Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அறிவியல் நகரில்- பொறியியல் பீட கட்டட வளாகம்- – தலைமை அமைச்சரால் திறப்பு!!

Featured Replies

அறிவியல் நகரில்-  பொறியியல் பீட கட்டட வளாகம்- – தலைமை அமைச்சரால் திறப்பு!!

 

 

DSC06986-750x430.jpg

 
 

கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள  யாழ்ப்பாணா்  பல்கலைக்கழக வளாகத்தில் நிர்மானிக்கப்பட்ட  பொறியியல் பீட கட்டடம், உத்தியோகஸ்தர் விடுதி மற்றும்  மாணவர்கள் விடுதி ஆகிய கட்டடத்தொகுதிகளை  தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் உயர் கல்வி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜயகலா மகேஸ்வரன்,  சித்தாத்தன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள், பல்கலைக்கழக விரைவுரையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்டனர்.

DSC07027-750x430.jpgDSC07026-750x430.jpgDSC07025-750x430.jpgDSC07018-750x430.jpgDSC07015-750x430.jpgDSC07011-750x430.jpgDSC07009-750x430.jpgDSC06998-750x430.jpgDSC06971-750x430.jpgDSC07029-750x430.jpg

http://newuthayan.com/story/15/அறிவியல்-நகரில்-பொறியியல்-பீட-கட்டட-வளாகம்-தலைமை-அமைச்சரால்-திறப்பு.html

  • தொடங்கியவர்

யாழிலிருந்தே தலைசிறந்தவர்கள் உருவாகியுள்ளனர்: பிரதமர் பெருமிதம்

 

 

இலங்கை பொறியியல் துறையில் பிரவேசித்த தலைசிறந்த பொறியியலாளர்கள் யாழ்.மாவட்டத்தில் இருந்தே உருவாகியதாக பிரதமர் ரணல் விக்ரமசங்க தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் நிர்மாணிக்கப்;பட்ட பொறியியல் பீட மற்றும் மாணவர்கள் விடுதி ஆகிய கட்டடத்தொகுதிகள் இன்று(சனிக்கிழமை) திறந்;து வைக்கப்பட்டன.

இவற்றை திறந்து வைத்து உரையாற்றும் போதே பிரதமர் இதனை தெரிவித்தார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர், இலங்கை பொறியியல் துறையில் பிரவேசித்த தலை சிறந்த பொறியியலாளர்கள் யாழ்.மாவட்டத்தில் இருந்தே உருவாகினர். யாழ்.ஹாட்லி கல்லூரியே அதிகளவான பொறியலாளர்களை பிரசவித்தது.

ஆனால் அவற்றை 30 வருட யுத்தம் இல்லாமல் செய்துள்ளது. அன்று கிடைத்த பெறுபேறுகளை போன்று இன்று கிளிநொச்சி வளாகத்தின், பொறியியல் பீடமும், தொழிநுட்பபீடமும் செயற்படும் என்பது எனது நம்பிக்கை.

வடக்கை அபிவிருத்தியடைய செய்வதன் ஒரு அங்கமாகவே கல்வியை துறை காணப்படுகின்றது. யுத்தம் வடக்கையும், தெற்கையும் பாதித்துள்ளது.

அதன் மூலமாக நாம் பின்னடைவை சந்தித்துள்ளோம். வியட்நாம் யுத்தத்திற்கு பின்னரே அபிவிருத்தியடைந்தது. அதேபோல் நாம் யுத்தம் நிறைவடைந்தன் பின்னரான இடைகாலத்தில் இருக்கின்றோம்.

வடக்கில் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. குறிப்பாக மனிதாபிமான பிரச்சினைகளை நாம் முதலில் தீர்த்து வைக்க வேண்டும். தற்போது படையினரிடம் உள்ள காணிகள் பொது மக்களிடம் கையளிக்கப்பட்டு வருகின்றன.

எமது அரசின் முதற்பகுதியில் வடக்கின் புனர்வாழ்வு தொடர்பிலும், நல்லிணக்கம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. தற்போது அபிவிருத்தி தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

பலாலியில் சர்வதேச தரத்திலான விமான நிலையம் ஒன்றை அமைத்தால் அதற்கு மலேசியாவில் இருந்தும் இந்தியாவில் இருந்தும் மக்கள் வருகைதருவாரரர்;;கள் என்பது எனது எண்ணம். காங்கேசன்துறை துறைமுகம் தற்போது விரிவுபடுத்தப்படவுள்ளது’ என தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/யாழிலிருந்தே-தலைசிறந்தவ/

புலிகளினால் தமிழ் ஈழத்தின் வருங்காலத்தை கருத்தில் கொண்டு அமைக்கபட்ட நகரம். புலி கொடிக்கு பதிலாக சிங்க கொடி பறக்குது.

23 hours ago, Dash said:

புலிகளினால் தமிழ் ஈழத்தின் வருங்காலத்தை கருத்தில் கொண்டு அமைக்கபட்ட நகரம். புலி கொடிக்கு பதிலாக சிங்க கொடி பறக்குது.

இங்குள்ள பெரும்பாலான கட்டிடங்களும் புலிகளால் நிர்மாணிக்கப்பட்டவை.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, போல் said:

இங்குள்ள பெரும்பாலான கட்டிடங்களும் புலிகளால் நிர்மாணிக்கப்பட்டவை.

இந்தப் பொறியியல் பீடத்துக்கான கோரிக்கை இதே அணிலார் பல முறை அரசு பதவிகளில் இருந்த போது கோரப்பட்டும்.. அப்போது எல்லாம்... இந்த மேதாவி மெளனமாக இருந்தவர்.

எதுஎப்படியோ.. தமிழ் மக்களின் கனவு.. புலிகளின் முயற்சியால்.. நனவாகி உள்ளது.

நன்றி விடுதலைப்புலிகள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.