Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அண்ணா பல்கலை. விடைத்தாள் மறுமதிப்பீட்டில் மோசடி..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Anna University professor Uma has been suspended

அண்ணா பல்கலை. விடைத்தாள் மறுமதிப்பீட்டில் மோசடி.. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் உமா சஸ்பென்ட்!

அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேட்டில் ஈடுபட்டதாக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் உமா சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் முறைகேட்டில் 400 கோடி ரூபாய் வரை லஞ்சம் வாங்கி இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழக இன்ஜினியரிங் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களை வெற்றிபெற வைக்க மறுகூட்டலின் போது லஞ்சம் வாங்கி இருக்கிறார்கள். ஒரு பாடத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் பெற்று இருக்கிறார்கள். 2017 கல்வி ஆண்டில் அண்ணா பல்கலையில் இந்த மோசடி நடந்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் 2015-2018 வரை தேர்வுக்கான கட்டுப்பாட்டாளராக இருந்த ஜி.வி.உமா தலைமையில்தான் இந்த முறைகேடு நடந்துள்ளது. இவருக்கு கீழ் 9 பேராசிரியர்கள் செயல்பட்டு இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் முறைகேட்டில் ஈடுபட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதை அடுத்து தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக இருந்த உமா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலரான உமா தற்போது பேராசிரியையாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/anna-university-professor-uma-has-been-suspended-326460.html

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பல à®à¯à®à®¿ à®à®´à®²à¯

அண்ணா பல்கலை. ஊழலுக்கு பின் இருக்கும்... "மாஸ்டர் மைண்ட்"  பேராசிரியர் உமா.. யார் இவர்?

அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் முறைகேட்டில் முக்கிய காரணகர்த்தாவாக பேராசிரியர் ஜி.வி உமா இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் முறைகேடு தற்போது தமிழகம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 17 மாணவர்களுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

அண்ணா பல்கலையில் விடைத்தாள் மறுத்திருத்தம், மறுகூட்டலில் பெரிய அளவில் முறைகேடு நடந்து இருக்கிறது. தோல்வி அடைந்த மாணவர்களை வெற்றிபெற வைக்க மறுகூட்டலின் போது லஞ்சம் வாங்கி இருக்கிறார்கள்.

à®à®©à¯à®© வà¯à®²à¯


இதில் 200 கோடி ரூபாய் வரை பணம் கைமாறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த முறைகேட்டை அண்ணா பல்கலையை சேர்ந்த ஜி வி உமா என்ற பேராசிரியைதான் நடத்தி இருக்கிறார். ஜி வி உமா தலைமையில்தான் இந்த முறைகேடு நடந்து இருக்கிறது. இவருக்கு கீழ் 9 பேராசிரியர்கள் செயல்பட்டு இருக்கிறார்கள். தற்போது இவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் 2015-2018 வரை தேர்வுக்கான கட்டுப்பாட்டாளராக இருந்துள்ளார். அப்போது தனக்கு இருந்த அதிகாரத்தை பயன்படுத்தி இவர் லஞ்சம் வாங்கியுள்ளார். ஒரு மாணவரிடம் 10 ஆயிரம் ரூபாய் என்று ஆயிரக்கணக்கான மாணவர்களிடம் லஞ்சம் வாங்கியுள்ளார். மூன்று வருடம் நடந்த தேர்விலும் இந்த முறைகேடு நடந்துள்ளது.

à®à®©à¯à®© தà¯à®±à¯à®¯à®¿à®²à¯ à®à®°à¯à®à¯à®à®¿à®±à®¾à®°à¯

இவர் அண்ணா பல்கலையில் தகவல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் பேராசிரியராக இருக்கிறார். அதே சமயத்தில் அண்ணா பல்கலை தேர்வுக்கான கட்டுப்பாட்டாளராக இருந்துள்ளார். தனக்கு கீழ் இருந்து திண்டிவனம் தேர்வு மைய அதிகாரிகளை, ஆசிரியர்களை இதில் பயன்படுத்தி இருக்கிறார். அதேபோல் இன்னும் சில ஆசிரியர்களையும் இவர் இந்த ஊழலில் பயன்படுத்தியுள்ளார்.

à®®à¯à®à¯à®à®¿à®¯à®®à®¾à®©à®µà®°à¯


சில ஆசிரியர்களை மிரட்டி இவர் பணிய வைத்ததாக கூறப்படுகிறது. இவர் 21 வருடமாக கல்லூரி ஆசிரியர் பணியில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு ஆய்வு கட்டுரைகளை எழுதியுள்ளார். அதேபோல் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இவருக்கு முன்னாள் அண்ணா பல்கலை துணை வேந்தர் ஒருவர் உதவியதாக கூறப்படுகிறது. அவரின் பெயர் இன்னும் வெளியாகவில்லை.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/anna-university-exam-bribe-the-mastermind-behind-the-scam-326467.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, தமிழ் சிறி said:

ண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் முறைகேட்டில் 400 கோடி ரூபாய் வரை லஞ்சம் வாங்கி இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழக இன்ஜினியரிங் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களை வெற்றிபெற வைக்க மறுகூட்டலின் போது லஞ்சம் வாங்கி இருக்கிறார்கள். ஒரு பாடத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் பெற்று இருக்கிறார்கள். 2017 கல்வி ஆண்டில் அண்ணா பல்கலையில் இந்த மோசடி நடந்துள்ளது.

