Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2009 இற்குப் பின் முதல் முறையாக யாழ். செல்லும் நோர்வேயின் உயர்மட்ட அமைச்சர்

Featured Replies

2009 இற்குப் பின் முதல் முறையாக யாழ். செல்லும் நோர்வேயின் உயர்மட்ட அமைச்சர்

 

Jens-Frolich-Holte-300x200.jpg2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னர், நோர்வேயின் உயர் மட்ட அமைச்சர்  ஒருவர் முதல்முறையாக யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

நோர்வே வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஜென்ஸ் புரோலிச் ஹோல்ட் இன்று தொடக்கம் எதிர்வரும் 23 ஆம் நாள் வரை சிறிலங்காவில் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இவர் சிறிலங்காவில் தங்கியிருக்கும் போது, மூத்த அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிவில் சமூகத்திரைச் சந்தித்துப் பேச்சு நடத்துவார்.

நோர்வேயின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் யாழ்ப்பாணத்துக்கு குறுகிய பயணம் ஒன்றையும் மேற்கொள்வார்.

இதன்போது, மீள்குடியேற்றப் பகுதிகளில் நிலையான வாழ்வாதார செயற்பாடுகளுக்காக நோர்வே அளிக்கும் உதவிகளின் பெறுபேறுகள் குறித்தும் அவர் ஆராயவுள்ளார்.

அத்துடன், பளை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள காய்கறி மற்றும் பழங்கள் பொதியிடும் மையத்தையும் அவர் திறந்து வைப்பார்.

குருநகரில் உள்ளூர் மீனவர்கள் மற்றும் அவர்களுடன் இணைந்து கடற்கரையை தூய்மைப்படுத்தும் செயற்பாடுகளிலும் நோர்வே இராஜாங்க அமைச்சர் ஈடுபடவுள்ளார்.

சிறிலங்காவில் போர் நிறுத்த உடன்பாடு முறிவடைந்த பின்னர், நோர்வேயுடனான உறவுகளை சிறிலங்கா அரசாங்கம் மட்டுப்படுத்தியிருந்தது.

2015 ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் இருதரப்பு உறவுகள் மீண்டும் பலப்படுத்தப்பட்டது.

இந்தநிலையில், போர் முடிவுக்கு வந்து கிட்டத்தட்ட 89 ஆண்டுகளுக்குப் பின்னரே, நோர்வேயின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.net/2018/06/20/news/31477

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்திற்கு போறார் மிச்சமிருக்கும் தமிழரையும் அழிக்கும் நோக்கமோ?

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரதி said:

என்னத்திற்கு போறார் மிச்சமிருக்கும் தமிழரையும் அழிக்கும் நோக்கமோ?

நல்லாட்சி அரசுக்கு அழுத்தம் கொடுக்காதீர்கள் என்று சொல்லத் தான்.

  • தொடங்கியவர்

நோர்வே அமைச்சர் ஜென்ஸ் புரோலிச் ஹோல்ட், வடக்கு முதலல்வர் சந்திப்பு

 

 
 

நோர்வே அமைச்சர் ஜென்ஸ் புரோலிச் ஹோல்ட், வடக்கு முதலல்வர் சந்திப்பு

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட நோர்வேயின் உயர் மட்ட அமைச்சர் ஜென்ஸ் புரோலிச் ஹோல்ட், வடக்கு முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.குறித்த சந்திப்பானது இன்று கைதடியில் இருக்கும் முதலமைச்சின் காரியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது வடக்கு மாகாணங்களில் காணப்படும் அபிவிருத்தி விடயங்கள் தொடர்பாக அவர் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இதற்கு முன்னர் நோர்வே வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஒருவர், 89 ஆண்டுகளுக்கு முன்னர் யாழ்ப்பாணம் விஜயம் செய்திருந்தார். இந்நிலையில் தற்போது ஜென்ஸ் புரோலிச் ஹோல்ட் உட்பட குழுவினர் விஜயம் மேற்கொண்டு முதலமைச்சருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(15)

http://www.samakalam.com/செய்திகள்/நோர்வே-அமைச்சர்-ஜென்ஸ்-ப/

  • தொடங்கியவர்

மக்­க­ளு­டைய வாழ்­வா­தாரத்தை அரசாங்கம் உயர்த்தவில்லை

City-Page-03-BlackGMGPage1Image0005-a40069976455f12b28aa00cdbc75ce2a1a01de5a.jpg

 

(எம்.நியூட்டன்)

நோர்­வேயின் வெளி­வி­வ­கார அமைச்­ச­ரிடம் முத­ல­மைச்சர் சுட்­டிக்­காட்டு

பாரம்­ப­ரி­யமும், சுற்றுச் சூழலும் பாதிக்­காத வகையில் அபி­வி­ருத்­திகள் செய்­யப்­படல் வேண் டும். இத­னையே நாங்கள் விரும்­பு­கின்றோம். அர­சாங்கம் வரு­மா­னத்­தை எதிர்­பார்க்­கி­றதே ஒழிய மக்­க­ளு­டைய வாழ்­வா­தார்தை உயர்த்த முயற்­சிக்க வில்லை என்று வட மாகாண முத­லை­மச்சர் விக்­னேஸ்­வரன் நேர்­வேயின் வெளி­வி­வ­கார அமைச்­ச­ரிடம் வலி­யு­றுத்­தி­ய­தாக தெரி­வித்தார். 

