Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

’அமெ. பிரஜாவுரிமையை 2 மாதங்களில் இரத்துசெய்ய முடியும்’

Featured Replies

’அமெ. பிரஜாவுரிமையை 2 மாதங்களில் இரத்துசெய்ய முடியும்’
 
 

image_897c231644.jpgஇரண்டு அல்லது மூன்று மாதங்களில், அமெரிக்கப் பிரஜாவுரிமையைத் தன்னால் இரத்து செய்துகொள்ள முடியுமென, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, இன்று (25) தெரிவித்தார்.

டீ.ஏ.ராஜபக்ஷ அருங்காட்சியக நிர்மாணத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடிகள் குறித்த, பொலிஸ் நிதிப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளுக்காக, வாக்குமூலமொன்றைப் பெற்றுக்கொடுக்கச் சென்ற கோட்டாபய, சுமார் 3 மணித்தியாலங்களாக வாக்குமூலமளித்த பின்னர், சற்று முன்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவிலிருந்து வெளியேறிய அவரிடம், அமெரிக்கப் பிரஜாவுரிமை தொடர்பில் ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே, மேற்கண்டவாறு கூறினார்.

இதேவேளை, அஸ்கிரி மகா சங்கத்தின் பிரதித் தலைவர் வெண்டேருவே உபாலி தேரர், அநாவசியமாகக் கருத்துகளை வெளியிடுவதிலிருந்து தவிர்ந்துகொள்ளுமாறு, தனக்கு தனிப்பட்ட ரீதியில் ஆலோசனை வழங்கினார் என்றும், கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/அமெ-பிரஜாவுரிமையை-2-மாதங்களில்-இரத்துசெய்ய-முடியும்/175-218073

  • கருத்துக்கள உறவுகள்

ரத்து செய்வது இவரல்ல, அமெரிக்க அரசு.

பொரிஸ் ஜெல்ஸ்டின், பிரித்தானியாவின் வெளியுறவு செயலர். தனது அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்ய பட்டபாடு குறித்து பின்னர் கேட்கப்பட்ட போது சொன்னார்; நம்பவே முடியாத அளவுக்கு, மிக கடினமானது.

Incredibly difficult process!!

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

ரத்து செய்வது இவரல்ல, அமெரிக்க அரசு.

பொரிஸ் ஜெல்ஸ்டின், பிரித்தானியாவின் வெளியுறவு செயலர். தனது அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்ய பட்டபாடு குறித்து பின்னர் கேட்கப்பட்ட போது சொன்னார்; நம்பவே முடியாத அளவுக்கு, மிக கடினமானது.

Incredibly difficult process!!

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.

ஆனால் சொறி சிங்கள லங்காவின் (அ)நீதித்  துறை GR க்கு விதி விலக்கு அளிக்க கூடாது என்று சொறி சிங்கள லங்காவின் யாப்பில் எங்காவது மறைமுகவேனும் கருதப்படக் கூடிய, தனிப்பட்ட சரத்துக்கள் வேண்டாம், மறைமுகமாக கோர்த்து வாரப்படக்கூடிய இழையோடிய கருத்துக்கள் (nuances) உண்டா?    

சட்டம் தெரிந்தவர்களுடன் கதைக்கும் பொது அப்படி இல்லவே இல்லை என்பதே அவர்களின் கருத்தாகும்.

இன்னுமொன்று, JR சொன்னது சொறி சிங்கள லங்கா ஜனாதிபதியால் ஆணைப்  பெண்ணாகவும், பெண்ணை ஆனைக்கவும் மாற்றுவதை தவிர எல்லாவற்றையும் சொறி சிங்கள லங்கா ஜனாதிபதியால் செய்ய முடியும்.  

அதனால், மைத்திரிபால சிறிசேன கோத்தாபாய ராஜபக்சவை சனாதிபதி வேட்பாளராக அனுமதிக்க முடியும்.

சொறி சிங்கள லங்காவிற்கு ஒரே ஓர் கவசம் அதற்கு தேவை. அதை சீனாவும், ரஷ்யாவும் பாதுகாப்பு சபையில் வழங்கும்.   

யார் யாரிடம் மண் கௌவுகிறார்கள் என்று பொறுத்திருந்து பாப்போம்.

Edited by Kadancha

  • கருத்துக்கள உறவுகள்

இதில் கிந்தியாவே மிகவும் பரிதாகாரமபான நிலையில் மெல்லவும் முடியமால் விழுங்கவும் முடியாமல், அமெரிக்கா - சீன செல்வாக்கு மல்யுஹத பலப்பரீட்சையை, தனது கோடி அல்லது  கொல்லைப்புறம்  என்று இறுமாப்புடன் நினைத்து கொட்டாவி விட்டு பார்த்துக்கொண்டிருக்க வேண்டியது தான்.

சம்மந்தனும் சாதுரியாமாக அதற்கு வீட்டூத் திட்டத்தில் ஒன்றும் தெரியாத அப்பாவி போல் பிள்ளையார் சுழி போட்டுள்ளார். கிந்தியவிற்கு மிகவும் நன்றான 'அப்பாவி' ஈழத்து தமிழ் அரசியல் தலைமையின் தொடக்கப் பாடம். 

  • தொடங்கியவர்
’பிரதமருக்கும், ஜனாதிபதிக்கும் ஏன் இந்த ஆர்வம்? எனக்கு புரியவில்லை’
 
 

அஸ்கிரிய பீடத்தின் துணை மகாநாயக்கர் வெண்டருவே உபாலி தேரர் வெளியிட்ட கருத்து தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோர் ஏன் இவ்வளவு ஆர்வமாக இருக்கின்றனர் என தன்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என பாதுகாப்ப அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையானதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

“மகாநாயக்க தேரரின் கருத்தை எவரும் சரியாக புரிந்துகொள்ளவில்லை, அது எல்லாவற்றுக்கும் மேல் நான் ஒரு சாதாரண மனிதன். அவ்வளவு பெறுமதியானவன் அல்ல. எனக்கு தனியாக வழங்கப்பட்ட ஆலோசனைகளை ஏன் விமர்சனம் செய்கின்றனர் என எனக்கு புரியவில்லை." என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 “மகாநாயக்க தேரர், எனக்கு வழங்கிய ஆலோசனையை, ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சர் உள்ளிட்ட இன்னும் பல அமைச்சர்கள் விமர்சிக்கின்றனர். அப்படியாயின், அவ்வளவுக்கு நான் பெரியவனா? இல்லை, நான் சாதாரண மனிதன்” என்றார்.

இந்நிலையில் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், “அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ என்னிடம் கேட்டுக்கொள்வில்லை. அப்படி கோரிக்கை விடுக்கப்படுமாயின், இரண்டு அல்லது மூன்று மாதங்களில், அமெரிக்கப் பிரஜாவுரிமையைத் என்னால் இரத்து செய்துகொள்ள முடியும்” எனக் கூறினார்.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/பிரதமருக்கும்-ஜனாதிபதிக்கும்-ஏன்-இந்த-ஆர்வம்-எனக்கு-புரியவில்லை/150-218122

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.