Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு; உத்தரவிட்டது யார்? - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி

Featured Replies

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு; உத்தரவிட்டது யார்? - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி

 

 

 
download%2014jpg

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உரிய விதிமுறைகள் பின்பற்றப்பட்டனவா? சுடுவதற்கு யார் உத்தரவிட்டது என்பது குறித்து தமிழக அரசு விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு தரப்பில் வழங்கபட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பான அரசாணையை நீதிபதிகள் ஏற்கவும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி கந்தகுமார் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில் “துப்பாக்கிச் சூடு நடத்தபட வேண்டும் என்றால் அதற்கு முன்னதாக சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற விதிகள் உள்ளன.

 
 

அதன்படி முதலாவதாக அதிகப்படியான கூட்டத்தினை கலைப்பதற்கு கண்ணீர் புகை குண்டை பயன்படுத்தி கூட்டத்தினை கலைக்க வேண்டும். அதன்பின் வாட்டர்ஜக் எனப்படும் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் உத்தியை பயன்படுத்தி கூட்டத்தினை கலைக்க வேண்டும். அதன்பின் தடியடி நடத்தி கூட்டத்தினை கலைக்க வேண்டும்.

குறிப்பிட்ட வரைமுறைகளின் படி துப்பாக்கி சூடு நடத்த வேண்டும். பின்பு வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு அதன்பிறகே போராட்டக்காரர்களின் முழங்காலுக்கு கீழ் சுட வேண்டும். ஆனால் இந்த விதிமுறைகள் எதுவுமே பின்பற்றாமல் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.

எனவே தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச் சூடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதிகள் 9 பேர் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்க வேண்டும் மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 50 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூபாய் 10 லட்சம் வழங்கி உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு இன்று (வெள்ளிக்கிழமை) நீதிபதிகள் முரளிதரன், கிருஷ்ணவள்ளி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உரிய விதிமுறைகள் பின்பற்றப்பட்டனவா? சுடுவதற்கு யார் உத்தரவிட்டது என்பது குறித்து தமிழக அரசு விரிவான பதில் மனு தாகல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

http://tamil.thehindu.com/tamilnadu/article24055123.ece

  • தொடங்கியவர்

அதிகாரிகள் இல்லாததால் நானே துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டேன்: எப்.ஐ.ஆரில் இன்ஸ்பெக்டர் வாக்குமூலம்

 

 
download%202

இன்ஸ்பெக்டரின் வாக்குமூலம், தூத்துக்குடி துப்பாக்கி சூடு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் மேலதிகாரி உத்தரவின்றி தானே துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டதாக ஒட்டப்பிடாரம் காவல் ஆய்வாளர் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்துள்ளார்.

தூத்துக்குடியில் தடையை மீறி நடந்த பேரணியில் பல இடங்களில் துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில் 13 பேர் உயிரிழந்தனர். 50-க்கும்மேற்பட்டோர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தனர். துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் விதிகள் பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டாலும் அதையும் தாண்டி சில விதிமீறல்கள் திடுக்கிட வைக்கின்றன.

 
 

துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டதாக முதல் தகவல் அறிக்கையில் துணை வட்டாட்சியர்கள் கூறியிருந்தாலும் அவர்கள் அந்தப் பகுதியில் பொறுப்பில் இல்லை என்பது வெளியாகி உள்ளது. அதைவிட துணை ஆட்சியர் உத்தரவிடாமலே காவல் ஆய்வாளர் ஒருவரே தன்னிச்சையாக துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவு பிறப்பித்துள்ள அதிர்ச்சித் தகவலும் தற்போது வெளியாகி உள்ளது.

எப்சிஐ ரவுண்டானா பகுதி உள்ளிட்ட பகுதிகளில் ஸ்ரீவைகுண்டம் வட்ட வழங்கல் அலுவலர் கோபாலுக்கு பொறுப்பு ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கு காவல் பணியிலிருந்தவர் ஆய்வாளர் மீனாட்சிநாதன். இவர் ஒட்டப்பிடாரம் காவல் ஆய்வாளர். துப்பாக்கிச் சூடு நடந்த அன்று இங்கும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இங்கு யாருடைய அனுமதியுமின்றி தன்னிச்சையாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இது குறித்த தகவல் வந்தபோது அங்கு பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்த ஸ்ரீவைகுண்டம் வட்ட வழங்கல் அலுவலர் கோபால் தனது பகுதியில் எந்தக் கலவரமும் நடக்கவில்லை, ஆனால் தென்பாகம் காவல் நிலையத்தில் தான் புகார் அளித்ததாக தனது பெயரில் வெளியான தகவலால் தனது குடும்பம் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவும் இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி தனது சங்கத்திற்கு புகார் அளிக்க அவர்கள் ஆட்சியருக்குப் புகார் அனுப்பினர்.

இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் வட்ட வழங்கல் அலுவலர் உத்தரவு இல்லாமலே தானே துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டதாக ஒட்டப்பிடாரம் காவல் ஆய்வாளர் மீனாட்சிநாதன் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்துள்ளார். அவரது புகாரில் தான் எப்சிஐ கொடவுன் பகுதியில் பாதுகாப்புப் பணியில் இருந்ததாகவும் அப்போது போராட்டக்காரர்கள் கலவரம் விளைவிக்கும் வகையில் உயிருக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் வந்ததாகவும் அப்போது துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிடும் அதிகாரமுள்ள கோட்ட அதிகாரி எங்கே என்று தேடியபோது அவர் இல்லாததால் தானே துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டதாகவும் பதிவு செய்துள்ளார்.

தனது பகுதியில் கலவரமே இல்லை என பொறுப்பு அலுவலர் கோபால் புகார் அளிக்க 'கலவரம் நடந்தது, அதிகாரியை தேடினேன் அவர் கிடைக்காததால் நானே உத்தரவிட்டேன்' என்று ஆய்வாளர் புகாரில் பதிவு செய்துள்ளதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

http://tamil.thehindu.com/tamilnadu/article24095136.ece

  • கருத்துக்கள உறவுகள்

பெரிய தலைகள் தப்புவதற்குகான பலியாடு 


 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

பெரிய தலைகள் தப்புவதற்குகான பலியாடு 


 

வாழ் நாளுக்குப் போதுமானளவு பணம் பரிமாறப்பட்டிருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.