Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான வெப்பநிலை

Featured Replies

100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான வெப்பநிலை

 

UK-weather-23.07.2018-720x450.jpg

பிரித்தானியாவின் பல்வேறு பிராந்தியங்களிலும் கடுமையான வெப்பநிலை நிலவுவதனால் பொதுமக்கள் கவனமாக இருக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்தவாரம் வெள்ளிக்கிழமைவரை இங்கிலாந்தின் கிழக்கு மற்றும் தென்கிழக்கு பிராந்தியங்களில் வெப்பநிலை உயர்வாக இருக்குமென மஞ்சள்நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சஃபோல்க் (Suffolk) பிராந்தியத்தில் உள்ள சன்ரன் டௌனமில் (Santon Downham) 33.3C வெப்பநிலை பதிவாகியுள்ளது. மேலும் இதுவே இந்த வருடத்தின் உயர்வான வெப்பநிலையாகவும் பதிவாகியுள்ளது.

எனினும் 2003 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கென்ற்றில் உள்ள பேவஷம் (Faversham) இல் 38.5C வெப்பநிலை பதிவாகியிருந்தது.

இருப்பினும் கடந்த 100 ஆண்டுகளில் இந்த ஆண்டே கோடைகால பருவத்தில் மிக நீண்டநாட்களாக வெப்பநிலை மிகஉயர்வாக உள்ளதாகவும் வானியல் அவதானநிலையம் தெரிவித்துள்ளது.

http://athavannews.com/100-ஆண்டுகளில்-இல்லாத-அளவிற/

  • தொடங்கியவர்

ஐரோப்பாவில் கடும்வெம்மை . கிரேக்கத்தில் 50 பேருக்குமேல் பலி! பிரித்தானியாவில் 34 பாகை !!

 

 

ஐரோப்பாவின் பல நாடுகளில் நிலவும் கடும் வரட்சியும் அதிக வெப்பநிலையும் பல இடங்களில் காட்டுத் தீ விபத்துக்களை உருவாக்கிவருகின்றது.

கிரேக்க தலைநகர் ஏதென்சில் பரவிய காட்டுத்தீயால் இதுவரை 50 பேருக்குமேல் பலியாகியுள்ளனர். 100 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

காட்டுத்தீ சூழ்ந்ததால் அதிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக பலர் கடலுக்குள் குதித்த அவலமான செய்திகளும் கிட்டியுள்ளன.

தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடிவருகின்றனர். தீயணைப்பு நடவடிக்கiயில் தமக்கு உதவும்படி கிரேக்க பிரதமர் அலெக்ஸிஸ் ஐரோப்பி நாடுகளிடம் உதவிகோரியுள்ளார்.

ஏற்கனவே சுவிடனிலும் 53 இடங்களில் பெரும்; காட்டுத்தீ ஏற்பட்டிருந்தது தீவிரமாக பரவிவரும் இந்ததீ துருவப்பகுதியை அண்மித்துவருகின்றது.

இதனால் தீயை அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வகையில் பிரான்ஸ் ஜேர்மனி இத்தாலி நோர்வே ஆகிய நாடுகள் தமது படையினரையும் தீயணைப்பு உபகரணங்களையும் அவசரமாக அனுப்பியுள்ளன.

பிரித்தானியாவிலும் கடும் வெப்பநிலை உயர்ந்து வருகின்றது. எதிர்வரும் வியாழக்கிழமை அல்லது வெள்ளியன்று 34 பாகைக்கு கூட வெப்பநிலை உயரும் சாத்தியம் உள்ளதான அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பநிலை உயர்வுகாரணமாக இங்கிலாந்துப் பிராந்தியவாசிகளுக்கு 3 ஆம் நிலை (அம்பர்) எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.நேரடி சூரிய ஒளித்தாக்கத்தில் இருந்து விலகியிருக்கும்படி மக்கள் கோரப்பட்டுள்ளனர்.

https://www.ibctamil.com/europe/80/103701?ref=home-imp-flag

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அம்மணமாய் போற அளவுக்கு கெந்தக வெக்கை சொல்லு வேலையில்லை.:320_sun_with_face:

  • தொடங்கியவர்

பிரித்தானியா-பிரான்ஸ்-ஜேர்மனி இன்று அபாயநாள்! கடும்வெப்பம்- இடிமின்னல் -பனிகல்மழை!!

