Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணிகளை விடுவிக்க- வீதியோரம் போராடும் மக்கள்!!

Featured Replies

காணிகளை விடுவிக்க- வீதியோரம் போராடும் மக்கள்!!

 

 

keppapilavu-6-900x450-750x430.jpg

 
 
 

முல்­லைத்­தீ­வின் கேப்­பாப்­பு­லவு பகு­தி­யில் இரா­ணு­வத்­தி­னர் வச­மி­ருக்­கும் தமது பூர்­வீகக் காணி­களை விடு­விக்கக்கோரி கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் திகதி முதல் கேப்­பாப்­பு­லவு மக்­கள் ஆரம்­பித்த காணி மீட்புப் போராட்­டம், முன்­னேற்­றம் எது­வு­மற்ற நிலை­யில் 450 நாள்­களை தாண்­டி­யும் தொடர்ந்து முன்­னெ­டுத்து செல்­லப்­ப­டு­கின்­றது.

இரவு, பகல் என்­றும் பாராது குளிர், வெயில் மற்­றும் நுளம்­புத் தொல்­லை­க­ளுக்கு மத்­தி­யி­லும், கேப்­பாப்­பு­லவு மக்­கள் தமது மாதிரிக் கிரா­மங்­க­ளுக்குச் செல்­லாது, சிறி­ய­தான ஒரு கூடாரத் துக்குள் இருந்துகொண்டு 450 நாள்­க­ளுக்­கும் மேலாக தாம் ஆண்­டாண்டு கால­மாக வாழ்ந்த தமது பூர்­வீக காணி­க­ளுக்­காகப் போரா­டிக்­கொண்­டி­ருக்­கின்­ற­னர்.

தமது காணி­க­ளில் உள்ள
பயிர்­க­ளின் பயனை ஈட்ட
முடி­யாத தமிழ்ப் பொதுமக்கள்
கேப்­பாப்­பு­லவு பகு­தி­யில் தற்­போது 104 குடும்­பங்­க­ளுக்குச் சொந்­த­மான 181 ஏக்­கர் காணி­கள் விடு­விக்­கப்­ப­டாத நிலை­யில் இரா­ணு­வத்­தி­னர் வச­முள்ள அதே­நே­ரம் , போருக்கு முன்­ன­ரான காலப்­ப­கு­தி­யில் இந்­தப் பூர்­வீகக் காணி­க­ளில் வசித்த மக்­கள் பலா மரம், தென்னை மரம் மற்­றும் பயிர்ச்­செய்­கை­கள் மூல­மாக தமது அன்­றாட வாழ்­வா­தா­ரத் தேவை­க­ளைப் பூர்த்தி செய்து கொண்­ட­னர். ஆனால் இன்று காணி­க­ளும் இல்­லா­மல், வீடு­க­ளும் இல்­லா­மல் வாழ்­வா­தார பயன்­க­ளும் இல்­லாத நிலை­யில் போராடி வரு­கின்­ற­னர்.

 
 

இந்த 181 ஏக்­கர் காணிக்­குள் மக்­க­ளுக்கு மிக­வும் அவ­சி­ய­மான இந்து ஆல­யம் ஒன்று, கிறிஸ்­தவ ஆல­யம் ஒன்று, பாட­சாலை ஒன்று, முன்­பள்ளி ஒன்று, பொதுக் கிண­று­கள் ஐந்து ஆகி­யவை காணப்­ப­டு­கின்­றன. இத்­தனை வசதிகள் இருக்கக்கூடிய காணி­களை இரா­ணு­வத்­தி­னர் தம்­வ­சம் வைத்­தி­ருப்­ப­தால், தமது பூர்­வீ­கக் காணி­க­ளில் மீண்­டும் குடி­யே­றி­வாழ விரும்­பும் இந்த மக்­க­ளின் எதிர்­கா­லம் கேள்­விக்­கு உள்­ளாக்­கப்­ப­டு­கி­றது.

