Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழ்வாதாரத்துக்காகப் போராடிக் கொலையுண்ட தமிழர்களின் சாவைக் கொண்டாடும் வெறிகொண்ட ஆரியர்கள்!

Featured Replies

வாழ்வாதாரத்துக்காகப் போராடிக் கொலையுண்ட தமிழர்களின் சாவைக் கொண்டாடும் வெறிகொண்ட ஆரியர்கள்!

பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி

கஞ்சி குடிப்பதற்கிலார்! அதன் காரணம் இவை எனும் அறிவுமிலார்! - மகாகவி பாரதியார்.

பாரதியின் குமுறல் இன்றும் விடுதலை இந்தியாவில் தணிந்தபாடில்லை! தமிழன் தன் வரலாறைப் பாதுகாக்கவும் இல்லை! புரிந்துகொள்ளவும் இல்லை!! வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளவும் இல்லை!!!

"History Repeats Itself!"  

என்றொரு ஆங்கிலப் பழமொழி உண்டு. "நிகழ்ந்த வரலாறே மீண்டும் மீண்டும் நிகழும்" என்பதன் பொருள் மனிதன் வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்வதில்லை என்பதுதான்.

"ஒருத்தனாவது சாகணும்" என்று வெறிகொண்டு அலைந்த காவலன் ஒருவனின் காணொளித் துண்டை தொலைக்காட்சியில் கண்டபோது

"என் துப்பாக்கியில் ரவைகள் தீர்ந்துவிட்டன! இல்லையேல் இன்னும் பலரைச் சுட்டுக் கொன்றிருப்பேன்!" என்று கொக்கரித்த மேலைஆரிய வெள்ளையன் ஜெனெரல் ஓ டயர் இன்று உயிருடன் மீண்டு வந்திருக்கிறான் தூத்துக்குடிக்கு என்பது புரிந்து போனது. ஒரே வேறுபாடு, இன்று அவன் நேரடியாக வந்து சுடவில்லை; கீழை ஆரியனாக தன்னை மீட்டுருவாக்கம் செய்துகொண்டுவிட்டானோ என்று நம்மை எண்ண வைக்கின்றது வடஇந்தியத் தொலைக்காட்சிகளில் "செத்தவர்கள் மாவோயிஸ்டுகள்!" என்று கொக்கரிக்கும் தமிழகத்தில் வசிக்கும் ஆரியர்களின் கூச்சல்..

ஏனைய மாநிலங்கள் அனைத்தும் துரத்திவிட்ட ஸ்டெர்லைட் நச்சு ஆலையைத் தூத்துக்குடியில் நிறுவினர். அன்றாடம் அவ்வாலை வெளியேற்றும் நச்சுக்கழிவுகளால் குடிக்கும் நிலத்தடி நீர், சுவாசிக்கும் காற்று அனைத்தும் நஞ்சாகிப் போனதால் ஏற்பட்ட பல்வேறு நோய்களால் கொத்துக்கொத்தாக சகமனிதர்கள் சாவதைப் பொறுக்க இயலாமல், இனி அரசியல்வாதிகளை நம்பிப் பயனில்லை என்று அப்பகுதி மக்களே ஒன்றுதிரண்டு முன்னெடுத்த நெடுநாள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரத் தன் மக்களையே கொன்று, அச்சத்தை உருவாக்கும் கொலைபாதகத்தை, நிறைவேற்றியுள்ளதாகக் குற்றம் சாட்டுகின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள்.

சுவாசிக்கக் காற்றுக்கும், குடிக்க நீருக்கும் நீதி கேட்டுப் போராடிய அப்பாவித் தமிழர்களை 'மாவோயிஸ்டுகள்' என்று முத்திரை குத்தி, காவல்துறையை ஏவிவிட்டுத் துப்பாக்கிக் குண்டுகளால் கொன்று தீர்த்ததைக் கொண்டாடிக் கொக்கரிக்கின்றன மக்கள் விரோத ஆரிய சக்திகள்!

