Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசத்தின் புயலான- நெருப்பு மனிதர்கள்!!

Featured Replies

தேசத்தின் புயலான- நெருப்பு மனிதர்கள்!!

 

 

Miller-painting-1200x520-750x430.jpeg

 
 

“மற்­ற­வர்­கள் இன்­புற்­றி­ருக்க வேண்­டும் என்­ப­தற்­கா­கத் தன்னை இல்­லா­தொ­ழிக்­கத் துணி­வது தெய்­வீ­கத் துற­வ­றம். அந்­தத் தெய்­வீ­கப் பிற­வி­கள்­தான் கரும்­பு­லி­கள்.”- தேசி­யத் தலை­வர் –

தமி­ழீழ விடு­த­லைப் போராட்ட வர­லாற்­றின் ஞாப­கப் பக்­கங்­க­ளுள், தமிழ் மக்­கள் மறந்­தி­ருக்க முடி­யாத சாவுக்கு விலங்­கிட்ட மனி­தர்­க­ளின் நினை­வு­களை தந்த மாதம் ஜூலை.பல சம்­ப­வங்­கள் நினை­வாக நீண்டு விரிக்­கின்ற போதும் 1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 05 ஆம் திகதி, ஒப்பற்ற திருநாளாய் விளங்கி, தேசப் புயல்­க­ளின் வீர வர­லாற்றை கண்­ணீர் பூக்­க­ளால் சுகந்­தம் செய்­கின்­றது. கரும்­புலி கப்­டன் மில்­ல­ரின் உயிர் தியா­கம் தனை விடு­த­லை­யின் சொரூ­ப­மாக்கி உரிமை வேட்­கை­யின் தரி­ச­னங்­களை தாய் தேச­மெங்­கும் சூட்­டு­கின்­றன.

இரா­ணுவ ஆக்­கி­ர­மிப்பு
1987 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தி­யில் தமி­ழர் தேச­மெங்­கும் சிங்­கள இரா­ணு­வத்­தின் பிர­சன்­னம் அதி­க­மாக இருந்­தது. கொடுங்­கோல் ஆட்­சி­யின் வழி எங்­கும் தீராத அரா­ஜ­கங்­கள் நிகழ்ந்­தன.வட­ம­ராட்சி நெல்­லி­யடி மகா­வித்­தி­யா­லத்­தி­லும் சிங்­க­ளப்­ப­டை­யி­னர் குவிக்­கப்­பட்­டி­ரு
ந்­த­னர்.வட­ம­ராட்­சி­யில் மேற்­கொள்­ளப்­பட்ட ‘லிப­ரே­சன் ஒப்­பி­ரே­சன்” இரா­ணுவ நட­வ­டிக்கை மூலம் தாம் பெற்­றுக்­கொண்ட வெற்­றி­யின் குதூ­க­லிப்­பில் சிங்­க­ளம் திழைத்­தி­ருந்­தது. வட­ம­ராட்சி வாழ் மக்­கள் அக­தி­க­ளாக வெளி­யே­றி­யி­ருந்­த­னர். இதற்­குச் சமாந்­த­ர­மாக சிங்­க­ளத் தலை­மை­கள் 2009 களில் பெற்ற களிப்­பினை போன்­ற­தான ஓர் வெற்றி முழக்­கத்தை கொழும்­பி­லும் இன­வாத வெறித்­த­னத்­தின் சாட்­டு­த­லாய் கொண்­டாடி மகிழ்ந்­தி­ருந்­த­னர்.

 

நெல்­லி­ய­டிப் படைத்­த­ளம்
மீதான தாக்­கு­தல்
இந்த சந்­தர்ப்­பத்­திலே நெல்­லி­ய­டிப் படைத்­த­ளத்தை அழித்து இந்த ஈனப் பிற­வி­க­ளின் இறு­மாப்பை தகர்த்­தெ­றிய வேண்­டும், எமது உறு­தியை நிலை­நாட்ட வேண்­டும் என்ற தீர்­மா­னத்தை தேசி­யத்­த­லை­வர் கொண்­டி­ருந்­தார்.அந்த விருப்­பம் தேசப்­பு­ய­லாக மாற்­றம் கொண்­டது. தியா­கம் எனும் நற்­பணி செய­லு­ரு­வம் பெற்­றது.நெல்­லி­ய­டிப் படைத்­த­ளம் மீதான தாக்­கு­தல் குறித்த அனைத்­து தயார்­ப­டுத்­தல்­க­ளும் நிறை­வு­று­கின்­றன.

