Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சித­றிப்­போ­கும் நிலை­யி­லுள்ள சுதந்­தி­ரக்­கட்­சியை கட்­டிக் காக்க முய­லும் அரச தலை­வர்!!

Featured Replies

சித­றிப்­போ­கும் நிலை­யி­லுள்ள சுதந்­தி­ரக்­கட்­சியை கட்­டிக் காக்க முய­லும் அரச தலை­வர்!!

 

150714163845_maithripala_sirisena_624x35

 
 

 

 

 

அரச தலை­வ­ரா­க­வும், சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் தலை­வ­ரா­க­வு­மி­ருக்­கும் மைத்­தி­ரி­பா­ல­வி­னால் சுதந்­தி­ரக் கட்­சியை ஒரு கட்­டுக்­கோப்­புக்­குள் வைத்­தி­ருக்க இய­லா­மற் போய்­விட்­டது.

1980 களில் சுதந்­தி­ரக்­கட்­சி­யின் தலை­மைத்­து­வம் தொடர்­பாக சிறி­மாவோ பண்­டா­ர­நா­ய­க­விற்­கும், மைத்­தி­ரி­பால சேன­நா­ய­க­வுக்­கு­மி­டை­யில் முறு­கல் நிலை­தோன்­றிய போதி­லும், பின்­னர் அது நேர்­சீர் செய்­யப்­பட்­டது.

இந்­தக் கட்­சி­யின் உள்­மட்­டப் பூசல்­கள் அநே­க­மான சந்­தர்ப்­பங்­க­ளில் அவர்­கள் எதிர்­கட்­சி­யி­லி­ருந்த போது­தான் இடம் பெற்­றி­ருந்­துள்­ளது. 1994 ஆண்­டிற்­கும் 2014 ம் ஆண்­டிற்­கு­மி­டைப்­பட்ட காலப்­ப­கு­தி­யில் ஐக்­கிய தேசிய கட்சி எதிர்க்­கட்­சி­யாக இருந்த வேளை­யில், இவ்­வா­றான கட்சி உட்­மட்ட பூசல்­கள் நிலவி வந்­துள்­ளன.

 
 

ஆனால் இப்­பொ­ழுது சுதந்­தி­ரக்­கட்சி அதி­கா­ரத்­தி­லி­ருக்­கும் நிலை­மை­யில், இந்த உட் கட்­சிப் பூசல்­கள் நிலவி வரு­கின்­றன என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

கூட்டு அர­சி­லி­ருந்து, எப்­போது சிறி­லங்கா சுதந்­திக்­கட்சி விலக வேண்­டு­மென்­பதை முடிவு செய்­யும்­படி அண்­மை­யில் அரச தரப்­பி­லி­ருந்து வெளி­யேறி எதிர்க்­கட்சி வரி­சை­யில் அமர்ந்து கொண்­டுள்ள 16 பேர் கொண்ட குழு­வுக்கு அர­ச­த­லை­வர் மைத்­தி­ரி­பால பணிப்­பரை வழங்­கி­யுள்­ளார்.

தற்­போது சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சிக்­குள்ளே உரு­வா­கி­யி­ருக்­கும் குழப்­ப­நி­லைக்கு முக்­கி­ய­மா­ன­தொரு கார­ணம், 14 வரு­டங்­க­ளாக கட்­சி­யின் பொதுச் செய­லா­ள­ராக விருந்த மைத்­தி­ரி­பால சிறிசேன, இந்­தக்­கட்­சிக்கு போட்­டி­யாக விளங்­கிய ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யு­டன் இணைந்து அரச தலை­வர் தேர்­த­லில் பொது வேட்­பா­ளா­ராக, களம் இறங்­கி­ய­மை­யா­கும்.

சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யின்
நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள்

அரச தலை­வ­ரான பின்­ன­ரும் மைத்­தி­ரி­பா­ல­வின் நிலமை சுமூ­க­மாக இருக்­க­வில்லை. ஒரு­பு­றம் சுதந்­தி­ரக் கட்­சி­யின் தலை­வ­ரா­க­வும், மறு­பு­றத்­தில் அர­சின் தலை­வ­ரா­க­வும் செயற்­ப­டு­வ­தில் மைத்­தி­ரி­பால சிர­மத்தை எதிர்­கொள்ள வேண்­டி­யி­ருந்­தது. கூட்டு அர­சில் ஐக்­கிய தேசிய கட்­சி­யின் ஆதிக்­கமே மேலோங்­கி­யி­ருக்க, குறிப்­பி­டத்தக்க அள­வான சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யி­னர் ராஜபக்­ச­வின் ஆத­ரவாளர்­க­ளா­க­வே­யி­ருந்­த­னர்.

