Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காலக்கூத்து திரைவிமர்சனம்

Featured Replies

காலக்கூத்து திரைவிமர்சனம்

 

காலக்கூத்து திரைவிமர்சனம்
 
 

காலக்கூத்து திரைவிமர்சனம்

காதல் பிரச்சனை, சாதியப் பிரச்சனை என எத்தனையோ இன்னும் இந்த சமூகத்தில் நடக்கும் அவலத்தை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். அதிலும் சில கொடூர சம்பவங்கள் அரங்கேறுகிறது.

அதிலும் சில படங்களில் முகம் தெரிந்த நடிகர்கள் இருப்பதால் சற்று கவனம் பெறுகின்றன. அந்த வகையில் உண்மை பின்னணியை மையமாக கொண்டு காலக்கூத்து வந்துள்ளது.

என்ன சொல்கிறது இந்த கூத்து? உள்ளே போகலாமா..

கதைக்களம்

நடிகர் பிரசன்னாவிற்கு பின்னால் ஒரு சோகப்பின்னணி. தனிமையில் இருக்கும் இவருக்கு பள்ளி தோழனாக கலையரசன் இருக்கிறார். இவர்கள் நண்பர்கள் ஆனது சோக சம்பவத்தால் தான்.

ஒன்று சேர்ந்திருக்கும் இவர்களுக்கு தனித்தனியே காதல் பக்கங்களும் இருக்கிறது. சில விசயங்களால் விரக்தியில் இருக்கும் பிரசன்னாவின் மீது சிருஸ்டி டாங்கேவுக்கு காதல் வருகிறது.

பெண் கேட்க வீட்டிற்கு செல்லும் போது எதிர்பாராத சம்பவம் நடந்தேறுகிறது. இன்னொரு பக்கம் கலையரசனுக்கு தன்ஷிகாவின் மீது காதல். இவர்கள் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் வீட்டை விட்டு பிரிகிறார்கள். இதற்கிடையில் சாலையில் வந்த பகையால் பிரச்சன்னாவின் உயிருக்கு ஆபத்து.

தன்ஷிகா கலையரசன் ஜோடி ஒன்று சேர்ந்தற்கு வீட்டில் எதிர்ப்பு. கலையரசனின் உயிருக்கும் ஆபத்து நேர்கிறது. கலையரசனுக்கு என்ன நடந்தது? பிரசன்னாவுக்கு வந்த ஆபத்து யாரால்?

மூவரும் பிழைத்தார்களா? காலப்போக்கில் நடக்கும் கூத்துக்கள் இவர்களை என்ன செய்தது என்பதே கதை.

படத்தை பற்றிய அலசல்

நடிகர் பிரசன்னா வில்லனாக நடித்து அசத்தியவர். ஹீரோவாக அவர் சில படங்களில் நடித்திருந்தாலும் அதெல்லாம் அவருக்கு கைகொடுக்கவில்லை. சமீபகாலமாகவே அவர் சில படங்களில் முக்கியமான கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்

கடைசிவரை கதையுடன் பயணித்தலும் அவர் ஒரு செகண்ட் ஹீரோ போல தான். ஆனால் அவர் வந்து போகும் காட்சிகள் முக்கியத்துவம் பெருகிறது. பிரசன்னா உங்க திறமைக்கு இது சாதாரணமாக தான் படுகிறது.

கலையரசன் ஏற்கனவே கபாலி படத்தின் மூலம் பாராட்டை வாங்கினார். இவர் தான் காலக்கூத்தின் மெயின் ஹீரோ. ஒரு சாதாரண இளைஞனுக்குள் காதல் வந்தால் அவன் எப்படி இருப்பான் என ஸ்மார்ட்டாக காட்டியிருக்கிறார். திறமையான நடிகரான உங்களுக்கு படங்களை தேர்வு செய்வதில் கொஞ்சம் கவனம் தேவை.

தன்ஷிகா படத்தின் ஹீரோயின். மதுரை பெண்ணாக அப்படியே மாறியிருக்கிறார். பேச்சில் அவர் அந்த தனி பாஷையை அப்படியே உள்வாங்கியிருக்கிறார். கலையரசனுக்கும் இவருக்கு கெமிஸ்ட்டிரி சூப்பர். அதிலும் குறிப்பாக அந்த முதலிரவு பாடல் கூடுதல் இம்பிரஷன்.

