Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேராசிரியராக ரஜினி; வெளியீட்டுக்கு தயாரான விஸ்வரூபம் 2: சுவாரசிய திரைத்துளிகள்

Featured Replies

பேராசிரியராக ரஜினி; வெளியீட்டுக்கு தயாரான விஸ்வரூபம் 2: சுவாரசிய திரைத்துளிகள்

முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் உருவாக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள சில தமிழ் திரைப்படங்கள் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள்.

வெளியீட்டுக்கு தயாரான விஸ்வரூபம் 2

விரைவில் வெளியாகிறது விஸ்வரூபம் 2படத்தின் காப்புரிமைTWITTER

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் விஸ்வரூபம் 2. முதல் பாகம் வெளியான உடன் இரண்டாவது பாகத்துக்கான வேலைகளையும் தொடங்கினார் கமல்ஹாசன். ஆனால் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக, விஸ்வரூபத்தின் வேலைகள் இறுதிக்கட்டத்தில் நிறுத்தப்பட்டது.

சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் கிடந்த விஸ்வரூபம் படத்தின் வேலைகளை மீண்டும் கடந்த ஆண்டு தொடங்கினார் கமல்ஹாசன். அந்த படத்துக்கான வேலைகள் தற்போது முடிந்து ரிலீஸுக்கு தயாராகிவுள்ளது. முதல் பாகம் வெளியாகி ஐந்து ஆண்டுகள் ஆகும் நிலையில் விஸ்வரூபம் படத்தின் ட்ரைலரை வரும் 11ம் தேதி வெளியிடுகின்றனர்.

தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் விஸ்வரூபம் 2 உருவாகியுள்ளது. இதனால் தமிழ் ட்ரைலரை ஸ்ருதிஹாசனும், ஹிந்தி ட்ரைலரை அமீர்கானும், தெலுங்கு ட்ரைலரை ஜூனியர் என்.டி.ஆரும் வெளியிடுகின்றனர். ட்ரைலரை வெளியிட்ட பின் விஸ்வரூபம் 2 படத்துக்கான ரிலீஸ் தேதியை அறிவிக்கவுள்ளனர். முதல் பாகம் பல பிரச்சனைகளை சந்தித்து வெளியாகியிருந்தாலும், மிகப்பெரிய வசூலை குவித்தது. அந்த சாதனையை இந்த விஸ்வரூபம் 2 படம் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Presentational grey line

சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் கதையுடன் களமிறங்கும் கார்த்திக் ராஜூ

சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் கதையுடன் மீண்டும் களமிறங்கும் கார்த்திக் ராஜூபடத்தின் காப்புரிமைTWITTER

அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியான திருடன் போலீஸ், உள்குத்து ஆகிய படங்களை இயக்கியவர் கார்த்திக் ராஜூ. ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்துகொண்டிருந்த இவர், சினிமா மீது இருந்த ஆசைக்காரணமாக இயக்குனரானார்.

அவரின் முதல் படமான திருடன் போலீஸ் வெற்றியடைந்த நிலையில், இரண்டாவது படம் உள்குத்து தோல்வியை தழுவியது. இதனால் அடுத்த படத்தை இயக்க சிறிது காலம் எடுத்துக்கொண்ட கார்த்திக் ராஜூ தற்போது சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் கதையை எழுதியுள்ளார். புதுமையான முறையில் உருவாகவிருக்கும் அந்த படத்தில் மா நகரம், நெஞ்சில் துணிவிருந்தால் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்த சந்தீப் நடிக்கிறார்.

மேலும், இவர் தெலுங்கு சினிமாவில் பரீட்சியமான நடிகர் என்பதால் தெலுங்கு, தமிழ் ஆகிய இரண்டு மொழிகளில் தன்னுடைய அடுத்தப்படத்தை இயக்க கார்த்திக் ராஜூ திட்டமிட்டிருக்கிறார். இதில் தெலுங்கு பதிப்பை ஹீரோ சந்தீப்பே வாங்கி வெளியிடும் முடிவில் இருக்கிறாராம். இதுக்கான முதல்கட்ட வேலைகள் தற்போது நடைப்பெற்று வருகிறது.

Presentational grey line Presentational grey line

தொடர்ந்து மூன்றாவது முறையாக இணையும் விஜய் சேதுபதி - அருண்குமார்

திரைத் துளிகள்

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய படங்களை இயக்கியவர் அருண்குமார். இந்த படங்களை தொடர்ந்து தன்னுடைய மூன்றாவது திரைப்படத்திலும் விஜய் சேதுபதியை ஹீரோவாக்கியுள்ளார்.

இதற்கான அறிவிப்பு இரண்டு மாதங்களுக்கு முன் வெளியானது. இதற்கு பின் கதைக்கு இறுதி வடிவம் கொடுக்கும் வேலையில் இயக்குனர் இறங்கியிருந்தார். இந்த நிலையில் தற்போது சூட்டிங்கை தொடங்கியுள்ளனர். தென்காசி அருகேயுள்ள இலஞ்சியல் என்ற கிராமத்தில் பூஜையுடன் சூட்டிங் ஆரம்பமாகியுள்ளது.