"எங்களுக்கு வேலையும் வேண்டாம்! வளர்ச்சியும் வேண்டாம்! நாங்கள் சுவாசிக்கும் காற்றையும், குடிக்கும் நீரையும் நஞ்சாக்காமல் இருந்தாலே போதும்!" என்று கேன்சர் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் கொத்துக் கொத்தாகச் சாகும் தூத்துக்குடி மக்களின் கதறலைப் பொருட்படுத்தாமல், தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி அளிதத்தோடு நிற்காமல், இப்போதுள்ளவற்றைக் காட்டிலும் இருமடங்கு பெரிதான புதிய ஸ்டெர்லைட் விரிவாக்க ஆலைக்கும் அனுமதி அளித்தனர் மத்திய, மாநில அரசினர். 25 ஆண்டுகளாக ஆண்ட மத்திய, மாநில ஆட்சியாளர்களின்  துரோகச்செயலைப் பொறுக்க இயலாமல் நேரடியாகப் போராட்டத்தில் இறங்கிவிட்டனர் தூத்துக்குடி மக்கள்.    

ஸ்டெர்லைட்டிடம் விலைபோன அரசியல் கட்சிகளை நம்பமாட்டோம் என்கின்ற கருத்தை முன்வைக்கின்றனர் போராடும்  தூத்துக்குடி மக்கள்.  அசராமல் தாங்களே அமைதியான வழியில் தொடர்போராட்டங்களைத் தொடர்ந்தனர்; இப்போராட்டங்களை நிறுத்தவே ஜல்லிக்கட்டு பார்முலாவைக் கையிலெடுத்தனர் ஆட்சியாளர்கள் என்று வலுவாகக் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர் அப்பகுதி மக்கள்.  

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் போலீசே வாகனங்களுக்குத் தீவைத்ததைப் படம்பிடித்துச் சிலர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வைரலாக்கியதிலிருந்து பாடம் கற்றுக்கொண்ட ஆட்சியாளர்கள், இம்முறை போராட்டங்களை ஒடுக்க மாற்றுவழியைக் கையாண்டனர் என்ற குற்றச்சாட்டை ஊடகங்கள் முன்வைக்கின்றனர் போராடிய தூத்துக்குடி மக்கள். (இத்தனை முன்னேற்பாடுகளையும் தாண்டி, பொதுமக்களில் எவராவது சமூக வலைத்தளங்களில் கையும் களவுமாகப் பிடிபட்டவற்றைப் பதிவேற்றிவிட்டால் என்னசெய்வது என்று யோசித்தார்களோ என்னவோ, மாநில உள்துறை, தென்மாவட்டங்களில் இணையதளத்தையே ஐந்து நாட்கள் முடக்கிவைக்கும் முடிவை  அவசரநிலைப் பிரகடனம் செய்து கொண்டுவந்தது ஒரு தனிக்கதை.) சீருடை அணியாத போலீசைக் கொண்டும், சமூக விரோதிகளை ஏவியும் வாகனங்களுக்குத் தீவைக்கப்பட்டதாகப் போராடிய மக்களிடமிருந்து குற்றச்சாட்டுகள் எழுகின்றன. அமைதியாகப் போராடிய மக்களை நோக்கிக் கண்மூடித்தனமாகச் சுடுவதற்குக் காரணம் இப்போது கிடைத்துவிட்டது. பலரைச் சுட்டுக் கொன்றபிறகு, ஆட்சியாளர்களும் ஆரியக் கைக்கூலிகளும் செத்தவர்களை மாவோயிஸ்டுகள் என்று முத்திரை குத்துவது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் கொடுஞ்செயல்.
சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காரடி! கிளியே!

என்று பாடிய பாரதி, தூத்துக்குடிப் படுகொலைகளைக் கண்டிருந்தால்,

சொந்தச் சகோதரர்களைத் துடிதுடிக்கக் கொல்லல் கண்டும் சிந்தை இரங்காரடி! கிளியே!
மாவோயிஸ்ட் என்றாறடி! செத்தவர் மாவோயிஸ்ட் என்றாறடி! கிளியே!
அவர் கொல்லப்படல் இறையாண்மை தர்மமென்றாரடி!

என்று பாடியிருப்பார்.