சிருஸ்டி டாங்கே எப்பவும் போலவே இந்த படத்திலும் சில காட்சிகள் தான். ஆனால் அவருக்கு கதாபாத்திரம் ஒட்டவில்லையோ என தோன்றுகிறது. பிரசன்னா சிருஸ்டி ஜோடியை பார்க்கையில் ஏதோ மிஸ் ஆன ஃபில்.

முழுக்க முழுக்க மதுரையை மையமாக வைத்து படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர். ஆரம்பத்தில் கதை கொஞ்சம் மெதுவாக நகர்வது போல தான் இருந்தது. ஆனால் கிளைமாக்ஸ் மட்டுமே கொஞ்சம் ஸ்பீடு.

திறமையான பிரபலங்கள் இன்னும் கொஞ்சம் பயன்படுத்தியிருக்கலாம் இயக்குனரே. கதையை கரெக்ட்காக சொல்லியிருக்கிறீர்கள். கதைக்கேற்ற எளிமையான ஒளிப்பதிவு என்றாலும் அழகாக காட்டியிருக்கிறார்கள்.

கண்ண கட்டி பாடலால் மனதை ஈர்க்கிறார் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன்.

கிளாப்ஸ்

கலையரசன், தன்ஷிகா பேசும் பாஷைகள். சின்ன சின்ன ரொமான்ஸ் இண்ட்ரஸ்டிங்.

காமெடி பிரபலங்கள் இல்லாத குறையை நட்புவட்டார காமெடிகள் நிவர்த்தி செய்கிறது.

இனிமையான கேட்கும் படியான பாடல்கள்.

பல்ப்ஸ்

வந்த ஜோரில் அடுத்தடுத்த பாடல்களால் கொஞ்சம் இடஞ்சல்.

பிரசன்னா, சிருஷ்டி காட்சிகள் வந்த வேகத்தில் பிரேக் அவுட்டானது திருப்தியாகல.

மொத்தத்தில் காலக்கூத்து காதலர்கள் மனதில் இடம் பிடிக்கும்.

http://www.cineulagam.com/films/05/100936?ref=reviews-feed

  • தொடங்கியவர்

மதுரை சம்பந்தப்பட்ட படம்னாலே இப்படித்தான் எடுக்கணுமா இயக்குநரே..!? - 'காலக்கூத்து' விமர்சனம்

 
 

ஒரே வருடம் ஒரே நாளில் பிறந்த வெவ்வேறு குணாதிசயங்கள் உள்ள இருவரின் கதைதான் இந்த 'காலக்கூத்து'.

தாய் தந்தையை இழந்த ஈஸ்வரன் (பிரசன்னா) தன் தாத்தாவால் அரசுப் பள்ளியில் சேர்க்கப்படுகிறான். எப்போதும் தனிமையில் விரக்தியுடன் இருக்கும் இவனுக்கு தனக்கு பிறந்தநாள் என்று ஹரி (கலையரசன்) மிட்டாய் கொடுக்கிறான். அதற்கும் அவனிடமிருந்து நோ ரியாக்‌ஷன் என்பதால் கோபமடைந்த ஹரி வார்த்தைகளை விட, இருவருக்கும் சண்டை ஏற்படுகிறது. இந்தச் சண்டை எப்படி சரியாகி இவர்களுக்குள் நட்பு மலர்கிறது? அந்த நட்பில் காலம் எப்படி விளையாடுகிறது என்பதே 'காலக்கூத்து' படத்தின் கதை. 

 

