Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம் தனியார் சட்ட சீர்திருத்தம் - - வ.ஐ.ச.ஜெயபாலன் 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம் தனியார் சட்ட சீர்திருத்தம் தேசிய சர்வதேச விவாதங்கள் தொடர்பில்.
- வ.ஐ.ச.ஜெயபாலன் 
.
இலங்கையிலும் சர்வதேச நாடுகளிலும் முஸ்லிம்களின் நண்பனாக முஸ்லிம்களின் உரிமைப் பிரச்சினை தொடர்பாக விவாதித்த அனுபவங்களில் இருந்து சில சொல்ல முன்வருகிறேன். இதனை ஆரோகியமான விவாதமாக்குவதும் பொருட்படுத்தாமல் ஒதுக்குவதும் முஸ்லிம்களின் உரிமை. 
.
சரியத் அடிப்படையிலான முஸ்லிம் விவாக சட்டங்கள் பற்றிய விவாதங்கள் இன்று இலங்கையில் மட்டுமல்ல உலகளாவியும் இடம்பெறுகின்றன. சரியத் போன்ற முஸ்லிம் முன்னவர்களின் சட்டங்களை கோட்பாட்டு ரீதியாகவோ அல்லது நடைமுறையிலோ புனித நூலுக்கு இணையாகவோ தொடற்ச்சியாகவோ கருதுகிற பழமை வாதிகளுக்கும் இணையோ தொடற்ச்சியோ இல்லை என்கிற இளைய தலைமுறைக்கும் இடையிலான உள் விவாதங்களும் உலகளாவிய மட்டத்தில் இடம்பெறுகின்றன. 
.
நடை முறையில் முஸ்லிம்களுக்கு இப்பிரச்சினை காலத்தோடும் முஸ்லிம்கள் சிறுபாண்மையாக வாழும் நாடுகளின் அரசுகளோடும் பெண்ணுரிமையை முன்னிலப் படுத்தும் சர்வதேச சமுகத்தோடும் எத்தகைய உறவை பராமரிப்பது என்பதுபற்றிய அரசியலும் இராசதந்திரமும் ஒப்பந்தமுமாகும்.

இத்தகைய விடயங்களை முஸ்லிம்களோ யூதர்களோ கிறிஸ்தவர்களோ இந்துக்களோ பெளத்தர்களோ பெரும்பாண்மையாக வாழும் நாடுகளில் உள்ள சிறுபாண்மை மதத்தவர்களும் எதிர்கொள்கிற பிரச்சினையாகும். உலகளாவிய விவாதங்களில் இவையும் சுட்டிக் காட்டப்படுகின்றன. எனவே அவற்றையும் நாம் வாசிக்க வேண்டும். ஏனெனில் அடிப்படையில் இது இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினையாக மட்டும் இல்லை. உலக மத கலாச்சாரங்களுக்கும் உலக மாநுடர் போராடி வெற்றி பெற்ற தனிமனித பெண் உரிமை மற்றும் குழந்தைகள் உரிமைச் சட்டங்களுக்கும் இடையிலான பிரச்சினையாகும். நூறு வருடங்களுக்கு முன்னர் இந்துக்களின் பால்ய விவாக கலாச்சாரம் கேழ்விக் குறியானது. சமகாலத்திலும் கத்தோலிக்க நாடுகள் சிலவற்றில் கருத்தடை பற்றிய விவாதங்கள் முடிவின்றித் தொடர்கின்றன. 
.
முஸ்லிம் விவாக சட்ட சரத்துகள் சில பெண் உரிமையை சிறுவர் உரிமையை மீறுவதாக தேசிய சர்வதேசிய மட்ட விவாதங்கள் வலுப்பெற்று வருகின்றன. அதன் அடிப்படையிலான GSD போன்ற பொருளாதார வரிசலுகைகள் இலங்கை முஸ்லிம்களை குறிவைத்து ஆக்கப் பட்டவையல்ல. இலங்கை மரண தண்டனையை ஆமூலாக்குவதற்க்கு எதிராகவும் இத்தகைய பொருளாதார நிபந்தனைகள் உள்ளன. அதானால் இலங்கை அரசு மட்டும் சம்பந்தப் பட்ட பிரச்சினையாகமட்டும் தனித்து இப்பிரச்சினையை விவாதிக்கவோ புரிந்துகொள்ளவே சமரசத் தீர்வு காணவோ முடியாது. முஸ்லிம்களுகுள்ளேயே பழமை வாதிகளின் கருத்து, இளைய தலைமுறை முஸ்லிம்களதும் முஸ்லிம் பெண்களதும் கருத்து என இருவேறு நிலைபாடு உள்ளது. எனவே இது காலம் பற்றிய பிரச்சினையாகவும் உள்ளது. 
.
நிலவும் இலங்கை விவாக சட்டங்கள் அதன் சரத்துக்கள் எதுவும் இஸ்லாத்துக்கு விரோதமானவை என்கிற விவாதங்கள் இதுவரைக்கும் எழவில்லை. நிலவும் சட்டத்தில் முஸ்லிம்களுக்கு ஆட்சேபனையிருந்தால் அது இலங்கை மக்களை அணிதிரட்டிப் போராட வேண்டிய பொதுப் பிரச்சினை. இலங்கை விவாக சட்டங்களின் ஒரு பகுதியான முஸ்லிம் விவாகச் சட்டங்களுக்கு திருத்தம் கோரும் கோரிக்கை விசேட சலுகைகள் பற்றிய முஸ்லிம்களின் பிரச்சினையாகும். 
.
முதன்மையில் இது வாழப்போகிற எதிர்காலத்தில் இலங்கையின் ஆட்சியில் பங்குபெறப்போகிற இளைய தலைமுறை முஸ்லிம் பெண்களதும் ஆண்களதும் பிரச்சினையாகும். 
.
இதுபறிய விவாதங்களில் முக்கியமான இரண்டு விடயங்கள் உள்ளன 1. இஸ்லாமிய நூலகத்தில் புனித நூலுக்கு இணையாக எந்த நூலுமில்லை. 2. முஸ்லிம் பெண்களும் பங்குபற்றாத எந்த முடிவுகளும் முஸ்லிம்களின் எதிர்காலமல்ல. 
. 
சரியானவற்றில் எப்பவும் இறுதியில் உலகம் உங்களோடு நிற்க்கும்.

