Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நியூயோர்க் டைம்ஸ் பத்­தி­ரிகை செய்­தியை மஹிந்த மறுப்­பாரா?

Featured Replies

நியூயோர்க் டைம்ஸ் பத்­தி­ரிகை செய்­தியை மஹிந்த மறுப்­பாரா?

36-a3407e2cabe464a5fa42db16b4397503b7979474.jpg

 

அதற்கு எதி­ராக வழக்கு தாக்கல் செய்ய முடி­யுமா? ரஞ்சன் கேள்வி

(எம்.எம்.மின்ஹாஜ்)

தேர்தல் பரப்­பு­ரைக்­காக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ ­வுக்கு 7.9 மில்­லியன் டொலர்­களை சீனா வழங்­கி­ய­தாக அமெ­ரிக்க பிர­பல ஊடகம் தகவல் வெளி­யிட்டுள்ள நிலையில், இதற்கு முன்னாள் ஜனா­தி­பதி உடன் பதில் வழங்க வேண்டும். பிக்கு ஒருவர் கூட பணம் பெற்­றுள்ளார். எனவே முன்னாள் ஜனா­தி­ப­தியும் அவ­ரது

 

 அர­சியல் சகாக்­களும் தாம் ஒரு சதம் கூட சீனா­விடம் இருந்து பெற­வில்லை என்று கூறு­வார்­க­ளாயின் அதனை நாட்டு மக்­க­ளுக்கு சான்று மூலம் உறு­திப்­ப­டுத்த வேண்டும். இல்­லையேல் செய்தி வெளி­யிட்ட அமெ­ரிக்க ஊட­கத்­திற்கு எதி­ராக வழக்கு தாக்க செய்ய வேண்டும் என சமூக நலன்­புரி இரா­ஜாங்க அமைச்சர் ரன்ஜன் ராம­நா­யக்க சவால் விடுத்தார்.

 

அத்­துடன் பாரிய நிதி மோசடி பிரிவு குற்­ற­வா­ளி­களை நாடு­பூ­ரா­கவும் சென்று தேட வேண்­டி­ய­தில்லை. தமது கட்­ட­டத்தின் இரண்டாம் மாடிக்கு சென்றால் குற்­ற­வா­ளி­களை அங்கு பிடித்­துக்­கொள்ள முடியும். ஏனெனில் மஹிந்­தவின் பரப்­பு­ரைக்கு பணம் வழங்­கிய சீனா நிறு­வ­னத்தின் (சய்னா ஹார்பர்) காரி­யா­லயம் அங்­குதான் உள்­ளது என்றும் அவர் குறிப்­பிட்டார்.

 

இலங்கை கிரிக்கெட் சபையின் மோசடி தொடர்­பாக வாக்­கு­மூலம் பெறு­வ­தற்கு இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடி விசா­ரணை ஆணைக்­குழு விடுத்த அழைப்பின் பிர­காரம் நேற்று ஆணைக்­கு­ழு­வுக்கு வருகை தந்த போது ஊட­க­வி­ய­லா­ளர்கள் எழுப்­பிய கேள்­விக்கு பதி­ல­ளிக்கும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

 

அங்கு அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், இலங்கை கிரிக்கெட் சபையில் பாரிய மோச­டிகள் நடந்­துள்­ளன. இது தொடர்­பாக நான் இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடி விசா­ரணை ஆணைக்­கு­ழுவில் முறைப்­பாடு செய்தேன். அது தொடர்­பாக இன்று அழைக்­கப்­பட்­டி­ருந்தேன். கிரிக்கெட் நிறு­வ­னத்தில் பாரிய மோசடி நடந்­துள்­ளது. முதலாம் இடத்தில் இருந்த எமது கிரிக்கெட் தற்­போது பின்­ன­டைவை சந்­திப்­ப­தற்கு கிரிக்கெட் நிறு­வ­னத்தின் மோச­டி­களே பிர­தான கார­ண­மாகும்.  

