இன­வா­தத்தை வளர்க்க முனை­யும்
பௌத்த மதத் தேரர்­கள்

அர­சி­ய­லும், மத­மும் இரு வேறு துரு­வங்­கள். இவை இணை­வ­தற்­கான வாய்ப்பே கிடை­யாது. ஆனால் சில நாடு­க­ளில் எதிர்­பா­ராத வகை­யில் அர­சி­ய­லில் மதம் கலந்து பெரும் பிரச்­சி­னை­களை ஏற்­ப­டுத்தி வரு­கின்­றது. எமது நாடும் இதற்கு விதி­வி­லக்­கல்ல. இலங்­கை­யொரு பெளத்த சிங்­கள நாடு என அர­ச­மைப்­பில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தால், பெளத்த தேரர்­கள் அரச நிர்­வா­கத்­தில் தலை­யி­டு­கின்ற செயற்­பா­டு­க­ளில் தீவி­ர­மாக ஈடு­பட்டு வரு­கின்­ற­னர். நாட்­டின் இனப் பிரச்­சினை மோச­மான கட்­டத்தை எட்­டி­ய­தற்கு பெளத்தமதத் தலை­வர்­க­ளைத்­தான் கார­ண­மா­கக் கூற முடி­யும். இன­வா­தம் பேசிப்­பே­சியே, இந்த நாடு சீர­ழிந்த நிலை­யில் காணப்­ப­டு­கின்­றது. இனங்­க­ளுக்­கி­டை­யில் பிள­வு­களை ஏற்­ப­டுத்­தி­ய­தும் இன­வா­தம்­தான். இந்த இன­வா­தத்­தின் ஊற்­றுக்­கண்­ணாக பெளத்த மதத் தலை­வர்­கள் உள்­ளமை கண் கூடு. சிறு­பான்­மை­ யி­ன­ருக்கு உரிமையும் எதை­யும் வழங்­கக்­கூ­டாது என்­ப­தில் பிடி­வா­த­மா­கச் செயற்­பட்டு வரும் இவர்­கள் நாட்­டைப் பற்றி சிறி­த­ள­வா­வது சிந்­திப்­ப­தா­கத் தெரிய வில்லை.

 

போரை ஊக்­கு­விக்­கும்
நிலைப்­பாட்­டில் செயற்­ப­டும்
பௌத்த மதத் துற­வி­கள்

தமி­ழர்­க­ளின் பிர­தேசங்க­ளில் மழைக் காளான்­க­ளைப் போன்று பெளத்த விகா­ரை­கள் முளைத்து வரு­கின்­றன. சில பகு­தி­க­ளில் முன்­னர் இருந்து சேத­ம­டைந்த இந்து ஆல­யங்­கள் புன­ர­மைக்கப் படாத நிலை­யில் அந்த இடங்­க­ளில் விகா­ரை­கள் அமைக்­கப்­ப­டு­வ­தை­யும் காண முடி­கின்­றது. இதன் பின்­ன­ணி­யில் பெளத்­த­தே­ரர்­கள் சிலர் உள்­ளமை தெளி­வா­கத் தெரி­கின்­றது. அன்­பை­யும், அகிம்­சை­யையும் போதித்த புத்த பெரு­மான், கண்ட கண்ட இடங்­க­ளி­லும் தமது சிலை­களை வைக்­கு­மாறு ஒரு­போ­தும் கூறி­ய­தில்லை. கலிங்க நாட்­டின் மீது படை­யெ­டுத்து அந்த நாட்­டைச் சூறை­யா­டிய மாமன்­னன் அசோ­கன், அழி­வு­க­ளை­யும், உயி­ரி­ழப்­புக்­க­ளை­யும் கண்டு மனம் வெதும்பி ஆட்­சி­யைத் துறந்து பெளத்­தத்­தைத் தழு­வி­ய­தாக வர­லாறு கூற­கின்­றது. அவ­னது இரண்டு பிள்­ளை­க­ ளான மகிந்­த­னும், சங்­க­மித்­தி­ரை­யும் பெளத்த துற­வி­க­ளாக மாறி அந்த மதத்தை இலங்­கைக்­கும் கொண்டு வந்து பரப்­பி­ய­தா­கக் கூறப்­ப­டு­வ­துண்டு. ஆனால் இங்­குள்ள பெளத்த துற­வி­கள் போர் முனை­க­ளுக்­குச் சென்று படை­யி­ன­ருக்கு ஆசிர்­வா­தம் வழங்­கு­வ­தும், போரை ஊக்­கு­விப்­ப­தும் பெளத்த தர்­மத்­துக்கு முர­ணா­னது.