காலக்கூத்து

பள்ளியில் இருந்த அதே லந்தோடு வேலைக்கு செல்லாத இளைஞனாக மதுரையை வலம் வருகிறார் கலையரசன். தன் காதலி தன்ஷிகாவை பார்க்க எந்நேரமும் கல்லூரிக்கு முன்னிருக்கும்  டீக்கடையில் அலப்பறை செய்துகொண்டு சிகரெட் பிடிப்பதுதான் இவரது ஹாபி. இவருக்கு நேர்மாறாக ஆட்டோ மொபைல் வொர்க் ஷாப்பில் வேலை பார்த்து வரும் பிரசன்னாவை, மறைந்திருந்து சைட் அடிக்கும் ஸ்ருஷ்டி டாங்கே என கதை நகர்கிறது. ஸ்ருஷ்டி பிரசன்னா மீது வைத்திருக்கும் காதலை கலையரசன் சொல்ல, 'சின்ன வயசுல இருந்து எனக்குன்னு யார் இருந்தாலும் அவங்க இறந்துடுறாங்க. ஏன் இந்தப் புள்ள நல்லாயிருக்குறது பிடிக்கலையா?' என்று கேட்க, 'உனக்கு பிடிச்சுதுனா, சொல்லு என்ன நடந்தாலும் பாத்துக்கலாம்' என்கிறார் கலையரசன். மறுநாள், பயந்து பயந்து தன் காதலை நேரடியாக பிரசன்னாவிடம் சொல்லும் ஸ்ருஷ்டியிடம் 'பிடிச்சிருக்கு' என்று சட்டென ரிப்ளை செய்து இருவரும் காதலிக்க ஆரம்பிக்கின்றனர்.  இந்த இரண்டு காதல் ஜோடிகளுக்கும் என்ன மாதிரியான பிரச்னைகள் வருகிறது, அதை எப்படி எதிர்கொள்கிறார்கள்? இதற்கிடையில், கவுன்சிலர் மகனுக்கும் பிரசன்னாவுக்கு ஏற்படும் வாய்க்கால் தகராறு, இறுதியில் அவர்கள் தங்கள் காதலியை கரம் கோர்க்கிறார்களா இல்லையா என்பதே படத்தின் மீதி கதை. 

காலக்கூத்து

மண் வாசம் வீச வேண்டும் என்று நினைத்து மதுரை பேச்சு வழக்கை திணித்திருக்கிறார் இயக்குநர்  நாகராஜன். வசனங்களை கேட்கும்போது 'அதான் எல்லாரும் வந்துட்டாய்ங்கல்ல... அப்புறம் என்ன ஏஏஏ...னு இழுத்துட்டு இருக்க' என்ற 'மாயி' பட காமெடி வசனம்தான் ஞாபகத்திற்கு வருகிறது. மதுரை சம்பந்தப்பட்ட படம் என்றாலே இப்படித்தான் எடுக்க வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. யாருக்கு என்ன நடந்தா நமக்கு என்ன, குடிப்பதிலும் வெட்டி பந்தாவிடுவதுமாக ஒரு கேரக்டர் படம் முழுக்க கலையரசனுடனே வருகிறது. ஸ்ருஷ்டியின் ரோல் எதற்கு என்றே தெரியவில்லை. இருந்தாலும், அவர் சின்ன சின்ன எக்ஸ்ப்ரஷனில் தன் பங்கை சரியாக செய்திருக்கிறார். பல இடங்களில் டிவி சீரியல் சாயலை கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பி.வி. சங்கர். ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் பாடல்கள் ஓகே ரகம். பாடல்களுக்காக மட்டும் பல நாடுகளுக்கு செல்லும் இயக்குநர்களுக்கிடையே ஒரு தெரு, ஒரு கோவில், பெட்ரூம் என ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு இடத்தில் மட்டுமெடுத்து தயாரிப்பாளருக்கு மிச்சபடுத்திக் கொடுக்கும்  இயக்குநரும் தமிழ் சினிமாவில் இருக்கிறார் என்பது நல்ல செய்திதான். ஆனால், அதற்கும் கொஞ்சம் மெனக்கெட்டு சுவாரஸ்யமாக எடுத்திருந்தால் கூடுதல் பாராட்டுகள் கிடைத்திருக்கும். படத்தின் இறுதியில் வரும் மெசேஜிற்கும் படத்திற்கும் சம்பந்தமே இல்லையே என நினைக்க வைக்கிறது.  பிரசன்னா, கலையரசன், தன்ஷிகா மூவரும் படத்தின் க்ளைமாக்ஸில் நன்றாக ஸ்கோர் செய்திருக்கிறார்கள். நல்ல நடிகர்களை வைத்து படமெடுத்த இயக்குநர், அவர்களுக்கு நடிக்க வாய்ப்பு கொடுக்கவில்லை என்பதுதான் வருத்தமான செய்தி. அடுத்த முறையாவது நடிகர்களுக்கு நடிக்க ஒரு வாய்ப்பு கொடுங்கள் இயக்குநரே!

இந்தப் படத்தைப் பார்க்க வந்ததும் ஒரு வேளை 'காலக்கூத்து'தானோ ? 

https://cinema.vikatan.com/movie-review/126056-kaalak-koothu-movie-review.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.