2015ஆம் ஆண்டின் பொது தேர்­த­லின் போது, அதி­க­மான சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யி­னரை உறுப்­பி­னர்­க­ளா­கக் கொண்ட ஐக்­கிய மக்­கள் சுதந்­தி­ரக் கூட்­டணி 95 ஆச­னங்­க­ளைக் கைப்­பற்ற, அதில் 44 உறுப்­பி­னர்­கள் அரச தலை­வ­ரின் தரப்பு ஆத­ர­வா­ளர்­க­ளாகி ஐக்­கிய தேசிய கட்­சி­யின் 106 உறுப்­பி­னர்­க­ளு­டன் இணைந்து மூன்­றில் இரண்டு பெரும் பான்­மை­யு­டன் கூட்டு அரசை உரு­வாக்­கி­னர். சுதந்­தி­ரக்­கட்சி­ யின் மீத­முள்ள 51 உறுப்­பி­னர்­க­ளும் முன்­னாள் அரச தலை­வர் மகிந்­த­ரா­ஜ­பக்­ச­வுக்கு ஆத­ரவு வழங்­கும் தரப்­பி­ன­ராக கூட்டு எதி­ர­ணி­யா­கச் செயற்­பட்­ட­னர்.

தற்­போது, தலைமை அமைச்­ச­ருக்­கெ­தி­ரான நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக இருந்த, அமைச்­சர்­கள், பிர­தி­ய­மைச்­சர்­கள் பத­வி­களை வகித்­த­வர்­கள் உட்­பட்ட 16 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் அரசை விட்டு வெளி­யே­றி­விட 23 உறுப்­பி­னர்­கள், மட்­டுமே சிறிசே­ன­வின் ஆத­ர­வா­ளர்­க­ளான நிலை­யில் இந்த 16 பேரும், ராஜ­பக்­ச­வின் பக்­கம் சார்ந்­து­விட்­டால் 72 பேர் ராஜ­பக்­ச­வின் ஆத­ர­வா­ளர்­க­ளா­கி­வி­டு­வார்­கள். இத­னால் மூன்­றில் இரண்டு பங்கு பெரும்­பான்­மை­யை­யும் அரசு இழந்­துள்­ளது.

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால தானே நேர­டி­யாக கள­மி­றங்கி, இந்த ஆண்­டின் பெப்­ர­வரி மாதம் நடந்த உள்­ளூ­ராட்சி­ தேர்­த­லின் போது ராஜ­பக்­ச­வி­ன­ரை­யும் ஐ.தே.கட்­சி­யி­ன­ரை­யும் எதிர்த்து பரப்­பு­ரை­களை மேற்­கொண்ட போதும், வாக்கு வங்­கி­யில் மூன்­றாம் இடத்­தையே அவ­ரது தரப்­பால் பெற முடிந்­தது.

இதன் பின்­னர், மட்­டக்­க­ளப்­பில் நடந்த மே தின நிகழ்­வின்­போது அரச தலை­வர் தான் 2020 ஆண்­டுக்­கும் பின்­ன­ரும் அர­சி­ய­லி­ருந்து ஒதுங்­கப் போவ­தில்லை என்று கூறிய போதி­லும், அரச தலை­வர் பத­வி­யைப்­பற்றி எது­வும் குறிப்­பி­ட­வில்லை.

அடுத்­த­மாத இறு­தி­யில் கட்­சியை மறு சீர­மைக்­கப் போவ­தாக 16 பேர் குழு­வி­டம் மைத்­தி­ரி­பால சிறி சேன கூறி­னா­லும், அவ­ரது விசு­வா­சி­க­ளான, சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யின் பொதுச் செய­லா­ளர் துமிந்த திசா­ நா­ய­க­வை­யும், ஐக்­கிய மக்­கள் சுதந்­தி­ரக் கூட்­ட­ணி­யின் பொதுச் செய­லா­ளர் மகிந்த அம­ர­வீ­ர­வை­யும் 16 பேரின் புரட்­சிக்­குழு முன்­வைத்த கோரிக்­கைக்கு ஏற்ப பதவி விலக்­கு­வது என்­பது மைத்­தி­ரிக்கு, தர்ம சங்­க­ட­மான நிலையை தோற்­று­வித்­துள்­ளது.

எந்­தக் கார­ணத்­திற்­கா­க­வும், குறிப்­பிட்ட இரு­வ­ரை­யும் அவர்­கள் வகிக்­கும் பத­வி­க­ளி­லி­ருந்து ஓரங்­கட்ட இய­லாத அள­வுக்கு அவர்­க­ளுக்கு மைத்­தி­ரி­பால கட­மைப்­பட்­டுள்­ளார்.

சமீ­பத்­தில் நடந்த சுதந்­தி­ரக் கட்­சி­யின் உயர்­மட்­டக்­கு­ழு­வின் சந்­திப்­பின்போது, கூட்டு அர­சில் எஞ்­சி­யி­ருக்­கும் 23 உறுப்­பி­னர்­க­ளும் அர­சி­லி­ருந்து வெளி­யே­ று­வது குறித்து தாம­திக்­காது விரை­வில் முடிவு செய்­யு­மாறு அரச தலை­வர் தெரி­வித்­தா­கக் கூறப்­பட்­டது. முன்­னாள் விளை­யாட்­டுத்­துறை அமைச்­சர் தயாசிறிஜய­சே­கர இதனை ஊட­கங்­க­ளுக்­குத் தெரி­வித்­தி­ருந்­தார். அவ­ரது அந்­தக் கருத்­துக் குறித்து இது­வரை எவ­ரும் மறுப்­புத் தெரி­விக்­கவோ, முரண்­ப­டவோ இல்லை.