கேப்­பாப்­பு­ல­வில் உள்ள காணி­களை விடு­விக்க அர­சாங்­கம் மீள்­கு­டி­யேற்­றம், புனர்­நிர்­மா­ணம் மற்­றும் இந்­து­மத அலு­வல்­கள் அமைச்­சி­னூ­டாக இரா­ணு­வத்­திற்கு 53 மில்­லி­யன் ரூபா­விற்­கும் மேற்­பட்ட நிதியை ஒதுக்­கிக்­கொ­டுத்­துள்­ளது. எனி­னும் இது­வரை கட்­டம் கட்­ட­மாக 425 ஏக்­கர் காணி­கள் மட்­டுமே விடு­விக்­கப்­பட்­டி­ருக்­கி­ன்றன. மீத­ முள்ள 181 ஏக்­கர் காணி­களை கடந்த ஒரு வரு­டக் கணக்­காக விடு­விக்­கா­மல் இரா­ணு­வம் ஏமாற்­றிக் கொண்­டி­ருக்­கி­றது.

தமது காணி­களுக்காக
தமிழ்­மக்­கள் போரா­டுகையில்
அவர்­க­ளது காணி­களை
மேலும் கைப்­பற்ற முய­லும் அரசு
இது இவ்­வாறு இருக்க, காணி­களை மீட்கப் போராட்­டம் நடந்து கொண்­டி­ருந்­த­போது 2017.08.04 திக­தி­யி­டப்­பட்ட அரச வர்த்­த­மானி ஊடா­க­வும், காணி அமைச்­சின் செய­லா­ள­ரின் 2017.07.21 திக­தி­யி­டப்­பட்ட கடி­தத்­திற்கு அமை­வா­க­வும், இரு தட­வை­கள் முல்­லைத்­தீவு, வட்­டு­வா­க­லில் கோத்­த­பாய கடற்­படை முகா­முக்­காக மக்­க­ளின் 670 ஏக்­கர் காணி­களை அள­வீடு செய்து சுவீ­க­ரித்து கொள்­ளும் முயற்சி இடம்­பெற்­றி­ருந்­தது. இருப்­பி­னும் மக்­கள் ஒன்­று­தி­ரண்டு கடும் எதிர்ப்பை வெளி­யிட்­டி­ருந்த நிலை­யில் காணி அள­வீடு செய்­வது கைவி­டப்­பட்­டி­ருந்­தது.

இவ்­வாறு காணி­க­ளுக்­காக அவற்­றின் உரி­மை­யா­ளர்களான தமிழ்­மக்­கள் போரா­டிக்­கொண்­டி­ருக்­கும் போது, மறு­மு­னை­யில் இரா­ணு­வத்­திற்­காக காணி சுவீ­க­ரிப்பை மேற்­கொள்­ளும் முயற்சி இடம்­பெ­றும் நிலை­யில். உள்­ளூ­ராட்சி தேர்­தல் பரப்­பு­ரைக்­காக யாழ்ப்­பா­ணத்­திற்கு பய­ணம் மேற்­கொண்ட அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, 80 சத­வீ­த­மான காணி­களை நாம் விடு­வித்­து­விட்­டோம் என்று காணி­கள் விடு­விக்­கப்­பட்ட வீதத்தை அதி­க­ரித்­துக் கூறி­யி­ருந்­தார். ஆனால் இன்­ன­மும் பெரும்­ப­கு­தி­யான காணி­கள் இரா­ணு­வத்­தி­ன­ரி­டமே இருக்­கின்­றன. 2009 மே 18 ஆம் திக­தி­யு­டன் போர் நிறை­வுற்று புலி­க­ளும் அழிக்­கப்­பட்­டி­ருக்­கும் நிலை­யில், வடக்கு மற்­றும் கிழக்­கில் மக்­க­ளின் பல ஏக்­கர் காணி­களை கைப்­பற்றி இரா­ணுவ முகாம்­களை அமைத்து நிலை­ கொள்­ள­வேண்­டிய அவ­சி­யம் என்ன என்ற கேள்வி தமிழ் மக்­கள் மத்­தி­யில் பர­வ­லாக எழுந்­தி­ருக்­கி­றது. இருந்­தும் இவற்­றுக்கு அர­சாங்­கம் பதில் தந்து முற்­றுப்­புள்ளி வைக்கத் தயா­ராக இல்லை.