வீதிக்கு வந்துள்ள முஸ்லிம் தனியாள் சட்டம்
 
 

உலகில், புனிதமான கடமையாக இருந்த திருமணம் என்ற விடயம், தற்கால அளவுக்குமிஞ்சிய நாகரிகம் காரணமாக, சடங்காக மாறிக்கொண்டிருப்பதைப் போலவே, முஸ்லிம்களின் விவாக மற்றும் விவாகரத்து விதிமுறைகளை உள்ளடக்கிய ஒரு கட்டுக்கோப்பான சட்ட ஏற்பாடாகக் கருதப்பட்ட முஸ்லிம் தனியாள் சட்டம் (Personal Law  ) தொடர்பான மறுசீரமைப்பு விவகாரம், இன்று நான்கு சுவர்களையும் தாண்டி வீதிக்கு வந்திருக்கின்றது.  

image_c8519269d4.jpg

வீட்டு வன்முறைகளுக்கு எதிராகவோ நாட்டில் பெண்களுக்கும் சிறுவர்களுக்கும், ஏன் சாதாரண மனிதர்களுக்கும் கூட நடக்கின்ற அநியாயங்களுக்கு எதிராகவோ, தெருவுக்கு வந்து போராடாத அமைப்புகளும் செயற்பாட்டாளர்களும், இன்று விவாக - விவாகரத்துச் சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும், பொதுத் தளத்தில் இறங்கியிருப்பதை, எந்த வகையறைக்குள் அடக்குவதெனத் தெரியவில்லை. பெண்கள், தமது உரிமைக்காகப் போராடுவது பாராட்டத்தக்கது. என்றாலும், பெரிதுபடுத்தப்படும் இவ்விவகாரம், இனி யாருடைய கைக்குப் போகுமோ என்பதே இன்றைய கரிசனையாக உள்ளது.  

இலங்கையில், பல பிரத்தியேக (தனியாள்) சட்ட ஏற்பாடுகள் உள்ளன. தேசவழமைச் சட்டம், கண்டியச் சட்டம், முஸ்லிம் தனியாள் சட்டம் என்பவையே அவையாகும். நாட்டில் எல்லா இன, மத, குலங்களுக்கும் பொதுவான ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து, இதில் முதல் இரு சட்டங்களும் கிட்டத்தட்ட வழக்கொழிந்துப் போய்விட்டன. ஆனால், முஸ்லிம்களின் திருமணம், விவகாரத்து, அதனோடு தொடர்புபட்ட ஏனைய நடைமுறைகள் தொடர்பான வரண்முறைகளை விதந்துரைக்கும் முஸ்லிம் தனியாள் சட்டம், இன்னும் நடைமுறையில் இருக்கின்றது. 

இது, இஸ்லாமிய ஷரீஆ சட்டத்தை நடைமுறையாகக் கொண்டு, நாட்டுக்கு நாடு சிறுசிறு மாற்றங்களுடன் நடைமுறைப்படுத்தப்படும் ஒரு சட்டமாகவே காணப்படுகின்றது. எனவே, இதனை இல்லாதொழிப்பதற்கு, முஸ்லிம் விரோத நாடுகள், பல்வேறு காய்நகர்த்தல்களை காலாகாலமாக மேற்கொண்டு வருகின்றன. ஆனால், இலங்கையில் அது சாத்தியப்படவில்லை என்றாலும், அவ்வப்போது காலத்துக்குப் பொருத்தமான மாற்றங்கள், மறுசீரமைப்புகள் கொண்டுவரப்பட்டுள்ளன. 

இலங்கையில், பல நூறு வருடங்களாக, முஸ்லிம்களுக்கு என்று விஷேடமானதொரு தன்மையுடைய சட்ட நடைமுறை பின்பற்றப்பட்டு வந்திருக்கின்றது. 1700களின் பிற்பகுதியிலேயே, முஸ்லிம்களுக்காக ஒரு பிரத்தியேகச் சட்ட ஏற்பாட்டை மேற்கொள்ள, ஒல்லாந்தர் கொலனித்துவ ஆட்சியாளர்கள் முன்னின்றனர். இதற்காக, இந்தோனேஷியாவில் இருந்த சட்டத் தொகுப்பு தருவிக்கப்பட்டது. பின்பு, ஆங்கிலேயர் இதனை அடிப்படையாக வைத்து ‘முஹம்மதியர் தொடர்பான விஷேட சட்டங்கள்’ என்ற ஒன்றை அமுலாக்கினர். 1806இல் இருந்து, தனியார் அல்லது தனியாள் சட்டம் நடைமுறைக்கு வந்தது. 

அதன்பின்னர் நியாயம் தீர்ப்பதில் ஏற்பட்ட பல நடைமுறைச் சிக்கல்களைத் தொடர்ந்து, பல மீளாய்வுக் குழுக்களின் சிபாரிசுகளின் அடிப்படையில் அது மறுசீரமைக்கப்பட்டு, முஸ்லிம் தனியாள் சட்டம் என்ற பெயரில், 1954இல் அமுலாக்கப்பட்ட சட்டமே, இன்று வரை நடைமுறையில் இருக்கின்றது. 

