Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆனந்தசுதாகரனை விடுவிக்க முடியாது- மைத்திரி: விக்னேஸ்வரன் கடைசியாக கேட்டதற்கு சம்மதித்தார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்தசுதாகரனை விடுவிக்க முடியாது- மைத்திரி: விக்னேஸ்வரன் கடைசியாக கேட்டதற்கு சம்மதித்தார்!

June 19, 2018
625.500.560.350.160.300.053.800.900.160.

ஆனந்தசுதாகரனை போன்ற மேலும் பல அரசியல் கைதிகள் இருப்பதனால் அவரை உடனடியாக விடுதலை செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனிடம் நேரில் கூறியுள்ளார்.

நேற்று திங்கட்கிழமை கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதியை, வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் சந்தித்தபோது, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஆனந்தசுதாகரனின் பிள்ளைகளின் நன்மை கருதி அவரை உடனடியாக பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்தி கேட்டிருந்தார்.

 

எனினும், முதலமைச்சரின் கோரிக்கைக்கு ஜனாதிபதி சாதகமாக பதிலளிக்கவில்லை.

ஆனந்தசுதாகரனை போல மேலும் பல கைதிகள் சிறையில் உள்ளனர். ஆனந்தசுதாகரனை விடுவித்தால், அவரை போல தங்களையும் விடுவிக்க வேண்டுமென அவர்கள் கோருவார்கள்.  இதனால் ஆனந்தசுதாகரனை உடனடியாக விடுவிக்க முடியாதுள்ளதாக முதலமைச்சரிடம் ஜனாதிபதி தெரிவித்தார்.

இதன்பின்னர் ஜனாதிபதியிடம் கோரிக்கையொன்றை விடுத்துள்ளார் முதலமைச்சர். அந்த பிள்ளைகள் தமது தந்தையை சிரமமின்றி பார்வையிட வசதியாக, ஆனந்தசுதாகரனை அருகிலுள்ள சிறைச்சாலையொன்றிற்கு மாற்றுமாறு கேட்டுக்கொண்டார். இதற்கு தான் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

 

http://www.pagetamil.com/8855/

  • கருத்துக்கள உறவுகள்

போர்காலத்தில் விடுதலைப்புலிகள் சிறுவர் போராளிகளை பயன்படுத்துகிறார்கள் என்று யுனிசெப்புக்கு கடிதம் எழுதினவையும்... அதற்கு தலையாய் அடித்துக் கொண்டு கொடுக்குக் கட்டிக்கொண்டு வன்னிக்கு வந்த யுனிசெப்பும்..

போரின் பின் வன்னி உட்பட வடக்குக் கிழக்கில்.. போரினாலும் அதன் பிற காரணிகளாலும்.. சமூகத்தாக்கத்தாலும் பாதிக்கப்பட்ட சிறுவர்... சிறுமிகளின் நலன்குறித்து சொறீலங்காவுக்கு அழுத்தம் கொடுக்காதது ஏன்...??!

ஆக யுனிசெப் என்பது வல்லாதிக்க சக்திகளின் தேவைகளுக்காக சிறுவர் உரிமைகளை பயன்படுத்தும் ஒரு ஐநா ஒட்டுண்ணி ஸ்தாபனம் என்பதே இதன் மூலம் நிரூபணமாகிறது.

கருணா என்கிற முரளிதரனுக்கு.. பிள்ளையாவுக்கு பொதுமன்னிப்பும்.. சிங்களப் பெண்கள் சப்பிளையும்... அமைச்சர் பதவிகளும்.. அரசியல் கட்சி உபதலைவர் பதவிகளும் வழங்கப்பட முடியும் என்றால்..

போரின் பின் அமைதியான சூழ்நிலையை பேணும்.. முன்னாள் அரசியல் விடுதலைப் போராளிகள் உட்பட.. இட்டுக்கட்டி.. போர் சூழலை பயன்படுத்தி.. குற்றவாளிகளாக்கி சிறையில் அடைத்துள்ள தமிழ் அரசியல் கைதிகளை..ஏன்  விடுவிக்க முடியாது..???!

உவர் மைத்திரி ஒரு முதுகெலும்பற்ற சனாதிபதி.

100 நாள் வேலைத்திட்டத்தையே மறந்த ஒரு கேடுகெட்ட சனாதிபதி. இந்தா சனாதிபதி முறையை ஒழிக்கிறன்.. தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்கின்றன் என்று வந்து.. இப்ப 4 வருடம் ஆகப் போகிறது. 100 நாளுக்குள் நடக்க வேண்டியது..கிட்டத்தட்ட 1500 நாட்கள் கடந்தும் நடக்கவில்லை.

ஏன் இன்னும் காலம் போதாதா..

இவர் எல்லாம் ஒரு நாட்டின் சனாதிபதியாக இருக்கவே தகுதியற்றவர்.

இவர் பொலனறுவைக்குப் போய் விவசாயமாவது ஒழுங்காகச் செய்யலாம். ?

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.