Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனது கணிப்பில் வான் தாக்குதல்

Featured Replies

விடுதலைப்புலிகளின் வான் தாக்குதல் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை

இலங்கை அரசாங்கமும் சர்வதேசமும் எப்படி எண்ணுகிறது அல்லது இத் தாக்குதலின் மூலம் விடுதலைப் புலிகள் எதனை விளங்கப் படுத்துகிறார்கள் என்பதை இரண்டு பேருமே உணர்ந்தார்களா என்பதை நாம் பார்ப்போமாக இருந்தால்.

முதலில் விடுதலைப் புலிகளின் வான் தாக்குதலின் அடிப்படை நோக்கம் என்ன என்பதை யோசித்துப் பார்த்தால். ஓரளவாவது அதனை புரிந்து கொள்ள முடியும். ஒரு இராணுவ பலம் என்பதை எத்தின எதிரியை கொல்கிறான் என்பதை வைத்து கணக்கிடக்கூடாது மாறாக அந்த நாட்டின் இராணுவ கட்டமைப்பின் இராஐதந்திர நடவடிக்கைகளை வைத்தே இராணுவ பலத்தை கணக்கிட வேண்டும்.

அந்த வகையில் இந்த வான் தாக்குதலின் மூலம் விடுதலைப் புலிகள் தங்களின் கட்டமைப்பின் பலத்தை உலகமே வியந்து பாக்குமளவு காய் நகர்த்தி இருக்கிறது என்பதே நாம் பார்க்க கூடியதாக இருக்கிறது. இதனை எப்படி நாம் புரிந்து கொள்ள முடியுமென்றால்.

விடுதலைப்புலிகளிடம் விமானம் இருக்கிறது என்பதை விடுதலைப் புலிகள் வெளிப்படையாக சர்வதேசத்துக்கு அறிவுத்து சில வருடங்கள் ஆனபோதும் எதற்காக இதுவரை காலம் பொறுத்திருந்தார்கள் என்பதே முதலில் நாம் பார்க்க வேண்டிய முக்கிய விடயமாகும்.

ஒரு விடுதலை அமைப்பு அல்லது ஒரு குழு விமானம் வைத்து இருப்பது என்பது சர்வதேசதுக்கே அபத்தானது அல்லது சர்வதேச சட்டத்துக்கு முரணானது என்று அவர்களை அழிதொழிக்க சர்வதேசத்தால் முடிவெடுத்திருக்க முடியும் விடுதலைப் புலிகள் பத்து வருடத்துக்கு முதலே விமானத்தாக்குதலை நடத்தி இருந்தால்.எனவேதான் இதுவரை காலமும் விடுதலைப் புலிகள் வான் தாக்குதலை நடத்தாமல் இருந்தார்கள் எனெனில் சர்வதேசத்தின் கண்டனத்தை நேரடியாகவே தாம் சந்திக்க நேரிடலாம் என்று.

இதனால்த்தான் விடுதலைப் புலிகள் தங்களின் வான் தாக்குதலை நடத்தாமல் காத்திருந்தார்கள் ஆனால் இன்று அவர்கள் வான் தாக்குதலை நடத்துவதற்கு இலங்கை அரசின் வான்படையினரே முக்கிய காரணமாக அமைந்தார்கள் என்றே கூற வேண்டும். எனெனில் அவர்களின் தொடர் வான் தாக்குதல்கள்தான். விடுதலைப்புலிகளின் வான் தாக்குதலுக்கும் மற்றும் அவர்களின் வான் தாக்குதலுக்கு சர்வதேசத்தின் எதிர்ப்பு இல்லாமல் போனதுக்கும் முக்கிய காரணமக அமைந்தது என்பதே உண்மை.

அது மட்டும் இல்லாமல் விடுதலைப் புலிகள் தங்களின் முதலாவது வான் தாக்குதலை சர்வதேசதுக்கும் வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான். இலங்கை அரசு அதனை மூடி மறைக்க கூடாது என்பதற்க்காக விடுதலைப் புலிகள் கட்டு நாயக்கா விமானத்தளத்தை தேர்ந்தேடுத்தார்கள்.

அதன்படி விடுதலைப்புலிகளின் இந்த வான் தாகுதலின் அடிபடை நோக்கமான

தங்களிடம் விமானம் இருக்கிறது அது கொழும்புவரை வந்து குறிதவறாமல் தாக்கக்கூடிய விமானிகள் இருக்கிறார்கள் மற்றும் இலங்கை இராணுவம் எந்தளவுக்கு பலவினமாக இருக்கிறார்கள் நாம் எந்த அளவுக்கு பலம் வாய்ந்தவர்களாக வளந்து இருக்கிறோம்.ஆகவே சர்வதேசமே இலங்கை அரசின் பொய்பிரச்சாரத்தை நம்பாதே. நாம் யாரலும் கணிக்க முடியாத பலத்தோடு இருக்கிறோம் என்பதை எல்லாரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதே விடுதலைப்புலிகளின் இந்த வான் தாக்குதலின் அடிபடை நோக்கம்.