கால மாற்றம், உலகப் போக்குகளில் பூகோளமயமாக்கலின் தாக்கம், வாழ்வியல் பழக்க வழக்கங்கள், கூர்ப்படைதல் மற்றும் இன்னோரன்ன காரணங்களால், தற்போதுள்ள முஸ்லிம் தனியாள் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டுமென்று, நீண்ட காலமாகவே அங்குமிங்குமாகக் குரல்கள் மேலெழும்பி வருகின்றன. இதில், ஒருசில மாற்றங்கள், முஸ்லிம்களுக்குள் இருந்து உள்ளார்ந்தமாக உணரப்பட்டவையாகவும், இன்னும் சில மாற்றங்கள், வெளிச் சக்திகளின் செல்வாக்கினால் பரிந்துரைக்கப் பட்டவையாகவும் காணப்படுகின்றன. 

உலகளவில், இஸ்லாத்தைப் பின்பற்றுவோரின் தனித்துவ அடையாளத்தை இல்லாது செய்வதற்கு, அமெரிக்காவும் இஸ்‌ரேலும் சியோனிசமும் மும்முரமாக நிற்கின்றன என்பது, சிறு பிள்ளைக்குக் கூட தெரிந்த விடயமாகும். இதற்குத் துணைபோகின்ற ஆயிரத்தெட்டு அரசசார்பற்ற அமைப்புகள் இருக்கின்றன என்பதும், இவை, முஸ்லிம்களுக்கு உள்ளேயே மாற்றுக் கருத்துகளை விதைத்துக் கொண்டிருக்கின்றன என்பதும், வெறும் ஊகங்கள் அல்ல. 

ஆனால், முஸ்லிம் தனியாள் சட்டத்தை மறுசீரமைக்க வேண்டுமென்பதில், இருவேறு நிலைப்பாடுகள் கிடையாது. அந்த அடிப்படையில், 1973இலும் 1990களிலும், பல மீளாய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டு, சிபாரிசுகள் பெறப்பட்டன. அத்தோடு 2009ஆம் ஆண்டின் அப்போது நீதியமைச்சராக இருந்த மிலிந்த மொறகொடவால், முஸ்லிம் தனியாள் சட்டத் திருத்தத்தை மேற்கொள்வதற்கான சிபாரிசுகளை முன்வைப்பதற்காக, அப்போதைய உயர்நீதிமன்ற நீதியரசராகக் கடமைபுரிந்த சலீம் மர்சூப் தலைமையில், 17பேர் கொண்ட உயர்மட்டக் குழுவொன்று நியமிக்கப்பட்டது. 

இந்தக் குழு, சுமார் 9 வருடங்களாக கலந்துரையாடல்களையும் கூட்டங்களையும் நடத்தியிருக்கின்றது. முஸ்லிம்களின் திருமணம் மற்றும் விவாகரத்து நடைமுறைகள், இதில் பிரதான இடம்பிடிக்கின்றன. குறிப்பாக, முஸ்லிம் பெண்கள் மற்றும் ஆண்களின் திருமண வயது, பலதார மணம், தாபரிப்புக்கான கொடுப்பனவு, காழி நீதிபதிகளாக பெண்களை நியமித்தல், வலியுறுத்தல் கட்டளை உள்ளடக்கங்கள் உள்ளடங்கலாக, பல்வேறு விடயப் பரப்புகளில் கருத்துகள் முன்வைக்கப்பட்டன. 

இந்தக் குழுவில் அங்கம் வகித்த தரப்பினரிடையே, முஸ்லிம் பெண்களின் திருமண வயது உள்ளிட்ட ஓரிரு விடயங்களில் கருத்து வேற்றுமைகள் ஏற்பட்டன. சமகாலத்தில், வெளியில் இருந்துகொண்டு ‘இச்சட்டத்தைத் திருத்த வேண்டும்’ என்றும் ‘ஷரிஆ அடிப்படையிலான சட்டத்தில் கைவைக்கக் கூடாது’ என்றும், ஏட்டிக்குப் போட்டியான வாதங்களும் ஆர்ப்பாட்டப் பேரணிகளும் முன்னெடுக்கப்பட்டன. 

இச்சட்டத்தைத் திருத்துவதில், அரசாங்கத்துக்கு ஒரு சர்வதேச நலனும் உள்ளது. அதாவது, முஸ்லிம் தனியாள் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளுமாறு, சர்வதேசத்தால் அரசாங்கத்துக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. சர்வதேச நியமங்களுக்கு அமைவாக, விவாக - விவாகரத்துச் சட்டத்தை அமைத்தாலேயே, வெளிநாட்டுச் சலுகைகள் சிலவற்றை இலகுவாகப் பெறும் நிலைமையும் இருக்கின்றது. இதற்குச் சமாந்தரமாக, முஸ்லிம்களின் தனித்துவச் சட்டத்தைச் சிதைக்கும் சர்வதேச நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவோர், சலீம் மர்சூப் தலைமையிலான உயர்மட்டக் குழுவிலும் முஸ்லிம் சமூகத்தின் மத்தியிலும் ஏற்பட்டுள்ள கருத்து வேற்றுமைகளை, தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர் என்றே தோன்றுகின்றது. 