அதுதான் இந்தியாவிலை பாலங்கள் கட்டிடங்கள் அடிக்கடி இடிஞ்சு விழுது....

  • கருத்துக்கள உறவுகள்

"தெரியாது","நி
னைவில் இல்லை" என்று காவல் துறை விசாரணையை எதிர்கொள்ள "ஸ்பெசல் கோச்சிங் " அதும் ஒய்வு பெற்ற அதிகாரிகளை கொண்டு நடக்கிறது நாட்டில் .. இதெல்லாம் சாதாரணமாக உடைத்து வெளியே வருவார் பாருங்கள்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

à®à®©à¯à®©à¯à®©à¯à®© à®à®´à®²à¯à®à®³à¯

தோண்ட தோண்ட வெளிவரும் கல்வி நிறுவன ஊழல்கள்... அதிர்ச்சியில் கல்வியாளர்கள்

பேராசிரியர் நியமனம், விடைத்தாள் திருத்தம், விடைத்தாள் மறுகூட்டல், தோல்வி அடைந்த மாணவர்களை தேர்ச்சி பெற வைத்தல் என அனைத்திலும் தோண்ட தோண்ட ஊழல்கள் வெளியே வருவது கல்வியாளர்களை அதிர வைத்துள்ளது.

மிகவும் பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகங்களும் தற்போது ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளது. இதுபோன்ற குற்றச்சாட்டுகளால் நேர்மையாக படித்து தேர்ச்சி பெறும் மாணவர்களும், நன்கு படித்த பேராசிரியர்களும் அதிர்ச்சியில் உள்ளனர்.

கல்வி என்பது வியாபாரமாகிவிட்டது. அதாவது காசு கொடுத்தால்தான் கல்வி என்ற நிலை உள்ளது. இதில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் கல்வித் துறையிலேயே ஊழல் குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றாக வெளி வருவதை பார்க்கும் போது மக்களும் கல்வியாளர்களும் வேதனை தெரிவிக்கின்றனர்.

பேராசிரியர்களை நியமனம் செய்வது, விடைத்தாள் திருத்தம் செய்வது, விடைத்தாள் மறுகூட்டல், தோல்வி அடைந்த மாணவர்களையும் மறுகூட்டல் என்ற பெயரில் தேர்ச்சி பெற வைப்பது என அனைத்திலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. இது போதாக்குறைக்கு சில பேராசிரியர்கள் தாங்கள் வளமாக வாழ்வதற்கு சில மாணவிகளை உயரதிகாரிகளின் படுக்கையை பங்கிட்டு கொள்ள அனுப்பி அவர்களது வாழ்க்கையை சின்னாபின்னமாக்குகின்றனர்.

பà¯à®°à®¿à®¯à®¾à®°à¯ பலà¯à®à®²à¯à®à¯à®à®´à®à®¤à¯à®¤à®¿à®²à¯ à®à®´à®²à¯

ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்புதல், தொலைதூர படிப்பு மையங்களுக்கு ஒப்புதல் அளித்தல், டெண்டர்களை முடிவு செய்தல், புதிய கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவு தொடங்குவதற்கு ஒப்புதல் அளித்தல், ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தல் என சிண்டிகேட் குழுதான், பல்கலையில் எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பின்புலமாக இருக்கிறது. இப்படிப்பட்ட சிண்டிகேட் குழுவிலும் விதிமுறை மீறல் என்று சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது.

பà¯à®°à®¾à®à®¿à®°à®¿à®¯à®°à¯ நியமனதà¯à®¤à®¿à®²à¯ à®à®´à®²à¯

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் 27 பணி நியமனங்களில் பல கோடி ஊழல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல, பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவு தொடங்க அங்கீகாரம் வழங்குவதில் அப்பட்டமான விதிமுறை மீறல்கள் இருந்ததாக குற்றம்சாட்டப்படுகின்றன.

à®à¯à®µà¯à®¯à®¿à®²à¯à®®à¯ à®à®´à®²à¯

பேராசிரியர் நியமனத்துக்கு கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ரூ. 30 லட்சம் வரை லஞ்சம் கேட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் துணைவேந்தர் கணபதி கைது செய்யப்பட்டார். மேலும் ஒரு பேராசிரியரும் கைது செய்யப்பட்டனர்.

நிரà¯à®®à®²à®¾à®¤à¯à®µà®¿

அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிதத் துறை பேராசிரியராக இருந்தவர் நிர்மலா தேவி. இவர் கல்லூரி மாணவிகளை மதுரை பல்கலைக்கழகத்தின் உயரதிகாரிகளின் படுக்கைக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டார். இதுபோல் தன்னுடைய காரியங்களை சாதிப்பதற்காக மாணவிகளை தவறாக பயன்படுத்தும் ஆசிரியர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

மறà¯à®à¯à®à¯à®à®²à®¿à®²à¯ à®®à¯à®±à¯à®à¯à®à¯

சென்னை அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் முறைகேட்டில் 400 கோடி ரூபாய் வரை லஞ்சம் பெறப்பட்டு முறைகேடு நடந்து இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தெரிவித்தனர். இதில் 2015-2018 வரை தேர்வுக்கான கட்டுப்பாட்டாளராக இருந்த ஜி.வி.உமாவை கைது செய்தனர். இதுபோல் தோண்ட தோண்ட வெளி வரும் ஊழல்களால் கல்வியாளர்களும் பெற்றோரும் கலங்கியுள்ளனர்.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/educationist-shocked-over-the-educational-institutes-corruption-326521.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.