Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வடக்கில் பெண் அமைச்சரிடம் கைத்துப்பாக்கி- உண்மையைப் போட்டுடைத்தார் அஸ்மின்!!

Featured Replies

வடக்கில் பெண் அமைச்சரிடம் கைத்துப்பாக்கி- உண்மையைப் போட்டுடைத்தார் அஸ்மின்!!

Untitled-1.jpg
 
 
 
 
 

தனக்குப்  பாதுகாப்பு இல்லை எனக்  கூறி  வடக்கு மாகாண சபையைச் சேர்ந்த பெண் அமைச்சர்,   பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்று கைத்துப்பாக்கியைத் தனது பாதுகாப்பில் வைத்துள்ளார் என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் அஸ்மின் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சபையில் இன்று சிறப்பு அமர்வு நடைபெற்று வருகிறது. அதில் பங்கேற்றுள்ள உறுப்பினர் இதனைத் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சபையில் பெண் அமைச்சராக அனந்தி சசிதரன் மட்டுமே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://newuthayan.com/story/12/வடக்கில்-பெண்-அமைச்சரிடம்-கைத்துப்பாக்கி-உண்மையைப்-போட்டுடைத்தார்-அஸ்மின்.html

  • தொடங்கியவர்

ஒரு அமைச்சருக்கு மட்டும் பக்கச்சார்ப்பு- அதனாலேயே வடக்கு முதல்வருக்கு இந்த நிலமை- அஸ்மின் குற்றச்சாட்டு

unnamed-6-750x430.jpg
 
 
 

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்குப் பக்கச்சார்பாக நடந்து கொண்டமையாலேயே தற்போது இந்த நிலமைக்குத் தள்ளப்பட்டுள்ளார் என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் அஸ்மின் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சபையில் டெனீஸ்வரன் விவகாரம் தொடர்பாக இன்று சிறப்பு அமர்வு நடைபெற்று வருகிறது. அதில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும் போதே உறுப்பினர் இதனைத் தெரிவித்தார்.

http://newuthayan.com/story/12/ஒரு-அமைச்சருக்கு-மட்டும்-பக்கச்சார்ப்பு-அதனாலேயே-வடக்கு-முதல்வருக்கு-இந்த-நிலமை-அஸ்மின்-குற்றச்சாட்டு.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

என்னிடத்தில் எந்தவகையான துப்பாக்கிகளும் இல்லை….

Ananthi-Sasitharan-1.jpg?resize=800%2C53
 

என்னிடத்தில் எந்தவகையான துப்பாக்கிகளும் இல்லை. மக்கள் என்மீது கொண்டிருக்கின்ற அன்பினை ஜீரணிக்க முடியாத அரசியல் காழ்ப்புணர்ச்சியாளர்களே பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றார்கள். நான் அரசியலில் பிரவேசித்த காலம் முதல் எனது பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கின்றமையை உலகம் அறியும். எனக்கு உரிய பாதுகாப்பு வழங்குங்கள் என்று உரிய தரப்பினரிடத்தில் நான் கோரிக்கைகளை முன்வைத்திருந்தேன். ஆனால் அந்தப் பாதுகாப்பினை நான் முழுமையாக நம்பியிருக்கவில்லை. எனது கைகளும், எனது உறவுகளும் தான் எனக்கு பாதுகாப்பு என்பதில் அதீத நம்பிக்கை கொண்டிருக்கின்றேன் என வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்   தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள செய்திக்குறிப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

விடுதலைக்கான பயணத்தில் பெண்களும் ஆண்களுக்கு நிகராகவே உரமூட்டப்பட்டுள்ளனர். அந்த அடிப்படையிலிருந்து மக்கள் சேவைக்காக அரசியலுக்குள் பிரவேசித்த ஒருவராகவே நான் இருக்கின்றேன். நாங்கள் உயிரை துச்சமென கருதி முடிவெடுத்தவர்கள். எமது வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக அரசியலுக்கு வரவில்லை.

 

மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒருவருக்கு வழங்க வேண்டிய பாதுகாப்பினை வழங்க வேண்டியது சம்பந்தப்பட்டவர்களின் பொறுப்பாகும். தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எனது செயற்பாடுகளை முடக்குவதற்காக பெண் என்று கூட பாராது சில நபர்கள் எத்தகைய நிலைக்கும் செல்லக்கூடியவர்களாக இருக்கின்றார்கள். இத்தகைய அச்சுறுத்தல்களால் தான் நான் பாதுகாப்பினை    அதிகரிக்குமாறு கோர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன்.

அதனைவிடுத்து பாதுகாப்பு அமைச்சிடம் கைத்துப்பாக்கியை பெற்றுக்கொண்டு வடக்கில் மேன்மைத் தன்மையை காட்ட வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது. அவ்வாறான துப்பாக்கி எதனையும் நான் இதுவரையில் பெற்றுக்கொள்ளவும் இல்லை. நான் துப்பாக்கியை பெற்றுக்கொண்டதாக கூறுபவர்கள் அதனை மக்கள் முன்னிலையில் நிருபித்துக் காட்ட வேண்டும். அதனை விடுத்து புனைகதைகளை கூறி மக்கள் என்மீது கொண்டிருக்கின்ற பற்றினை அழித்து விடலாம் எனக் கருதுவது பகற்கனவாகும்.

எமது தாயகத்திலிருந்து இராணுவம் வெளியேறவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. அவ்வாறிருக்கையில் தற்போதைய சூழலில் தன் இன மக்களால்    நிராகரிக்கப்பட்டு, பின்கதவால் அரசியலுக்குள் பிரவேசித்து உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்துவிட்டு, பாதிக்கப்பட்டவர்களின் அi-டயாளமாக மக்கள் ஆணை பெற்ற என்போன்றவர்களை விமர்சித்து தமிழினத்தினை கூறுபோட நினைப்பவர்களை எம் மக்கள் அடையாளம் காணவேண்டும்.

இவர்கள் தமிழ்த் தேசியவாதிகளாக நடித்துக்கொண்டு அநியாய சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றால் போல செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறானவர்களின் போலிப்பிரசாரங்களுக்கு காலம் பதில் அளிக்கும். அத்தகையவர்களின் முகத்திரையை கிழித்து எம் உறவுகள் தக்க பதிலடியை வழங்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.

http://globaltamilnews.net/2018/87949/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.