ஆரம்பத்தில், இக்குழுவுக்குள் ஏற்பட்ட மாற்றுக் கருத்துடனான நிலைப்பாடு, ஆக்கபூர்மானதாக இருந்த போதும், 9 வருடங்களாக ஒரு தீர்க்கமான இணக்கப்பாட்டுக்கு வராமையால், அவர்கள் இரு குழுக்களாகப் பிரிந்து, இரு அறிக்கைகளைச் சமர்ப்பிக்கும் துரதிர்ஷ்ட நிலை உருவாகியது. உயர்மட்ட மீளாய்வுக் குழுவின் தலைவர் சலீம் மர்சூப் தலைமையில் ஒரு குழுவும், உலமா சபைத் தலைவர் தலைமையில் மற்றுமொரு குழுவுமாக, இரு வெவ்வேறு அறிக்கைகள், நீதி அமைச்சர் தலதா அத்துக்கோரளவிடம், இவ்வருடம் ஜனவரி மாதம் சமர்ப்பிக்கப்பட்டன. ஷ

9 வருடங்களுக்குப் பிறகு சமர்ப்பித்த அறிக்கையைப் பிரித்துப் பார்த்து, அதனைச் சட்டமாக்குவதற்கு, அமைச்சர் தலதா அத்துக்கோரளவுக்கு 6 மாதங்களுக்குப் பின் இப்போதுதான் நேரம் கிடைத்திருக்கின்றது. உண்மையில், முஸ்லிம் தனியாள் சட்டத்தைத் திருத்தும் பணிகள், இத்தனை வருடங்கள் தாமதமடைந்ததற்கு, அது தொடர்பான கருத்து முரண்பாடுகள் தான் காரணம் என்பதை விடவும், நேரம் கிடைக்கின்ற போது அல்லது பகுதிநேரமாக அப்பணியில் ஈடுபட்டமையே முதல் காரணமென்றே கூறவேண்டும். 

எனவே அரசாங்கம், முஸ்லிம் தனியாள் சட்டத் திருத்த யோசனைகளை நாடாளுமன்றத்தில் முன்வைத்து சட்டமாக்கும் அறிகுறிகள் தென்படுகின்ற சூழலில், அந்த யோசனைகளை உடனடியாக அமுல்படுத்த வேண்டுமென்று, மகளிர் அமைப்புகள் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளன. ஆனால், இந்த மகளிர் அமைப்புகளும் ஏனைய அமைப்புகளும், இரண்டு அல்லது மூன்று நிலைப்பாடுகளோடு இப்போது போர்க்கொடி தூக்கியுள்ளமை, முஸ்லிம்களிடையே இவ்விடயத்திலும் ஒற்றுமையில்லை என்ற செய்தியை, ஏனைய சமூகங்களுக்குச் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கின்றது. 

கொழும்பில் ஊடகச் சந்திப்பொன்றை நடத்திய பெண் செயற்பாட்டாளர்கள் சிலர், முஸ்லிம் தனியாள் சட்ட மறுசீரமைப்பு தொடர்பாக, தம்முடனும் கலந்துபேச வேண்டுமென்று கூறியுள்ளனர். முன்னாள் நீதியரசர் சலீம் மர்சூப் குழுவின் அறிக்கைக்குச் சாதகமான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள இப்பெண் செயற்பாட்டாளர்கள், அவ்வறிக்கையை பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு பாதிப்பற்ற விதத்தில் நடைமுறைப்படுத்த வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளனர். 

மறுநாள், நாடாளுமன்றத்துக்கு அருகில் பெண்கள் சிலர், கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விவாக, விவாகரத்துச் சட்டத்தை மறுசீரமைப்பதற்கான சிபாரிசு அறிக்கையை உடனடியாக அமைச்சரவைக்கு சமர்ப்பித்து, நாடாளுமன்றத்தின் ஊடாகச் சட்டவாக்கம் செய்யுமாறு, இக்குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.  

ஷரிஆ சட்டம் என்பது, முஸ்லிம்களுக்கு பிரத்தியேகமானது என்றபடியால், யாருடைய விருப்பத்துக்காகவும் ஷரிஆவுக்கு வெளியில் சென்று திருத்தத்தை மேற்கொள்ள முடியாது என்று, இன்னுமொரு தரப்பினர் கூறியுள்ளனர். புதுமையான சிபாரிசுகளை உள்ளடக்கிய சலீம் மர்சூப் தலைமையிலான குழுவின் அறிக்கையோடு உடன்படாத இத்தரப்பினர், உலமா சபையின் அறிக்கைக்கு ஆதரவளிப்பதாகத் தெரிகின்றது. இதற்கிடையில், நடந்தவற்றைத் தெளிவுபடுத்தியும் அறிவுடமையான முறையில் தனியாள் சட்டத்தை திருத்த வேண்டும் என்று குறிப்பிட்டும், முன்னாள் காழி நீதிபதிகள் குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

சுருங்கக் கூறின், இலங்கையில் தற்போது நடைமுறையில் இருக்கின்ற முஸ்லிம் தனியாள் சட்டத்தை மறுசீரமைக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது. இலங்கை, ஓர் அரபு நாடல்ல என்பதுடன், ஏனைய இன மக்களுக்கான ஒரு பொதுவான சட்டமும், நாட்டில் அமுல்படுத்தப்படுகின்றது. இதனால், சிலவேளைகளில் நீதி நிலைநாட்டும் விடயத்தில் சிக்கல்கள் தோன்றுகின்றன. அதுமட்டுமன்றி, காலப் பொருத்தம் கருதியும் சிறுசிறு மாற்றங்கள் இதில் உள்வாங்கப்பட வேண்டும் என்பதே, பரவலான அபிப்பிராயமாகும். ஆனால், ஷரிஆ சட்டத்துக்கு முரணாக, முஸ்லிம்கள் பயணிக்க முடியாது என்பதும், பல்லின நாடொன்றில் ஷரிஆவை நூறு சதவீதம் அமுலாக்குவது சாத்தியக் குறைவானது என்பதுமே, இங்கிருக்கின்ற இரு வரையறைகள் எனலாம். 

