Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் இராணுவத்தை உருவாக்குங்கள்! – யாழ். கட்டளைத் தளபதி

Featured Replies

தமிழ் இராணுவத்தை உருவாக்குங்கள்! – யாழ். கட்டளைத் தளபதி

 

Jaffna-Commander-Major-General-Hettiarac

 

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞர்கள், இராணுவத்தில் இணைந்து தமிழ் இராணுவத்தை உருவாக்க வேண்டுமென யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இலங்கை இராணுவத்தில் காணப்படும் இராணுவம் சாராத வெற்றிடங்களுக்கு ஆட்சேர்க்கும் பணி, நெல்லியடியில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. இதன்போதே யாழ். கட்டளைத் தளபதி மேற்குறித்தவாறு கூறியுள்ளார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்-

இராணுவத்தில் உள்ள இராணுவம் சாராத வேலைகளுக்கு உடனடியாக 50 இளைஞர்களை இணைத்துகொள்ள நடவடிக்கை எடுக்கவுள்ளோம். எதிர்வரும் மூன்று வார காலத்தில் இந்நியமனங்கள் வழங்கப்படும். இராணுவம் சாராத ஊழியர்களும் இராணுவ வீரர்களை போலவே கௌரவமாக எம்மால் நடத்தப்படுகின்றனர்.

இது சிங்கள இராணுவம் அல்ல. எல்லா இனத்தவர்களுக்குமான இராணுவமாகும். ஆகவே தமிழ் இளைஞர்களும் குறிப்பாக, 18 வயதுக்கும் 28 வயதுக்கும் இடைப்பட்ட இளையோர்கள் இராணுவத்தில் இணைய முடியும். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளையோர்கள் இராணுவத்தில் இணைகின்ற பட்சத்தில் யாழ்ப்பாண மாவட்டத்திலேயே பணியாற்ற முடியும். தினமும் கடமையை நிறைவு செய்து வீட்டுக்குச் செல்ல முடியும்.

யாழ்ப்பாணத்தில் தமிழ் இளைஞர்கள் கணிசமான அளவில் இராணுவத்தில் இணைவதன் மூலம் தமிழ் இராணுவத்தை இங்கு உருவாக்க முடியும்” என்றார்.

http://athavannews.com/?p=678436-தமிழ்-இராணுவத்தை-உருவாக்குங்கள்!-–-யாழ்.-கட்டளைத்-தளபதி

  • தொடங்கியவர்

யாழ். கட்டளை தளபதியால் தமிழ் இளைஞர்களுக்கு கிடைத்த வாய்ப்பு

 

இராணுவத்தில் உள்ள இராணுவம் சாராத வேலைகளுக்கு 150 தமிழ் இளைஞர்கள் யாழ். கட்டளை தலைமையகத்தால் ஆட்சேர்ப்பு செய்யப்பட உள்ளனர்.

இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கை இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியின் முயற்சியால் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வேலைகளுக்கு 50 இளையோர்களை நியமிக்கவே பாதுகாப்பு அமைச்சு முதலில் அனுமதி வழங்கி இருந்த போதும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஆட்சேர்ப்புக்காக விண்ணப்பித்திருந்தனர்.

இவர்களுக்கான நேர்முக தேர்வு அண்மையில் இராணுவத்தின் மனித நேய செயல் திட்டங்களுக்கான நாடளாவிய இணைப்பாளர் ஏ.செல்வாவின் நெல்லியடி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது நேர்முக தேர்வுக்கு வந்திருந்த இளைஞரொருவர் வேலைகளுக்கு 100 பேரையாவது நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு கட்டளை தளபதியிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனடிப்படையில் கட்டளை தளபதி பாதுகாப்பு அமைச்சுக்கு பரிந்துரை மேற்கொண்ட நிலையில் அதனை ஏற்றுக் கொண்ட பாதுகாப்பு அமைச்சு உடனே 150 பேரை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.

அந்தவகையில், 100 பேர் வருகின்ற வாரங்களிலும், 50 பேரை ஓரிரு மாதங்களுக்கு பின்னரும் நியமனம் பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 

http://www.tamilwin.com/community/01/183683?ref=imp-news

4 hours ago, நவீனன் said:

இராணுவத்தில் உள்ள இராணுவம் சாராத வேலைகளுக்கு 150 தமிழ் இளைஞர்கள் யாழ். கட்டளை தலைமையகத்தால் ஆட்சேர்ப்பு செய்யப்பட உள்ளனர்.

எடுபிடி வேலைகளுக்கு, வாள்வெட்டு கும்பல்களுக்கு, காட்டிக்கொடுக்கும் கயவர்களுக்கு ஆள்சேர்க்கும் சிங்கள-பௌத்த இராணுவப் பயங்கரவாதிகள்.

தமிழினப் படுகொலைகாரர்களை தண்டிக்க தமிழ் இராணுவம் கண்டிப்பாக உருவாகும்!
ஆனால் அதை சிங்கள-பௌத்த இராணுவப் பயங்கரவாதிகளால் உருவாக்க முடியாது.

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களை இன அழிப்புச் செய்யும் இலட்சக்கணக்கான சிங்களவர்களைக் கொண்டு கட்டி எழுப்பப்பட்டுள்ள சிங்கள இனவெறி இராணுவத்துக்குள் சில நூறு தமிழர்களை உள்வாங்குவது... கபட நோக்கத்திற்கே தவிர.. இதன் மூலம்.. தமிழ் மக்களுக்கு எந்த விமோசனமும் கிடையாது.

இன அழிப்பு ... போர்க்குற்ற விசாரணை.. சர்வதேச நீதிப்பொறிமுறைக்குள்  சிக்குவதை தவிர்க்கும் நோக்கம் மட்டுமே இங்குள்ளது.

இதனை தமிழ் மக்கள் சரிவரப் புரிந்து கொண்டு சிங்கள இராணுவத்தின் கபடத்தனத்துக்குப் பலியாகாமல் தம்மைப் பார்த்துக் கொள்வது இனத்திற்கும் மண்ணிற்கும் செய்யும் நன்றிக்கடனாக அமையும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.