தமிழ் மக்­க­ளால் பெரி­தும் எதிர்பார்க்­கப்­பட்ட புதிய அர­ச­மைப்­பின் உரு­வாக்­கம் மகா­நா­யக்க தேரர்­க­ளின் எதிர்ப்­புக் கார­ண­மாக கிடப்­பில் போடப்­பட்­டுள்­ளது. இது மீண்­டும் உயிர் பெற்று எழுமா? என்­பது சந்­தே­கத்­துக்­கு­ரி­யது. அண்மையில் இடம்பெற்ற சிறு­பான்மை முஸ்­லிம் மக்­க­ளுக்கு எதி­ரான வன் செயல்­க­ளி­லும் பெளத்த தேரர்­க­ளுக்­குப் பங்கு உள்­ள­தென்­பதை மறுக்க முடி­ய­வில்லை. இவை­யெல்­லாம் பெளத்த மதத்­துக்­கும், உண்­மை­யான பௌத்­தர்­க­ளுக்­கும் நிச்­ச­ய­மா­கப் பெருமை சேர்க்­காது.

கட்­டுப்­பா­டற்ற விதத்­தில்
மதத் தலங்­கள் நிர்­மா­ணிப்­ப­தைத்
தடுக்­கும் சட்ட மூலம் நாட்­டின் சகல
மதத்­த­வர்­க­ளுக்­கும் ஏற்­பு­டை­யதே

அரசு தயா­ரி்த்து வரும் கட்­டுப்­பா­டற்ற விதத்­தில் மதத் தலங்­கள் நிர்­மா­ணிக்­கப்­ப­டு­வ­தைத் தடுக்­கும் சட்ட மூலம், சகல மதங்­க­ளுக்­கும் பொது­வா­னது. பெளத்த மதத்தை மட்­டுமே கட்­டுப்­ப­டுத்­து­கின்ற ஒன்­றல்ல. தற்­போது மத வழிப்­ப­டுத்­த­லங்­கள் கட்­டுப்­பா­டு­கள் எது­வு­மின்றி கண்ட இடங்­க­ளி­லும் அமைக்­கப்­ப­டு­வ­தைக் காண முடி­கின்­றது.

ஆனால் இந்­தச் சட்ட மூலம் நிறை­வேற்­றப்­ப­டு­மா­ யின், தமி­ழர் பிர­தே­சங்­க­ளில் பெளத்த விகா­ரை­களை அமைக்­கும் பணி­க­ளுக்­குத் தடை­யேற்­பட்டு விடு­மென மகிந்த ராஜ­பக்ச அஞ்­சு­வ­தா­கத் தெரி­கின்­றது. இந்த விட­யத்­தில் பெரும்­பான்­மை­யி­ன­ரைத் தூண்­டி­விட்டு அர­சி­யல் ஆதா­யம் பெறு­வதே அவ­ரது நோக்­க­மெ­னத் துணிந்து கூற­லாம்.

பெளத்­தம் தவிர்ந்த ஏனைய மதத் தலை­வர்­கள் மீது பொது­வாக குற்­றச்­சாட்­டுக்­கள் எது­வும் இங்கு எழு­வ­தில்லை. அவர்­கள் தமது பணி­களை அமை­தி­யா­கவே செய்­து­கொண்­டி­ருக்­கின்­ற­னர். ஆனால் பெளத்­த­ம­தத் தலை­வர்­கள் அவ்­வா­றின்றி, சகல விட­யங்­க­ளி­லும் குறிப்­பாக அர­சி­ய­லில், தீவி­ர­மாக மூக்கை நுழைத்து வரு­கின்­ற­னர். அர­சி­யல் வாதி­கள் தமது வாக்கு வங்­கி­யைக் கருத்­தில் கொண்டு பெளத்த துறவிகள் சொல்­வ­தற்­கெல்­லாம் தலை­யாட்டி வரு­கின்­ற­னர். இதன் கார­ண­மா­கவே நாட்­டில் குழப்­பங்­கள் நில­வு­வ­தோடு இனங்­க­ளுக்­கி­டை­யில் அமை­தி­யின்­மை­யும் காணப்­ப­டு­கின்­றது.

ஆட்­சித் தலை­வர்­கள் மத­வா­தி­க­ளின் அடி­மை­க­ளாக இருக்­கும் வரை­யில், அவர்­க­ளால் எந்­த­வொரு தீர்­மா­னத்­தை­யும் சுதந்­தி­ர­மாக மேற்­கொள்ள முடி­யாது. இத­னால் நாட்டு மக்­களே பாதிக்­கப்­ப­டு­வார்­க­ளென்­பதை மறுத்­து­ரைக்க முடி­யாது.

http://newuthayan.com/story/12/மத­வா­தி­க­ளால்-சீர­ழிகின்ற-இலங்­கைத்-திரு­நாடு.html

  • கருத்துக்கள உறவுகள்

மத‌ வியாபாரிகளே உலக செல்வந்தர்கள். இவர்கள் எல்லா மத்திலும் உண்டு.எந்த வேலையும் உடல் வலிந்து செய்யாமல் மற்றவர்களின் உழைப்பில் வாழ்ந்து வருபவர்கள். உண்மையாக இறைவனுக்கு சேவை செய்வோர் மிகவும் கஷ்டப்படுகின்றார்கள். இயற்கையே இறைவன். எந்த வித ‍‍‍‍accountability / transparency , எதுவுமே காட்டாதவர்கள்.

Religion the opium of the masses - Karl Marx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.