image_01c50f4d02.jpg

எவ்வாறிருப்பினும், முஸ்லிம் தனியார் சட்ட மறுசீரமைப்புக்காக நியமிக்கப்பட்ட குழு, பொதுவான விடயங்களில் உடன்பாடு கண்டிருந்தது. முஸ்லிம் பெண்களின் திருமண வயது, காழி நீதிபதிகளாகப் பெண்களை நியமித்தல் உள்ளிட்ட ஒருசில விடயங்களில் மாத்திரமே கருத்தியல் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. எனவே, இது ஒரு பாரிய பிரச்சினையில்லை. இதனைச் சுமுகமான முறையில் தீர்த்துக்கொள்ள பல வழிகள் இருக்கையில், அவ்வழிகளைத் தேடாமல், இரண்டு மூன்று அணிகளாகப் பிரிந்து நின்று முரண்பட்டுக் கொள்வது, முஸ்லிம்களுக்கு அழகல்ல. 

‘ஒற்றுமை எனும் கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்’ என்று, இஸ்லாமிய மார்க்கம் வலியுறுத்துகின்றது. ஆனால், நிஜத்தில் அவ்வாறான ஒற்றுமையை இலங்கைச் சூழலில் காண முடியாதிருக்கின்றது. அரசியல் ரீதியாக மட்டுமல்லாமல் மார்க்க இயக்கங்களின் அடிப்படையிலும் பிரதேச வாரியாகவும், முஸ்லிம்கள் பிரிந்திருக்கின்றனர். இன்று, இந்தச் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ளும் சிபாரிசு அறிக்கை விடையத்திலேனும் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வரமுடியாத கையறு நிலையும் ஆளுக்காள் ஆர்ப்பாட்டம் நடத்தும் துரதிர்ஷ்ட நிலையும் உருவாகியிருக்கின்றது. 

முஸ்லிம்களுக்குள் உருவாகின்ற மாற்றுக் கருத்தாளர்களை அல்லது முற்போக்குப் பெண்கள் எனக் கூறிக்கொண்டு பொதுத் தளத்துக்கு வரும் தேர்ந்தெடுக்கப்பட்டோரை, இஸ்லாத்துக்கு எதிரான நாடுகள் எவ்வாறு தமது நிகழ்ச்சி நிரலுக்குள் உள்ளெடுக்கின்றன என்பதற்கு, உலக அரங்கில் நிறையவே உதாரணங்கள் உள்ளன. அவ்வாறே, முஸ்லிம்களுக்கு மத்தியில் எந்த அடிப்படையில் கருத்துமுரண் தோன்றினாலும், அதற்குள் புகுந்து விளையாடுவதற்கும் அதே சக்திகள், தமது முகவர்களைத் தயார் நிலையில் வைத்திருக்கின்றன. 

இலங்கையில், முஸ்லிம் தனியாள் சட்டத்தை மறுசீரமைக்கும் விடயத்தில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில் இவ்வாறான முஸ்லிம் விரோதச் சக்திகள், மூக்கை நுழைக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்கே உரித்தான இந்தச் சட்ட மறுசீரமைப்பு பற்றி, நாடாளுமன்றக் கட்டடத் தொகுதிக்கு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், வேற்றுமதத்தைச் சேர்ந்த ஓரிவர் பங்குபற்றியது, இந்தச் சந்தேகத்தை அதிகரிக்கின்றது. இங்குதான், கவனமாக இருக்க வேண்டும். 

நாட்டில் எத்தனையோ சட்டங்கள் இருக்கின்றன. ஆனால், அவை அமுல்படுத்தப்படுவதைக் காண்பதே அரிதாகவுள்ளது. எழுத்தில் சட்டம் இருக்கின்றது என்பதற்காக, எல்லோரும் சட்டப்படி செயற்படுவதில்லை. அவ்வாறே, எல்லா முஸ்லிம்களும் ஷரிஆ சட்டத்தை நூறு சதவீதம் பின்பற்றுகின்றார்கள் என்று கூறுவது கடினம். தனியாள் சட்டத்தை முழுமையாக மதிக்காத ஆண் - பெண் (திருமண) உறவுகளும், ஒருபோதும் நடந்தேறாமல் இல்லை. 

எனவே, என்னதான் சட்டம் இயற்றப்பட்டாலும், ஒருவர் அல்லது ஒரு குடும்பம் நினைக்காதவரை, அந்தச் சட்டத்தை அமுல்படுத்த முடியாது என்றிருக்கையில், தனியாள் சட்ட மறுசீரமைப்புப் தொடர்பாக முஸ்லிம்கள் தமக்குள் முரண்பட்டுக் கொள்ளத் தேவையில்லை.

அதன்மூலம், வெளிச் சக்திகள் இலாபம் உழைக்கவும் முஸ்லிம்களைப் பிறர் எள்ளி நகையாடவும் வழிவகுக்கக் கூடாது. சம்பந்தப்பட்ட முக்கிய தரப்பினர், சுமுகமாகக் கலந்துரையாடி, ஷரிஆவுடன் முரண்படாத அவசியமான மாற்றங்களைக் கொண்டு வருதலே - பக்குவப்பட்ட ஒரு சமூகத்துக்கு அழகு!

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வீதிக்கு-வந்துள்ள-முஸ்லிம்-தனியாள்-சட்டம்/91-219605

On 7/29/2018 at 4:14 AM, poet said:

முஸ்லிம் தனியார் சட்ட சீர்திருத்தம் தேசிய சர்வதேச விவாதங்கள் தொடர்பில்.
- வ.ஐ.ச.ஜெயபாலன் 
.

 

இலங்­கையின் முஸ்லிம் பெண்­க­ளுக்கு அடுத்து நிக­ழப்­போ­வது என்ன?