அது மட்டும் இல்லாமல் உலகத்தின் வாயை மூட வைத்துவிட்டு இத்தாக்குதலை நடத்தி இருப்பது என்பதுதான் மிகவும் நாம் கவனிக்க வேண்டியவை.

அதன்படி விடுதலைப்புலிகளின் இந்த மிக சிறப்பான காய் நகர்த்தல் விடுதலைப்புலிகள் எதிர்பார்த்தபடி வெற்றிகரமாகவே நடந்தேறி இருக்கிறது என்பதே உண்மை

-யாழ்_அகத்தியன்

.

அதன்படி விடுதலைப்புலிகளின் இந்த வான் தாகுதலின் அடிபடை நோக்கமான

தங்களிடம் விமானம் இருக்கிறது அது கொழும்புவரை வந்து குறிதவறாமல் தாக்கக்கூடிய விமானிகள் இருக்கிறார்கள் மற்றும் இலங்கை இராணுவம் எந்தளவுக்கு பலவினமாக இருக்கிறார்கள் நாம் எந்த அளவுக்கு பலம் வாய்ந்தவர்களாக வளந்து இருக்கிறோம்.ஆகவே சர்வதேசமே இலங்கை அரசின் பொய்பிரச்சாரத்தை நம்பாதே. நாம் யாரலும் கணிக்க முடியாத பலத்தோடு இருக்கிறோம் என்பதை எல்லாரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதே விடுதலைப்புலிகளின் இந்த வான் தாக்குதலின் அடிபடை நோக்கம்.

அது மட்டும் இல்லாமல் உலகத்தின் வாயை மூட வைத்துவிட்டு இத்தாக்குதலை நடத்தி இருப்பது என்பதுதான் மிகவும் நாம் கவனிக்க வேண்டியவை.

அதன்படி விடுதலைப்புலிகளின் இந்த மிக சிறப்பான காய் நகர்த்தல் விடுதலைப்புலிகள் எதிர்பார்த்தபடி வெற்றிகரமாகவே நடந்தேறி இருக்கிறது என்பதே உண்மை

கட்டுரை நன்றாக இருக்கின்றது மற்றும் விடுதலைப் புலிகளின் நோக்கம், தாக்குதல்லம் தற்போதய நிலவரம் சகலதையும் அலசி இருக்கிறீர்கள், வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்
கட்டுரை நன்றாக இருக்கின்றது மற்றும் விடுதலைப் புலிகளின் நோக்கம், தாக்குதல்லம் தற்போதய நிலவரம் சகலதையும் அலசி இருக்கிறீர்கள், வாழ்த்துக்கள்

Edited by yaal_ahaththiyan

ஆதித்தியன் உங்களின் அலசல் எம்மவர்களின் தாக்குதல் நோக்கின் ஒரு பக்கத்தை மட்டும் தான் அலசி இருக்கு...( அதை நான் பிழை எண்று சொல்ல இல்லை) ஆனால் இந்த தாக்குதல் நடத்தப்பட்ட காலமும், இடமும் வேறு இரு நோக்கங்களையும் இலைமறை காயாக சொல்லி நிக்கிறது...!

  1. இலங்கையின் பொருளாதாரத்தை சிதைப்பது( அது ஓரளவாவது இருப்பதால்த்தான் இண்றைக்கும் இலங்கை அரசு தமிழரை வதைக்க காரணம் ஆகிறது...)
  2. இலங்கை மீதும் அதன் படை நடவடிக்கைகளை புலிகளை பலமிழக்க செய்வார்கள் எண்ற நம்பிக்கையோடு ஆதரிக்கும் சர்வதேச நாடுகளை சேர்வடைய செய்வது...( அது வெற்றி என்பதன் அறி குறிதான் முன்புபோல கண்டனங்களையும் அறிக்கைகளையும் சர்வதேசம் வெளிவிடவில்லை. ஒரு சிலரின் கவலைகளோடு சரி)

இந்த இரண்டும்தான் இப்போதைக்கு மிகவும் முக்கியமான எங்களின் தேவை... இதை விடுத்து வேறு ஒரு இடத்தில் குண்டுகள் வீசப்பட்டு இருந்தால், புலிகளின் விமானங்களை எதிர்க்கும் சக்தியுடைய ஆயுதங்களை வாங்க இலங்கை அரசு முட்டி அடித்து ஓடி இருக்கும், ஆயுதங்களை வழங்க சர்வதேசமும் முன்வந்து இருக்கும் போதுமான ஆதரவையும் சர்வதேசம் வழங்கி இருக்கும்... அதுதான் முன்னர் காலங்களில் நடந்த்தும்... ஆனால் இந்த முறை அப்படி நடக்க வில்லை...!

Edited by Thala

  • கருத்துக்கள உறவுகள்

மேலுள்ள நோக்கங்கள் முழுவதுமாக நிறைவேறவேண்டும் என்றால் இளந்திரையன் கூற்றுப்படி தமிழீழ வான்படையின் விமானத்தாக்குதல்கள் மீண்டும் சில தடவைகள் வெற்றிகரமாக நடாத்தப்படவேண்டும். நடக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.