சிறி­சேன, ராஜ­பக்ச பிரிவு தரப்­புக்­கள்
தொடர்ந்­தும் இந்­தக் கூட்டு அர­சில் அங்­கம் வகிப்­பது, ஐக்­கிய தேசிய கட்­சி­யைப் பார்க்­கி­லும், சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யையே அதி­க­மாக பாதித்­துள்­ளது. இந்த அரசு மேற்­கொள்­ளும் தவ­றான நட­வ­டிக்­கை­கள், அர­சி­யல் பங்­கா­ளி­க­ளாக விருக்­கும் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யின் மீதும் பிர­தி­ப­லிக்­கும். இந்த 16 பேர் கொண்ட புரட்­சிக் குழு­வின் திட்­டம், மைத்­தி­ரி­யை­யும் மகிந்­த­வை­யும் இணைத்து ஒரு குழு­ வாக சுதந்­தி­ரக்­கட்­சி­யில் போட்­டி­யிட வேண்­டு­மென்­பது அரச தலை­வ­ரி­னால் ஏற்­றுக் கொள்­ளப்­பட்­டது.

அது எவ்­வா­றான போதி­லும், 2020 ஆண்­டின் பின்­ன­ரும் அர­சி­ய­லி­லி­ருந்து ஓய்வு பெறப் போவ­தில்லை என்ற மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­னது கூற்­றும், கோத்­த­பா­யவை அரச தலை­வ­ராக்­கும் மகிந்­த­வின் திட்­ட­மும் எப்­படி சாத்­திய மாகப் போகி­றது என்­பதை பொறுத்­தி­ருந்­துத்­தான் பார்க்க வேண்­டும்.

சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி வட்­டா­ரங்­க­ளுக்கு அந்த 16 பேர் கொண்ட புரட்­சிக்­குழு, அர­சினை விட்டு வில­கி­ ய­தன் நோக்­கம் ராஜ­பக்­ச­வின் கட்­சி­யு­டன் இணை­வது அல்­லது. ஏற்­க­னவே அவர்­க­ளால் உரு­வாக்­கப்­பட்ட பொது­ஜன பெர­மு­ன­வு­டன் இணை­வ­து­தான் அவர்­க­ளின் திட்­ட­மென்­பது நன்­றா­கவே தெரி­யும். மைத்தி­ரி­பால சிறிசேனதான் அடுத்த அரச தலை­வர் தேர்­த­லுக்­கான வேட்­பா­ளர் என்று பறை சாற்­றிக் கொண்­டி­ருந்த எஸ்.பி திசா­நா­யக போன்­ற­வர்­கள் இப்­போது அமை­தி­யா­கி­விட்­ட­னர்.

திட்­ட­மி­டப்­பட்­டுள்ள கட்­சி­யின் மறு சீர­மைப்பு
அரச தலை­வர் மைத்­தி­ரி­யும், மகிந்த ராஜ­பக்­ச­வும் ஒன்­றாக செயல்­பட முய­லும் போது, அர­ச­மைப்­பின்­படி மகிந்த, அரச தலை­வ­ராக போட்­டி­யிட இய­லாது. ஆனால் மைத்­தி­ரிக்கு அந்­தப் பிரச்­சி­னை­யில்லை. இவர்­கள் இணை­யும் பொழுது அந்த விஷ­யம் தலைத்­தூக்­கக்­கூ­டும்.
சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யின் இரண்டு பிரி­வு­க­ளும் இணைந்து செயற்­பட வேண்­டு­மென்ற நிலமை வரும்­போது இவர்­கள் ஒரு அரச தலை­வ­ருக்கு மட்­டுமே சாத­க­மாக இயங்க வேண்­டி­யி­ருக்­கும். அப்­படி செயற்­பட வைப்­பது என்­பது பகீ­ர­தப் பிர­யத்­தன­ மாகும்.

அடுத்த மாதத்­தில் நடத்­தத் திட்­ட­மி­டப்­பட்­டுள்ள சுதந்­தி­ரக்­கட்­சி­யின் மறு சீர­மைப்­பின் போது கட்­சி­யின் எதிர்­கா­லம் பற்­றிய திட்­டங்­கள் மட்­டு­மல்ல, அடுத்து வர­வுள்ள அரச தலை­வர் தேர்­தல், ஐக்­கிய தேசிய கட்­சிக்­கும், சிரி­லங்கா சுதந்தி­ ரக்­கட்­சிக்­கு­மி­டை­யி­லான இரு முனைப் போராட்­ட­மாக இல்­லா­மற் இலங்­கை­யின் சரித்­தி­ரத்­தி­லேயே முதன் முத­லாக ஒரு மும்­மு­னைப் போராட்­ட­மா­க­வும் அமை­யக் கூடும்.

http://newuthayan.com/story/10/சித­றிப்­போ­கும்-நிலை­யி­லுள்ள-சுதந்­தி­ரக்­கட்­சியை-கட்­டிக்-காக்க-முய­லும்-அரச-தலை­வர்.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.