06MAIN31072018Page1Image0002-278f7c24c962633540b6d42b53f7defce8faf1ee.jpg

 

ஷிரீன் அப்துல் சரூர்

'அல்­லா­விற்கு அஞ்­சுங்கள்! உங்­க­ளது சமூ­கத்தைச் சேர்ந்த பெண்­க­ளுக்கும், சிறு­மி­க­ளுக்கும் அநீ­தியை ஏற்­ப­டுத்­தா­தீர்கள்,' ஜூலை 28, 2018 அன்று தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட முஸ்லிம் ஆண்கள், முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்டச் சீர்­தி­ருத்த அறிக்­கையை அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மா­வுடன் (யுஊ­துரு- மற்­றொரு ஆண்­களை மட்டும் உள்­ள­டக்­கிய குழு) கலந்­து­ரை­யா­டு­வ­தற்கு எதிர்புத் தெரி­வித்­த­வாறு பாரா­ளு­மன்­றிற்கு அருகில் நின்­றி­ருந்த பல பெண்கள் தமது கைகளில் ஏந்­தி­யி­ருந்த பதா­கை­க­ளி­லி­ருந்த வேண்­டுகோள் இதுவே. அங்கு நின்­றி­ருந்த பல ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளுக்கு முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்­தினால் பெண்­க­ளுக்கு என்ன நிக­ழக்­கூடும் என்று தெரிந்­தி­ருந்­தது.

ஏனெனில் அவர்கள் அதானாற் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தனர். அவர்­களிற் பல­ருக்கு அதுவே முதன்­முறை - முதன்­மு­றை­யாகப் பொதுவிற் தமது எதிர்ப்பைத் தெரி­வி­கின்­றனர், முதன்­மு­றை­யாக இஸ்லாம் தொடர்­பான எல்­லா­வற்­றுக்கும் ஒரே பாது­கா­வ­ல­ரா­கவும், ஒரே நடு­வ­ரா­கவும் தம்மைத் தாமே அறி­வித்­துக்­கொண்ட ஒரு மத அமைப்­பினைக் கேள்­விக்­குட்­ப­டுத்­து­கின்­றனர்.

இவ்­வ­ருடம் ஜன­வ­ரியில் முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்டச் சீர்­தி­ருத்த அறிக்­கை­யை­யா­னது நீதி­ய­மைச்சர் கௌரவ. தலதா அத்­துக்­கோ­ர­ள­விடம் கைய­ளிக்­கப்­பட்­டது. பதி­னெட்டு உறுப்­பி­னர்­களைக் கொண்­ட­மைந்த குழு­வா­னது ஒன்­பது வரு­டங்­க­ளாக ஆழ்ந்து ஆராய்ந்த பின்­ன­ரேயே அவ்­வ­றிக்­கையை இறு­தி­யாகத் தயா­ரித்­தி­ருந்­தது. நீதி­ய­மைச்­சினால் அதி­கா­ர­பூர்­வ­மாகத் தமது இணை­யத்­த­ளத்தில் அவ்­வ­றிக்கை பிர­சு­ரிக்­கப்­ப­டு­வ­தற்கு ஏறத்­தாழ ஆறு மாதங்கள் எடுத்­தது.

முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்­தினைச் சீர்­தி­ருத்­து­வது தொடர்­பான பரிந்­து­ரை­க­ளென வரும்­போது அக்­கு­ழு­வினாற் பூரண கருத்­தொற்­று­மையை அடைய முடி­ய­வில்லை. குழு இரண்­டாகப் பிள­வு­பட்­ட­துடன், இரு பிரி­வு­களும் இரு­வேறு பரிந்­து­ரை­களை அளித்­தி­ருந்­தன. அதனைத் தொடர்ந்து யாரு­டைய பரிந்­து­ரைகள் ஷரீஆக் கொள்­கைகள் மற்றும் இஸ்­லா­மியச் சட்டம் என்­ப­வற்­றுக்கு அமை­வாக உள்­ளன என்­பது தொடர்பில் பல விவா­தங்கள் நடந்­தே­றின.

குழு­வினாற் பூரண கருத்­தொற்­று­மையை அடைய முடி­ய­வில்லை என்­ற­போதும், சில அதி­முக்­கி­ய­மான பிரச்­சி­னைகள் தொடர்பில் அவர்கள் பூரண உடன்­பாட்டைக் கொண்­டி­ருந்­தனர். உதா­ர­ண­மாகப் நிபந்­த­னைக்­குட்­பட்ட பல­தா­ர­மணம், திரு­ம­ணத்­திற்குப் பெண்­களின் சம்­ம­தத்தை நாடுதல், ஒரு­த­லைப்­பட்­ச­மான தலாக்­கிற்குக் கட்­டாய இழப்­பீடு போன்ற விட­யங்கள் தொடர்­பாக இணக்­கப்­பா­டுகள் காணப்­பட்­ட­போ­திலும், மறு­சீ­ர­மைப்புக் குழு­வா­னது கருத்­தொற்­று­மையை அடையத் தவ­றிய நான்கு முக்­கிய விட­யங்கள் பின்­வ­ரு­மாறு:

1. பால்­ய­தி­ரு­ம­ணத்தை முடி­வுக்குக் கொண்­டு­வ­ருதல் மற்றும் இந்­நாட்டின் ஏனைய பெண்­க­ளைப்போல் திரு­ம­ணத்­திற்­கான வய­தெல்­லையை பதி­னெட்­டாக நிர்­ண­யித்தல்.

2. முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்­தினை நடை­மு­றைப்­ப­டுத்தும் அமைப்­பு­களில் பெண்­க­ளுக்குச் சம பிர­தி­நி­தித்­துவம் வழங்கல். குறிப்­பாகப் பெண்கள் காதி நீதி­ப­தி­க­ளாக நிய­மிக்­கப்­பட வேண்டும்.