தேசப்­பு­ய­லாக,விடு­த­லை­யின் வீர­னாக கப்­டன் மில்­லர் தேர்வு செய்­யப்­பட்­டான்.ஜூலை மாதம் 5ஆம் திகதி இரவு 7.00மணி 3 நிமி­டங்­கள், கந்­தக மேனி­ய­னாய் வெடி மருந்­து­களை சுமந்­த­படி கப்­டன் மில்­லர் பய­ணித்த வாக­னம் இரா­ணுவ முகா­மிற்­குள் பாய்ந்­தது. தியா­கம் எனும் சுதே­சம் எங்­கும் வீசி­யது. விடி­ய­லின் சுகந்­தம் தனை தேசத்­தி­டம் பரி­ச­ளித்­தது. நூற்­றுக்­க­ணக்­கான இரா­ணு­வத்­தி­னரை அழித்­தொ­ழித்து பல­நூறு படை­யி­னரை விழுப்­புண் அடை­யச் செய்து ஆண­வத்­தின் மாயையை தீயிட்­டுக் கொளுத்­தி­யது. விடு­த­லை­யின் பய­ணத்­தில் புதிய வர­லாற்­றுப் பக்­கங்­களை உரு­வ­கித்­தது.

இப்­போ­தும் தியா­கத்­தின் சுவா­ச­மாய் அந்த நினை­வு­கள் எங்­கும் பரந்து கிடக்­கி­றது. நல் மனி­தங்­க­ளிடை சிந்­த­னை­யின் ஒளிர்­வாய் சுடர்­வி­டு­கின்­றது.விடு­த­லை­யின் எண்­ணம் தனை நித்­திய சாத­கம் செய்­கி­றது.
ஆம், போரி­யல் வர­லாற்­றிலே இவ்­வா­றான தாக்­கு­தல் ஒன்று முதன் முத­லாக நிகழ்த்­தப்­பட்­டது இதுவே முதல் தடவை.மில்­லர் கரும்­பு­லித் தாக்­கு­தல் நடத்தி இன்­று­டன் 31 ஆண்­டு­கள் கடந்­து­வி­டு­கின்­றது. விடு­தலை உணர்­வோடு நடந்­து­கொள்­ளப் பணிக்­கி­றது.ஞாப­கங்­க­ளிடை மீளாத வசந்­தங்­களை வசந்­த­னாக,அந்த நாமம் சூடிக் கொண்ட புனி­த­மாக (தி)யாகம் செய்­கி­றது.

வாழ்­கைப் பய­ணம்
யாழ்ப்­பா­ணம் கர­வெட்டி பிர­தே­சத்தை சேர்ந்­த­வன் கப்­டன் மில்­லர்.இவ­னு­டைய இயற்­பெ­யர் வல்­லி­பு­ரம் வசந்­தன். தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்­பில் ஒரு முக்­கிய உறுப்­பி­ன­ராக விளங்­கி­னான். 1966 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் முத­லாம் திகதி தாய் மண்­ணில் தவழ்ந்த இவன் விடு­தலை இலட்­சி­யத்­தில் முதல் கரும்­பு­லி­யாக மாற்­றங்­கொண்­டான். விடு­த­லைப் போ­ராட்ட வர­லாற்­றின் திருப்­பு­மு­னை­யாக அமைந்­து­விட்­டான்.

மில்­லர் குடும்­பத்­திலே இரண்­டா­வது மகன்.துடி­யாட்­ட­மா­ன­வன்.வாக­னங்­களை ஓட்­டு­வ­தில் திற­மை­யா­ன­வன்.தகப்­ப­னார் வல்­லி­பு­ரம் இலங்கை வங்­கி­யின் ஊழி­ய­ராக கடமை புரிந்­த­வர்.