"விஷமற்ற சுவாசக்காற்றும், விஷமற்ற குடிநீரும்" கேட்டுப் போராடிய குற்றத்துக்காகக் கொல்லப்பட்ட அப்பாவிப் பொதுமக்களின் சாவை, தமிழ்நாட்டில் வாழும் ஆரியர்களும், ஆரியக்கைக்கூலிகளும் "போராட்டத்தில் ஊடுருவிய மாவோயிஸ்டுகள்தான் கொல்லப்பட்டார்கள்! அவர்கள் கொல்லப்பட வேண்டியவர்களே! அவர்கள் செத்து ஒழியட்டும்!" என்று வடஇந்திய ஆரியக்கைக்கூலிகள் நடத்தும் தொலைக்காட்சிச் சேனல்களில் கொக்கரித்துக் கொண்டாடினார்கள். இவர்களின் கொக்கரிப்பை அப்படியே பரப்புரை செய்கின்றனர் ஆரியக்கொள்கையேற்ற அடிவருடித் தமிழினக் கோடரிக் காம்புகள். தம் உடன்பிறப்புக்களை ரத்தம் சொட்டச்சொட்டத் துடிதுடிக்கக் கொன்ற  படுகொலைச் சாவைக் கொண்டாடும் கொடூரர்களாக ஆரிய வெறிநாய்க்கடிபட்ட தமிழர்கள் வெறிகொண்டு கொக்கரிப்பதைக் கண்டு மனம் பதைக்கிறது. நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்!

மேலை ஆரியன் ஆங்கிலேயன் ஆண்ட காலத்தில் "கஞ்சி குடிப்பதற்கு இலார்!" என்றிருந்த ஏழை மக்களின் நிலை, இந்தியாவை எழுபது ஆண்டுகளாக ஆண்ட காங்கிரஸ், பிஜேபி உள்ளிட்ட கீழை ஆரிய அரசுகள்,  அவர்களின் கைக்கூலியாகச் செயல்பட்ட பல்வேறு தமிழக அரசுகளின் ஆட்சியால்  "விஷமற்ற சுவாசக்காற்றும், விஷமற்ற குடிநீரும் இலார்" என்ற அளவுக்கு மோசமடைந்துள்ளது.

இந்தியா என்னும் அமைப்பு

இந்தியா என்பது பல்வேறு மொழிகள், இனங்கள், மதங்கள், தொன்மங்கள் கொண்ட மக்கள் வாழும் பன்மைத்துவம் கொண்ட நாடுகளின் கூட்டமைப்பு. ஒன்றன்பின் ஒன்றாக ஐம்பத்தியாறுக்கும் மேலான எண்ணிக்கை கொண்ட நாடுகளைப் பிடித்து ஆண்ட மேலை ஆரிய ஆங்கிலேயர்கள், இந்தியத் துணைக் கண்டத்தைவிட்டு வெளியேறிய பின்னர், உருவான கூட்டமைப்பு நாடுதான் இந்தியா என்பதை இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் "India shall be a Union of States " என்று பிரகடனம் செய்கிறது.

ஆரியர்களின் நலனுக்காகவே உருவான RSS-ம் அதன் அரசியல் கட்சியான பிஜேபி-யும்  பல்வேறு மொழிகள், இனங்கள், மதங்கள், தொன்மங்கள் கொண்ட மக்கள் வாழும் பன்மைத்துவம் கொண்ட நாடுகளின் கூட்டமைப்பான இந்தியாவை "ஒரே (ஆரிய)நாடு! ஒரே (ஆரிய)மொழி! ஒரே மதம்(ஆரியம்-இந்து) ஒரே மக்கள்(ஆரியர்கள்)!" என்று மாற்றும் ஒற்றைக் கலாச்சார முழக்கத்தை முன்வைக்கின்றது. இங்கு, 'ஒரே' என்பது 'வடஆரியர்களை'க் குறிக்கும் சொல்.

"பல்வேறு மொழிகள், இனங்கள், மதங்கள், தொன்மங்கள்" என்ற பன்மைத்துவத்தை ஏற்றுக்கொண்டால் ஒற்றுமையாக வாழ்வது சாத்தியம். "வேற்றுமையில் ஒற்றுமை" என்பது பன்மைத்துவத்தின் இருப்பில்தான் அடங்கியுள்ளது. 'ஒரே' என்னும் 'uniformity'யைத் தூக்கிப்பிடிப்பது இந்திய யூனியன் அமைப்பைத் துண்டாடும் முயற்சி என்பதை வட ஆரியர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

Unity is noble. Uniformity is fascist. Kudos to your posting, Sir.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.