3. முஸ்லிம் திரு­ம­ணங்­களின் கட்­டாயப் பதிவு.

4. உட்­பி­ரி­வுகள் அல்­லது மதகப் தொடர்­பான குறிப்­பு­களை நீக்­குதல். இதன் மூலம் எல்லா விட­யங்­களும் 'முஸ்லிம் சட்­டத்தின்' கீழ்­வரும் என்­ப­துடன் காதிமார் வாரியம் மற்றும் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் என்­பன தமது கட்­ட­ளைகள் மற்றும் முடி­வு­களை மேற்­கொள்­ளும்­போது, அனைத்து அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட இஸ்­லா­மிய கருத்­தியல் கோட்­பா­டு­களும் அபிப்­பி­ரா­யங்­களும் கவ­னத்­தி­லெ­டுக்­கப்­ப­டுதல்.

குழுவின் தலைவர் (நீதி­பதி சலீம் மர்சூப்) உட்­பட ஒன்­பது பேரை உள்­ள­டக்­கிய பிரிவு தமது சீர்­தி­ருத்தப் பரிந்­து­ரை­க­ளினோர் பகு­தி­யாக இவ்­வ­னைத்து மாற்­றங்­க­ளையும் பரிந்­து­ரைத்­துள்­ளது. ஆனால் யுஊ­துரு தலைவர் எம். ஐ. எம். ரிஸ்­வியின் தலை­மை­யி­லான குழுவின் மற்­றைய பிரிவு இம்­முக்­கிய விட­யங்கள் தொடர்பில் முரண்­ப­டு­வ­தோடு, பழ­மை­வாதப் பரிந்­து­ரை­க­ளுடன் கூடிய, குறிப்­பாக ஹாபி மதாப் நிலைப்­பாட்டை எடுக்கும் எட்டுப் பக்க அறிக்­கை­யொன்றைச் சமர்ப்­பித்­துள்­ளது. புனித குர்­ஆன்­ஆ­னது மதத்தைப் பிரி­வு­க­ளாகப் பிள­வு­ப­டுத்­து­வ­தையும், பெண்­க­ளி­ட­மி­ருந்து சமத்­துவம், நீதி மற்றும் நியா­ய­மான செயற்­பாடு என்­ப­வற்றைப் பறித்­தெ­டுப்­ப­தையும் தடை செய்­கி­றது.

யுஊ­துரு உள்­நு­ழைவு

இச்­சூ­ழலில் உரை­யா­டலிற் தனி­யா­திக்­கத்தைச் செலுத்­து­வ­தற்­கான யுஊ­து­ருஇன் முயற்­சிகள் கவ­லை­ய­ளிக்­கின்­றன. முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்­தினைச் சீர்­தி­ருத்­து­வதைத் தொடர்ந்தும் எதிர்த்­து­வரும் அமைச்­ச­ரவை அமைச்சர் ஒருவர் இவ்­வ­மைப்­பிற்கு உதவி வரு­கிறார். அவ­ரது எதிர்ப்­பா­னது முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்டம் ஒரு தெய்­வீக நிய­தி­யென்­பதால் அதில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­த­வி­ய­லாது எனும் போலி­வா­தத்­தினை அடிப்­ப­டை­யாகக் கொண்­டது. மாறாக, முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­ட­மா­னது எமது கால­னித்­துவ மர­பினோர் பகு­தி­யாகும். இன்­றைய இலங்கை முஸ்­லிம்­களின் யதார்த்­தத்தை அது இன்று பிர­தி­ப­லிக்­க­வில்லை என்­ப­துடன். உல­கெங்­கி­லு­முள்ள முஸ்லிம் சமூ­கங்கள் மற்றும் நாடு­களில் முஸ்லிம் தனியாள் சட்டப் பொருட்­கோடல் தொடர்பில் மேற்­கொள்­ள­பட்ட முன்­னேற்­றங்­க­ளையும் அது பிர­தி­ப­லிக்­க­வில்லை.

1770 ஆம் ஆண்டில் டச்சு ஆட்­சி­யின்­போது, பத்­தா­வியா (இன்­றைய இந்­தோ­னே­ஷியா) இலி­ருந்து இறக்­கு­மதி செய்­யப்­பட்ட விவாகம் மற்றும் விவா­க­ரத்துத் தொடர்­பான சட்­டக்­கோ­வையை அடிப்­ப­டை­யாகக் கொண்டே இலங்­கையின் முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்டம் உரு­வா­னது. 1806 மற்றும் 1951இற்­கி­டையில் இச்­சட்­டக்­கோ­வை­யா­னது சட்­டத்­தொ­குப்பு, மீளாய்வு மற்றும் மாற்­றி­ய­மைப்பு என்­ப­வற்றை உள்­ள­டக்­கி­யதோர் செயன்­மு­றைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டது. எனவே அது ஷரீ­ஆவின் சில அம்­சங்­க­ளி­னதும், அப்­போது நடை­மு­றை­யி­லி­ருந்த சம்­பி­ர­தா­யங்­க­ளி­னதும் கல­வை­யாகும். முரண்­நகை என்­ன­வெனில், இன்று முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­ட­மா­னது ஷரீஆ நிய­தி­க­ளுக்கு முர­ணான அம்­சங்­களைக் கொண்­டுள்­ளது. அதற்­கான ஒரு உதா­ர­ண­மாகத் தற்­போது இலங்கை முஸ்­லிம்­க­ளினால் பின்­பற்­றப்­படும் கைக்­கூலி (மணப்பெண் தரப்­பினால் மண­ம­க­னுக்கு அளிக்­கப்­படும் சீதனம்) இனைக் குறிப்­பிட முடியும். சில இஸ்­லா­மியக் கருத்­தியற் கோட்­பா­டு­க­ளின்­படி கைக்­கூ­லி­யா­னது ஹராம் ஆகும். அதா­வது அது இஸ்­லாத்தில் தடை­செய்­யப்­பட்­ட­வொன்று.