முல்­லைத்­தீவு உள்­ளிட்ட தமி­ழர் பகு­தி­க­ளில் போருக்கு முன் னர் தமிழ் மக்­க­ளுக்கு சொந்­த­மாக இருந்த காணி­கள் இன்று இரா­ணு­வம் மற்­றும் வன­வள திணைக்­க­ளத்­திற்­கும் என அப­ரிக்­கப்­பட்டு சிங்­கள மக்­க­ளுக்கு சொந்­த­மாக்­கப்­ப­டும் தந்­திரச் செயற்­பா­டு­களை இந்த அர­சாங்­க­மும் முன்­னெ­டுத்­து­வ­ரு­கின்­றது. இது தொடர்­பில் அண்­மை­யில் வட­மா­காண சபை உறுப்­பி­னர் ரவி­க­ரன் அவர்­க­ளி­னால் வட­மா­காண சபையின் 120ஆவது அமர்­வில் விரி­வாக சுட்டிக்­காட்­டப்­பட்­டிருந் தமை குறிப்­பி­டத்­தக்­கது.

தமது தலை­விதி குறித்து
நீதி கேட்­டுப் போரா­டும்
தமி­ழர்கள்
2015 ஆம் ஆண்டு இடம்­பெற்ற அரச தலை­வ­ருக்­கான பொதுத்­தேர்­த­லில் மாற்­றத்தை எதிர்­பார்த்து மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கு வாக்­க­ளித்த தமிழ் மக்­கள், இன்று தமது காணி­களை மீட்­டெ­டுக்க வரு­டக்­க­ணக்­கில் வீதி­க­ளில் போராட்­டங்­களை முன்­ன­டுத்து பகு­தி­ய­ள­வில் தமது காணி­களை பெற வேண்­டிய நிர்க்­க­தி­யான நிலைக்­குத் தள்­ளப்­பட்­டி­ருக்­கின்­ற­னர். இதே­போல் நல்­லாட்சி அர­சு­டன் கைகோர்த்­தி­ருக்­கும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு, தமிழ் மக்­க­ளின் பிர­தி­நி­தி­க­ளாக காணி விடு­விப்பு தொடர்­பில் நாடா­ளு­மன்­றத்­தில் ஆணித்­த­ர­மாக அழுத்­தம் கொடுக்­கும் வகை­யில் பேச­வும் இல்லை. பேச்சு நடத்­த­வும் இல்லை என்­பது தமிழ் இனத்­தின் சாபக்­கே­டா­கும்.

கேப்­பாப்­பு­லவு மக்­க­ளின் போராட்­டம் பல இன்­னல்­க­ளுக்கு மத்­தி­யில் 450 நாள்­க­ளுக்கு மேலாக தொடர்ந்து கொண்­டி­ருக்­கி­றது, இருவேறு சந்­தர்ப்­பங்­க­ளில் போராட்­டத்தை முன்­நின்று முன்­னெ­டுத்­துச் செல்­ப­வர்­கள் மீது பொலி­ஸார் முல்­லைத்­தீவு நீதி­மன்­றம் ஊடாக வழக்கு பதிவு செய்து போராட்­டத்­திற்கு தடை விதிக்­கு­மாறு கோரி­னர்.
எனி­னும் அதனை விசா­ரணை செய்த நீதி­மன்­றம் போராட்­டத்தை அமை­தி­யான முறை­யில் தொடர்­வ­தற்கு அனு­மதி வழங்­கி­யி­ருந்­தது. இவ்­வாறு பல இன்­னல்­க­ளைத் தாண்டி வீதி­யில் இறங்­கிப் போரா­டிக் கொண்­டி­ருக்­கும் கேப்­பாப்­பு­லவு மக்­க­ளின் காணி­களை இரா­ணு­வத்­தி­ட­மி­ருந்து விடு­வித்து மீள்­கு­டி­யேற்­றம் செய்து தமிழ்­மக்­க­ளது வாழ்­வில் விடிவை ஏற்­ப­டுத்த அர­சு நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்.

http://newuthayan.com/story/11/காணிகளை-விடுவிக்க-வீதியோரம்-போராடும்-மக்கள்.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.