விடு­த­லைப் பய­ணம்
தேசத்­தின் மீது கொண்ட பற்­று­று­தி­யால் விடு­த­லைப் பய­ணத்­திலே தன்னையும் ஓர் அங்கத்தவனாக இணைத்­துக் கொண்­ட­ான் மில்லர்.குறிப்­பாக தமிழ் மக்­க­ளின் மூல­த­ன­மான கல்­வி­யின் திருச் சொரூ­ப­மான, அறி­வூட்­டத்­தின் பொக்­கி­ச­மான யாழ்ப்­பா­ணம் பொது நூல­கத்­தின் மீதான தீயி­டல் சம்­ப­வம், அதே போன்று தமிழ் மக்­கள் மீது கட்­ட­விழ்த்­து­ வி­டப்­பட்ட இனக் கல­வ­ரம் என்­பன அவனை முற்­றாக தமிழ் மக்­க­ளின் விடு­த­லை­யின் பால் ஈர்த்­து­ விட்­டது.அதற்­கான இலட்­சிய உறுதி கொண்ட திட­மான பாதை­யிலே அங்­கத்­து­வ­னாக சேர்ப்­பித்­தது.

தாய் மண்­மீ­தும் தன் மக்­கள் மீதும் கொண்ட அள­வற்ற பாசம் என்­ப­தும், தன் இன விடு­த­லை­யின் மீதான நேசம் என்­ப­தும் முகம் மறைத்து முக­வரி மறைத்து எத்­த­னையோ பெரும் தாக்­கு­தல்­களை நடத்தி சாதனை படைக்­க­வும், தமி­ழன் என்ற வீரத்­தின் நிமிர்­வினை உலக நாடு­க­ளின் மத்­தி­யிலே அற்­பு­தம் செய்­தி­ட­வும் ஆரம்­ப­மாக அமைந்­து­விட்­டது இவ­னது தற்­கொ­டை­யெ­னும் தியா­கம்.இதனை தமி­ழ­ராய் நினை­வு­ கொள்­ளும் இந்த நன்­நாள் புனி­த­மா­னது.

கரும்­பு­லி­க­ளின் தியா­கம்
அந்­த­வ­கை­யிலே விடு­த­லைப் போராட்­டத்­தின் ஒவ்­வொரு திருப்­பு­மு­னை­க­ளி­லும் கரும்­பு­லி­க­ளின் தியா­கம் உயர்ந்து நிற்­கின்­றது.இவர்­க­ளின் தியா­கப் பாதை­கள் என்­பது 2000 ஆம் ஆண்டு கட்­டு­நா­யக்கா வான்­ப­டைத்­த­ளம் மீதான தாக்­கு­த­லாக,தென்­ப­கு­தி­யில் பல நிழற்­க­ரும்­பு­லிப் பாய்ச்­ச­லாக,2007 ஆம் ஆண்டு அனு­ரா­த­பு­ரம் வான்­ப­டைத்­த­ளம் மீது எல்­லா­ளன் வடி­வ­மாக, 2009 ஆம் ஆண்டு வானோடி கரும்­பு­லி­க­ளின் பறத்­த­லாக சிறந்­தி­ருக்­கி­றது.தமி­ழீழ வர­லாற்­றிலே தமி­ழ­னின் வீரத்தை உரி­மை­யின் மீதான பற்­று­த­லாக சாட்­டு­தல் செய்து நிற்­கின்­றன.

விடி­ய­லின் பாதை­க­ளைச்
சீர் செய்ய முன்­ன­கர்­வோம்
ஆக,தமி­ழர் விடு­த­லைப் போராட்­டத்­தின் தடைநீக்­கி­க­ளாக,உயி­ரா­யு­த­மாக,இலட்­சி­யத்­தின் இரும்பு மனி­தர்­க­ளாக உட­லோடு கந்­த­கம் சுமந்து எதி­ரி­யின் ஆண­வத்தை தகர்த்­த­ழித்த இந்த மனி­தர்­களை மறந்­து­விட முடி­யாது.இவர்­கள் புரிந்த சாத­னை­களை நினைந்து அற்­பு­தம் காண வேண்­டும்.அழி­யாத சுடர்­கள் எங்­கும் ஒளிர்­கின்­றன.

http://newuthayan.com/story/15/தேசத்தின்-புயலான-நெருப்பு-மனிதர்கள்.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.