 

ஆகவே கிரிக்கெட் நிறு­வ­னத்தை சுத்­தப்­ப­டுத்த வேண்டும். ஆகவே திலங்க சும­தி­பால தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் நாச­மாக்­காமல் சென்று விட வேண்டும். கிரிக்கெட் நிறு­வன நிர்­வாக தேர்வில் பரி­சுத்­த­மா­ன­வர்­களை தலைவர் பத­விக்கு நிய­மிக்க வேண்டும்.

 

அத்­துடன் மஹிந்த ராஜ­ப­க்ஷவின் தேர்தல் பரப்­பு­ரைக்கு சீனா 7.9 மில்­லியன் டொலர் வழங்­கி­ய­தாக அமெ­ரிக்­காவின் பிர­பல பத்­தி­ரிகை செய்தி பிர­சு­ரித்­துள்­ளது. இந்த செய்­தியை நாம் ஏள­ன­மாக மதிக்­க­கூ­டாது. ஏனெனில் அந்த பத்­தி­ரிகை உலகின் நம்­பிக்­கைக்கு பாத்­தி­ர­மான பத்­தி­ரி­கை­யாகும். ஆகவே அது உண்­மை­யான தக­வ­லாகும்.

 

சீன துறை­முக அபி­வி­ருத்­தி­யுடன் தொடர்­பு­டைய நிறு­வ­னத்தின் (சய்னா ஹார்பர்) ஊடாக இந்த பணம் வழங்­கப்­பட்­டுள்­ளது. பெளத்த பிக்கு ஒரு­வரும் பணம் பெற்­றுள்ளார். அது ஞான­சார தேரர் அல்ல. அவர் ஹிட்­லரின் ஆட்சி பற்றி கூறி­யதில் பிர­ப­ல­மான தேர­ராகும். ஆகவே அமெ­ரிக்க ஊடகம் வெளி­யிட்ட குறித்த தகவல் தொடர்பில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ உடன் பதி­ல­ளிக்க வேண்டும்.

 

அத்­துடன் சீனாவின் பணத்தை தாம் பெற­வில்லை என சம்­பந்­தப்­பட்ட தரப்­பி­ன­ரான முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ உட்­பட அர­சி­யல்­வா­தி­களும் பிக்­குவும் நாட்டு மக்­க­ளுக்கு சான்று மூலம் உறு­திப்­ப­டுத்த வேண்டும் என சவால் விடுக்­கின்றேன்.

 

இந்­நி­லையில் தனது டுவிட்டர் பக்­கத்தில் இந்த செய்தி தொடர்பில் தாம் கவ­லை­ய­டை­வ­தாக நாமல் ராஜ­பக்ஷ குறிப்­பிட்­டுள்ளார். நாமல் ராஜ­பக்ஷ டுவிட்­டரில் கவலை வெளி­யி­டு­வ­தனை பார்க்­கிலும் அந்த செய்தி பிழை என்றால் அந்த அமெ­ரிக்க பிர­பல பத்­தி­ரி­கைக்கு எதி­ராக வழக்கு தாக்கல் செய்ய வேண்டும். அவ்­வாறு செய்தால் பிர­பல ஊடக நிறு­வனம் என்ற வகையில் நிறைய பணத்தை நஷ்­ட­ஈ­டாக பெற்­றுக்­கொள்ள முடியும். ஆகவே முடி­யு­மாயின் அந்த பத்­தி­ரி­கைக்கு எதி­ராக வழக்கு தாக்க செய்ய வேண்டும்.

 

 அர­சாங்­கத்தில் இருந்து வெளி­யே­றிய சுதந்­திரக் கட்­சியின் 16 பேரை நினைத்தால் கவ­லை­யாக உள்­ளது. தற்­போது கட்சி கட்சியாக சென்று யாசகம் கேட்கும் நிலைமைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். அனைத்து கட்சி தலைவர்களுடனும் பலவந்தமாக நண்பர்களாக பார்க்கின்றனர். அந்த குழுவினர் ஆரம்பித்தில் எமக்கு உதவினர். அதனை நாம் மறக்கவில்லை. என்றாலும் தற்போது அவர்களின் நிலைமையை பார்க்கும் போது கவலையாக உள்ளது என்றார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-06-30#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.