 

 

பிரித்தானியா- பிரான்ஸ் -ஜேர்மனி ஆகிய நாடுகள் உட்பட்ட மேற்குலக நாடுகளுக்கு இன்று காலநிலையை பொறுத்தவரை பெரும் சவாலான ஒரு நாளாக கடக்கப்போகிறது.

கடந்த செவ்வாய்கிழமை முதல் கடுமையான வெப்பநிலை தாக்கிவரும் நிலையில் இன்று பல இடங்களில் 18 ஆண்டுகளுக்குப்பின்னர் அதிஉச்ச வெப்பநிலைபதிவாகலாம் என எதிர்பார்கப்படுகிறது.

பிரித்தானியா மற்றும் பிரான்சில் இன்று கடும் வெப்பநிலை நிலவும் அதேநேரம் சில இடங்களில் கடுமையான இடிமின்னல் தாக்கம் மற்றும் தீவிர பனிக்கல்மழை பொழிவு இருக்கும் என்பதால் இன்றைய நாள் ஒரு உலைக்கள நாளாக அமையும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ரீதியில் இன்று பிரித்தானியாதான் அதிக வெப்பநிலை பதிவாகும் நாடாக மாறக்கூடும். எனினும் கடுமையான இடிமின்னலுடன் மழைபொழிந்தால் வெப்பநிலை கொஞ்சம் குறைவடையும் எதிர்பார்க்கப்படுகிறது.

கிழக்கு இங்கிலாந்திலும் வட பிரான்சிலும் கடுமையான இடிமின்னல் தாக்கம் இருக்கும் என இரண்டு நாடுகளின் காலநிலை அவதான நிலையங்களும் அறிவித்துள்ளன.

பிரான்சில் பரிஸ் உட்பட 18 பிராந்தியங்களுக்கு இன்று செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வெப்பநிலை தொடர்ந்தும் உயர்வடைந்த காரணத்தால் பெரும் போக்குவரத்து நெருக்கடிகளும் உருவாகியுள்ளன. பிரித்தானியாவுக்கும் பிரான்சுக்கும் இடையிலான ஈரோ ஸ்ரார் தொடருந்து சேவைகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளன.

கடும்வெப்பம் காரணமாக ஈரோஸ்டார் தொடருந்து வண்டிகளின் குளிர்சாதன கருவிகள் செயல்இழந்ததால் நேற்றும் இன்றும் சேவைகள் பாதிப்படைந்தன. நூற்றுக்கணக்காக பயணிகள் தமது பயணங்களை மீளெடுத்துள்ளனர்.

Nஐர்மனியில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக அங்;கும் கடும் பாதிப்புகளும் நெருக்கடிகளும் நிலவிவருகின்றது. நேற்று கொலோன் நகரில் 37 பாகை வெப்ப நிலை பதிவானது. ரைன் நதியூடான மேற்கொளப்படும் சரக்கு கப்பற்சேவை அரைவாசியாக குறைக்கபட்டுள்ளது. கடும் வெப்பம் காரணமாக விமான ஓடுபாதைகள் விரிசலடைந்ததால் சில விமான நிலையங்களில் சேவைகள் பாதிக்கப்பட்டது.

சுவிஸில் காட்டு;த்தீ அச்சம் காரணமாக பொது இடங்களில் வாணவேடிக்களை நடத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. இதனால் எதிர்வரும் முதலாம் திகதி தேசிய விடுமுறையை முன்னிட்டு நடத்தப்படவிருந்த பாரம்பரிய வாணவேடிக்கை நிகழ்வும் மீளெடுக்கப்பட்டுள்ளது.

1921 ஆம் ஆண்டுக்குப்பின்னர் சுவிசில் மிக குறைந்த மழைவீழ்ச்சி பதிவு செய்யப்பட்ட ஆண்டாக இந்த ஆண்டு மாறியுள்ளது.

இன்றையநாளில் முன்னெச்சரிக்கை மற்றும் அவதானமாக இருக்கும் படி மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

https://www.ibctamil.com/europe/80/103858?ref=imp-news

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.