2009இல் அப்­போ­தைய நீதி­ய­மைச்சர் மிலிந்த மொர­கொட, இப்­போ­தைய நீதி­ய­மைச்சர் தலதா அத்­துக்­கோ­ரள கொண்­டி­ருக்கும் அதே அக்­க­றை­க­ளையே கொண்­டி­ருந்­தி­ருப்பார். அவர் முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்­தினை மதத்­தினால் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டவோர் சமூ­கத்தின் பிரச்­சி­னை­யா­கவே பார்த்­தி­ருப்பார். எனவே அவர் பெரும்­பாலும் இஸ்­லா­மிய அறி­ஞர்கள், சட்­ட­வல்­லு­நர்கள் மற்றும் சமூகப் பிர­தி­நி­தி­க­ளையும், இரு யுஊ­துரு உறுப்­பி­னர்­க­ளையும் (தலைவர் மற்றும் பொதுச் செய­லாளர்) கொண்­ட­மைந்த குழு­வொன்றை, மதச் சட்­ட­க­வ­மைப்­பிற்­குட்­பட்டு சீர்­தி­ருத்­தங்­களை ஏற்­ப­டுத்­து­வது தொடர்­பாக ஆராய்­வ­தற்கு நிய­மித்தார்.

அவர்கள் சரி­யாக அதைத்தான் செய்­துள்­ளனர். 313 பக்க அறிக்­கையும், தொகுதி 02 இன் வடி­வி­ல­மைந்த மற்­று­மொரு 302 பக்க இணைப்­பு­க­ளுமே அதற்குச் சான்று. அது ஏனைய முஸ்லிம் நாடு­களின் சீர்­தி­ருத்­தங்­க­ளி­லி­ருந்தும், இஸ்­லா­மியச் சட்டம் (பிக்) இன் பொருத்­தத்­தன்­மை­யி­லி­ருந்தும் உதா­ர­ணங்­களை எடுத்­தி­ருப்­ப­தோடு, இங்கும், பிற­வி­டங்­க­ளிலும் மேற்­கொள்­ளப்­பட்ட சம­கால ஆய்­வு­க­ளி­லி­ருந்து முடி­வு­களை மேற்­கொண்­டுள்­ளது. மிக முக்­கி­ய­மாக, பல சமூகப் பிர­தி­நி­திகள் மற்றும் அமைப்­புகள், முஸ்லிம் கல்­வி­யா­ளர்கள், இஸ்­லா­மிய அறி­ஞர்கள், மதக் குழுக்­களின் சமர்ப்­பிப்­புகள், மற்றும் அதி முக்­கி­ய­மாக பாதிக்­கப்­பட்ட பெண்­களின் வாக்­கு­மூ­லங்கள் என்­ப­வற்­றை­யு­டைய இணைப்­பு­களை இவ்­வ­றிக்கை கொண்­டுள்­ளது.

இவ்­வ­றிக்­கை­யா­னது நட­வ­டிக்கை எடுப்­ப­தற்குத் தேவை­யான ஆதா­ர­பூர்­வ­மான அத்­தாட்­சிப்­ப­டுத்­தப்­பட்ட வரைபு ஒன்றை அமைச்சர் தலதா அத்­துக்­கோ­ர­ள­விற்­க­ளிக்­கி­றது. வரலாற்றின் அநீதிகளைத் திருத்தி, இவ்வுலகின் முழுமையான அர்த்தத்தில், இலங்கையின் முஸ்லிம் பெண்களைக் குடிமக்களாக மாற்றுவதற்கான வாய்ப்பு அவரிடமுள்ளது.

அமைச்சர் அத்­துக்­கோ­ரள தக்­க­வா­றான வழி­மு­றை­களைப் பின்­பற்­று­வாரா? அமைச்­ச­ரவை மற்றும் பாரா­ளு­மன்­றத்தின் முன்னால் அவர் சமர்ப்­பிக்கும் வரை­வா­னது முஸ்லிம் பெண்­க­ளதும், சிறு­மி­க­ளதும் அக்­க­றை­க­ளுக்குப் பதி­ல­ளிக்­குமா? இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்­பா­னது இந்­நாட்டின் அனைத்துக் குடி­மக்­க­ளுக்கும் சம­னான உரி­மை­களை அளிக்­கி­றது என்­ப­தையும், நீதி­ய­மைச்சர் என்­ற­வ­கையில் முஸ்லிம் பெண்கள் அவ்­வு­ரி­மை­க­ளி­லி­ருந்து விலக்­கப்­ப­டா­தி­ருப்­பத்தை உறு­தி­செய்­வது அவ­ரது கட­மை­யென்­ப­தையும் அவர் நினை­விற்­கொள்­வாரா? முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்டச் சீர்­தி­ருத்­த­மா­னது எமது அர­சி­ய­ல­மைப்­பினால் பேணிப்­பா­து­காக்­கப்­பட்­டுள்ள சமத்­துவம் மற்றும் நீதி தொடர்­பான கோட்­பா­டு­க­ளினால் வழி­ந­டத்­தப்­ப­டு­வதை அவர் உறுதி செய்­வாரா? இல்லை யுஊ­து­ருஇன் இன் வற்புறுத்த­­லுக்கு அடிபணிந்து, இலங்கை­யின் முஸ்லிம் பெண்கள் மற்றும் சிறுமிகளை அவர் கைவிடுவாரா? 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-08-01#page-6

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.