முதல்கட்ட சூட்டிங்கை தென்காசி பகுதிகளில் முடித்துவிட்டு, இரண்டாம்கட்ட சூட்டிங்கை மலேசியாவில் நடத்த இயக்குனர் திட்டமிட்டுள்ளார். விஜய் சேதுபதி நடிக்கும் இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பதோடு படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Presentational grey line Presentational grey line

மீண்டும் தொடங்கிய பிரபு தேவா படத்தின் சூட்டிங்

மீண்டும் தொடங்கிய பிரபு தேவா படத்தின் சூட்டிங்படத்தின் காப்புரிமைTWITTER

சினிமாவில் நடிப்பு, நடன இயக்கம், இயக்குனர் என பிஸியாக வலம் வந்தவர் பிரபுதேவா. அதுவும் 2005க்கு பிறகு இயக்கத்தில் அதிக கவனம் செலுத்த தொடங்கினார். இதனால் ஹீரோவாக நடிப்பதை குறைத்தார். இந்த நிலையில் அவர் இயக்கத்தில் வெளியான சில படங்கள் தோல்வியடைந்த நிலையில் மீண்டும் நடிப்பதில் ஆர்வம்காட்ட தொடங்கினார்.

அதன் விளைவாக தேவி, குலேபாகவலி ஆகிய படங்களில் நடித்தார். மேலும் பல படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார். அதில் யங் மங் சங் படமும் ஒன்று. புதுமுக இயக்குனர் அர்ஜூன் என்பவர் இயக்கும் இந்த படத்துக்கான சூட்டிங் ஒரு வருடத்திற்கு முன்பே தொடங்கியது.

ஆனால் ஒரு சில நாட்கள் மட்டுமே நடந்த யங் மங் சங் படத்தின் சூட்டிங் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது அந்த படத்துக்கான சூட்டிங்கை மீண்டும் ஈரோட்டில் தொடங்கியுள்ளனர். யங் மங் சங் படத்தில் லட்சுமி மேனன், ஆர்.ஜே பாலாஜி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

Presentational grey line

ரஜினிகாந்தின் அடுத்த படத்திற்கான சூட்டிங் தொடக்கம்

ரஜினிகாந்தின் அடுத்த படத்திற்கான சூட்டிங் தொடக்கம்படத்தின் காப்புரிமைTWITTER

ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்தி சுப்புராஜ் இயக்கும் புது படத்தின் சூட்டிங் டார்ஜிலிங்கில் தொடங்கியுள்ளது. இதில் ரஜினிகாந்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்படுகிறது. கபாலி, காலா ஆகிய படங்களில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடித்த ரஜினிகாந்த், கார்த்திக் சுப்ராஜ் படத்தில் டை அடித்து நடிக்கிறார்.

இருந்தாலும் 45 வயது மிக்கவராக நடிக்கிறார். மேலும் ரஜினிகாந்த் எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் ரஜினிகாந்த் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார் என்றும் அதற்கான காட்சிகள் டார்ஜிலிங்கில் எடுக்கப்படுகிறது என்று தகவல் கிடைத்துள்ளது.

தர்மத்தின் தலைவன் படத்தில் ரஜினிகாந்த் கல்லூரி பேராசிரியராக நடித்திருந்தார். அதற்கு பின் டான், ரோபோ உள்ளிட்ட பல கதாபாத்திரங்களில் நடித்துவந்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் பேராசிரியராக மாறுகிறார். கார்த்திக் சுப்புராஜ் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் என்பதால், ஒவ்வொரு காட்சியையும் ரசித்து எழுதியுள்ளார் என்று கூறப்படுகிறது. ஜூன் 7ம் தேதி தொடங்கியிருக்கும் புது படத்துக்கு 25 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார் ரஜினிகாந்த்.

Presentational grey line

நாடோடிகள் 2 படத்தின் திரைப்பிடிப்பு பணிகள் நிறைவு

திரைத் துளிகள்

சுப்ரமணியபுரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகமானவர் சசிக்குமார். அந்த படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து, அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். இவருடைய நடிப்பில் நாடோடிகள், சுப்ரமணியபுரம் உள்ளிட்ட பல படங்கள் வெற்றியடைந்துள்ளன.

ஆனால், பிரம்மன் படத்தில் இருந்து இறுதியாக வெளியான கொடிவீரன் வரை அவரின் அனைத்து படங்களும் தோல்வியடைந்துவிட்டன. இந்த நிலையில் தனக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த நாடோடிகள் படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிக்க முடிவெடுத்தார். சமுத்திரகனி இயக்கத்தில் உருவாகும் அந்த படத்தின் சூட்டிங் மார்ச் மாதம் தொடங்கியது. இதுக்கு பின் தயாரிப்பாளர் சங்க வேலை நிறுத்தம் நடைப்பெற்றாதால் ஒரு மாதகாலம் சூட்டிங்கை நிறுத்தி வைத்திருந்தனர். இருந்தாலும் வேலை நிறுத்தம் முடிந்ததும் சூட்டிங்கை தொடங்கிய இயக்குனர் சமுத்திரகனி மிக குறுகிய நாட்களில் நாடோடிகள் 2 படத்தை படமாக்கியுள்ளார்.

இதற்கான அனைத்து காட்சிகளையும் கடந்த வெள்ளிக்கிழமையோடு எடுத்து முடித்துவிட்டார். இதை தொடர்ந்து போஸ்ட் புரெடெக்‌ஷன் வேலைகளுக்கு தயாராகிவிட்டார் சமுத்திரகனி. இந்த படத்தில் அஞ்சலி, அதுல்யா ரவி ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். தொடர் தோல்விகளில் இருக்கும் சசிகுமாரை நாடோடிகள் 2 வெற்றி பாதைக்கு கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடோடிகள் படத்தை முடித்திருக்கும் சசிகுமார் மீண்டும் நாடோடிகள் 3 படத்திற்காக சமுத்திரகனியுடன் இணையவுள்ளதாக கூறியுள்ளார்.

https://www.bbc.com/tamil/arts-and-culture-44430302

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.