யாழ்ப்­பா­ணத்­திற்கு விஜயம் மேற்­கொண்­டி­ருந்த நேர்வே வெ ளிவி­வ­கார அமைச்சின் இரா­ஜங்க அமைச்சர் ஜென்ஸ் புரெலிச் ஹோல்டே வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரை முத­ல­மைச்சர் அலு­வ­ல­கத்தில் நேற்று சந்­தித்து கலந்­து­ரை­யா­டினார். இச் சந்­திப்பு தொடர்­பாக முத­ல­மைச்சர் ஊடங்­க­ளுக்கு கருத்துத் தெரி­விக்­கையில்,

நோர்வே ளிவி­வ­கார அமைச்சர் இங்கு முதற்­த­ட­வை­யாக வருகை தந்­துள்ளார். வட­மா­கா­ணத்­தி­லுள்ள கள நிலை­மைகள் பற்றி கேட்டு அறிந்­து­கொண்டார். பல விட­யங்­களை பேசிக்­கொண்டோம். குறிப்­பாக புலம்­பெயர் தமி­ழர்கள் எங்­க­ளுடன் இணைந்தும் யாழ்.பல்­க­லைக்­க­ழ­கத்­துடன் இணைந்து சில செயற்­றிட்­டங்­களை உரு­வாக்­கவும் நடை­மு­றைப்­ப­டுத்த நினைக்­கி­றார்கள் என வெ ளிவி­வ­கார அமைச்சர் என்­னிடம் தெரி­வித்தார். இதற்கு நான் எனது வர­வேற்பை தெரி­வித்தேன். புலம் பெயர் தமி­ழர்கள் எங்­க­ளு­டைய பலம். மேலும் இவர்கள் மூலம் செய்யும் உத­வியை வட­மா­காண முத­ல­மைச்சர் நிதி சம்­பந்­த­மான சட்­டத்தை நாங்கள் இயற்றி உள்ளோம். ஆனால் இதற்­கான அனு­மதி எமக்கு கிடைக்­க­வில்லை. எமக்கு இந்த அனு­மதி கிடைத்தால் நீங்­களும் எங்­க­ளுக்கு நேர­டி­யாக உதவி செய்­யலாம் என்றும் கூறினேன்.

இதே­வேளை, நேர்வே அமைச்­சரும், அதற்­கான உத­வியைச் செய்­யலாம் எனவும் நீங்கள் கூறிய விட­யத்தை தான் கவ­னத்­திற்கு எடுப்­ப­தாக கூறினார்."

மேலும், இங்­கி­ருக்கும் கரை­யோரப் பகு­திகள் வலு­வுள்ள சுற்­றுலா மைய­மாக மாற்­றலாம் என்றும் கூறினார். கரை­யோ­ரத்­தி­லுள்ள மாசு­களை சுத்தம் செய்­ய­வேண்டும் என்றும் பிளாஸ்ரிக் ஒழிப்­ப­தற்கும் நோர்வே முன்­வந்­துள்­ள­தா­கவும் அவர் கூறினார். கடற்­க­ரை­களை சென்­று­பார்­வை­யி­ட­வுள்­ள­தா­கவும் கூறினார்.

இதே­வேளை , எமது பாரம்­ப­ரியம் பாதிக்­காத வண்ணம் எமது சுற்­றுலா மையங்கள் அமை­ய­வேண்டும் வரு­மா­னத்தை மட்டும் இலக்­காகக் கொண்டு சுற்­றுலா மையங்­களை அமைக்­கக்­கூ­டாது என்றும் நான் கூறினேன். எப்­போதும் பாரம்­ப­ரி­யமும் வாழ்­வி­டங்­களும் மாற்றம் காணக்­கூ­டாது. இவ்­வா­றாக பல்­வேறு விட­யங்­களை தாம் கலந்­து­ரை­யா­டி­ய­தாக வடமாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.

இச் சந்திப்பில் நோர்வே வெ ளிவிவகார அமைச்சின் இராஜாங்க அமைச்சர் மற்றும் நோர்வோத் தூதுவர், சர்வதேச தொழில் ஸ்தாபனத்தின் இலங்கை மற்றும் மாலை தீவுக்கான பணிப்பாளர் திருமதி சிம்ரன் சிங் ஆகியோர் கலந்துகொண்டனர்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-06-22#page-3

  • தொடங்கியவர்

நோர்வே இராஜாங்க அமைச்சர் குருநகரில் கடற்கரையோர சுத்திகரிப்பு நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்

 

 
 

நோர்வே இராஜாங்க அமைச்சர் குருநகரில் கடற்கரையோர சுத்திகரிப்பு நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்

கடற்கரையோர கழிவகற்றல் முகாமைத்துவத்தை உலகம் முழுவதும் முன்னெடுக்கும் நோர்வே அரசின் திட்டத்தை அந்த நாட்டு இராஜாங்க அமைச்சர் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைத்தார். யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆர்னொல்ட், யாழ்.மாவட்ட செயலாளர் நா.வேதநாயகன், யாழ்.மாநகர சபை ஆணையாளர் ஜெயசீலன், அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

யாழ்ப்பாணத்துக்கு நேற்று வருகை தந்த நோர்வே வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஜென்ஸ் புரோலிச் ஹோல்ட், கடற்கரையோர சுத்திகரிப்பு நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். கடல் சூழல் அதிகார சபையின் ஏற்பாட்டில் குருநகர் கடற்கரைப் பகுதியில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் இந்த நிகழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.(15)beach-clean-norway-220618-seithy (1)

http://www.samakalam.com/செய்திகள்/நோர்வே-இராஜாங்க-அமைச்சர்/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.